அமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை!

பனிப்போர்: 2New-Cold-War

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன்.

முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது.

இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்“மகாத்துமா“என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது.

இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

„உண்மையான அமெரிக்கன் எப்படி இருப்பானென்றால்,அவன் ஜனாதிபதி வில்சனைப் போல் இருப்பான்“.என்று சாதாரண அமெரிக்கச் சிப்பாய் சொல்லுமொரு காலம் அமெரிக்காவில் தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.கரிபியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் வலயத்திலும் தனது ஆதிக்கத்தை நிறுவிய அமெரிக்கா முதலாம் உலக யுத்தத்தில் மூழ்கிய-மூட்டிய ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பமானது அமெரிக்காவை வலுவான தேசமாக உருவாக்கிய நூற்றாண்டின் திறவுகோலாகும்.

இன்றிருக்கும் அமெரிக்காவானது இன்றைய அதன் ஜனாதிபதியால் இத்தகைய நிலையை அடைந்துவிட்டதாக யாராவது கணித்தால்-கருதினால் அது மிகப் பெரும் கொடுமை!அமெரிக்காவினது தொழிற்றுறையைக் கட்டுப்படுத்தித் தமது குடும்பச் சொத்தாக மாற்றிய அமெரிக்க வெள்ளையினக் குடும்பங்கள் சில அந்தத் தேசத்தை மனித விரோதிகளின் கூடாரமாக்கிய பின் தேசங்கடந்த வழிப்பறிப் பயங்கரவாதிகளாகத் தமது மக்களை உருவாக்கி விட்டுள்ளது.இந்த அமெரிக்காவுக்கென்றவொரு „நீதி-நியாயம்“,அடி-கொள்ளையிடு என்றபடியே அர்த்தமாகிறது.

1990 செப்டெம்பர் 11 இல் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய சீனியர் புஷ்:“…ஒரு புதிய யுகம்,பயங்கரவாதத்தைச் சுதந்திரமாக எதிர்துத் தாக்கத்தக்க மற்றும் சமத்துவத்தைப் பலமாக நிலை நாட்டத்தக்க, நிச்சியமான சமாதானத்தை உறுதிப்படுத்தத் தக்க புதிய யுகம்.ஒரு புதிய யுகம்,கிழகத்தைய மற்றும் மேற்கத்தைய கூடவே வடக்கத்தைய மற்றும் தென்னக இனங்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமாகவும் இசைந்தும்(…)வாழத் தக்கதான புதிய யுகம்.இன்றைக்கு அதற்காக உழைக்கின்றோம்.அது உதயமாவதற்காகப் போராடுகிறோம்.ஒரு புதிய யுகம்,அது அனைத்து வித்தியாசங்களுடனும்,ஒவ்வொருவருடையதுமான வித்தியாசங்களுடன் இருப்பதை நாங்கள் அறிவதற்கும்.சட்டத்தின் ஆளுமையை பலத்தோடு நிறுவுதற்கும்(…) ஒரு புதிய யுகம்,பலவீனர்களினது பலமான சட்டங்களைப் பலமானவர்கள் மதிக்கத் தக்க புதிய யுகம் உருவாக்க வேண்டும்.“(Joshua Frank : ‚Left Out! How Liberals Helped Reelect George W. Bush‘, ) 11 செப்ரெம்பர் 2001 உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்கு முன்பான அமெரிக்காவின் புதிய உலகுக்குக்கான அடித்தளம் இது.இந்த அரசியல் அபிலாசை உலகத்தின் வளங்கங்களைக் கட்டுப்படுத்தி விடுவதோடு இருக்க வில்லை.மாறாக அமெரிக்காவின் அனைத்து நலன்களையும் முதன்மைப் படுத்திய உலக மக்களை உருவாக்குவதில் அதன் போராட்டம் மேலும் சீனியர் புஷ்சின் உரையோடு அண்மித்திருந்தது.

ஏலவே இரண்டவது யுத்தத்தின் பின்பான அதனது அணுவாயுதத் திமிரானது உலகத்தைக் கம்யூனிசச் சக்திகளின் கைகளில் தவறியும் சேர்த்துவிடாதிருக்கப் பெரும் இராணுவத் திமிராக வெளிப்பட்டது.இதன் தொடர்ச்சியாக உலகு தழுவி 400 இராணுவப் பாதுகாப்பு முகாங்கள் நிறுவப்பட்டன.பல இலட்சம்(கிட்டத்தட்ட 200.000.படைகள்)இராணுவத்தினர் இதற்காக வெளி நாடுகளில் அமெரிக்க அரசியலை முன்னெடுத்தனர்.

இந்தத் தருணத்தில் உலகை ஏப்பமிட முனைந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் ,இரஷ்சியாவுக்கும் மூண்ட பனிப்போர் குருஷ்சேவைப் படாதபாடு படுத்தியது. வலிந்துருவாக்கிய அமெரிக்காவின் இராணுவப் பொறிக்குள் வீழ்ந்த இரஷ்யா அனைத்தையும் இழந்து,தனது பொருளாதாரக் கட்டுமானத்தையே சிதறடிக்கும் அளவுக்கு இது வலியதாக இருந்து. சமீத்துள் வெளியாகிய இந்த அறிக்கையில் [http://nsarchive.gwu.edu/nukevault/ebb538-Cold-War-Nuclear-Target-List-Declassified-First-Ever/ ] ,அமெரிக்காவானது எப்படி யுத்த வியூகம் அமைக்கின்றதென்பதை ( U.S. Cold War Nuclear Target Lists Declassified for First Time :According to 1956 Plan, H-Bombs were to be Used Against Priority “Air Power” Targets in the Soviet Union, China, and Eastern Europe Major Cities in Soviet Bloc, Including East Berlin, Were High Priorities in “Systematic Destruction” for Atomic Bombings Plans to Target People (“Population”) Violated International Legal Norms .SAC Wanted a 60 Megaton Bomb, Equivalent to over 4,000 Hiroshima Atomic Weapons )யோசிக்க அதிர்ச்சியாவிருக்கிறது!நாம் பாசிசத்தின் நிழலுக்குள் வாழ்கிறோம்.

இந்தவொரு நிலை மீளவும் உருவாகிறது.இருசியாவைச் சுற்றி வளைக்கிறது நேட்டோ அணி.மேற்கு – கிழக்கு ஐரோப்பியத் தேசங்களில் அமெரிகப் போர்த் தளபாடங்களும் ;அணுக் குண்டுகளுமா நிறைக்கப்படுகிறது!இருசியாமீது பெருந் தாக்குலைச் செய்வதற்காக இருசியாவைப் போரை முதலிற்றொடக்குவதற்காக அதனது SU-24 போர் விமானத்தைத் துருக்கியைப் பயன்படுத்தி நேட்டோ இராணுவஞ் சுட்டு வீழ்த்துகிறது!பூட்டின் இந்த வியூகத்தை மிக நேர்த்தியாத் தோற்கடித்தாலும் எழப்போகும் போரில் இழக்கப்படும் மனிதவுயிர்களை அவரால் தடுக்க முடியாது!

இது ஏன்?

இப்போது „கம்யூனிச“ இரஷ்சியா இல்லை!

அமெரிக்காவுக்கு எதிரான-பலமானவொரு வல்லரசு உலகில் எதுவுமில்லை.

என்றபோதும் அமெரிக்கா போலந்தில் பத்து ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் மற்றும் செக்காயில் ரேடர் கருவிகளையும் நிறுவிக் கொள்ளும் முனைப்பில் இறங்கிப் பாரிய படையணிகளை உருவாக்கி மீளவும்,பனிப் போரைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பல ஆதரிக்க, அவர்களின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் CIA முலம் வழிநடாத்தப்பட்டு -நேட்டோவின் தலைமையை ஏற்று இருசியாவைத் தான்க முனையும் ஐரோப்பிய ஒன்றியம் „முதலில் பொருளாதாரத் தாக்குதலெனத் தடுமாற“ , இந்தப் பனிப் போர் வழி செய்கிறது.

இரஷ்ய அதிபர் பூட்டின் சொல்கிறார்: அமெரிக்கா அரசியல் எல்லையை மீறுகிறது!(Putin: „USA haben politische Grenzen überschritten“ -Russlands Präsident Putin kam bei der Münchener Sicherheitskonferenz sofort zur Sache. Er warnte massiv vor einer amerikanischen Weltherrschaft und drohte: Russland verfüge über Waffen, gegen die die geplante US-Raketenabwehr für Osteuropa wirkungslos wäre.)

இது-இந்த முரண்பாடு ஏன்?

அமெரிக்கா சொல்கிறது:“ஈரானின் நெடுந்தூர ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைக் காப்பதற்கு இது(National Missile Defense)அவசியம்.“

உண்மை வேறு வடிவமானது.

இருஷ்சியாவுக்கும் ஈரானுக்கும் மற்றும் ஜேர்மனிக்கும் ஈரானுக்குமான வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் காரணங்கள்,யுரோவுக்கு மாற முனையும் ஒபேக்கின்;(OPEC)மன விருப்பு-வற்புறுத்தல் போன்ற பல் வகைக் காரணிகள் இந்த விசயத்துள் அமெரிக்காவுக்கு ஏவுகணைத் திட்டமாக விரிகிறது.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் பின்னைய காலங்களில்(1997-2001)அமெரிக்காவின் வெளித்துறை மந்திரியுமான மெடாலின் அல்பிறைட்;(Madeleine Albright)அம்மையாரை பலர் அறிந்திருப்பார்கள்.அமெரிக்கா என்பது முதலாளித்துவத்தின் மிகக் கொடு முடியென்பதும்,அதன் ஒவ்வொரு அசைவும் நிதி மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கும்,உலகை அடியோடு சுரண்டுவதற்கும் என்பது பொதுவான கருத்து.ஆனால் அமெரிக்காவானது உலகை மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர முனையும் அபாயகரமான விஞ்ஞானப் பலம் கொண்ட நாடு.இந்த அமெரிக்காவை நிலை நிறுத்தியது அவர்களின் கொடூரமான இராணுவமோ அல்லது அந்த நாட்டின் நிதி மூலதனமோ அல்ல.அந்த நாடு தன்னை மேல் நிலைப்படுத்தத் தொடங்கிய தாக்குதலை விஞ்ஞானப் பலத்தோடு கட்டியமைத்த ஆண்டு 6.ஓகஷ்ட்டு 1945 ஆகும்.அன்றுதாம் இவ்வுலகைக் கரியாக்கும் அணுக் குண்டை அமெரிக்கா மனிதப் பெரும் பரம்பலுக்குள் வெடிக்க வைத்துப் பரிசீலித்த அதி துயரமான நாளை உலகுக்கு அமெரிக்க முதலாளிகள் அறிமுகப்படுத்திய நாள்!கீரோசீமா(Hiroshima)குலைந்து எரி பிண்டங்களாகச் சிதறிக்கிடந்த இந்த நாளை நிஜப்படுத்திய கொடியவன் ஓப்பன் கைமர் என்பது என் கருத்து.பின்னாளில் அவன் மனம்வருத்தி அதிபெரும் அணுக்குண்டை(The basic principle of the Teller–Ulam configuration for a thermonuclear weapon ) அமெரிக்கா தயாரிப்பதற்கு ஒத்துவரதாபோது ஓப்பன் கைமர் இருசியாவின் ஒற்றன் என்று குற்றஞ் சுமத்தப்பட்டு
ஓரங்கட்டபட்ட நிலையில் வீலர் தலைமையில் எட்வார்ட் ரெலர் மற்றும் இசுராலிச்சுலாவ் உலம் ( Edward Teller and Stanislaw Ulam ) கணிப்பின்படி( http://nsarchive.gwu.edu/NSAEBB/NSAEBB94/tb37.pdf ) அதிபெரும் அணுக்குண்டு தயாரிக்கப்பட்டு( 60 Megaton Bomb, Equivalent to over 4,000 Hiroshima Atomic Weapons ) மனித இனம் அழிக்கப்பட அமெரிக்கா தயாராகிறது( http://www.strategic-air-command.com/weapons/nuclear_bomb_chart.htm ).

உலகின் இன்றைய நிலைக்கு இந்த விஞ்ஞான அறிவே முழு முதற்காரணமாகும்.முதலாளியமென்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடுதாம் இது நாள் வரைத் தன்னை நிலைப்படுத்த முடிந்திருக்கிறது.இந்த விஞ்ஞானத்தின் அதீதக் கைவைப்பு அணவாயுதத்தை மனிதப் பரம்பலுக்குள் வெடிக்க வைப்பது மட்டுமில்லை.இன்றைய நிலையில் மரபணு மாற்றங்களால் இயற்கையே மாற்றியமைக்க முனையும் இந்த மரபணு அறிவே உலகின் மிகப் பெரும் அழிவாக நாளை வருவது உண்மையாகப் போகிறது.இதை மிக வலுவாகச் சொல்வேன்.இன்றைய உலக நிலவரத்தின்படி உலகில் என்றுமில்லாதவாறு ஆயுதப் போட்டி ஒருபுறம் மறுபுறம் மரபணு மாற்றம் மூலம் இந்தவுலகத்தின் பூர்வீக இனங்களை அழித்து இயற்கையையே மாற்றி வரும் மிகப் பெரும் அழிவுக்காலத்தை அமெரிக்க ஆதிக்க வெள்ளையின வெறி விஞ்ஞானமாக விரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் நாம் அமெரிக்காவினதும் மேற்குலக முதலாளிகளினதும் போட்டிச் சந்தை மற்றும் மூல வளங்களுக்கான முரண்பாடுகளைப் பார்க்கப் போகிறோம்.முன்னாள் வெளித்துறை மந்திரி அல் பிறைட் அம்மணியிடம் 12 மே 1996(12. Mai 1996)அன்று தொலைக்காட்சி நிகழ்வுக்காகன சந்திப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லெஸ்லி ஸ்ரால்(Moderator Lesley Stahl)கேட்கிறார்:“ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடையினால் ஐந்து இலட்சம் குழந்தைகள் மரித்ததாகக் கேள்விப் படுகிறோம்,இத் தொகையானது கீரோசீமாவில் உயிரிழந்த குழந்தைகளைவிடப் பலமடங்கு அதிகமானதென்றே நான் கருதுகிறேன்.இது குறித்து நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்,இது விலை மதிக்கத்தக்கதா?(Wir haben gehört, dass eine halbe Million Kinder wegen der Sanktionen gegen den Irak gestorben sind. Ich meine, das sind mehr Kinder, als in Hiroshima umkamen. Und – sagen Sie ; ist es den Preis wert ?) அல்பிறைட் அம்மயார்(Madeleine Albright )சொல்கிறார்:“நான் நினைக்கிறேன் இது மிகக் கடினமான முடிவு என்றே, எனினும் ,இந்த விலை,நாங்கள் கருதுவதின்படி மிகவும் விலை மதிகத் தக்க விலையே.“(Ich glaube, das ist eine sehr schwierige Entscheidung, aber der Preis – wir glauben, es ist den Preis wert.)

ஆக அமெரிக்காவின் நியாயத்தின் படி ஈராக்க இந்த விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்.இது அமெரிக்காவுக்கு விலை மதிக்கத்தக்க அரசியல் ஆதாயம்.இதை இன்னொரு வடிவில் பாருங்கள் ஆர்த்தூர் ஒப்பன்கைமரின் அணுக்குண்டைக் காவிச் சென்று கீரோசீமாவில் வெடிக்க வைத்த மனித பயங்கரவாதி அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை விமானி பவுள் ரிபெட்ற்(Paul w.Tibbets)ஜேர்மனியத் தொழிற் சங்கம் மெற்றாலுக்கு(Metall) அளித்த பேட்டியொன்றில் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா?

தொழிற் சங்கம் மெற்றால்(Metall):“இன்று கீரோசீமா குறித்தும் அணுக் குண்டு வெடிப்புப் பற்றியும் என்ன எண்ணுகிறீர்கள்?,உங்களது அன்றைய பாத்திரம் குறித்து மனவருத்தம் அடைகிறீர்களா?“(?“(Metall:Wie denken Sie heute ueber die Bombardierung von Hiroshima und ueber Ihren Auftrag-bedauern Sie es?).Paul W.Tibbets:“நான் பூரணமாக இது குறித்து வருத்தப்படவே இல்லை.அந்தக் காலத்தில் போடப்பட்ட அணுக்குண்டும் அதன் அவசியத்தையும் ,நம்பிக்கையின்படியேதான் நான் செயற்படுத்தினேன்.அது குறித்து இன்றுவரை எந்த மாற்றமுமில்லை(Ich bedauere absolut nicht.Zum Zeitpunkt des Bombenabwurfs war ich von seiner Notwendigkeit ueberzeugt,und daran hat sich bis heute nicht geaendert.)- Krieg und Friden von Willi Dickhut.Seite:35.

மேலே பதில் கூறியவர்களில் ஒருவர் அரசியல்வாதி.மற்றவர் அமெரிக்காவின் விமானப்படை விமானி.இருவரின் கருத்துகளுக்கும் இடையில் ஏதாவது அடிப்படை வித்தியாசம் உண்டா?

அதாவது மனிதர்களை அமெரிக்க அரசியல் கொல்வது பற்றி-தனக்குச் சம்பந்தமே இல்லாத நாடுகளைத் தாக்கி அந்தந்த நாடுகளின் குடிகளைப் பூண்டோடு அழிக்கும் அமெரிக்கப் பயங்கர வாதத்தைப் பற்றி இவர்களின் அரசியலில் அந்த(அமெரிக்காவினது) நாட்டின் குடிகளிடமுள்ள அகமன விருப்பு எப்படியுள்ளது? இது முன்னாள் ஜனாதிபதி வில்சனின் மன விருப்பை பிரதியெடுத்த ஆதிக்கத் திமிராக வெளிப்படவில்லையா?.வில்சனின் „அமெரிக்காவே முதன்மையானதென்பதன்“ நீட்சியாகத் தெரியவில்லையா? இங்கேதாம் வருகிறது அமெரிக்காவின் ஜனநாயகம் என்னும் முக மூடி.இதை அளவு கோலாக வைத்துக் கொண்டு மேலே போவோம்.

அன்று ஈரக்கின்மீது தாள்கதிரியக்க்க அணுக் குண்டுகளை „Typ CBU-89 of Typ Gator,Splitterboms““மற்றும் யு 838 இரகத் தாள் அணுவினைக் குண்டுகளைக் கொண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவைக் கடிந்து கொண்டவுலகம்- இந்தக் காலத்தில் பல விவாதங்களைத் தொலைக்காட்சியில் நடாத்தியது.இப்படியொரு தொலைக்காட்சி நிகழ்வொன்றில்(ஏ.ஆர்.டி. ஜேர்மன் தொலைக்காட்சியென்றே நினைக்கிறேன்.கருத்துக்கள் ஞாபகம் இருக்கிறது.அதில் பங்குபற்றிய அமெரிக்கப் பத்திரிகையாளிரின் கருத்துக்கள் ஞாபகத்தில் இருக்கிறது.அவரது பெயர் மறந்தாச்சு.)அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி“கீரோசீமாவில் அணுக்குண்டைப் போட்டு மனிதரைக் கொன்றீர்கள்,இப்போது ஈராக்கில் இவையெல்லாம் பயங்கரவாதமில்லையா?“ பத்திரிகையாளரின் பதில்:“இவையனைத்தும் பயங்கரவாதமல்ல!இவைகள் யுத்த அளவு கோலாகும்“.

எப்படியுள்ளது நிலைமை?

ஈரக் குழந்தைகளின் சாவு ஈராக் கொடுக்க வேண்டிய அமெரிக்காவுக்கான பெறுமதிமிக்க விலை.

கீரோசீமாவின் இழப்பு அவசியமானது அமெரிக்கச் சிப்பாய்க்கு.

இத்தகைய மனிதக் கொலைகள்-அணுக் குண்டு வீச்சுக்கள் எல்லாம் அமெரிக்காவின் யுத்த அளவு கோல்கள் அமெரிக்க அறிவாளிகளுக்கு.

ஆக நான் வைப்பதே நியாயம்.நீ பயங்கர வாதியென நான் சொன்னால் அதை இல்லையென்று சொல்லும் உரிமை உனக்கில்லை.-இதுதாம் அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் இன்றைய பனிப்போர் உலகைக் கவ்வும் மிகப் பெரும் யுத்த அபாயம் மட்டுமல்ல.அது உலக நாடுகளின் இறைமைகளோடும்,அந்த மக்களின் உரிமைகளோடும் அமெரிக்கா தொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதாரப் போராகும்.இந்தப் பனிப் போரினால் அமெரிக்கா அடைய விரும்பும் நிலையென்ன?

மீளவும் பனிப்போர்:National Missile Defense வடிவத்தோடு:

அமெரிக்காவினது அன்றைய வெளித்துறை மந்திரி கொண்டி றைஸ்US-Außenministerin Condi Rice(பெயரில்கூட ஒரு கவர்ச்சி இருக்குது,மனதில் ஒரு எதிர்ப்பால் ஊக்கம் வேறு வந்து போகுது)தீடீர் திடீரென அண்மைக் கிழக்கு நாடுகளுக்குப் பிரயாணிக்கிறார்.தனது நீண்ட நெடுங் கால்களைப் பின்னிப் பின்னி நடை காட்டுகிறார்!எகிப்துக்குப் போகிறா அப்படியே சவுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு சிரியாவுக்கு டுபாய்க்கு இன்னும் எங்கெங்கோ போகின்றார்.இரண்டு மாதங்களுக்குள் இரு தடவைகள் நடையாய்ப் பவனி வருகிறார்.என்ன பிரச்சனை?

ஆகா! ஒபெக்(OPEC-Länder;) என்ற எண்ணை வள நாடுகளின் கூட்டு அமெரிக்க டொலர்களுக்கு மாற்றைக் கோருகின்றன.ஈரானின் நீண்ட நாள் கனவான எண்ணைப் பங்குச் சந்தை மார்ச்சு 2006 இருந்து இயங்கத் தொடங்கியாச்சு(Oil Exchange Program).அமெரிக்காவுக்கு மீளவும் ஒரு தலையிடி, இப்படி உருவாகுமென்றே ஏலவே தெரிந்தபோது அது காய்களை அரசியலூடாக மட்டுமல்ல இராணுவ வியூகத்தோடுமே நகர்த்தத் தொடங்கியது.அமெரிக்க இராஜ தந்திரத்தை இராணுவ வியூகதைத் தவிர்த்துப் பார்ப்பது கடினம்.இதுதாம் „துப்பாக்கிக் குழலிலிருந்து அரசியல் பிறப்பதாக“அன்றைய சீனத்தின் சிற்பி சொன்னதாக ஞாபகம்.என்னவோ இன்றைய இந்தப் பனிப் போரை எவருமே முடிவுக்குள் கொண்டுவர முடியாதபடி இருஷ்யாவின் இராணுவ நகர்வுகளும்,ஜேர்மனியின் விஞ்ஞானப் பரிமாற்றங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.இந்தவிடத்தில் இன்றைய அமெரிக்க வெளியுறுவ மந்திரி கெரி -பூட்டின் சந்திப்பைத் தனியே சிரியாவின் ஆட்சி மாற்ற வியூகத்துக்குள் பார்த்தால் அது தவறாகும்!

போலந்தில் நிறுத்தி வைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்புப் கணைகள்(என்.எம்.டி.)மற்றும் செக்காயில் நிலைப்படுத்தப்படும் ரேடர்கள் மூலமாக அமெரிக்கா அச்சுறுத்தும் அரசியல் இன்னொரு இரணுவத் தன்மையிலான ஐரோப்பாவையும் இவர்களுக்கு இரையாகும் தொழிலாள வர்க்கத்தையும் உருவாக்கி விடுவதும் இதன் வாயிலாக சுய வளர்ச்சிகள் சிதறடிக்கப்பட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வாழ்வு மதிப்பீடுகளையும் இராணுவ மயமாக்க முனையும் அமெரிக்கா தன்னை எப்போதும் அண்மைக் கிழக்கு நாடுகளின் தலைவனாகவும் அந்த நாடுகளின் எண்ணை வயல்களைத் தனது மேற்பார்வையோடுதாம் கொள்ளையிட்டுத் தான் போடும் பிச்சையை மற்றவர்கள் பெறும்படிதாம் கோரிக் கொள்கிறது.இதை மீறிய எல்லா வகை அரசியல் நகர்வையும் தான் எந்தக் கோலத்திலும் அழித்துவிடும் திறன்மிக்க நாடு என்பதை அமெரிக்கா மேற்குலகத்துக்குச் சொல்வதே இந்த National Missile Defense ஊடாகவேதாம் சாத்தியமாகிறது.சிரியாவின் ஆட்சிமாற்று பின்கதவுப் புரட்சி இங்குதாம் மையங் கொள்கிறது!

இன்றிருக்கும் உலக வர்த்தகப் பொறி முறையில் „மசகு எண்ணையின்றி ஒரு மசிரும் அசையாதென்பதே“ உண்மையாகும்இந்த உண்மையானது எப்பவும் எண்ணைக்காக எதையும் இழகத் தயாராகும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியலில் இவர்கள் நடாத்தும் இராணுவச் சகசம் அப்பாவி மக்களையும் அவர்களது பண்பாட்டையும் சாம்பலாக்கும் அளவுக்கு யுத்தம் அவசியமாக முனைப்புறுகிறது.இது விரும்பத் தக்க விளைவில்லையெனினும் இதைவிட வேறு வழி இந்த நாடுகளுக்குத் தெரியவில்லை.இந்தத் தெரிவெல்லைக்குப் பின்னால் மேற்குலக வெள்ளைத் திமிர் மறைந்திருக்கிறது.தாம் எவரும் குடியில்லையென்பதும்,தாமே மற்றவர்களுக்கு எஜமானர்களென்பதும் இந்தத் திமிருக்குள் இழையோடுகிறது.

ஈரானின் அணு ஆயுத முயற்சி,நெடுந்தூர ஏவுகணைகள் என்ற பூச் சுற்றலுக்குப் பின்னால் ஈரானின் உலர்ந்த எண்ணை வயல்களே அமெரிக்காவினதும் மற்றும் மேற்குல நாடுகளினதும் சீனாவினதும் அரசியல்-இராணுவ வாதத்துக்குக் காணமாகின்றென.

2005 ஆம் ஆண்டு Oil and Gas Journal‘ ன் கணிப்பின்படி ஈரானில் உள்ள எண்ணை இருப்பானது 125.8 பில்லியன்கள் பெறல்களாகும்.இது அமெரிக்காவின் எண்ணை வளத்தைவிட ஐந்து மடங்கு அதிகமானது .இது உலகத்தில் இரண்டாவது பெரிய எண்ணை வளமுமாகும்.இன்றைய நிலையில் இருப்பிலுள்ள இந்த எண்ணையை உறிஞ்சிக் கொள்வது அவசியம்.இல்லையேல் ஈரானின் பாத்திரம் எண்ணைவள நாடுகளின் கூட்டில்;(OPEC -Organisation der erdölexportierenden Länder)இரண்டாவதாகவே தொடர்ந்திருக்கும்.இது அமெரிக்காவுக்கு என்றும் பாதகமானது.சோவியத்துக்குச் சாதகமானதாகவும் சீனவுக்கு நேசமாகவும் இருக்கும்.எனவே, எக் காரணங்கொண்டும் ஈரானை யுத்தத்தால் வென்று அதன் முழு எண்ணை வயல்களையும் அமெரிக்கா கட்டுப் படுத்தியாகவே வேண்டும்.இதுதாம் இன்றைய அமெரிக்க எண்ணை முதலாளிகளின் கனவு.இது பலிக்குமா என்பதை பின்பு பார்ப்போம்.இதற்கு முன் வேறு சில வற்றையும் பார்ப்போம்.

சீனா-இருஷ்யா-ஈரான்:

ஈரானின் அநேகமான எண்ணை இருப்பு நிலப்பரப்புக்குள் கீழேயேதாம் இருக்கிறது.இந்த நிலப்பரப்பில் முக்கியமானது Khuzestan பகுதியாகும்.இது ஈராக்கின் எல்லைக்குப் பக்கத்தில் அமைந்திருப்பதாலும் இங்கே ஈரானின் மிகப் பெரும் எண்ணை ஊற்றுக்களான இரண்டு வயல்கள் இருக்கிறது.ஒன்று:Yadavaran¦ மற்றது:¦Azadegan இப்போது சிந்திப்பவர்களுக்கு அமெரிக்க எண்ணைக் குஞ்சுகளின் இதயத்தின் „படீர் படீர்-யுத்தம்,யுத்தம்-அணுக்குண்டு,அணுக் குண்டு-ஆபத்து ஜனநாயகத்துக்கு“ என்ற அடிப்புக்கு-அரிப்புக்கு என்ன காரணமெனப் புரிவது கடினமில்லை!

அன்று , ஐ.நா.வின் பாதுகாப்பு மாநாட்டின் தொடர் இருக்கைக்கு ஈரானிய ஜனதிபதிக்கு மிகவும் சுணக்கியடித்து விசா வழங்கிய அமெரிக்காவின் நரித் தனமானது வீட்டோ உரித்துடைய இருஷ்சிய மற்றும் சீனாவின் ஒத்திசைவான வீட்டோ பயன் படுத்தலைக் கண்டு தடுமாறியதன் விளைவாகவும் மேலும் குழப்பத்தோடு அம்பலத்துகு வந்துள்ளது.என்றபோதும் ,தற்போது குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஈரானுக்கான பொருளாதாரத்தடையை மீளவும் Wien ஒப்பந்தத்துக்குப்( http://www.cicero.de/weltbuehne/atomdeal-mit-iran-eine-hypothek-auf-die-zukunft/59561 ) பின்னும் கோரிக் கொண்டிருப்பினும் இது ஈரானை மெல்லப் பாதிப்புக் குள்ளாக்கினும் அமெரிக்காவின் திட்டமானது ஈராக்கின் எல்லையிலுள்ள ஈரானின் எண்ணையைக் கையகப் படுத்தும் ஒரு அத்துமீறிய யுத்தமே.

இன்றைய ஈரானிய எண்ணை வயல்களில் முக்கியமானYadavaran எண்ணை வயலில் 50 வீதமான பங்கை சீனா கட்டுப்படுத்துகிறது.சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சீனப் பெற்றோலியம அன்ட் கெமிக்கல் கோப்பிரேஷனிடம்;;.(Das staatliche chinesische Erdölunternehmen China Petroleum & Chemical Corporation hält 50% der Aktien des großen Yadavaran-Ölfelds)இந்த ஐம்பது வீதப் பங்கு இருக்கிறது.இது இந்த எண்ணை வயல்மீதான சீனாவின் கழுகுக் கண்ணுக்கு நல்ல உதாரணமாகும்.

இருஷ்சியாவோ 2003 ஆம் ஆண்டளவில் தான் போட்டுக்கொண்ட திட்டத்தின்படி ஈரானின் எண்ணை வளமிக்க தொழிற்சாலைகளுள் மிகப் பெரும் நிதியிட்டுள்ளது.கூடவே தனது சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ஈரானின் மொத்த தேவைக்காக அனுப்பி வைக்கின்றபோது அதேயளவு மசகு எண்ணையை ஈரானிடமிருந்து மீளப் பெறுகிறது.இந்தக் கூட்டு முயற்சியானது வருங்காலத்தில் ஈரானின் மொத்த எண்ணையிருப்பையும் கணிசமானளவு சீனாவும் இருஷ்சியாவும் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் ஈரான் இதை முழுவிருப்போடு செயற்படுத்த விரும்புகிறது.அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த முயற்சியைத் தொடர விரும்பும் ஈரானுக்கு இந்த இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதில் வியப்பில்லை.

ஈரானின் எண்ணை டொலர்கள்:

ஈரான் இதுவரை மிகப் புத்திசாலித்தனமாக அமெரிக்க ஆசாமிகளை கலங்க வைத்தே வருகிறது.அது செய்த இரண்டு காரியம், ஒன்று:தனது பெருந்தொகையான அன்னியச் செலவாணியை குவித்து வைத்திருக்கும் மேற்குலக வங்கிகளிலிருந்து பெரும் பகுதியை மீளத் தனது நாட்டுக்குள் இழுத்துவிட்டது.இது அமெரிக்கப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தையே பாதிக்குமளவுக்குச் சென்றிருக்கிறது.மற்றது ஈரானின் நீண்ட நாட் கனவான எண்ணைப் பங்குச் சந்தையை ஐரோப்பிய எண்ணை நிறுவனங்களின் பங்குச் சந்தையோடு இணைத்து இயங்க வைப்பது.இந்தச் செய்கையால் இதுவரை எண்ணை டொலர்களாக இருந்த பணமாற்று இனிவருங்காலத்தில் ஐரோப்பிய யுரோவுக்கு மாற்றவேண்டிய நிலையை ஓபெக் நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது.இது அமெரிக்காவுக்கு மிகவும் கேடான செய்தி.எனினும் இத்தகைய நடவடிக்கைகளை முதன்மைப் படுத்துவதால் அமெரிக்காவை வீழ்த்தமுடியாது.இதை அமெரிக்கப் பேய்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளத் தக்க மொழிகளில் ஈரானுக்கும் அதன் வர்த்தகத் தொடர்பு நாடுகளுக்குஞ் சொல்வதில் இந்த என்.எம்.டி.ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டமும் தற்போதைய Hydraulic fracturingஅதற்குக் கை கொடுக்கிறது.இதன்முலம் எண்ணை விலையைக் 50 % செயற்கையாய்ச் சரிய வைத்த அமெரிக்கா இயற்கையைச் சூறையாடுவது மட்டுமல்ல சூழலைக் கெடுத்துப் புவிப்பரப்பை நாசமாக்குகிறது!

ஈரானின் இத்திட்டம் வெற்றி பெறுந் தறுவாயில் டொலர் மூலமாகப் பரிமாறப்பட்ட எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு முழுதாக மாறுந் தறுவாயில் டொலரின் சரிவு நிகழ்ந்துவிடும்.இதை அமெரிக்கா மேற் சொன்னபடி தடுத்தாலும் தொடர்ந்து இதை முறியடிப்பதில் அமெரிக்காவுக்கு ஒரு யுத்தம் ஈரான்மீது தொடுத்தாக வேண்டும்.இதுதாம் அமெரிக்காவின் இது நாள் வரையான யுத்த அளவுகோல்.இதுவன்றி அமெரிக்க மூலதனம் பெருக முடியாது.அதன் முரண்பாடுகளை அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.எனவே, அமெரிக்க மூலதனத்தின் இருப்பு அமெரிக்காவின் அத்து மீறிய யுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது!

எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு மாறுந் தறுவாயில் பயன் பெறும் முதலாளிகள் நிச்சியம் ஐரோப்பிய முதலாளிகளே!சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமே இது பாரிய பின்னடைவை வழங்கும் .இதுவரை டொலரில் பரிமாற்று நிகந்த வரை தமது மூலதனத்தின் மூலம் உபரிகளை தேடிக் கொண்ட இவர்கள் இனிமேல் யுரோவுக்கும் டொலருக்குமான சம நிலையற்ற போக்கால் பாரிய துண்டு விழும் நிலைக்குள் தமது மூலதனத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் சீனா மதில் மேல் பூனையாக இருந்து கொள்ள முனையும்போது ஜப்பான் அமெரிக்காவுக்கு வக்காலத்து வேண்டும்.அது அமெரிக்காவோடிணைந்து ஈரான்மீது தாக்குதல் தொடுக்கும்.இங்கே ஐரோப்பிய நாடுகளின் தலைமை நாடான ஜேர்மனி அமெரிக்கப் படுகொலை யுத்தத்தை எப்படியும் ஒரங்கட்டும் அரசியலை நகர்த்த முனையும்போது அதை உடைப்பதற்காகவே போலந்தோடு ஏவுகணைக் கூட்டை அமெரிக்கா செய்கிறது.கூடவே ,ஜேர்மனியையும் இருசியாவையும் தொடர்ந்து முரண்பாட்டுக்குள் சிக்க வைத்துப் போருக்குத் தயார்படுத்துகிறது.இதற்காக அமெரிக்க உளவு நிறுவனம் ஜேர்மனியின் அளைத்துப் பெரு ஊடகங்களையும் நிதிகொடுத்துக் கைப்பற்றியுள்ளது!;இந்தவூடகங்கள்தாம் யுத்த முனைப்பூட்டி ஜேர்மனியர்களை இருசியாவோடு நடக்கும் யுத்தத்துக்கு ஒத்துழைக்கத் தயார்ப்படுத்துகிறது!

உலகில் பேற்றியர் லோஞ்சர் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.இது அமெரிக்காவின் அற்புதமான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்.அமெரிக்கா தன் நேச நாடுகள் இரண்டிற்கு மட்டுமே அந்த ஆயுதத்தை வழங்கியது.அந்த நேச நாடுகள் இஸ்ரேலும் ஜேர்மனியுமாகும்.இப்போது ஜேர்மனிக்கு எச்சரிக்கும்படி போலந்தை வளைத்துப் பிடிக்கும் அரசியலை அமெரிக்கா முன்னெடுப்பதால் ஜேர்மனி கையைப் பிசைந்தபடி „நேட்டோ,நேட்டோ“என்று அலம்புகிறது.இங்கே வெடித்திருக்கும் இந்தப் பனிப்போரானது எண்ணையை முதன்மைப் படுத்திய அதுவும் ஈரானிய எண்ணையிருப்பைக் கொள்ளையிடுவதோடு சம்பந்தப்பட்ட மாதிரித் தெரிந்தாலும் அதற்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.அதுதாம் 3 வது உலக மகா யுத்தத்தை வெவ்வேறுபாணியில் -முகத்தோடு தொடர்ந்து நடாத்தியபடி அதை இருசியாவை -மேற்குலகை யுத்தத்துக்குள் சிக்க வைத்து முடித்துவிட்டுப் பேரரசாக மாறிவரும் சீனாவைத் தனது காலடிக்குள் வீழ்த்துவது; இங்கே, உக்கிரைன் இத்திட்டத்தின் மையமாகும்.

உசாத்துணைகள் :
http://www.br.de/nachrichten/oel-boom-fracking-usa-100.html
http://nsarchive.gwu.edu/nukevault/ebb538-Cold-War-Nuclear-Target-List-Declassified-First-Ever/
http://skaneateles.org/navy/mkvi.html
http://nsarchive.gwu.edu/NSAEBB/NSAEBB537-Clinton-White-House-Frustrated-in-Attempts-to-Forge-US-Global-Leadership-on-Climate-Change-in-1990s/

War and Militarization


http://harpers.org/sb-democrats-oil-1174575083.html
Attac-Mailingliste
http://www.saar-echo.de/de/prt.php?a=30566
die tageszeitung 19.03.2007
Konkret 2.2007
Krieg und Frieden von Willi Dickhut.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்!

நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் – இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு „தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் „என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.

இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் „என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.

உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த „அகதி“ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை – ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் „தாம் செய்வது -ஆய்வது“ எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : „நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்“ (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! – EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?

பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு „கொபற்ற  கொல்லையிற் குப்பை“  கொட்டுவதில் „டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்“ எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்

10.10.2015

எது பயங்கரவாதம்?

எது பயங்கரவாதம்?

அதிகாரம் என்பது வியூகமாகுமா?

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை  அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும்  நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.

ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில். அதிகாரத்தைக் குறித்துச் சர்வதேச அளவில் பேசும்போது,அது நீண்டவொரு கருத்தாளுகையைக்கொண்டவொரு தளத்துக்கு நம்மை நகர்த்திச் செல்வதாகும்.இன்று,நாம் மூன்றாவது உலக மகா யுத்தத்தின் அழிவைச் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்க-ஐரோப்பிய அதிகாரத்தின் மையவலு அழிப்பு யுத்தத்தின் வெற்றிவரை அவர்களை அழைத்துச் செல்வதை ஈராக்-அவ்கான்-லிபிய மற்றும் சிரியா -உக்கிரைன் யுத்தங்கள்வரை உணர்ந்துகொண்டோம்.இந்த அதிகாரமானது முழுக்கமுழுக்கப் பொருளாதரத்தைச் சுற்றிய இலாபவேட்கை-தொடர் மூலவளக் கொள்ளையென அதன் அத்துமீறிய தளங்களிலான ஆதிக்கமானது வளர்ந்த தொழில்நுட்பப் போரர் தளவாடங்களின் வருகையோடு உலக மக்களைக் கணிசமாகக் கொன்று நிலைப்படுத்தி ,விரிவாக்கப்படுகிற இன்றைய தருணத்தில்தாம் உலகத்துள் 60 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உலகெங்கும் அலைகிறோம்.

இத்தகக் கேடுகெட்ட பாசிச ஆதிக்கவாதிகளது தேவைகள் என்னத்தைத்தாம் நடக்கு விட்டு வைக்கும்?

,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert“  [ எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் ] -அமெரிக்காவில் இருந்து ,1918 இல் பிரஞ்சுப் பிரதமர் Clemenceau   ஒரு உரையாற்றலில் கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.

எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத் தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம் தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக [ „Oil is much too important a commodity to be left in the hands of the Arabs.“ –Henry Kissinger ] பேய்போல் அலைந்து  துரகிழக்கு – அண்மைக் கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது;இன்றும் ஈராக் , அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று நேட்டோ பயங்கரவாதக் கூட்டணியூடாகப் பாசிசப் போரை அப்பாவி மக்கள்மீது  அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கட்டவிழ்த்து விடுகிறது.

இஃது சமகால -நிகழ்கால வரலாற்றைக் கடந்து , நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினத்தும் வாழ்வாக நம் முன் அச்சத்தைத் தருகிறது..

11 செப்ரெம்பருக்குப் பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள்  உலகரங்குக்கு வந்தன..அமெரிக்க| ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.இவர்கள் ஈராக், அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று பல் தேசங்களை அழித்தபடி இருசியாவோடு அணுயுத்தம் நடாத்தக் கருத்துக் கட்டுவதில் தமது அனைத்து வளங்களையுமின்று பயன்படுத்துகின்றனர். இதுவே தற்போதைய நிகழ்ச்சி நிரலாகவுங் கூட இருக்கின்றது.

‚இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்[ The War on Terror and  „Global War on Terrorism“ ]!, இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.‘ ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற் தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம் அதன் நேட்டோக் கூட்டணிப் பயங்கரவாத அரசுகளிடம் இருக்க, நமது அப்பாவிகளோ முளைத்து மூன்றிலை விடுவதற்குள் அமெரிக்காவுக்கான அடியாளாகப் போவதில் நாட்டமாகின்றனர்.இந்த அமெரிக்காவனது உலகத்துள் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தித்தித் தனது காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து நியாயப் படுத்திவிடுகிறது.இதற்காக எவரையும் – எந்தக் குஞ்சு குருமானையும் அது தனக்கேற்பத் தயார் செய்து ஒவ்வொரு துறைகளுக்குள் தொடாந்து நுழைத்து விடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள 13 வயதுத் தமிழ்ச் சிறுவனின் பெயரில் வந்த இந்த நாவலும் ( Flug-747) தற்போது சாட்சி!

“ Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten.““ Flug-747 By Sagithjan Surendra

“ Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! “ – Flug-747

“ Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal.“ – Flug-747

உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!

இன்றைக்கு அமெரிக்க அரசை முதலாவது „அதிவல்லரசு“ என்றால் இரண்டாவது அதிவல்லரசு இருசியவோ அன்றிச் சீனாவோ அல்ல என்கின்றார் சுவிச்சர்லாந்து வரலாற்றுப் பேராசிரியர் டானியல் கன்செர் ( Prof.Dr. Daniele Ganser).மாறாகப் பொது அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்தி உருவாக்குபவர்களே இராண்டாவது பெரிய வல்லாதிக்கம் என்பது அவரது கருத்து.இது சரியானது.மார்க்சு கருத்தியற் போராட்டங் குறித்து மிக விரிவாகவும் அதன் பலத்தையும் நமக்குச் சரியாகவே சொல்லிச் சென்றதால் இது ஆச்சரியமில்லை!

இந்த அளவுகோலுக்குட்பட்டு அமெரிக்க – ஐரோப்பியர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் இந்த அழகிய „மனிதாபிமானம் „உலக அரங்குக்குள் வரும்.இதுவே அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌன அஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக் கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.ஆனால் Charlie Hebdo மீது தாக்குதல் தொடக்கப்பட்டால் உடனே உலகைக் கூட்டி „Je Suis Charle“ எனக் கத்தும் உலகப் பயங்கரவாத நேட்டோ அணியானதுதாம் ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகளைப் பொருளாதாரத் தடையாற் கொன்றழித்தவர்கள்; இப்போது ஈரானிலிருந்து இருசியாவுக்குத் தமது பொருளாதாரத் தடைகள் மூலம் மனிதாபிமானத்தை வகுப்பெடுக்கின்றனர்.

ஆனால்‘ 11 செப்ரெம்பர் ‚ என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற் களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த‘ பதினொன்று‘ மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.இதைச் செவ்வனவே மேலே சொன்ன நாவல் அருமையாக நகர்த்துகிறது!

அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது குழந்தைகளையே விட்டுவைக்காது அவர்களையும் ;அவர்களது திறமைகளையும் கணக்கிலெடுத்து அமெரிக்கப் புலானாய்வுத் துறை தன் தேவைக் கேற்ப அவர்களையும் தயார்ப்படுத்துகிறது.இந்நிலையில் , உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு.’யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ எம் மூதோர் கூறியதும் இஃதே!

ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. தனது சுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.இதனாற்றாம் கீழ்வரும் நாவலின் கருத்தை CIA இன் குரல் என்கிறோம்.

(“ Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten.““ Flug-747 By Sagithjan Surendra)

இது எப்படிச்சாத்தியமாச்சு? ,இந்த ‚உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்‘ எனும் அரசியற் கருத்தாக்க உளவியலுக்கும் இந்தத் தமிழ்ச் சிறுவனுக்கும்  என்ன தொடர்பு?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும் செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு?சிரியாவில் தொடர்ந்து நடாத்தப்படும் பயங்கரவாதக் கூட்டணிகளது தாக்குதலுக்கும் உக்கிரைனில் நெறிகட்டும் நேட்டோவின் இராணுவ முஸ்த்தீப்புக்கும் (Military exercise/War game )என்ன தொடர்பு???

‚யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல் நலன்களுக்குள்ளும் தேடணும்‘

இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதி நவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும். அப்போதுதாம் நமது சிறார்களைக்கூட இந்தப் பாசிசப் பயங்கரவாத அமெரிக்காவிடமிருந்து காக்க முடியும்.

அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக?; இதுவரை சிரியாவில் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்படுவது  எதற்காக.??உலகத்துள் 60 மில்லியன்கள் மக்கள் அகதிகளாப்பட்டு அலைவதும், 13 மில்லியன்கள் குழந்தைகள் ஆரம்பப் பாடசலைக்குச் செல்ல முடியாது துரத்தப்பட்டதும் எதற்காக???

எது பயங்கரவாதம்? அமெரிக்க -ஐரோப்பிய பொருளாதார -ஆதிக்க வன்முறைக்குப் பலியாகப்பட்ட இத்தகைய அரச பயங்கரவாதத்தை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒரு சதாம்–பின்லாடன் மற்றும் The Islamic State வகையறாக்கள் தேவைப்படுகின்றது.

வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்–நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும் ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பிய அமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான, மானுடவிரோத யுத்தத்தை, பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை’யுத்த அளவுகோல்‘ என்று விவாதிக்கிறார்கள். இது பயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர்கள்) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்த அளவுகோல்|சமன்:யுத்தநெறி. அதையே மற்றய  இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.

“ Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! “ – Flug-747

(…)

ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.

வரலாறு நெடுக மூலதனமானது  தன் கரங்களை குருதியில் நனைத்தபடியே…இன்று சிரியாவில் ; உக்கிரைனில்  புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.

மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.

அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக்கள்  நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ் அணுயுத்தங்களுக்கு ‚பயங்கரவாதத்திற்கெதிரான போர்‘ என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் ( “ Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal.“ – Flug-747
) வலுவாக்கப்பட்டுள்ளது.

இது சாரம்ஸமான ‚ஜனநாயகம்‘ என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான ‚ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்’எனும் கருத்தாக்கம் இப்போது ‚பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்‘ என்பதில் போய்முடிந்துள்ளது.

இதன்படி பார்ப்போமானால் இன்று நடைபெறும் அனைத்து யுத்தங்களும் வர்க்க ஒடுக்குமறையாக விரிந்து உலகு தழுவி உழைப்போரை ஒடுக்குதலே!

ஆக , நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:

இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா  – உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா,  ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான மீள்-பனிப் போரும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம் மூலதனப் பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும் கொய்தெறிவதே.

இந்த யுத்தங்களின் விருத்தி ‚பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு‘ என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!

ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக் குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும் பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்|எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக் கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை ‚பயங்கரவாதிகளின் கூட்டு’வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன.

இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விச வடிவிலான அராஜகக் கூட்டுணர்வு.

மைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்

இன்று, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது சமூக-அரசியல் வாழ்வு மிக மோசமாக அந்நியச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது.முள்ளிவாய்காலில் புலிகள் ஈழத்தைக் காவு கொடுத்தபோது இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மட்டும் அநாதவராக விடப்பட்டிருக்கிறது. இவர்களே இலங்கை சிங்கள மேலாதிக்கத்தால் இனவழிப்புக்குட்பட்டனர்.புலிகள் பரந்துபட்ட மக்களுக்கெதிராகத் „தமிழீழப்போராட்டஞ்“செய்தபோது இலட்சக்கணக்கானவர்கள் அந்தப் போராட்டத்தால்பழிவாங்கப்பட்டு அந்நியர்களுக்காகப் பலியெடுக்கப்பட்டனர்.அண்ணளவாக மூன்று இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர்.இருந்தும்,முள்ளிவாய்க்கால்வரை „தமிழீழம்“ காணும் யுத்தம்புரிந்த புலிகள், தமது போராட்டச் செல்நெறியின்வழியாக இந்த அரசியல் வாழ்வைச் சிறுபான்மை இனங்களது தலையில் சுமத்திவிட்டுத் தமிழ்பேசும் மக்களது செல்வத்தோடு கோடிக்கணக்கில் வியாபாரஞ் செய்யவும்,சிங்கள-இந்திய அரசுகளுக்குச் சிறுபான்மை இன மக்களை மட்டுமல்ல முழு இலங்கை மக்களையும் காட்டிக்கொடுக்கவுமென அரசியல் செய்யும்போது, இவர்களைக் குறித்து எங்ஙனம் புரிந்துகொள்வது?

வரும் இலங்கை அதிபர் தேர்தலையொட்டிப் பல பத்துப் புலி -தேசிய வேடாதாரிகளும்,முன்னாள் அராஜ இயக்கங்களும் மீளவும், தமிழ்பேசும் மக்களிடம் ஜனநாயகம்பேசி வேட்டைக்குத் தயாராகும்போது,அந்த இயக்களிலிருந்து இந்தியாவுக்கும் உலக ஏகாதிபத்தியங்களுக்கும் துணைபோனவர்கள் நூல்கள் வெளியிடுவதும்,அதனூடாகப் போராட்ட வாழ்வின் வரலாற்றைச் சொல்வதெனும்போர்வையில் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோய், அவர்களது ஏஜென்டுகளாக இயங்கும் இன்றைய தருணத்தில்இவர்கள் பேசும் ஜனநாயகம்,மாற்றுக் கருத்துக்குச் செவி சாய்ப்பது என்பதெல்லாம் என்ன? அந்நியச் சக்திகளுக்கேற்ப அரசியல் பேசும் சுதந்திரமா?என்றபோதும்,ஜனநாயகத்தின் குரலை எழுப்புகிறவர்களுக்கு ஜனநாயமென்பது என்னவென்றே புரிந்தபாடில்லையென்பதை அவர்களது பெருயுரையாடலூடாக இன்றைய தலைமுறை பார்த்துக்கொண்டிருக்கிறது-வெறும் பார்வையாளராக!

நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழ முனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது. இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.

ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-„ஈழப் போராட்டம்“ தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.

இதோ,“இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்என்றவர்கள் இப்போது, மைத்திரிபால சிறீசேனவை நமக்கு ஜனநாயகக் காவலராகக் காட்டுகின்றனர்.

இவர்களிற் பலர்  தற்போது இடது-வலது ,புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்னரே,இ வர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஜனநாயக வெளிக்கு நம்மையழைத்துச் செல்லப்போகின்றனர்!

வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி „படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே மைத்திரிபால சிறிசேனவைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்ரென வகுப்பெடுக்கின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை“ஜனநாயக“ உரையாடலாகக் குறுக்கிக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகவதற்கான அரசியல் – ஜனநாயக வெளிக்கு மைத்திரி வெல்லவும் வேண்டுமெனத் தீர்ப்பெழுதுகின்றனர்.

இத்தகைய நபர்கள் -குழுக்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்கிறது.இது,இலங்கையின்சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இலங்கையில் மீள நல்லாட்சி,ஜனநாயகம்,சட்டத்தின் அரசு எழுவதிலிந்து தீர்த்துவிட இயலுமெனக் கருத்தாடுகின்றனர்.இதுவுண்மையில் சாத்தியமானதென்று இவர்களால் ஆதரிக்கப்படும் கட்சியும் அதன் பொதுவேட்பாளரும் எந்தவுறுதிப்பாட்டையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறித்துரைக்கவில்லை!மைத்திரியின் -மேற்குலகின் லொபிகளாவுள்ளவர்களது கற்பனையான கருத்துக்கள் மீளவும், நம்மை ஏமாற்றிவிடுவதில் இந்த இலங்கை அதிபர் தேர்தலும்நமக்கு மீளவும்துரோக வரலாற்றுப் படிப்பினையத் தரலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

05.01.2015

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…

பொது வேட்பராகிய மைத்திரிபாலவுக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்

„இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்.“

தற்போது,வரும் ஜனாதிபதித் தேர்தற் பரப்புரைகளைக் கவனிப்பவர்களுக்கு பல சிக்கலான கேள்விகள் மண்டையைக் குடைகிறதா?

எனக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு இரத்தவழுத்தம் அதிகமாகிறது.

மகிந்தா தலைமையிலான இந்தப் பாசிச அரசைக் குறித்து நமக்கு வகுப்படுத்த பலர் முள்ளி வாய்க்காலுக்குமுன்னும், பின்னுமொரு தர்க்க நியாயத்தை வழங்கி வந்தனர்.

அதாவது,மகிந்தா அரசானது – இல்லை இன்னுஞ் சிறப்பாகச் சொல்வதானால்இலங்கை அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டதுக்குட்பட்ட அரசென்றும்,அது ஜனநாயகத் தன்மையுடைய அரசென்றும், நீதி பரிபாலனம் அங்கு ஓரளவேனும் சிறப்பாக இருப்பதாகவும் கூறிவந்தனர். இதை முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பும் பலர் கூறிக்கொண்டனர்.

சிறப்பாகத் தலித்துவ மேம்பாட்டுக் கழகத் „தோழர்“ தேவதாசனும்,அவரது தத்துவ ஆசிரியரான நிர்மலா குழுவுறுப்பினர் அண்ணன் இரகவனும் மிக நேர்த்தியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று,பார்த்து வழிமொழிந்தார்கள்!

நிர்மலா அம்மையார் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவரது மொழியில் இலங்கையின் மகிந்தா தலைமையிலான அரசைச் சிலாகித்துப் பேசிப் புலிப் பயங்கரவாதத்தைச் சாடிக்கொண்டே வந்தார்கள்.

புலம் பெயர் „மாற்றுக் குழுக்கள்“ தம்சார்புக்குப்  பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனி என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.அவர்களில் இப்போது இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி மகிழ்கிறார்.

டேய்,உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit  ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?

சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும்  ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோருகிறார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன்  சுசீந்திரன்வரை கும்பிட்டுக் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்படியே எல்லோரும் கூறிக்கொள்ளும்போது தமிழர்கள் தலையைச் சொறிவதைத்தவிர என்ன செய்ய முடியும்?

இலங்கையை மாறி,மாறி-மாறி ஆண்ட இருபெருங்கட்சிகளும் அவையோடு கூட்டு வைத்த இடது-வலது,முரடு-கரடுகளெல்லாம் இதுவரை என்ன செய்தன?

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் பூர்வீக நிலப்பரப்பில் இந்தச் சட்டவாத அரசு மூலம் ,நீதி, ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி நிலைத்திருந்ததென்பதை அறியாத-புரியாத,உணராத நமக்கு இன்று , இது என்ன சாமான்கள் என்றுதாம் எண்ணதோன்றுகிறது.

இராணுவ முகாங்களும்,பொலிஸ் நிலையங்களும் அவர்களது தார்ப்பாரும் நிலவியவொரு பிரதேசத்துள் இதை எப்படிப் புரிந்துகொள்வது நண்பர்களே?

இந்த ஓட்டுக்கட்சிகளது தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் இதுவரை எமக்கு அப்படியொரு அரசவொழுக்கங்கள் இருப்பதாகக் காட்டவில்லையே!இனியும் அதைக் காட்டுவார்களென்று எந்த நாயும் வகுப்பெடுக்க முடியுமா?

 „மீள ஜனநாயத்தை,நல்லாட்சியை,சுதந்திரத்தை,நீதிபரிபாலனத்தை „க் கட்டியொழுப்ப [  return to democracy, good governance, an independent judiciary, etc. ]மைத்திரிக்கு வாக்களிக்கக் கோருபவர்களே,இவையெல்லாம் முன்னம் நமக்குள் இருந்தவைகளா?

இவை இருந்ததென்றால் ஏன் இனவொடுக்குமுறையை  காலா காலமாக நமக்குள் இந்த அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன?

ஏன் பல இலட்சம் மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?

ஏன் வருடா வருடங்கள் இனக் கலவரங்கள் தூண்டப்பட்டன?

ஏன் பல இலட்சம் துருப்புகள் நமது மண்ணை அபகரித்து ஆக்கிரமித்தன?

ஏன் சத்தியாக்கிரகக்காரர்கள் மண்டை பிளவுண்டனர்?

ஏன் நமது கோணேஸ்வரிகளது கவட்டுக்குள் குண்டுகள் வெடித்தன?

கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை மொட்டையடித்தவர்கள்,நம்மிடம் வந்து, இந்த எட்டாக் கனிகளைக் குறித்து வகுப்பெடுக்கும்போது கொஞ்சமும் கூச்சமில்லையா?

சிங்கள மக்களிடம் சொல்வதைத் தமிழ்பேசும் மக்களிடமும் சொல்ல முடியுமா?

நாம் ஒடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமென்பதை „ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி,நீதிபரிபாலனம்“ என்று சொல்லும் இந்தத் திமிரை யாரடா உங்களுக்குச் சொல்லித் தந்தது?

ப.வி.ஸ்ரீரங்கன்

04.01.2015

சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று…

நிறைவேற்றதிகாரமுடைய „சனாதிபதி“க்கான தேர்தல்:2015

 „மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!“

இந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள்  வரும் சனாதிபதித் தேர்தலையொட்டிப் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள், புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச்                   ” சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது – உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?”அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!;இந்தச் சனாதிபதித் தேர்தலில்               [[ //  ஆள்வோரையும் – ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் – ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.// : http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14  ]] போட்டியிடுகிறாதாம் -நமது காதுகளில் பூ வைத்தபடி!

வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து  நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில்  மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி“  அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule  ] மீளவுருவாகுமென்பது  சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று  சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும்  [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more… :  http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html ]   மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து  அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள்  இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373 ]

இலட்சக் கணக்கான மக்களை”தமிழீழப்போராட்டம்”செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின்  சுயாதிபத்திய அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-முன்னாள் ஆயுத இந்நாள் ஒட்டரசியற் குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இத்தனை கட்சிகள் -குழுக்கள் ஒரு  நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்  நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் ;மக்கள் உரிமை பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.

இதற்குத் தோதாகச் சொல்லப்படும்  >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு .    <<  என்பதெல்லாம் மீளவும் அதே  அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் „ஏமாற்றி அழிக்கப்பட்ட“  தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.இதைப் புரிந்து,  தக்கப்படி காய் நகர்த்தும் அந்நியச் சக்திகள் தமிழ்த் தலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பின் அணி திரட்டியுள்ளனர்.இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்பதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச  ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு  „எதிர்ப்பு -மாற்று“  அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய  மற்றும் இலங்கை வியூகம்]  ,இன்னொரு பக்கம்  சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக „நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை „அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப்  பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.

இந்த நிலைமையில்  புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரை வரைந்த குழுவின்  கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து //  அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் – தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய அரசியல் யதார்த்தம்.எனவே, இந்த சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று கருப்புக்கொடி ஊர்வலமாக  எடுத்தாகவேண்டும்.மோசடி ஆட்சி மாற்றம் மற்றும்  அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச்  சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துக்கு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!

ப.வி.ஶ்ரீரங்கன்

யேர்மனி,

04.01.2015

2014 im Rückblick

Die WordPress.com-Statistik-Elfen haben einen Jahresbericht 2014 für dieses Blog erstellt.

Hier ist ein Auszug:

Ein New York City U-Bahnzug fasst 1.200 Menschen. Dieses Blog wurde in 2014 etwa 4.800 mal besucht. Um die gleiche Anzahl von Personen mit einem New York City U-Bahnzug zu befördern wären etwa 4 Fahrten nötig.

Klicke hier um den vollständigen Bericht zu sehen.

„மாவீரர்களை“ப் போற்றுவோம்!

கார்த்திகை 27 : „மாவீரர்களை“ப் போற்றுவோம்!

 முள்ளி வாய்க்கால்வரை „தேசிய விடுதலை“ப் போராட்டமென வரிந்துகட்டிய அனைத்து வாதங்களும் எந்த மக்களுக்காகக் குரல் கொடுத்ததோ அஃது,அந்த மக்களை வேட்டையாடிச் செல்வத்தைக் குவித்திருக்கிறது.இத்தகைய செல்வச் சேர்ப் பாளர்கள் பெருந்தொகையான மக்களைக் கொன்று போட்டுத் தம்மால் சேகரிக்கப்பட்ட மக்களது செல்வத்தைத் தொடர்ந்து தமதாக்கித் தமது வாரீசுகளுக்கு விட்டுச் செல்வதற்காகத் தொடர்ந்து,தொடர்ந்து „தமிழீழம்-தேசியமெனப் புனைவதும்“, „மாவீரர்களாகப்பட்ட „;  தமிழ் மக்களது குழந்தைகளது வாழும் உரிமையைப் பறித்துவிட்டு,அவர்களது கல்லறைகளைக் காட்டியே பணம் கறக்கும் இந்தச் சாபக் கேட்டுக்குப் பேர் „தேசிய மாவீரர் தினம்“ என்பது  ஒரு கேடான காலத்தைத் தொடர்ந்து மறைப்பதற்கானது.

இன்று, „தமிழ்தேசிய வாதமானது“ விதேசியப்பரப்பின் அறுவடையாச்சு! அஃது,வரலாற்றில் ஆற்றிக்கொண்ட அனைத்து மக்கள்விரோத அரசியல் நகர்வும் அதன் குணவியல்பான வர்க்க நிலையின் காரணமானதாகவும்,அந்த வர்க்கவியல்ப்புக்கேற்பத் „தமிழ்த் தேசியமானது“ தனது வர்க்கத்தோடு உலகு தழுவிக் கரங்கோர்த்துக்கொண்டது.அஃது, தனது வர்க்கத்துக்கான வேட்டை நாயாக வளர்ந்தபோது தமிழ்பேசும் மக்களது „சிங்களவின வொடுக்குமுறைக்கெதிரான“ எதிர்ப்புப்போராட்டமானதை தமது எஜமானருக்கேற்பக் கையகப் படுத்தியது.அதற்காக அது, நடாத்திய கொலைகளும்,சர்வதிகார ஆதிக்கமும் அதற்கானவொரு பாசிசப் படையை நிறுவிக்கொள்ளும் தகவமையை அந்நிய சக்திகள் வழங்கிக்கொண்டன.அதன் அதியுயர்ந்த ஒடுக்குமுறைவடிவமே புலிகள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறதல்லவா?

இதன் தொடர்ச்சியில் அந்த அமைப்பின் பிரதான தலைவனுக்கு என்ன நிகழ்ந்தது?

காற்றடமேயற்று இந்த மனிதன் அழிக்கப்பட்டதற்கு வரலாற்றின் நியாயம் என்னவாக இருக்கும்?

„மாவீரர்களுக்கு“ விழா எடுப்பவர்கள் தங்களது மகாப் பெரிய தலைவனுக்கு வரலாற்றில் என்ன பாத்திரத்தை வழங்கினர்?

இருந்தும் முள்ளி வாய்க்கால் கொடிய முடிவுக்குப் பின்னும் ஐந்தாவது தடவையாக „மாவீரர்“ கதை விடுகின்றார்களென்றால் மக்களது உரிமைகளை ஏலம் விட்டுப் பிழைப்பதில் இத்தகையவர்கள் பெரும் வர்த்தக மாபியாக்களாக இருக்கின்றனர்.மக்களது எந்த நலனிலும் அக்கறையற்ற பிழைப்புவாதிளாக மாறியவொரு கூட்டம் மீளவும், மக்களையும் அவர்களது கொல்லப்பட்ட குழந்தைகளையும் உரிமைகொண்டாடி அதையும், பணமாக்கும் ஒரு கச்சாப் பொருளாக்கியதைத் குறித்து நாம் கவனித்திருக்கின்றோமா?

இன்று,தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கெதிரான இந்தக் கொடுரமான வர்க்க எதிரிகள் நேரடியாகவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தோடு இனம்,மொழி,மதம் கடந்து வர்த்தகச் சூதாட்டத்துள் ஒன்றுபட்டுள்ளனர்.கூடவே, நம்மை ஒடுக்குவதற்கேற்ற பிராந்திய அரசியலையும் தமது எஜமானர்களுக்கேற்ற அவர்களது நிகழ்ச்சிக்குட்பட்டு  நமது  மக்களது பெயரால் „தேசிய மாவீரர்“ தினமெனக் கொண்டாடி நகர்த்துகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் தொழிலாள வர்க்கமானது தன்னை இனம்,மதம்,மொழி கடந்து ஒன்றிணைக்கும் சூழலுக்கு வந்தாகவேண்டும். ஒடுக்குமுறையாளர்கள் எப்பவுமே தமது வர்க்கத்தோடு இணைந்தபடிதாம் தமது எதிரி வர்க்கமான பெரும்பகுதி உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.இஃது வரலாறு பூராகவும் தேசங்கடந்து வினையாற்றுவதை நாம் அறியவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முடிவுவரை நமது கண்களைப் பாழாய்ப்போன தமிழ்த் தேசிய வாதக் கயர்வகள் மூலமாகக் குருடாக்குஞ் சந்தர்ப்பத்துக்காக நாம் இடதுசாரிய போராட்ட முன்னோடிகளைப் பிழையாகக் கையாண்டோம்.அவர்களை, ஆதிக்கவாதிகளுக்காகக் காட்டிக்கொடுத்தோம்.பாசிஸ்டுக்கள் கொன்று குவிக்கும்போது பாராமுகமாகப் பாசித்தின்முன் ஒப்புதல் கொடுத்தோம்.இறுதியில், பாசிசமானது புலி வடிவில் மக்களனைவரையும் காயடித்துக் கொன்று குவித்துச் செல்வத்தைக் குவித்துக்கொண்டிருந்தபோது , குத்து-குடையுதென்று ஒப்பாரி செய்தோம்.இந்த வரலாற்றுவுண்மைகளைக் கற்றுக்கொள்வதென்பது இத்தகைய எதிர்க் கருத்தாடல்-வரலாற்று வினைகளுக்கூடானதென்பதை நாம் புரிந்தாகவேண்டும்.எனவேதாம், முள்ளிவாய்க்காலுக்குப் பின் இந்த ஐந்தாவது தடவையாக நம்மை ஏமாற்றும் „தேசிய மாவீரர்“தினக் கொண்டாட்டத்தை அவர்கள் தமது இருப்புக்கான ஆயுதமாக நமக்குள் பயன்படுத்துகின்றனர்.

இவர்களது இந்தக் கொடிய ஆயுதத்தைப் புரிந்துகொண்டோமானால், தமிழ்த் தேசியத்தால் கரி பூசப்பட்ட தமிழ்பேசும் மக்களது விடுதலையின் புரட்சிகரமான வரலாற்றுப் பக்கங்களை நாம் இடதுசாரிகளது குருதியீனூடாகவே கழுவி உண்மைகளைக் கண்டடைய வேண்டிய துர்ப்பாக்கிய வரலாறு கடந்த காலமாக இருக்கும்!.

இனியாவது, ஆதிக்க வாதிகளது அதிகாரத்துக்குப் பக்கப்பலமாகத் „தேசியக் கோசம்“ போட்டொப்புதல்கொடுக்காது, நமது தலைவிதியை நாமே தீர்மானிக்க நமது வர்க்கஞ்சார்ந்து உணர்வு பெறுவோம்.அந்த வர்க்கவுணர்வினது வினையூக்கமானது இலங்கையில் ஒரு தொழிலாள வர்க்க ஐக்கியத்தைத் தரட்டும்!.அதன் பலாபலன்கள் இந்தப் பாசிச அராஜகவாதிகளது „தமிழ்த் தேசிய“க் குருதியாறாக நிச்சியம் இருக்காது.மக்களது வாழ்வையும்,வளத்தையும் சிதைத்துப் „போராட்டம்-விடுதலை“ யென்பதெல்லாம் அதிகார வர்க்கத்தின் பாசிசக் குரூரத் தேவைகளோடு சம்பந்தப்பட்டதென்பதை முள்ளி வாய்க்காலில் அநுபவமாக-வரலாறாக „இன்று“ நாம் தரிசிக்கின்றோம்.இதற்குள்  இவர்கள் கடைவிரிக்கும் „தேசிய மாவீரர்“தினம் என்பதன் அர்த்தம் பணம் பண்ணும் வடிவம் என்பதைவிட அதற்கென்றொரு புனிதமான வரலாறு கிடையாது!அவர்கள் இட்டுக்கட்டுவது பணத்தைச் சுருட்டும் வழியென்பதே உண்மையாகும்!

இந்தவுண்மையின்வழியாக நாம் வரலாற்றில் ஆற்றவேண்டிய பணியானது நமது வர்க்கவுணர்வைக் கண்டடைதலே!அதிலிருந்து பெறுப்படும் சமூகவுணர்வும்,சமுதாய ஆவேசமும் நமது விலங்கை நாமேயொடிக்கும் வலுவை இலங்கை-உலகு தழுவிய வர்க்க ஐயக்கியத்தினூடாக நமக்கு ஏற்படுத்தும்-இது கதை கட்டலல்ல-கனவுமல்ல.வரலாற்றில் நடந்த வர்க்கப் போர்களது பெறுமானம்.

அதைத் தவிர்த்துத் „தேசிய வாதம்“ பேசும் உடமை வர்க்கத்தின் இனவாதக் கருத்துக்குள் மாட்டபட்ட எந்தவினமும் இதுவரை இழப்பையும்,அடிமைத்தனத்தையும் பெற்றதென்பதைத் தவிர விடுதலை பெற்றதாகச் சரித்திரமில்லை.

போராளிகள்,புரட்சி வாதிகள் தமது வர்க்கவுணர்வைவிட்டு,மிதமான நடுத்தரவர்க்கவுணர்வுந்துதலால் உந்தப்பட்டால் அவர்கள்பிழையான பாதையில் பயணிப்பரென்பதை நாம்பிரபாகரன் மூலமாக அறியக் கூடியதாகிறது .“தமிழீழ“ப்   போராட்டத்தில் இப்படி ஆயிரம்பிரபாகரன்கள்,உமா மகேஸ்வரன்கள் வழி தவறிய கதைகளும்-வரலாறுமாக நாம்அநுபவப்பட்டோம்.

இளையவர்கள்,இன்று நீங்கள் „தமிழீழ“ப்போராட்டத்தின்விளைவை மக்களது குவியல் குவியலான சடலங்களுக்கூடாகத் தரிசித்திருக்கிறீர்கள்! இதுவொரு சில அரசுகளது தப்பான செயலல்ல. மாறாக, நமக்குள் இருக்கும் உடமை வர்க்கத்தின் நலனோடு அந்நிய நலன்கள் பிணைவுப்பட்ட வர்க்க நலனிலிருந்து நமது மேட்டுக்குடிகளே நம்மைத் தமது கூட்டோடு-நட்போடு அடிமையாக்கி அழித்துள்ளது.இது வரலாறாக முள்ளிவாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை!

தொடர்ந்து தமது வர்க்க எதிர்ப்பபை அவர்கள் இலங்கை-உலகு தழுவித் தொழிலாள மக்கள்மீது கட்டவிழ்த்தபடியேதாம் அரசியலைச் செய்கின்றனர்.இதற்காகத் தொடர்ந்து நம்மெல்லோரையும்,இனம்,மதம்,மொழி வழி கூறு பிரித்து, இனவாதத் தீயை மீள,மீள மூட்டியே நமது வர்க்க ஐயக்கியத்தை மிக இலகுவாக உடைத்தெறிகின்றனர்.இது ஒரு புள்ளி.தொடர்ந்து கேள்விகள் நம் முன் எழுகிறது.அதைத் தொடர்வது நீங்கள் கொள்ளும்உண்மைகளிலிருந்துதாம்.

இன்று, உலகு தழுவி „இருப்பவர்களுக்கும் இல்லாதவருக்குமான போர்“ சமூக மானிய வெட்டுக்களிலிருந்து அரசுக்கும் மக்களுக்குமானதெனக் காட்டப்பட்டாலும்அஃது, உடமை வர்க்கத்துக்கும்,உழைப்பாளி வர்க்கத்துக்குமானதென்பதை நீங்கள் மிக இலகுவாக அறியும் நிலை ஐரோப்பியவொன்றியத்தின் „யுரோவைப் பலப்படுத்தும் பொறி முறை “ யென்ற ஒடுக்குமுறை-சர்வதிகாரப் போக்குகளிலிருந்து அறியமுடியும்.இதன் தாக்கம் இன்று உலகைப் பங்கு போடும் போட்டி அரசியலாக உக்கிரைனில் மையங்கொண்டுள்ளது! சில வேளைகளில் இதுவே பெரும் அணு யுத்தமாக வெடிக்கும் சந்தர்ப்பம் மிக அண்மையிலிருக்கிறதென்பதையும் நாம் அறிந்தே  தீரவேண்டும்.

தொழிலாளர்களுக்கெதிரான பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையோடு அதன் கருத்தியல் வன்முறையான சட்டம் மக்களது அனைத்துவுரிமைகளையும் அகண்ட ஐரோப்பா-உலகமென இல்லாதாக்கிறது.பணக்காரருக்கும்,ஏழைகளுக்குமான கத்தரிக்கோல் தொடர்ந்து விரிகிறது.அதன் வினை எப்படி-எங்ஙனம் அமையுமென்பது நாம் பெறும் வர்க்கவுணர்விலிருந்தே இலங்கையில் மக்களுக்கான விடுதலையைச் சாதிக்கும் வரலாற்றை இழுத்துவரும்.அதுவரை,உண்மைகளைக் கண்டடைவோம்.அதுவே,எதன் பெயராலும் நாம் கொட்டும் குருதியை நிறுத்தி, நமது விடுதலைக்காகக் குருதியைக் காத்துக்கொள்ளும்.எனவே,இவர்கள் கதைவிடும்“மாவீரர்“தினமென்பது நம்மை ஏமாற்றும் ஒரு வியாபார உத்தியே தவிர நமக்கான விடுதலைக்கான ஆயுதம் அஃதல்ல!

எனவே,இந்த விமர்சனமானது குருதிதோய்ந்த தமிழ்த் தேசிய வாததத்தின் இருண்ட பக்கங்களை அறியும் சந்தர்ப்பத்தை உணர்த்துவதென்பதே பொருள்.“தமிழ் தேசிய“ வாதத்தின் கோர முகத்தை இன்று பலர் பல்கலைக் கழகத்துக்குள் ஆய்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது தொழில் முறையான வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றனர். நாமோ நமது விடுதலைக்கான ஒரு கையேடாக அவர்களது ஆய்வுகள் மாறவேண்டுமென்றே அவாவுறுகிறோம். நாளைய தலைமுறையானது தமது மூதாததையர்களால் விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர்களென்று வரலாறு உரைக்கவேண்டும்.

அதுவே,எமது அவா.அதற்காக, நாம் கைகோர்ப்போம்.கோர்பதற்கு முதல் „யார்-எவர்“எந்த வர்க்கத்தின் சாயலோடு எவருக்காக இயங்குகிறாரென்பதைக் கண்டடைந்தாகவேண்டும்.

எல்லோருக்குமானவொரு வர்க்கங் கடந்த வாழ்வு வந்தாக வேண்டுமெனக் கூறித் தொடர்வோம்- நட்பார்ந்த தோழமைகொள்ள!

நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

24.11.2014

மைத்திரிபால சிறிசேனவும் மேற்கும்: இரணில் விக்கரமசிங்கவைப் பிரதமாராக்கும்?

மைத்திரிபால சிறிசேனவும் மேற்கும்: இரணில் விக்கரமசிங்கவைப் பிரதமாராக்கும்?

இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்“அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்“.

 

அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் அணிதிரண்ட இலங்கை ஆளும் வர்க்கங்கள் தற்போது மேற்குலக நவ லிபரல்களது „பொதுச் சொத்தைச் சூறையாடும் அழிவு“ அரசியலுக்குடந்தையாக நகர்வது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானதாகவே மாறும்.இலங்கையிலுள்ள கடல் சார்ந்த வள நிலங்களைப் கைப்பற்றவும், அதுசார்ந்த வர்த்தகத்தை மேற்குலகத் தேசங்களோடிணைந்து கட்டமைக்கவும் தடையாகவுள்ள மகிந்தா அணி ஆளும் வர்க்க அதிகாரத்தால் பழிவாங்கப்பட்ட சிங்கள ஆளும் வர்க்க அணியானது போடும்“அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்“ என்ற வாதமானது மகிந்தாவினது குடும்ப ஆதிக்கத்தின் பின்னால் அணிவகுத்த தமது சக வர்க்கத்தை ஓரங்கட்டுவதற்கான தெரிவே அன்றி,மக்களது -பரந்துபட்ட மக்களது உரிமையின்பாற்பட்டதல்ல.

 

இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய மேற்குலக அரசுகள் மற்றும் அவர்களது லொபிகள்   இலங்கைச் சிறுபான்மை இனங்களைக்கட்டயாமாக“இணக்க அரசியலுக்குள்“திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன் எந்தத் தெரிவுக்கும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு „சமத்துவத்துக்கான“ அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!.இந்நிலையில் „எதிர்கட்சிகள்“ எனும் கோதாவில் மேற்குலக எடுபிடிக் கட்சியான யு.என்.பி போடும் „பொது ஜனாதிபதி வேட்பாளர்“என்பது இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் [Regime change ]கோருவதே தவிர சட்டவாத அரசுக்குரியதான நெறிகளை மையப்படுத்திய அரசொன்றின் தேவையின் பொருட்டான மக்கள் நலன் குறித்த பொருளாதார மற்றும் அபிவிருத்திக்குரிய அரசின் வடிவத்துக்கானதல்லவென்பதைச் சொல்லியாக வேண்டும்.

 

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் „தமிழீழ“ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைப் பிளவு பட்ட ஆசிய – மேற்குலக மூலதனத்தின் முரண்பாட்டில் தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இது ,தெள்ளத் தெளிவாகப் “ பொது வேட்பாளரது முகத்துடன் “ மேற்குலகக் கோரிக்கையாக இலங்கை மக்களது முகந்தாங்கும் அழகைக்  கவனியுங்கள்:

 

1. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்.

2. ரணிலுக்கு பிரதமர் பதவி.

3. சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்

4.18 ஆவது திருத்தம் நீக்கப்படும்.

5. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கூடவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இடமளிக்கப்படும்.

 

* ரணிலுக்கு பிரதமர் பதவி.* [The Mont Pelerin Society- Influence:  Prominent MPS members who advanced to policy positions included the late Chancellor Ludwig Erhard of West Germany, President Luigi Einaudi of Italy, Chairman Arthur F. Burns of the U.S. Federal Reserve Board, and U.S. Secretary of State George Shultz. Among prominent contemporary political figures, former President Václav Klaus of the Czech Republic and acting politicians, such as former Prime Minister Ranil Wickremasinghe of Sri Lanka, former Foreign Secretary Sir Geoffrey Howe of the U.K., former Italian Minister of Foreign Affairs and Minister of Defence Antonio Martino, Chilean Finance Minister Carlos Cáceres, and former New Zealand Finance Minister Ruth Richardson, are all MPS members. Of 76 economic advisers on Ronald Reagan’s 1980 campaign staff, 22 were MPS members.    ]

 

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் லொபி அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.

 

குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன் மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.

 

 

இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதன் உச்சம்,அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பின்னால்திசை திருப்பப்பட்டு அது இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை இன்றைய உக்கிரைன் பாணியில் தகவமைக்கக் காத்திருக்கிறது.

 

 

ப.வி.ஸ்ரீரங்கன்

 

22.11.2014

இரவியின் கருத்தின் மீதான சில, கேள்விகள்.

„தேவதாசன்-இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி“  குறித் துச் சுவிஸ் இரவியின்  கருத்தின் மீதான சில,  கேள்விகள்.

 

லங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் இனவாதப் பொது பல சேன  ஞானசாகரா „தேரோ“வுடன் நிற்கும் படத்துக்குச் சுவிச்சர்லாந்து இரவி அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.கீழே அவரது கருத்தை வாசிக்கலாம்.

கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்,அரசியலில்“வஞ்சகம்“அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் இரவி அவர்கள், இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித்  தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடுதாம் இருக்கின்றாரா?

கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது  அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகாக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞனம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.

இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் , „தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ;   தமிழர்கள் எனும் உணர்வையும் „விட்டொழித்து, „நாம் அனைவரும் இலங்கையர்கள் „என்றுணர்ந்து ,இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த „யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் “ போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?

கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் , தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின்  „ஆய்வுகளை முன்வைப்பது“கோமாளித்தனமாகுமாகுமா இரவி?

இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்து, அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து இரவியின் இந்தப் பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது?இது புலிகளைத் „தேசியத்தின் பெயராலும் -அவங்கள் போராடுகிறான்கள் “ என்று கண்மூடித்தனமாக ஆதரித்த மன நிலைக்கு ஒப்பானதில்லையா?

இவர்கள்  எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.

இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு „மாற்றுக் கருத்தாளர்களையே“ கருத்தியல் ரீதியாகவும்,செயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.

இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டு, முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் ,பெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும்  உடந்தையானதென்பதே உண்மை!

இதை மறுப்பதுள் , இவர்களை முன்வைத்து  எந்தத்தெரிவுகளையும் வெறும் “ மனவோட்டமாக“ ச் சித்தரிக்க முடியாது இரவி.

இது ஆபத்தானது!

இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்து, தமது அரசியலை நகர்த்துபவர்கள்.

ஒருவகையில் இலங்கை -இந்திய அரசியல் லொபிகளால் வழி நடாத்தப்படுபவர்களென்பதை மறுத்து, இவர்களைக் காப்பது மீளவும் ,யாழ்ப்பாணஞ் சென்று „முசிலீம் மக்களை அரசு தாக்கவில்லை, அதை வைத்து அரசைப்பழி சுமத்தமுடியாது எனவே நாம் அனைவரும் முசலீம் -தமிழர்கள் என்பதைவிட இலங்கையர்களாக வாழும்போது இத்தகைய இனக்கலவரங்கள் நடக்காது “ என்பார்கள்.

இதுதாம் இவர்களுக்கு இலங்கை அரசு சொல்லி க்கொடுத்து வகுப்பெடுக்கும் அரசியல் என்பதை புரிவதிற்றாம் எத்தனை சிக்கல்கள் இரவி?

-ப.வி.ஶ்ரீரங்கன்

21.06.2014

பின்னிணைப்பு: இரவியின் குரல் ! :

Ravindran Pa : இந்தப்படம் படாத பாடுபடுகிறது. இதில் நிற்பவர்கள் பிரான்ஸ் தலித் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சு நடத்தக்கூடியவர்களோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக துரும்பைத்தன்னும் அசைக்கும் மனவுணர்வு கொண்டவர்களோ அல்ல. இவர்களுடன் அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டவன் நான். ஒருபோதும்; எதிர் விவாதங்களுள் எதிரியாக மாற்றப்பட முடியாதவர்கள். தலித் மனநிலை சார்ந்து இந்து மதத்தின் சாதிய உள்ளடக்கத்தை எதிர்த்து பௌத்தத்தை ஒரு எதிர்மறுப்பாக முன்நிறுத்துபவர்கள்.

இன்னொருபுறம் புலியெதிர்ப்பு வாதத்துள் முடங்கிப்போனவர்கள். அதற்குள்ளிருந்தும் யாழ் மேலாதிக்க வாதத்துள்ளிருந்தும் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டடைந்தவர்கள் என்ற விமர்சனம் உண்டு. மறுத்தோடல், கலகம் என்பதெல்லாம் அவர்களிடமிருந்து அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். (இதன்மூலம் தம்மை கவனப்படுத்த முனைபவர்கள் என்ற அவதானமும் என்னிடம் உண்டு.)

அவர்களின் தடாலடியான எதிர்மறுப்பு மனவுணர்வு இந்தப் புகைப்படத்தை தாமே முன்னர் இடையிடையே வெளியிட்டு கொண்டாட வைத்ததுதான் நடந்தது. அது இப்போ வினையாக வருகிறது. இதை யாரும் கண்டுபிடித்து பிரசுரித்ததாகவும், அவர்கள் பொதுபல சேனாவுடன் இரகசித்தார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பை நடத்துவது புலனாய்வு நடத்துவது கோமாளித்தனமானது. தடாலடிகள், கண்மூடித்தனமான எதிர்மறுப்புகள், அரசைப் பற்றிய போதியளவு வெளிப்படையான கறாரான விமர்சனங்களை வைக்காமை, விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ளாமை (முக்கியமாக இலக்கியச் சந்திப்பின் சிதைவை கணக்கிலெடுக்காமல் போனதுக்கும் இந்தவகை மனவோட்டம்தான் காரணம்) என்பன பற்றி வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்கள் அரசியல் பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன்.