அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!
 
2009-இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,
 
ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,
 
இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்
   
இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.
 
 
அந்த நலன் என்ன?
 
உலகத்தில் சமாதானந் தழைத்தோங்கி,உலக மானுடர்கள் சகோதரத்துவத்துடன் தத்தமது தேசத்தின் வளங்களை நெறிமுறையோடு பகிர்ந்துண்டு வாழ்வதா இதன் நலன்?அல்லது,சில தேசங்களது கூட்டோடு,உலக வளங்களைச் சுருட்டித் தமது இனத்துவ அடையாளத்தைப் பேணி,உற்பத்தியைத் தக்கவைத்து உலகைத் தமது விருப்புக்கமைய ஆளுவதா?
 
 

இத்தகைய கேள்விகள் இரண்டும் சமகால அரசியல் போக்குகளால் எழுவது.கடந்தகால ஐரோப்பிய மக்களதும்,அவர்களது இராசதானியங்களதும் மனித நடாத்தையானது இத்தகைய கேள்விகளுக்குள் நம்மைத் தள்ளிவிடுபவை மட்டுமல்ல, அதன்வழி இன்றுவரை ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நடாத்தையுமே இத்தகைய கேள்வியின்பால் நம்மைக்கொண்டுசென்று இயக்குகிறது.
 
இன்றைய நோபல் பரிசுக் கமிட்டியின் முழுப்பரிணாமத்தையும், புரிந்துகொள்வதற்கும்முன் அதன் இருப்பு அவசியமாக உணரத்தக்க அரசியலைப் புரிந்துகொள்வதே நம்மெல்லோருக்குமான தேவைகளில் ஒன்று.
தற்போதைய வர்த்தகச் சூழலில்-சந்தைப் பொருளாதாரப் போக்குகளில் பாரிய நிதியளித்துக் காக்கப்படும் நோபல்பரிசு அறக்கட்டளையை தத்தமது தேவைக்கேற்பவும்,தமது அரசியல்-பொருளாதார மேலாண்மைக்குமாகவே மேற்குலக-அமெரிக்க தேசங்கள் பயன்படுத்துவதை மிகவும் நாணையத்தோடு ஒத்துக்கொள்ளவேண்டும்.அவர்கள்,தமது எதிர்காலத்தையும் அதில் தமது இருப்புத் தொடர்ந்து சிதையாதிருக்கும் பலமுறைகளில் திட்டமிட்டு இயங்கின்றார்கள்.இயற்கை விஞ்ஞானம்,மருத்துவம்,இரசயனம்,பொறியியல்,சூழலியல்,மனிதவளம்-இன இருப்பு,வர்த்தகம்,நெறியாண்மை,அரசியல் ஆதிக்கம்,அதிகாரம்,சட்டம்,தாக்குதல்வலு,பண்பாட்டு மேலாண்மை,பாராளுமன்றம்,நீதி போன்ற பலபடிகளில் ஒன்றாகத்தாம் நோபல் பரிசு அறக்கட்டளையையும் புரிந்தாகவேண்டும்.
 
அது,இத்தகைய மேற்குலக நலன்சார்ந்த பின்னணிகளோடுதாம் இயங்குகிறது.இதன் பாத்திரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு, அதன் இன்றையதும் கடந்தகாலத்துக்குமான நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகரம் வழங்குவதும் அதன் வாய்ப்பாக அடுத்த தசாப்பத்தில் மேற்குலக நலன்சார்ந்த அடுத்தகட்ட ஆதிக்கத்தை மேலும் நிலைப்படுத்துவதில் மையங்கொள்கிறது.
 
இதையிங்ஙனம் புரிந்துகொள்வது அவசியம்:
 
1):வெறும் ஆலோசனைகளும்,அபிப்பிராயங்களும் சொல்பவருக்கும்,
 
2):ஆணு ஆயுதமற்ற உலகைக் குறித்து வெறும் கனவு காண்பவருக்கும்,
 
3):அவ்கானிஸ்த்தானைப் புதிய வியாட்னாமாக்கிப் போர் நடாத்துபவருக்கும்
 
சமாதானத்துக்கான நோபல் பரிசு-கீரிடம் வழங்கப்படுவதானது அவரது அரசியலுக்கு அங்கீகாரம் அளிப்பது,அடுத்த கட்ட அனைத்துவகை அமெரிக்க அரசியல்-ஆதிக்க நடவடிக்கைகளை நியாப்படுத்துவது-நிலைப்படுத்துவது,முடிந்தால் அதை உலகு தழுவிய வகையில் விஸ்த்தரித்து ஒற்றைத் துருவ ஆதிக்கத்தை மற்றைய குடிசார் சமூகங்களுக்குள் திணிப்பதுவரை நிகழ்த்துவதே இதன் புரிதலாகும்.இதன்வழி அமெரிக்கா முன்னெடுக்கும் அனைத்துவகை விஸ்த்தரிப்பும் உலக சமாதானத்துக்கான முன்நிபந்தனையென்பதை இப்பரிசின்வழி நியாயமுறுத்துவதாகும்.
   
கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,,ராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.
   
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.
 
ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.
 
சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து காரியமாற்றுகிறது.இது,அமெரிக்கக்கூட்டினது கணிசமான ஆதிக்கவலுவைத் தோற்கடித்தபடியேதாம் சாத்தியமாகிவரும் இன்றைய சூழலில்,ஓபாமாவுக்கான சமாதான நோபல் பரிசு அமெரிக்கா முன்னகர்த்தும் இன்றைய „பதுங்கிப்பாய்தல்-நட்பாகிக் கொல்லல்,உட்புகுந்து தாலியறுத்தல்“போன்ற அதன் வெளியுலக அரசியலுக்குத் தர நிர்ணயமாகும்,அதை நியாப்படுத்தி உலகை ஏமாற்றிக்கொள்ளவும்,அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைச் சமாதானப்பிரியனாக வேடம் இட்டுள்ளது.இதை வலுப்படுத்தி மேலும் கட்டியமைக்க இன்றைய நோபல் பரிசின்வழி அமெரிக்க மூலதனம் முயன்றுவருகிறது.
 
அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும்.சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது.அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய“ஜனநாயக“ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது „சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்“என்று பெயராகிறது.சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும்.என்றபோதும்,இருஷ்சிய-சீன வல்லரசுகளின் அரசியல் ரீதியான நகர்வையும் அவை கொண்டியங்கும் தூர நோக்கையும் முடக்குவதற்கான பரிந்துரையாகவே அமெரிக்கா தனக்குத் தானே பரிசளிக்க முனைந்துள்ளது.
 
 

கடந்த 23.09.2009 அன்று ஐ.நா.வில்(GENERAL DEBATE OF THE 64TH SESSION OF THE UNITED NATIONS GENERAL ASSEMBLY )உரையாற்றிய இருஷ்சியத் தலைவர் மெட்வேடேவ் தனது உரையை மிக நிதானமாகச் செய்திருக்கிறார்.அவர் உலகத்துக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் வெள்ளையின நாசியப் பயங்கரவாதம்வரை தனது உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அமெரிக்க-மேற்குலக நிறவாத அரசியல் தகவமைப்புகளையுஞ் சாடியபோது மாற்றுக்கருத்தற்ற மேற்குல வெள்ளையினவாதம், மிகச் சாதுரியமாகத் தமது நடாத்தைகளைச் சமாதானத்துக்கான முன் நிபந்தனையாகவும், அமெரிக்க அதிபர் வடிவினில் அமெரிக்காவை முன்நிறுத்துகின்றன.இந்த வகை அரசியலது தொடரில் இந்தச் சமாதானத்துக்கான நோபல் பரிசை தனியே „ஸ்க்கன்டால்“(Scandal: Obama gets the „peace prize)என்ற மொழிவுக்கூடாகத் திசை திருப்ப முடியாது.ஈராக்,அவ்கானிஸ்த்தான் யுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவின் அடுத்த நாடகத்தை மறைக்க முனையக்கூடாது.ஆனால்,ஜார்ன் ஓபேர்க்(Jan Oberg ist Leiter des Friedensforschungsinstituts TFF in Lund, Sweden )செய்து முடிக்கிறார்.
 
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்க எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே இப்பரிசினது நோக்காக இருப்பதற்கு வலுவான காரணிகளாக இருப்பது இன்றைய அமெரிக்க வியூகமே.
 
இனிவரும் கால அமெரிக்க அரசியல் நகர்வில் ஒபாமா அரசு செய்யும் அரசியல்:
 
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
 
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
 
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.
 
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
 
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
 
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
 
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
   
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா(Nabucco) எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,
 
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,
 
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
 
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதன் உச்சபட்சத் தெரிவானது உலகில் அமெரிக்க ஆதிக்கத்தைச் சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவும்,இதுவே உலக அமைதிக்கான பணியாகவும் காட்ட முற்படும் அமெரிக்க மூலதனம்,உலகில் தனக்கெதிரான அனைத்தையும் தனிமைப்படுத்தும் முதன் தெரிவாகத் தன்னைத்தானே உலகச் சமாதான அரசாக இந்த நோபல் பரிசின்வழி சொல்கிறது.அதையே அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது சொல்லி வருகிறார்.இது,அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது அமெரிக்காவின் தலைமையை உலகத்தில் நிலைநிறுத்துவதற்கான புதிய தெரிவுகளாகின்றன.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி (Zbigniew Brzezinski )என்பது உலகறிந்த உண்மை.
   
உலகை ஏப்பமிட முனையும் ஏகாதிபத்தியம்,பாசிசத்தின் கடைக்கோடி நிலையாக இத்தகைய நோபல் பரிசின்வழி உலகைத் துடைக்க முனைவதை போராட்ட இயக்கங்கள்-ஒடுக்கப்படும் இனங்கள்சார்பாக எழும் எழிச்சிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
10.10.2009

இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.

நோபல் பரிசு இலக்கியத்துக்கு?
 


„கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை“ ஆகக்குறைதளவுக்கு இல்லாது
ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.

 
ன்று ஜேர்மனியில், „இலக்கியத்துக்கான நோபல் பரிசு“ கிடைக்கப்பெற்ற கேர்த்தா முல்லருக்குத்(Herta Müller) தடாலடியான கட்டுரைகள் மற்றும் இலக்கியப் பிரமுகர்களதும்,அரச அதிபர் அங்கேலா மேர்க்கலதும் பாராட்டுக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது-இவை,சிலவேளை விண்ணை எட்டினாலும் எட்டும்.
 
 
அப்படி என்னதாம் இந்தக் கேர்த்தா முல்லர் எழுதித்தள்ளியுள்ளார்?
 
இவரது எழுத்துக்கள் எத்தகைய இலக்கியத் தரமுள்ளதோ இல்லையோ, அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததான செய்தியில், பெரும் பத்திரிகைகள் அவரது கடந்தகால மேற்குலகச் சேவகத்தை நன்றி பகிர்ந்தே பாராட்டுக்களாகக் கட்டுரைகள் எழுதுகின்றன.
 
 
செவ்செஸ்கோவினது(Ceausescu-Regimes) இருமேனியாவில் வாழ்ந்த கேர்த்தாவுக்கு, கம்யூனிசக் கொடுமை சகிக்கவில்லையாம்.செவ்செஸ்கோ கம்யூனிசத்தின்வழி பரப்பப்பட்ட பரப்புரைகளது எதார்த்தம் ஐரோப்பாவின் சதிகளோடு நிரம்பியிருந்த அன்றைய காலத்தில், இத்தகைய கேர்த்தா முல்லர்களே மிகச் சாதுரியமாகக் கடமைகள் செய்திருக்கின்றார்கள்.இதை இன்றைய பத்திரிகைகள் நன்றியோடு பகிர்கின்றன.
 
 

 
 
இவரது நீடருங்கன்(„Niederungen“ (1984), Erzählungen)எனும் கதைத் தொகுப்புக்குப் பரிசு எட்டியாதானது அத்தொகுப்பு வீழ்ச்சிகள் குறித்த கதையாடலாக இருப்பதால்மட்டுமல்ல என்பது,ஜேர்மனிய முன்னணிப் பத்திரிகை வாயிலாக நாம் கண்டடையமுடியும்.
 
 
கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரைகளை செய்ததும்,செவ்செஸ்கோவைக் கம்யூனிச ஆட்சியாளராகப் பரப்புரை செய்ததிலும், கேர்த்தாவுக்குப் பெரும் பங்கிருக்காது போனாலும், அவர் மேற்குலகத்துக்குக் குறிப்பாக ஜேர்மனிக்கு மிக நெருக்கமாக இருமேனியாவை வேவு பார்த்துக் கொடுத்தவர்களுள் ஒருவர் என்பது சரியானதாகும்.
 
 
அன்றைய காலக்கட்டத்தில், அதிகமான கிழக்கைரோப்பியப் போலிச் சோசலிச நாடுகளைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவுக்குப் புலனாய்ந்து கொடுத்த தேசம் ஜேர்மனியாகும்.சமீபத்தில், ஈராக் குறித்தும் புலானாய்ந்து ஜேர்மனிய உளவுத்துறை அமெரிக்காவுக்குத் தகவல்கள் கொடுத்து உதவியது.இத்தகைய உறவுகளுக்கமையப்பெற்ற ஜேர்மனிய அரசின் நிபந்தனைகள்,பரிந்துரைகள் வெறுமனவேயான இலக்கியத்துக்கான தெரிவில் கேர்த்தாவுக்குப் பரிசு கிடைத்ததாகக்கொள்ள வாய்ப்பில்லை.அவரைவிட ஆளுமையான ஜேர்மனியப்படைப்பாளிகளை நான் அறிவேன்.
 
 
இன்று,மாறிவரும் பொருளாதாரச் சூழலானது பெரும் முன்னெடுப்போடு இருமேனிய மண்ணில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறது.மேற்குலகத்துக்கு அத்தேசம் அனைத்துச் சலுகைகளையும் கொடுத்துத் தமது தொழிலாளரை ஒட்டச் சுரண்டுவதுவரை ஒத்துழைக்கின்றது.எனினும்,இருமேனிய மக்கள் குறித்த ஜேர்மனியை ஆளும்,C.D.U.கட்சியின் தலைவர்களில் ஒருவரான ருட்காரது (Rütger) இனவாதக்கருத்து அத்தேசத்து மக்களை மேலும் அந்நியப்படுத்திய சூழலில்,இத்தகைய விருதுகளின்வழி இருமேனியாவின் சார்பு நிலையை-மேற்குலகுக்கு உடந்தையாக இருப்பதென்பதுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் தேவையோடு இணக்கமுறுகிறது.
 
 
இன்னும் சொல்வதென்றால்,கேர்த்தா முல்லர் கைன்றிக் கையின(Heinrich Heine) போன்ற படைப்பாளிகளின்வழி வந்தவரென்று சையிட் ஒன்லையின்ட் எழுதுகிறது.
 
 


அதற்காகக் கையின(H.Heine) தனது புரிதலில் பிரான்சினது கம்யூனிசக்கட்சியையும்,அதன்போராட்ட முறைகளையும் குறித்து எழுதும்போது,“காலத்துக்கு முந்திய பாட்டாளிய வர்க்கச் சர்வதிகாரம் வெற்றி பெற்றிருந்தால் அது முழுமொத்த மனித இனத்துக்கும் பெரும் கெட்ட காலமாகி இருக்கும்.“என லுற்ரேற்றியா(Lutetia) பதிவேட்டில் எழுதுகிறார்.
 
 
தொழிற்சாலைப் புரட்சிகளின் காலக்கட்டத்தில் வாழ்ந்த கையினே பாட்டாளிய வர்க்கத்தின் சிதைவுகண்டு வருந்தும் பாடல்களை எழுதியவர்.அவரை கம்யூனிசத்தின் விரோதியாக்க முனையும் இன்றைய காலம்,கேர்த்தா முல்லரது இன்றைய நிலைக்கு அவரது கருத்தைப் பயன்படுத்துவது மிகப்பெரும் அயோக்கியத்தனம்.
 
 
இத்தகைய அயோக்கியத்தனத்தின்வழியேதாம் இவர்கள் உலகைச் சூறையாடும்போது,கேர்த்தா முல்லர் கடந்த காலத்தில் தமது நோக்கை நிறைவேற்ற இருமேனியாவின் ஆட்சிக்கவிழ்ப்பில் ஒரு துரும்பாகவும் இருந்திருக்கிறார்.அதன் சம்பளம் இப்போது பரிசாக வருவதில் எவராவது மையல்கொண்டு, அவர் இன்னல்படும் மக்களுக்காக் குரல் கொடுத்தவராக எவரும் உணர முடியுமா?
 
 
„கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை“ ஆகக்குறைதளவுக்கு இல்லாது ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
 
அந்தளவுக்கு ஏகாதிபத்தியங்களது நலனுக்கு உடந்தையான முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு நோபல் பரிசினது இன்றைய பக்கச் சார்பையும்,அது,போப்பாண்டவர்களது வேலையையே வேறொரு வடிவில் செய்வதாகவும் கொள்ளமுடியும்.
 
 
 
கேர்த்தா முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
08.10.2009

வெந்து மண்ணாகினாலென்ன?

சிந்தனை மையமே சிறந்ததென…
 
 
வ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் „உண்மையாய் வாழ்தல்“என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்.“ஆன்மாவின் தவிப்பு“என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அஃது, எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைத்தொடுகிறது.
 
இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.
 
அஃது, என்னையும் மற்றைய மனிதர்களையும் இணைத்துப் பொதுமைப்படுத்திப் பிணைக்கிறது.இஃது, எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது, பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில், புதியதைத் தோற்றுவிக்கிறது.எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு இதுவே!
 
 
இந்தவுலகு குறித்துப் பேசுவதற்கு எனக்கெதற்குக் கூச்சம்?
 
எப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.
 
உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.இந்த“நான்“அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான“நான்“சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் எழுதுவதில் முடிகிறது ஆயுள்.
 
„பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல
 
மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ…“
 
 

 
இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்…
 
புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் கௌரியினது பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.அது,“மக்கள் நலம்-ஏதாவது செய்தாகவேண்டும்“மெனப் போடும் கோலமும் புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும்வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை? மேலும்,“விரித்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்“ எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.
 
„ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்“
 
எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.
 
 
„மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!“
 
 
அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபவங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க…
 
இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.இன்று, இவைகளது அகண்ட கால்கள் வன்னி அகதி முகாமுக்குள் மக்கள் தலையில் எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.மக்களுக்கு,மக்களுக்கென சுவிஸ்சிலிருந்து புனையும் „ஈரனல்“ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு „துரோகி“சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?
 
உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!“எல்லாந்தெரிந்தவர்கள்“தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.
„ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு“
 
 
இவற்றைத் தவிர நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!
 
உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடியலைவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.
 
 
„கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்
கூடுவதும்,சேர்வதும் நாளைய விடியலுக்காவே
நமது கரங்களுக்கும் நட்பும்
தோழமையும் தெரிந்தே இருக்கிறது
சிந்தனைக்கு மையமாக
நாம் சிந்திப்போம்-எதைக்குறித்தும் கேள்வி கேட்டு.“
 
 
குப்பறப் புரண்டவனின் வாரீசுகள் இன்றுவரையும் அகதியாகவும்,அடுப்பெரிக்க வக்கற்றவர்களாகவும் உலகெல்லாம் பிச்சையெடுப்பதைவிட ஊருக்குள்ளேயே கையேந்துகிறார்கள்.அகதியாக அலைந்து,ஐரோப்பியத் தெருக்களில் குப்பை பொறுக்கும் நம்மைக் காவு கொடுப்பதற்காகவே கடவுள் பெயரில் மதம்பரப்பிக் காசு சேர்ப்பவர்களோ,கட்டுக்கட்டாகக் கடவுள் பெயரில் சேகரிக்கும் பணம் நம்மைக் காவுகொடுத்துப் பையத்தியங்களாக்கிவிட்டு, தமது எஜமானர்களிடம் அரசியலைக் கொடுக்கிறது.நாம், மெல்லத் தொலைகிறோம்.
 
இனிமேலும்,தொலைந்து காணாமற் போவதற்குள்ளாவது எமது அடுத்த தலைமுறைகளை இவர்களிடமிருந்து காத்துவிடுவதில் மனது விருப்புறுகிறது.ஒரு பக்கம் கடந்தகாலத்து வாழ்வின்மீதான ஏக்கம் மறுபுறும் நிகழ்காலத்துக் கையாலாகாத வாழ்நிலை.இவற்றையுடைத்து மேலெழுவதற்கான எமது சந்திப்புக் கடந்த 26-27 ஆம் தேதி(26-27.09.2009) பிரான்சில் நிகழ்ந்தது.தோழமையோடு சந்தித்துக்கொண்ட இருபதுக்குட்பட்ட நம்மில் பலர், நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.கடந்தகாலத்து அநுபவங்கள்மீதான நமது விமர்சனங்கள் நம்மைக்குறித்துச் சுயவிமர்சனமாகவே அமைந்தது.இது, ஊக்கமிக்க செயற்பாட்டுக்கு உரமாகும்.
 
பாரீசின் ஏதோவொரு தெருவில் மிக எளிமையாகவும்,ஐரோப்பிய வாழ்நிலையோடு ஒப்பிடும்போது வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துவரும் தோழர் இரயாகரன். அவரை எண்ணும் போது எனது அகங்காரம்,திமிர்,நடத்தரவர்க்கக் குணமெல்லாம் கரைந்துபோகிறது(வருடத்துக்கு வருடம் வரும் புதிய கார்கள்மீது இச்சைகொண்டலையும் என் மனது, என்னைக் கேலி பண்ணுகிறது.காருக்காகக் கடனாளியாகிச் சுருங்கும் என் பையிலிருந்து வட்டிக்காகவே பல தாள்கள் போகின்றது.வாழ்வுக்கு எதுவரை வரம்பிட்டுக்கொள்ளலாம்?).
 
இப்படியும் மக்களுக்காகத் தமது வாழ்வை அற்பணித்த பல தோழர்களை நான் முன்னமே இழந்திருக்கிறேன்.அவர்கள்,மாற்றியக்க-இலங்கைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.காலம் ஏதோவொரு வகையில் மீளவும் உயிர்த்துடிப்புள்ளவர்களை எனக்குச் சமீபத்தில் அழைத்துவருகிறது.நாம்,உண்மையாய் உழைப்பது உயிர்த்திருப்பதின் முதற்படிதானே!எனவே,புத்துயிர் பெறுவதும்,அது குறித்துப் பேசுவதும் காலந்தாழ்த்தும் ஐரோப்பியச் சூழலை வெல்வதற்கே-அதுவும் அகதியச் சூழலை என்றால் நன்மையே.
 
„சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?“ என்றேங்கிய பொழுதுகள் பல.
 
 
நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜகப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
03.10.2009

சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்…

சின்னமடு மாதா:
 
 
அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க…
 
 
 
„மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்“
 
 
து ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.
 
 
எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்.
 
 
சிவா…
 
 
எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்…
 
 
பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம்.ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.
 
 
„சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்“
 
 
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.
 
 
நாங்கள் தவமிருக்கும் குருசுமரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை.கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும்,விளையாட்டுச்சாமான் விற்கும்“சோனக“க்கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும்.வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம் எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப „கம்பு“விளையாடுவோம்.காலையில் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும்.
 
 
இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தைiயும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் எமக்குள் ஒட்டும்போது,பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.
 
 
பின்னாளில்,ஊரும்,உறுவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ,அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம்.கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.
 
 
ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 
 
„எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!“
 
 
நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு“சாத்தான் வந்தவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்“என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறுத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.
 
 
அவனது „கத்தலில்“ நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான்.இலண்டனில் கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.
 
 
அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.
 
 
இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது.கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக்கதைகளுண்டு.மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் வெள்ளத்தோடு மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன-புலிகளது அடிமட்டப் போராளிகள் போல!
 
 
வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என…)கொண்டு,விளக்கப்படுத்திக்கொள்வோம்.அப்போதெல்லாம்“தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ“என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.
 
 
மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.
 
 
வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி,அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்…
 
 
„பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!“
 
இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
 
 
நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
„கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது“
 
 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த“சேரிப் பொடியன்கள்“தயவு அதிகமாகவிருந்தது.
 
 
இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.
 
 
பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.
 
 
ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.
 
 
இளமையின் வலி?
 
 
சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்சிலகாலம் உயிர்த்திருக்கிறது!
ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் „ஏலங்கள் விடப்படும்“குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுப்பர்.
 
 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.
 
 
 
„உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.“-
குறள்
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2009

தமிழ் "மார்க்சிய" நண்பர்கள்…

இலங்கையின் இரண்டாவது சுனாமி.
 
கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது.அதிர்ச்சியான யுத்த அழிவுகள் திட்டமிடப்பட்ட பொருளாதாரஞ்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அவசியமாக இலங்கை அரசினது அந்நியப் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்டபின் வன்னி மண்ணில் நிகழும் அரசிலானது மிகவும் கெடுதியானது.இது,மாறிவரும் உலகப் பொருளாதார இலக்குகளால் பந்தாடப்பட்ட வரலாற்றை எமக்கு விட்டுச் சென்ற புலிகளது „தமிமீழ“ப் போராட்டமாக எம் முன் நிற்கிறது.ஆனால், இதற்குள் பல உள்நோக்கங்கள் நிலவுகிறது.குறிப்பாக அந்நியத் தேசங்களதும்,தென்னாசியப்பிராந்தியத்தின் அரசியல் எதிர்காலமும் அதுசார்ந்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் இவற்றுக்குள் புதைந்துபோய்க் கிடக்கிறது.
 
கடந்தகாலத்தில் இலங்கையில் ஜே.வி.பி.யை இரண்டு முறைகள் அழித்த இலங்கை அரசும் அதன் அந்நிய எஜமானர்களும் நிச்சியம் இன்னொரு படுகொலைக் களத்தை இந்தத்“தமிழீழ“போராட்டத்துக்குச் செய்யத் துணியுமென்பதை நாம் ஏலவேஅறிந்தேயிருந்தோம்.இது, குறித்துப் பல தடவைகள் உரையாடினோம்.எனினும்,தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளது இராணுவப்பல மாஜை,அத்தகைய அழிப்பு அரசியலைக் கவனத்தில் எடுக்கவில்லை!ஆனால்,அதை(படுகொலைக் களத்தை) வன்னியில் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்கள அரச பாசிசம்.
 
வன்னியைச் சுடுகாடாக்கிய யுத்தம்:
 
தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?
 
இத்தகைய யுத்தக்கொலைகளின் பின்னே இலங்கை ஆளும் வர்க்கம் அடையவிருக்கும் இலக்கென்ன?
 
இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கை அரசினது நோக்கு?
 
அல்லது, தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?
 
இவை மேலோட்டமான எளிய கேள்விகள்.பதில்களைப் பல முனைகளில் தேடலாம்.இன்றைய ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் பொருளாதார முன்னெடுப்பை இலங்கைத் தேசத்துக்குள் இனங்காணாது பதில்களைத் தேடமுடியாது.
 
தமிழ் „மார்க்சிய“ நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:“இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்.“ என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.
 
1):புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே அரசுக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.
 
2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.
 
3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமா எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)
 
4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).
 
5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.
 
6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.
 
மகிந்த அரசின் வன்னியுத்தமும் அதன் பின்னான புலியழிப்புத்திட்டம் மற்றும் சரணடைந்தவர்களைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதம்,தடுப்பு முகாமுக்குள் முழுமொத்த வன்னி மக்களையும் தடுத்துவைத்துக் களையெடுக்கும் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை“barbarous“என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!மேற்கூறிய தேவையில் இலகுவில் இனவாதத்தையும் இனவொற்றுமையின்மையையும் இதன்மூலம் செய்துமுடிக்க உலக வல்லரசுகள் முனைகின்றன.இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கையை வளர்ப்பதற்கான மூலவூற்றாக வன்னித் தடுப்பு முகாமும்,அதுசார்ந்த இலங்கை அரசினது கெடுபிடிகளும் இத்தகைய வல்லாதிக்கங்களின் மிகக்கூரிய எதிர்பார்ப்பின் தொடர்ச்சியாகவே இருக்கிறது.இதனால் பல்லின மக்களுக்குள் உள்ள உழைப்பாள வர்க்கம் தனக்குள் ஒன்றுபடுதல் தொடுர்ந்து தடுக்கப்படுகிறது.இது,இலங்கையின்-தென்னாசியப் புரட்சிகரச் சூழலை மட்டுப்படுத்தவும் அதன்வாயிலாக வர்க்க உணர்வை மழுங்கடிப்பதற்கானதாகவே நாம் பார்த்தாக வேண்டும்.
 
இஃது, இன்றைய உலகமயமாதலின் காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.கடந்த சில தினங்களுக்கு முன் அவ்ஹான் மக்கள்மீது,2000 கிலோ எடையுள்ள குண்டைக் கொட்டிய ஜேர்மனிய இராணுவத்தின் திமிர்த்தனமான படுகொலைக்குச் சற்றும் குறையாத திமிர் இலங்கை-ஆசிய மூலதனக்கூட்டுக்கு இருக்கிறது.அது,இருஷ்சிய-சீன சங்காய் கூட்டுழைப்பு ஒப்பந்தத்தில் ஏலவே சொல்லப்பட்டபடி,பிரிவினைவாதப் போராட்டங்களை தென்கிழக்காசியாவிலிருந்து அகவற்றுவதில் இலங்கையைப் பரீட்ச்சார்த்தமாக்கி வெற்றி கண்டுள்ளது.
 
தமிழர்மீதான யுத்தம்-இன அழிப்பு?:
 
ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான“கொடுங் கோன்மை“மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட „இனவொடுக்கு முறை“யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.
 
இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.
 
இதை மேலோட்டமாக விவரிக்க முனையும் „மார்க்சியர்கள்“இலங்கை தழுவிய தேசியத்துக்காக இலங்கை அரசு அரசபயங்கரவாதத்தைக் கைலெடுத்துள்ளதாகக் கருத்தாடுவது சமீபமாக-வன்னியுத்தத்தின்பின் கருத்தியற்றளத்தில் வலுவாகப் பேசப்படுகிறது.ஆனால்,இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்து வந்தது.என்றபோதும், இத்தகைய இன அழிப்பானது மாறிவரும் உலகப் பொருளாதார மற்றும் சந்தைப் பங்கீட்டுடனும் அதுசார்ந்து போக்குவரத்து,மூலப் பொருள் கையகப்படுத்தல் என்ற அந்நியக் கம்பனிகளின் அத்துமீறிய ஏகாதிபத்திய நலன்களின் தேவையோடு அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையை உருவாக்கி,அதன் இனஞ்சார்ந்த அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான யுத்தமாக(இலங்கையர்களைத் தவிர வேறொரு இனம் இல்லை என்பது) இலங்கையினது இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வெடிக்கிறது.
 
இது ஒருவகையில் வளவுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டுத் தமிழ்பேசும் மக்களதும் மற்றைய சிறுபான்மையினங்களதும் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் அதே வேளை, மிகவும் மலினப்படத்தப் பட்ட சிங்களத் தேசியவாதம் புதிய முகமூடியோடு நாம் எல்லோரும் இலங்கையர்களென்று தமக்குள் சிறுபான்மை இனங்கள் பணிவதைக் கோருகிறது.இது திட்டமிடப்பட்ட இனவழிப்பின் புதிய மாதிரி அரசியல்-யுத்தம்.
 
இனக் குரோதம்:
 
புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.
 
இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள அந்நிய ஆளும் வர்க்கமானது புலிகள்-தமிழினக் கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ் மக்களது போராட்ட உணர்விடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இதற்காகவே திட்டமிடப்பட்டு இனங்களுக்கிடையிலான இனக் குரோதம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.இது மேற்குலகினது சதி.இங்கே, ஆசிய மூலதனமும் இப்போதைக்குப் புலிகளை அழித்திருப்பினும் பின்னாளில் இனவொற்றுமைக்கு ஆப்பு வைத்தபடியேதாம் தமது பொருளாதார இலக்குகளுக்குத் தொழிலாளர் ஒற்றுமையைச் சீர் குலைக்கும்.
 
சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்திய மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்“அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.
 
இன்றை ஏகாதிபத்திய மூலதனமானது இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.
 
மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் அரச பயங்கரவாதக் கொடுமையானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்கு இசைவாகச் சரணடையும் அரசியலைப் பேசுவது மிகவும் கவலைக்கிடமானது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
06.09.2009

மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்…

வாடாத இரோஜாவும்,
வரண்ட தரையும்.
 
 
(பகுதி:1)
 
மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்…
 
 
வாசிப்பதற்கான சூழல் வலுவற்ற பொழுதகளாகவும்,வாழ்வதற்கான முனைப்பில் உழைப்பில் உயிர்வாழும் இந்தப் பொழுதுவரையும் ஒரு நூலை முழுமையாக வாசித்துவிடுவதில் பல சிக்கல்கள்.நேரம் குறித்தான முடக்கத்திலும் வாசிப்பதற்கான அக மகிழ்வைத் தரத்தக்கத்தான புனைகதைகளை நாம் ஏலவே அறிந்தோம்.அந்த மகிழ்வும் எமக்கானதாகக் கட்டப்பட்ட அதிகாரங்களது திணிப்பென்பதும் இதன்வழி புரிந்துகொள்ளவும் முடிந்தது.அறிதல்,எனது விலங்கை எனக்கே காட்டி,உடைப்பதற்கானவொரு திசையைச் சொல்ல மேலும் அறிய வைக்கிறது.இது,வாசிப்பால் மட்டுமே நடைபெறுகிறதெனினும் எமது அனுபவப்பட்ட வாழ்வு எம்மைக்கடந்து செல்லும்போது அதை மீளவும் வழிமுன்னே நடாத்திக்காட்டுவதில் படைப்பிலக்கியம் மனித வாழ்வாழ்வின் இரண்டாவது இயற்கை என்பது உண்மையாகிறது.
 
 
அறிதலிற்றாம் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டன.இயக்கத்தையும் அதன்வழி மாறுவதையும் அறிவதே இயற்கையை வெற்றிகொண்ட அனுபவம்-கல்வி!
 
 
இந்த நோக்கத்தில் இன்னொரு குறுநாவற்றொகுப்பை(பசுந்தீவுக் கோவிந்தனது“வாடாத றோசா“குறு நாவற்றொகுப்பு) உள் வாங்கிக்கொள்வதற்கும் அதையொத்த வாழ்வை எனக்குள் வாழ்ந்து பார்ப்பதற்குமான இடைவெளியில் சிலவற்றை இங்கே கருத்துக்களாகச் சொல்வதைத்தவிர,மேட்டிமைப் புரிதலெனச் சொல்வதற்கு அல்ல.வாழ்வும்,மனிதவிருப்பும் முரண்பட்டுக் கிடக்கும் தருணங்கள் மலினப்பட்டவுணர்களாக மனிதமனங்களைக் காவுகொண்ட இந்த நிமிஷம்வரை எமது வாழ்நிலையே எம்மை ஆட்டிப்படைக்கிறது.
 
 
வாடாத இரோஜா:
 


 
வாடாத இரோஜாவோடு தன்னைச் சொல்லும் கோவிந்தன் மனதும் இதிலிருந்து புறத்தே இயங்க முடியாது.
 
 
நமது வாழ்வனுபவங்கள்மீது கட்டப்பட்ட கனவுகள் மீளவும் நமது விழிமுன்னே மோகனாகவும்,செல்வியாகவும் விரிகின்ற வாடாத ரோஜாவுக்கும் அதன் தரையானது வரண்டதே.
 
 
கதை நமக்குள் உலாவரும் மனித விருப்புகளோடுறுவுவது.மோகனது கனவும் செல்வியின்மீதான மோகனது எதிர்ப்பால்லீர்ப்பும்-வினையும் பெற்றோர்களது தயவோடு காதற்றிருமணமாக நடந்தேறி,மாமிக்கேற்ற மருமகளைத் தயார்ப்படுத்தி நம்மையும்,நமது நடுத்தர வர்க்க இருப்பயையும் மேலும் உறுதிப்படுத்துவது.கதை மாந்தர்களது அகவெளியில் இந்தச் சமுதாயத்தின் அனைத்துத் தளமும்(நிறுவனவயப்பட்ட சமுதயா நடத்தைகள்)கொலுவுற்றிருக்கிறது.அதற்கு மோகனது வாழ்வைச் சித்தரிக்கும் இடங்களும், அவன் அரசாங்க உத்தியோகத்தனாகவும்,பல்கலைக்களகத்து கல்வியின் பட்டத்தில் பெருமையுறுபவனாகவும் இருக்குந் தருணத்தில் செல்வியைத் துணையாக்குவதோடு, அவனது வாழ்வுப் பெரும் பயன் இனிதே நிறைவுருவாவதில் எனது தலைமுறையின் மொத்தக் கனவும் திரு.கோவிந்தனது அநுபவத்தின் வெளியில் நமக்குமுன் விரிகிறது.
 
 
இது ஒரு கட்டத்தின் மனித வாழ்நிலைகள்மீதான புரிதற்பாட்டுக்கும் அதுசார்ந்த சமூக உளவியலைப் புரிவதற்கும் ஒரு ஊடகமாக இருக்கும்.நடந்து முடிந்துவிட்டதும்,கடந்துவிட்டதுமான காலத்தில் அவரது உணர்வுகள் சிதைந்து, காலத்தில் பாத்திரங்களை வைத்துப் பார்க்காத தவறுகளோடு நம்முன் வாழ்ந்து பார்க்க மோகனும்,செல்வியும் திரு.கோவிந்தனால் அனுப்பப்பட்டபோதும், அவர்களை ஆரத் தழுவியும், அணைத்தும் உற்சாகப்படுத்துவதற்கு மாறாக,அவர்களோடு உரையாடுவதே என் செயலாகும்.இது,அவசியமானது.
 
 
சமூக சீவியம் சிதைந்துகொண்டுவரும் ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் கூட்டுவாழ்வின் யாழ்ப்பாணிய இருப்பின்மீது சொல்லப்படும் இந்த மலர்வு, மீளவும் அதே சிதைவுகளுக்குள் வாடாத மலராக இருக்க முனைகிறது.“காதல்“ குறித்த பொருளாதாரக் கனவுசார் எதிர்மறை நடாத்தை,அதைச் சாகடிக்கத்துடிக்கும் எமது தலைமுறைசார் புரிதலில் கற்பிதங்களோடு வாழும் பெற்றோர்களுக்காக மோகன் செல்வியை உருவாக்கி விடுகிறான்.இஃது, வரண்ட மண்ணெனும் நமது சமூக இருப்பில் அதன் வேர்களைப் பதிக்க முனையும் ஒவ்வொரு தருணத்திலும் கோவிந்தன் பழைமைக்கேற்ற பதுமையாகவே மாறிக்கொள்கிறார்.இது,அவர் அறிந்து செய்யும் பாதுகாப்பு வலையம்.கூட்டுக் குடும்பத்தின் வழி அவர் சிந்திக்க முனைவதும்,பெற்றோருக்கு ஏற்ற மருமகளைத் தகவமைப்பதிலும் புனைவை வாழ்வாக்க முனைவதைவிட சம்பிரதாயங்களுக்குப் பாத்திரத்தை இரையாக்குகிறார்.இஃது, அவரது ஆற்றலை மேலும் பலவீனமாக வாசகர் புரிவதற்குத் தோதாகிவிடுகிறது.தனது படைப்புகள் அன்றாடம் சுமைகளாக விரியும் நிஜ மனிதர்களது காயங்களுக்கு-வலிகளுக்கு நிவாரணியாகாதுபோனாலும் ஒரு கணத்திலாவது அந்த இரணங்களை மறக்கடிக்க வைத்தால் அதுவே அவரது வெற்றி என்று பிரகடனப்படுத்துகிறார்.இது தப்பில்லை.ஆனால், அந்த இரணங்களையேதாம் விழிமுன் நிறுத்தும் பாத்திரங்களை அதற்கு மருந்தாக்குவதில் „செலக்சன்“எனும் நிலையில் மனிதர்களைப் பொருள் நிலைக்குள்ளும் குறுக்கிவிட்ட அபாயத்தில் கோவிந்தன் அவர்கள் எம்மை நோகடிக்கின்றார்.
 
 
வரண்ட மண்ணில் மலவுற்ற இந்தப் புனைவு மனதைப் புரிந்துகொள்வதில், எந்தச் சிக்கலையும் எமது பொதுப்புத்திக்கு ஏற்படுத்தப் போவதில்லை!என்றபோதும், எம்மைக்கடந்த வாழ்வை எமது வழிகளின் முன்னே மீள நிகழ்த்திக ;காட்டுவதற்குச் சில தடைகள் இருக்கின்றன.அந்தத் தடைகளைத் திரு.கோவிந்தன் அறியமுற்படவில்லை.இந்த குறைபாடுதாம் கதையோட்டத்தின் முழுமையை-பாத்திர வளர்ச்சியை மறுக்கும் தடைக்கற்களாக இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு குறுநாவல்களுக்குள்ளும் செயற்படுகிறது.
 
 
அது-கதைசொல்லும் உத்தி,அழகியற் பாங்கு,வர்ணனை,வடிவம்,உள்ளடக்கம,பாத்திரத் தேர்வு போன்றவற்றில் மிகப்பெரும் தாக்கதைச் செய்வதில் மோகனதும்,செல்வியதும் அந்நியப்பட்டதான அகப் பிரமைகளை இயற்கை வாதத்துக்குள் திணித்துப் புனைவினது கவிதைக் குணத்தை(பாத்திரங்களுக்கு வெளியில்,மூன்றாம் நபர் வர்ணனை-சம்பாஷணை தவிர்த்தல்.இதுதாம் பாத்திரங்களைக் கவிதையாக்கும்.) குறுக்கும் நெடுக்குமாக அறுத்தெறிய முனையும் ஒவ்வொரு தடவையும் திரு.கோவிந்தன்,
 
 
„இராமனுஞ் சீதையும் போன்று அமர்ந்திருந்தனர் என்றால் மிகையாகாது“
 
 
„மின்னிடையாள் அன்ன நடை நடந்து…“
 
 
„கயல் விழியாள்,கொடியிடையாள் அழிகுச் சிலையாட்டம்…“ என்றும்,
 
 
புத்திசாலித் தம்பியின் „செலக்சன்“குறித்து மோகனது அத்தான் செல்விக்குப் புனையும் பொதுபுத்தி“அழகு“பாத்திரத்தைக் கொச்சைப்படுத்துவதில் எம்மை நோகடிக்கும்.
 
 
அதே வலி மேலும் தொடரும் என்பதற்கு சமூகத்தைக் குறித்தான பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டால் நாம் வாழும் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல்பத்தில் வாழ்ந்தபடி இருபதாம் நூற்றாண்டின் ஏழாவது பத்தில் கதை நகர்கிறது.அங்கேதாம் உந்துருளியைச் சொல்லும் எழுத்தாளர்ரது இடைவெளி,தலைமுறை இடைவெளியை இனங்காணாத பாத்திருத்தை நம்முன் உலாவிடுவதில் தனது அநுபவங்களை மோகனாகவும்,செல்வியாகவும் எம் விழிகள் முன் கொணர்கிறார்.இப் பாத்திரங்கள் தமது சுயத்தை இழந்து கதாசிரியரின் விலங்குப் பிடிக்குள் வலு கட்டாயமாகச் சிறைபிடிக்கப்பட்டதை உணர,
 
 
„சீவரத்தினம் வாத்தியாரின் மகள் இவளுடைய புறங்காலுக்கும் நிற்க முடியாது“
 
 
„இவள் குணமான பெண்ணாக இருப்பாள்…“எனும் கதாசிரியரின் அக விருப்பு மேலும் உதவும்.
 
 
இக் குறு நாவற்றொகுதியிலுள்ள அனைத்து கதைகளுக்குள் நிலவும் வாக்கியங்களுக்கிடையில் பின்புலமாக விரியும் விலங்குகள் எம்மை நோக்கியும் பாய்வதைப் புரிய முடியும்.எனினும்,இவ் விலங்குகளைக் கோவிந்தன் உருவாக்கவில்லை.அது, எமது தலைமுறைத் தொடர்ச்சி.எனது தவறு எனக்கு முன் வாழ்ந்தவர்களது தொடர்ச்சி,என் தவறு இன்னொருவரின் தொடர்ச்சியாக மேலெழப்போகிறது.இங்கேதாம் இலக்கியத்துக்கானவொரு பொதுத் தத்துவார்த்தப் போக்குக் குறித்துப் பேச சோஷலிச யதார்த்தவாதம் முனைந்தது.குறிப்பட்டவொரு சம்பவத்தை குறிப்பட்ட பாத்திரத்துக்கூடாக வெளிப்படுத்தும்போது அங்கே ஒரு நோக்குச் சமூகஞ்சார்ந்து இருப்பதும் அதன்படி பாத்திரத்தை விலுங்குகளுக்குள் சிதைப்பதைத் தடுத்து அவர்களைப் பொது மனிதக்கூட்டில் கால்பதித்த மாந்தர்களாக்கி உலாவிட வேண்டும்.இது இன்னொரு வகைச் சிறையை அவர்களுக்கு இடுவதில் குறியாகவின்றிப் பாத்திரங்களை அவர்களது சுதந்திரமான தேர்வுகளோடு உள்வாங்குவதன் முயற்சியாகும்.
 
 
கண்டதையும்(காண்பதை)கேட்டதையும்(கேட்பவை),அநுபவப்பட்டத்தையும் அப்படியே சொல்வதல்ல படைப்பிலக்கியத்தின் வேலை.இது,இயற்கை வாதத்தை உள்ளடக்கியதான புரிதலில் மேலும் பலராலும் விளக்கப்பட்டது.வானவயிலில் பிரதிபலிப்புக் கோட்பாடென்பது,எங்கோ இருக்கும் பொருள்-மண்டலம்,கோளம் இன்னொன்றில் தெறித்துப் பிரதியாகித் தனது இருப்பை இன்னொரு இடத்தில் காண்பிப்பது.அத்தகையவொரு நிலையில் அதன் பாங்கு அப்படியோதாம் இருக்குமென்றில்லை.அது சார்ந்த பொருளது பண்பையும் கொண்டே துலக்கமுறுவதுபோன்று இங்கே கோவிந்தனின் பாத்திரங்கள் கோவிந்தனாக விரியும் பலவீனமே குறு நாவல் மாந்தர்கள் ஊடாகவும் விரிகிறது.இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய“அரசியல்-பொருளியல்“வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த „அலகுகள்“ அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய“அலகுகளை“உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் „பொருளாதாரச் சிக்கல்கள்“ அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் பாரிய தாக்கஞ் செய்கிறது.மோகன்,செல்விக்கிடையிலான உரையாடல் இதை மேலும் உறுதிப் படுத்தும்.கதை மாந்தர்கள் காலத்தை மறுத்து சமகால அரசியலோடும் எழுபதுகளின் இறுதிப்பகுதி அநுபவங்களோடும் ஒரு பாலத்தை அமைக்கின்றார்கள்.
 
 
இது கதாசிரியரின் கதை சொல்லலினதும்,நிகழ்கால அரசியலைத் தனது அநுபவங்களுக்குள் கொணர்வதிலுள்ள ஆர்வத்தினாலும் நிகழ்ந்துவிடுகிறது.
 
 
கதை மாந்தர்களின் உளவியில் யுத்தகாலத்து மனிதர்களதும்,தமிழீழம் நிலவரையறையிலும்,புலிகளது நிர்வாக-அதிகாரத்துக்குட்பட்ட பகுதியிலுமாக முரண்பட்ட தன்மையில் விளக்கப்படுகிறது.இக்கதையின் கருவே அதற்கு மறுப்பான சூழலில் நகரும்போது-அதன் காலத்து அரச உத்தியோகத்துக் கச்சேரி அலவல்களை வர்ணிக்கும்போது நம்மை ஏமாற்றி விடுகிறது.அப்போது தமிழீழம் எனும் புலிகளது நிர்வாகப்பகுதி பெயரிளவிற்கூட அரும்பவில்லை.அன்றியும், தமிழ்மக்களது வாழ்விடங்களை-மாவட்டங்களையும் தமிழீழமாக அழைக்கும் அரசியல் கருத்தாக்கம் உளவியல் ரீதியாக எவரையும் ஆட்டிப்படைக்கவுமில்லை என்பதை உணரும்போது, கதை மாந்தர்களது பொருத்தமற்ற உரையாடல்கள் கதைக்கும் காலத்துக்கும் பொருத்தமற்ற திசையில் நம்மை அநாதையாகவிட்டுச் செல்கிறது.இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு „வாழ்வியல் மதிப்பீட்டைக்“கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட „தாய்நாடு-சுதந்திரநாடு“ எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் „ஒப்பாரி“ எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் „பிரதிநித்துவப்படுத்தும்“ ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.தமிழீழத்தில் கதைவிரிக்கும் செல்வி பெண்கள் அச்சமின்றி வெளிச்செல்லும் பாடம் நடாத்துகிறாள்.வரலாற்றில் ஆயுதரீதியாகக் கட்டப்படும் கட்டாயக் கோட்டைகள் தகர்ந்து சின்னபின்னமாகும்போது, சமூகத்தின் உறுபினர்களாக இருப்பவர்களின் உண்மையான முகம் மேலெழுகிறது.பண்பாட்டு மாற்றத்தைக் கோராத எந்த ஆயுதப்பலாத்தகாரச் சமூகச் சீராக்கமும் மக்களது வாழ்வில் பாரிய மாற்றங்களைச் செய்வதற்கில்லை.இன்றைய பின் போராட்டச் சூழலில் இதை உணரமுடியும்.
 


செல்வியினது காதல் இறுதியில் திருமணத்துக்கான காலமாகக் கசியும்போது, அவளது வாழ்க்கை துNணையாக வரவிருக்கும் பல்கலைக்களகப் பட்டதாரியான கிளிநொச்சி மகாவித்தியால ஆசிரியர் இராணுவத்தால் சுடுபடுவதும்,அதுசார்ந்த அவளது எதிர்வினையும் வலுகட்டாயமாகப் புனைவுக்குள் கொணரப்பட்ட செயற்கையான பிரச்சாரமாக நம் முன் வலுவிழக்கிறது.இது, இக் குறு நாவற்றொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளிலும் விரவிக்கிடக்கிறது.எனினும்,மோகன் தனது அகப் பயணத்திலும் அது சார்ந்த எதிர்பார்ப்பிலும் தனது சமூகத்தின் கூறுகளாகவிருக்கும் சில ஒழுங்குகளை உடைக்க முனைகிறான்.அதுவும் முதல் காதலுக்கும்,அவ் மரணத்துக்கும் இடையில் தலைவிதி-இறைவன் செயலெனச் சமூகம் சொல்லிக்கொள்ளுமென ஆலோசனை-ஆறுதல் சொல்பவன்,ஒருகட்டத்தில் செல்வியின் காதலுக்கான தவக் கோலத்தை-விதவைக் கோலத்தைத் தகர்த்து அவளை விரும்பத் தளைகளை உடைக்க விரும்புகிறான்.அங்கே,மோகனது சமூகப் புரிதலின் இரட்டைப் பண்பு விமர்சனத்துக்கானது.நாம் வாழும் காலத்தில் இலக்கியத்தின் தேவை என்ன?அதன் வரலாற்றுப் பாத்திரம் என்ன?எதை நோக்கிய தேடலில் நம்மைக்கடந்து செல்லும் நமது வாழ்வை மீளவும் நமது விழிமுன்னே கொணர்ந்து இரண்டாவது முறை வாழ்ந்து பார்க்க வார்க்கப்படுகிறது.மோகனும், செல்வியும் இறுதியில் திருமணப் பந்தத்தில் கணவன் மனைவியாகுவதில் அவர்களுக்கு நிறைவிருக்கிறதோ இல்லையோ, ஆனால், அவர்கள் கொண்டுள்ள சமூக ஒழுங்குக்கு அதையொட்டிய பொதுப் புரிதலுக்கும் அத்தகைய புரிதலில் வாழும் நமக்கும் சந்தோஷமே!
 
 
மாக்சீம் கோர்க்கியின் தாய் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும் அதன் சமூக ஆளுமையை இலக்கியச் சிறிவை.அந் நாவிலில் தாயினது பாத்திரத்தைக்கொண்டு நம் அனைவரினதும் தாய்களை சமுதாயத்தில் வைத்துப்பார்க்கத்தூண்டும் கார்க்கி ஒரு மகத்தான படைப்பாளியாகத் தன்னை நிலைப்படுத்துவதிலும்பார்க்கத் தனது சமூகக் கடமையை அத் தாயினது உருவில் நிறைவேற்றுகிறார்.அவளைத் தரிசிக்கும் நாமோ ஒருபொழுதில் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தருணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.அதாவது, அவளை இறைவனது அவதாரமாகப் பார்க்கிறோம்.அவள் உழைப்பவர்களது தாய்-உண்மைக்குத்தாய்-நியாயத்துக்குத் தாய்!
 
 
மாக்சீம் கோர்க்கியின் தாய் நிலை, மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தருணங்களைத் தந்துவிடுகிறது.போராட்டமே வாழ்வு என்பதைத் தியாகத்தோடு நிரூபணமாக்கிறது.அவள் ஒரு கட்டத்தில் தலைமைப் போராளியாகி எம்மைக் காக்கும் தெய்வமாகிறாள்.உயர்ந்து அர்த்தங் கற்பிக்கும் அப்பாத்திரம் அழியாத நிலையெடுத்த வரலாற்றுப் பாத்திரம்!
 
 
கோர்க்கியின் தாய்,சார்ளிச் சப்பிளீன் காட்டும் மொடோர்ன் ரைம் சினிமா மாந்தர்கள், ர.சு.நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரத்து திரிவேணி,குன்ரர் கிறாஸ் காட்டும் பொன்ரி,ஓஸ்கார்,மீரா நாயரின் சலாம் பம்பாய் கிருஸ்ணா,சுந்தர இராமசாமியின் ஜே.ஜே.சோபாசக்தியின் கொரில்லாவின் அந்தோனிதாசன், ம்…இல் காட்டப்பட்ட பக்கிரி, நம்மை மகிழவும்,அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தவும்-சாகவும்-போராடவும் தூண்டுபவை.அப்படி கலங்கவும்-போராடவும்,அவர்களோடு வாழ்ந்து மகிழுந் தருணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.
 
 
மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக கோர்கியினது தாயினது பாத்திரம் என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.சமுதாயத்தில் வர்க்கங்களாகப் பிளவுபட்ட மக்களது வாழ்வுக்கான போராட்டத்தில் அவள் தலைமைப் போராளியாகிறாள்.அங்கே பாத்திரம் வெறும் அகவிருப்புக்காக வாழ்வதில் அர்தம் கொள்ளவில்லை.
 
 
இன்றும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ஸ்ரோய்(Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி(Dostojewskij: Der Idiot) முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின்(Alexander S.Puschkin:Erzaelungen)கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde…),அவரது அன்னியன் படைப்பைத்தவிர மற்றெல்லவற்றையும் குப்பைகள் என்று ஒதுக்கியவன் நான்.இதன் காரணத்தை மிக இலகுவாக அறியத்தரமுடியும்.காம்யுவின் எந்தப்பாத்திரமும் பூமியிற் கால்பதிப்பது கிடையாது.தனது வேரை மறந்து தன்னையொரு பிரஞ்சியக்காரன சிந்தித்து இருந்த காம்யு அல்ஜீரியாவைச் சுரண்டும் பிரான்ஸ்சுக்குக் குடைபிடித்தவர்.இன்று, தமிழ்பேசும் இலங்கையர்களாகிய நாம் நமது போராட்ட வாழ்வின் அனைத்து முகங்களையும் சோபாசக்தி காட்டும் கொரில்லா அந்தோனிதாசன்,ம்… பக்கிரியூடாகப் புதிய கதை மாந்தர்களை அவர்களது மண்ணினிது நிறத்தோடும்-ஆற்றலோடும் சந்திக்கிறோம்.இந்தச் சூழலோடு வாழும் எமது உணர்நிலைக்குள் இப்போது எனது அன்புக்குரிய திரு.கோவிந்தன் அவர்கள் என்ன சொல்கிறார்?
 
 
அவருக்கு யாருடைய வாழ்வைப் படைப்பாக்கிறர்ர் என்பதில் மிகவும் கவனமிருக்கிறது.அவர் தமிழீத்துக்காக மாந்தர்களை உருவாக்குகிறார்.அங்கே செல்வியை மட்டுமல்ல காஞ்சனாவையும் உருவாக்கிப்பார்க்கிறார்.காஞ்சனா அவரது தொகுப்பிலுள்ள இராண்டாவது குறு நாவலான இலட்சியத்தின் நாயகி.
 
 
இலட்சியம்:
 
 
பசுந்தீவுக் கோவிந்தன் அவர்களது „வாடாத றோசா“தொகுப்பிலுள்ள இராண்டாவது குறு நாவல் இலட்சியம்.இக் குறு நாவல் கனடாவிலிருந்து „முன்னாள் போராளிப் பெண்ணொருத்தியை“க் கல்யாணஞ் செய்யும் நிலையை இலட்சியமாகக் கொண்ட சோழன், தமீழத்தை நோக்கிப் புறப்பட்டு, அங்கே, பெண்கொள்ளும் கதையையே இலட்சியம் என்கிறது.இதன் நாயகியும் அவனுக்கு மனைவியுமாகும் காஞ்சனவே கோவிந்தனது சமகால அரசியல் புரிதலாக நம்முன் கொட்டப்படுகிறது.இக் குறுநாவலை கதை என்பதை விட அல்லது நாவலென்பதைவிட, அது-அவர்கொண்ட அரசியல் புரிதலுக்கானவொரு பிரச்சாரக மேடையை உருவாக்கிய வாகனம் என்பதே சரி.படைபிலக்கியத்துள் பிரச்சாரம் நிகழலாம்.ஆனால்,பிரச்சாரம் படைப்பாக மாறமுடியாத நிலையென்பதால் இலட்சியம் முழுமையானவொரு நாவலெனும் கட்டமைப்பைவிட்டு ஒதுங்க முனைகிறது.இதை இங்ஙனம் ஒதுக்குவதைவிட நமது சமகாலத்துப் புரிதலில் இலங்கைப் படைப்பாளிகளது படைப்புச் சுதந்திரம் குறித்த தேடாலாக விவரிப்பது சிறந்தது.
 
 
இலக்கியம்,புனைவு,கதை,படைப்பிலக்கியம் என்ற சொற்கோர்வைகளைக் கடந்து கதை சொல்வதற்கானதான தருணங்களில் அது எங்ஙனம் சொல்லப்பட முடியும் என்ற சமகாலத்தும்,கடந்தகாலத்தும் தத்துவார்த்தப் புரிதல்களை இதற்குள் கொணர்வது அவசியமானது.எனது கல்வியில் மிகவும் பெரும் பங்காற்றிய ஜேர்மனிய இலக்கியப் போக்குகள், அதுசார்ந்த தத்துவார்த்தப் போக்குகளைக் குறித்த புரிதலில் வைத்தே திரு.கோவிந்தனது இலட்சியம் சிறுகதையை விவாதிக்க விரும்புகிறேன்.
 
 
கிறிஸ்த்தோப் மார்ட்டின் வீலான்ட்(Christoph Martin Wieland, 1733-1813)அகத்தோன்,Agathon-der Gute என்ற நாவலானது அடிப்படையில் நல்லவர் எனும் பொருளில் கதை சொல்லப் புறப்பட்டது.இது,1762 இல் முதன் முதலில் வெளியாகியபோது, டொச் மொழியில் முதல்முதலாக வெளிவந்த நவ இலக்கியம்-நாவலெனும் அந்தஸ்த்தைப் பெறுகிறது.கதையில் கதைக்குரிய உயரிய நடைகள் கதை மாந்தர்களது அகவிருப்புக்கமைய வெளிப்படுவதும் அதன் பேசுபொருளாக மனித நடத்தை இருப்பதும் அந்த இலக்கியத்தின் இருப்பை இதுவரை உறுதி செய்கிறது.கிறித்தோப் மார்ட்டின் வீலான்ட் தான் வாழும் காலத்து சமூகத்தைத் தனது விசாரணைக்கான தளமாக மாற்ற முனையும்போது தான் கொண்ட அனுபவங்களை அதலிருந்து புறத்தே வைத்து விசாரிக்கிறார்.இதனால் படைப்பிலக்கியத்துக்கான ஒரு தத்துவார்த்தப் போக்கை இவருக்குப் பின்னால் வந்த கோதேக்கும்,பிரிடீரிக் சில்லருக்கும் தகவமைக்கும் கடமையைவிட்டுச் செல்வதில் ஜேர்மனிய இலக்கியவுலகம் தலைசிறந்த மேதையான தோஸ்மானையும்,பெற்றெடுத்தது.
 
 
தொடரும்…

ப.வி.ஸ்ரீரங்கன்
23.08.2009
 
 
 
 
 
 
 
 

புலம்பெயர் வாழிலங்கையர்கள் சந்திப்பு

„இலங்கையர்கள்“
   
ழப்போருக்கு“பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,“நாம் அனைவரும் இலங்கையர்களே“என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.
 
„புலம்பெயர்வாழிலங்கையர்கள்“சந்திப்பு:
 
அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து“இலங்கையர்கள்“எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்“இலங்கையர்கள்“எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.
 
உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் „அரசுசாரா“அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய „அரசுசாரா“அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.
 
 


„புலம்பெயர் வாழ் இலங்கையரின் ஒன்றுகூடல்“ என்பதுகூட ஒரு கோணற்றனமான வாசகம்தாம்.புலம்பெயர் என்பது ஒரு நாடோ அல்லது தேசங்களையோ குறிப்பிட முடியுமா?அதற்குள் வாழவும் முடிகிறது?
 
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய தலைப்புகளில் நடாத்தும் „இலங்கையர்கள்“என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மிக அவசியமாக இனங்காணத்தக்கது!
 
இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது“இலங்கையர்கள்“எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்“தலித்துவ அடையாளம்“,பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக“இலங்கையர்கள்“ எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை முறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.
 
இலங்கையர்களுக்கு இலங்கைத் தேசியம் என்ற அடையாளந்தாம் இருக்கமுடியும்.இதன் அடிப்படையில்தாம் சிங்கள இனவெறி அரசானது தமிழர்கள் என்பதற்காக அனைவரையும் இனவொடுக்குமுறைக்குள் உட்படுத்தியது.அங்கே, தலித்தோ அல்லது பிரதேசப் பிரஜைகளோ முதற்தெரிகளாகவும்-சிறப்பாகவும் பார்க்கப்படவில்லை.எனினும்,இந்தச் செயற்கையான“இலங்கையர்கள்“எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.உலக நாணய நிதியத்திடம் வட்டிக்குக் கடனைப்பெற்று, இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.
   
2

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.இந்தச் சமுதாயத்தில் உலக நாணய நிதியம்-உலக வங்கிகள் யாவும் இவ்வடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து இருத்தி வைக்கும் மேற்காணும் தொழிற்கழகங்களது எடுபிடிகளாகவே இருக்கின்றபோது,அரேபிய எண்ணை வயல்களைத் தமது குடும்பச் சொத்தாக்கிய அரேபிய நிலப்பிரபுக்களின் பதுக்கற் பணமோ“எண்ணை டொலர்களாக“இவ் நாணய நிதியத்திடமும்,உலக வங்கியிடம் முடங்கிக்கிடக்க, இதன் ஆதிக்கம் மேற்குலகப் பொருளாதார நலன்களைச் சுற்றிய வியூகமாக விரிகிறது.
 
இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும் கடன் நிதிகள் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.இதனால், தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.
 
இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற சிங்கள ஆளும்வர்கத்தின் தெரிவானது இலங்கையைப் புரட்சிகரச் சக்திகள் அரசியல்ரீதியாகக் கைப்பற்றதாவொரு சூழலை நோக்கியதாகும்.
 
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்த ஆளும் வர்க்கமானது, இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.
 
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைச் சமீபம்வரை நடாத்தியது.இந்த நிலையில்,மேலும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.
 
 
இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.
 
 
இத்தகைய குழுக்கள் யாவும்“பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்“எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
02.08.09

கலையரசன்:ஈழநானூறும்,புலப்பெயர்வு படலமும்.

அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில்
தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி!
 
 
 
கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்“என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.
 
 
இது தமிழ் பேசும் மக்களது வரலாறு.
 
புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது.
 
 
இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது.
 
 
மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான கிளை முரண்பாடுகளையும் இலங்கைபோன்ற பல்லின மக்கள் வாழும் தேசத்தில் உருவாக்கிறது.
 
 
வெறுமனவே,மேலெழுந்த புரிதலை வைத்துத் தமிழ்பேசும் மக்களது வரலாற்று நிகழ்வுகளை எழுதமுடியாது.அதற்குப் பலபேர்களது கூட்டு உழைப்பும்,சுயதிருப்தி-விருப்புக்கடந்த மிக உயர்ந்த ஆய்வு மனப்பாண்மையும்,வரலாற்று பொருள்முதல் வாதமும்-இயக்கவியல் பொருள்முதல்வாதமும் மிகத் திறம்படக் கைவசப்பட்டவர்களே இதைக் குறித்துப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
 
 
 
இனக்கலவரத்தை வெறுமனவே“யாழ்ப்பாணத்தவர்களது“பதவி ஆசையைக் காரணங்காட்டியேதாம் நிகழ்த்தப்பட்டதென்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?
 
 
இலங்கையில் 1911 இல் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் ஏற்பட்ட கலவரம் எத்தகையது?இதன் பின் தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள்-கலவரங்கள்,கண்டியச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமுள்ள தலைவெட்டல்கள் என்பவையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இவைகளுக்கான அடிப்படை முரண்பாடுகள் எங்ஙனம் தோற்றம் பெற்றதென்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாகவேண்டும்.அங்கே பொருளாதாரம் அடிப்படையாக முன்னிற்கிறது.இனங்களுக்கிடையிலான பொருளாதாரச் சுழற்சியை இனங்கண்டாக வேண்டும்.வளர்ச்சி-பங்கீடு,சந்தைப்படுத்தல் என்பவை இனங்களுக்கிடையில் எத்தகைய முறைமைகளில் முரணாக விரிந்தன என்பதெல்லாம் அவசியமான முறைமைகளில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
 
 
இலங்கையின் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்குக் குறைந்த பட்சமாவது குமாரி ஜெயவர்தனாவை ஆவது படித்துக்கொள்ள வேண்டும்.இது ஆலோசனை அல்ல.உங்களது கட்டுரை மிகத் தவறான முறையில் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டையும்,இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில், ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்பட்ட போட்டிகளையும் புரிய வைக்கிறது.அரச ஜந்திரத்தில் உறுப்புக்களாகவிருந்த யாழ் மேட்டுக் குடிகளது பதவி ஆசையைக் காரணங்காட்டிக் கலவரங்கள் நிகழ்ந்ததென்பது,தனிப்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதிவிப்போட்டியாக விளக்கங்கொள்வது மிகக் கொடுமையானது.வரலாறு என்பது கதை எழுதும் வேலை அல்ல.அல்லது தனிநபரது ஆளுமைக்கும் உட்பட்டது அல்ல.அது ஒரு மிகப் பெரும் ஆய்வு மட்டத்துக்குள் பலபேர்களது கூட்டு உழைப்போடு மிகக் கறாரான மார்க்சியப் புரிதலோடு எழுதப்பட்டாக வேண்டும்.
 
 
இதைக் குறித்து, உலகை இனங்காண மார்க்சினது கூற்றைப் பாருங்கள்: வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது“என்கிறார்.
 
 
 
இன்றைய புலிகளது தோல்வியைப் பாருங்கள்!
 
 
 
இதை மனம்போன போக்கில் எழுதிவிட முடியுமா?
 
 
வரலாற்றில் புலிகளது போராட்டத்தை எழுதுவதற்கு-அதன் காரணங்கள்,தோல்வியினது பாத்திரம்,அவர்கள் கொண்டிருந்த வர்க்க அரசியல்,இவைகளை மிகக் குறுகிய வட்டத்துக்குள் வைத்து எவரும் எழுதிவிட முடியாது.இதைப் போன்றதேதாம் இனக்கலவரங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளை ஆய்வு செய்வதும்,அதையொட்டிப் படைப்பதும்.
 
 
„ஈழநானூறும் புலம்பெயர் படலமும்“என்று மிகக் கேலித்தனமாக நமது சமூக வாழ்வியல் பிரச்சனைகளை எழுதுவது மிகக் கெடுதியானது.அக நானூறு-புற நானூறு என்ற பண்டைய இலக்கியத்துள் நிலவிய மானுட தரிசனத்தை மானுடவியற் கண்ணோட்டத்துடன் பார்த்து ஆய்வு செய்யும் இன்றைய மாணவன்,அக் காலக்கட்டத்து சமூக நடிவடிக்கையைப் பொருளாதார வாழ்வோடு இணைத்து, அதற்கு அர்த்தங்கற்பிக்க முனைவதில் கண்டடையும் உண்மை புறநிலையின் தன்மையில் எழுந்த சிந்தனை எங்ஙனம் வாழ்நிலையைத் தீர்மானித்தென்பதும், அங்ஙனமே வாழ்நிலை-எங்ஙனம் உணர்வைத் தீர்மானித்துக் கொண்டதென்பதை வரலாற்றில் மனிதர்களை வைத்துப் பார்க்கும்போது-அங்கே பொருளாதார முரண்பாடுகளையும், மனித வர்க்க நிலைகளையும் கண்டடைய முடியும்.இவ்வண்மையேதாம் இன்றைய மனித வாழ்வையும், இன்னொரு கட்டத்தில் பார்க்க முடியும்.இவற்றைக் குறிப்பது எதற்காகவென்றால்,உங்களது பிழையான-தவறான புரிதல்கள் நாளைய சுமுதாயத்துக்குத் தவறான புரிதல்களை கொடுக்கப்படக் கூடாது என்பதற்கே.
 
 
அடுத்து,1983 ஆம் ஆண்டுக் கலவரம் என்பது வெறுமனவே சிங்களக்காடையர்களது பங்குபற்றலுடன் நடாத்தி முடிக்கப்பட்டது அல்ல.அதற்குள் பல்லினக் குழுக்கள் பங்குகொண்டுள்ளன.இவற்றை வழி நடாத்திய அரச வன்முறை ஜந்திரத்துக்கு, ஆளும் அரசினது ஒத்துழைப்பு இருந்ததென்றால் அவ்வரசுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினது பாத்திரம் எத்தகையது?
 
 
இவற்றைக் குறித்துப் பர்ப்பதே வர்க்கக் கண்ணோட்ட ஆய்வு.
 
 
இதுதாம் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இயக்கவியல் பொருளாதாரப் புரிதலை சமூக இயக்கத்துள் உண்மைகளைக் காணப் பயன் படுத்துவது.இதை மறுத்தொதுக்கிவிட்டு,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் இனக் கலவரத்தைப் புனைவது கண்டிக்கத்தக்கது.
 
 
எமது புலப் பெயர்வைக் குறித்து மலினப்படுத்தப்பட்ட முறையில்“படலம்“போட்டுச் சொல்ல முடியாது.
 
 
இவைகளுக்குப் பின்னால் நிகழ்ந்த சமூகசீவியச் சிதைவு-வாழ்சூழற்பாதிப்பு அதன் காரணமாகவெழுந்த உயிர் வாழ்வு அச்சம்,அதன் வாயிலாக எழுந்த சமூக அசைவியக்கம் இப்படிப் பல படிமுறைகளைப் புரிந்தே எதையும் எழுத முடியும்.இது பாட்டி வடை சுட்ட கதை அல்ல!
 
 
மார்க்சியத்தைப் புரிந்து,சரியான ஆய்வைக்கொண்டு எழுதவும்.
 
 
அடுத்து-
 
 
இந்துக் கல்லூரியில் திரண்ட அகதிகள் அங்கே கோடு கிழித்துச் சாதியத்தை நிலை நாட்டியது என்பதெல்லாம் வெறுமனவே குறியீடுகளாகச் சொல்ல முடியாது.இதற்குப் பின்னாலுள்ள உளவியற் சூழலையும் அறிந்து எழுத வேண்டும்.அதாவது, பெரு நகரத்தில் எப்படி-எங்கே சாதிகள் இனங்காணப்பட்டன,இவையூடாக கலவரத்துள் சிக்குண்ட மானூடரது உளவியற்றாக்கத்தில் சாதியத்தின் தெரிவு சாத்தியமாகுமா என்ற வரலாற்றுத் தர்க்கம்- உண்மைகள் அவசியமானது.இதைக் குறுகிய அரசியலாக்க முனைவது கபடம் நிறைந்தது.
 
 
உங்கள் „ஈழநானூறும்,புலப்பெயர்வுப் படலத்தின“; ஒரு சிறு துண்டே இப்படியென்றால் முழு நூலிலும் என்ன அபத்தம் உண்டோ யாரறிவார்?
 
 
மீளவுஞ் சொல்கிறேன்: வரலாற்று நிகழ்வுகளை தனிப்பட்ட ஒருவர் எழுதிவிட முடியாது.அது, பற்பல ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்பட்டுக் கூட்டாக எழுதப்பட வேண்டியது.அதுவும் மார்க்சிய-வர்க்கப் புரிதலோடு,அன்றைய சூழலில் இயங்கிய பொருளாதாரப் போக்குகளை மிகக் கவனமாகப் புரிந்தே எழுத வேண்டும்.
 
 
இல்லையேல் இன்னொரு சாண்டில்யன் பாணியில்தாம் இது முடியும்.
 
 
இந்தத் துண்டுக் குறிப்பே மிக அபத்தமானமுறையில் வரலாற்றையும், அதன் பாத்திரத்தையும் குறித்துச் சொல்கிறதென்றால்,அச்சில் வரும் முழு நூலது உள்ளடக்கமும் எத்தகைய புரிதலைத் தரப்போகிறது நமது இளைய தலை முறைக்கு?
 
 
சமூக நடாத்தைகளை பரபரப்பு முறையில் எழுதி விற்க முடியாது.இது சுத்த சிறுபிள்ளைத் தனமானது!இத்தகைய எழுத்து, ஏன்?-என்று கேள்வி கேட்டுக்கொண்டால்,அதன் அவசியம் எதற்கென்று புரியும்.
 
 
எழுத வேண்டுமென்பதற்காக எழுதி, நமது மக்களை மேலும் மொட்டையடிப்பது சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.-அவ்வளவுதாம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.09

அதிரடி மற்றும் இலங்கை நெற்…

கருணா-பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்…
 
 
இதுள் முடக்கப்படும் புலம்பெயர் ஊடகச் சுதந்திரம்
 
 
 
நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு „அரசியல்“செய்கின்றன.எம்மினத்துள் ஊடுருவியுள்ள பாசிசக் கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இதற்கு நல்ல உதாரணம் கோத்தபாய இராஜபக்ஷ.இந்த மனிதன் கடந்த காலங்களில் படு கேவலமாகக் கருத்துச் சுதந்திரத்தின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவர்.இப்போதும் அதையே தொடர்பவர்.சுடர் ஒளி பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து, படு கேவலாகச் சொல்லாடி இழிமைப் படுத்தியவர்.இவரது காலடியில் கிடக்கும் கருணாவினது ஏவல் நாய்கள் இப்போது அதிரடி-இலங்கை நெற் போன்ற ஊடகவியலாளர்களை மிகக் கேவலமாகக் கருத்தாடி ஒடுக்குவதற்கான முனைப்பில் சதிராட்டஞ் செய்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.இதைத் தோழர் இரயாகரன் இங்கே கண்டித்து அம்பலப்படுத்துகிறார்.
 
 
 
இப்போது, மக்கள் நலன் மறுத்த முன்னாள் ஆயுதக்குழுக்கள் தமக்குள் பாதாளவுலக மாபியாக்களைத் தோற்றுவித்து முட்டிமோதும் „அரசியல் இலாபத்துக்குள்“மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தும்,தமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பொதுமனிதரை-ஊடகங்களை ஒடுக்கவும் மீளவும் அதே வன்முறையில் தமிழ்ச் சமுதாயத்தையே உளவில் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களது சிவில் நகர்வுகளை முடக்குவதற்கு முனைகிறார்கள்.புலிகள் அழிந்தாலும் அதன் எச்சம் கருணா-பிள்ளையான் எனத் தொடரத்தாம் செய்கிறது…
 
 
இத்தகைய அராஜகத்தனமான அரசியல் நடாத்தை, மகிந்தாவின் கழுத்துத் துண்டில் தொங்கியபடி அரசியல் நடாத்தும் கருணா-பிள்ளையான் குழுக்களால் நடந்தேறுகிறது.இவ்வகை அரசியலுக்கு முன்னோடிகளான புலிகள் இப்போது, இவர்களது வடிவில் பாசிச அரசியலை நடாத்துகிறது!மறுபுறமோ,தமிழர்களை „ஜனநாயக மயப்படுத்தும்“திரு.டக்ளஸ் மாத்தையாவோ யாழ்ப்பாணத்தில் சுவர்களுக்கு „ஜனநாயகத்தை“ப் பாடமெடுப்பதில் அங்கும் அராஜக அரசியலுக்கு முண்டுகொடுக்கிறார்.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது!இந்த இலட்சணத்தில்“நாமும் வாழ்ந்து,நமது மக்களையும் வாழ வைப்போம்“என்பதும்,“உரிமைக்குக் குரல் கொடுப்போம்,உறவுக்குக் கரங் கொடுப்போம்“என்பதும் புதிய இரக அராஜகக் கட்டுமானத்தின் அறைகூவலாக முடிகிறது.
 
 
இதையேதாம் „புதிய இலங்கையைக் கட்டுவதாக“க் கருணா பல்லிளித்துக் கூறி, எமக்கு முன் தூஷணமாகக் காறி உமிழ்கிறான்!இவனது குழுவோ மக்களது செல்வத்தை மகிந்தாவோடிணைந்து கொள்ளையடிப்பதில் இலங்கையிலிருந்து ஐரோப்பாவரை தொடர்புகளை வைத்துத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கிறது.தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமைகளை இதற்காக மகிந்தாவுக்குப் பட்டயமெழுதிக் கொடுத்தும் உள்ளது.இது,பிரதேசரீதியான பிரிவினையைத் தூண்டவும் முனைந்து அமெரிக்க மேலாதிக்கத்தின் கனவையும் நிதர்சனமாக்கியது.இந்தக் கருணாவென்ற துரோகிக்குப் „புதிய இலங்கை-கிழக்குச் சுதந்திரம்“ ஒரு கேடா?தூ…
 
 

 
 
இன்றைய இலங்கையில், இத்தகைய ஆயுதக் குழுக்களது அராஜ அரசியலானது தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது.இவற்றுக்குத் தலைமை தாங்கும் டக்ளஸ்போன்ற அரசியல் மாபியாக்களோ இதை மறுத்தபடி தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகம் சொல்லக் கருணாவென்ற முன்னாள் புலிப் பயங்கரவாதி-பாசிசவாதி“புதிய இலங்கையை கட்டியெழுப்புவது“என்ற தனது கொச்சை அரசியலுக்குப் புதிய விளக்கமாக இன்று தூஷணம் நமது காதுகளை எட்டுகிறது.தமக்கு எதிரானவர்களை-தமது அராஜகத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்களைக் கொச்சைத் தனமாக ஏசியும்-மிரட்டியும்,கொலைகள் புரிந்தும் அடக்கிய புலிகள், இன்று முழுமொத்தச் சமுதாயத்தையுமே அநாதைகளாக்கி அடிமைப்படுத்திச் சென்றதன்பின்,அவர்களது எச்சங்கள் மேலும் அதே கதையைத் தொடர்வது நமது காலத்தில் நமக்கு விடிவில்லை என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது.
 
 
எந்தக் காரணத்தையும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்குச் சொல்லமுடியாது.எந்தக் காரணத்தையும் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொல்வதற்குச் சொல்லமுடியாது!முன்னாள் ஆயுதக் குழுக்களது ஊடகங்களாகவிருந்த அதிரடி.கொம் மற்றும் இலங்கை நெற் போன்ற ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் தமக்கு ஏற்பட்ட அராஜக ஒடுக்குமுறைக்காக „இப்போது“ குரல் கொடுக்கின்றன.
 
 
இத்தகைய ஊடகங்கள்,தாம்சார்ந்த ஆயுதக்குழுக்களாலும் மற்றும் புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்றுக் கருத்தாளர்கள்-படைப்பாளிகள் குறித்து எப்பவும் வாய் திறந்தவர்களில்லை.எனினும்,இன்று இவர்களது குரல்களுக்கெதிராகவும்,இவர்கள் முன்வைக்கும் முரண்பாடுகளுக்கெதிராகவும் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் அராஜகத்தைக் கட்டவிழ்வுக்கும் கருணாவினது கொலைவெறி அரசியலைக் குறித்து நாம் வன்மையான கண்டனங்களைப் பதிகின்றோம்!
 
 
அராஜகம்,ஒருபோதுமே ஏற்புடைய அரசியலாக முடியாது.புரையோடிப்போன இலங்கைப் பாசிச அரசினது பக்க விளைவுகளாக இவை மேலும் நிறுவனமயப்படுமானால், முழுமொத்த மக்களுக்மே இத்தகைய அரசுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அடிமையாவதில் முடியும்.
 
இலங்கையர்களதும்-மிகிந்தா குடும்பத்தினதும் உலகப் பார்வையானது மாற்றாந்தோட்டத்தில் மல்லிகைக்கு மணமிருப்பதாகக் கருதுவதில்லை.ஒற்றைத் தலைமையும்-அதைச் சுற்றித் துதித்திருப்பதும் ஆங்கிலேயனிடம் கைகட்டிக் காரியமாற்றிய மனங்களின் கால நீட்சிதான்.அந்தக்காலத்தில் தவமிருந்து பெற்ற அதிகாரத்துவத்தை மீளச் சுவைப்பதில் இத்தகைய அதிகாரவர்க்கமானது தம்மைத் தமிழரின் மீட்பர்களாகவும்-ஒன்றுபட்ட இலங்கையின் புத்திரர்களாகவும் காட்டிக் கொள்வதில் எந்தவியப்புமில்லை.
 
 
கருணா-பிள்ளையான்,டக்ளஸ்போன்ற இழி மானிதர்கள் உலகெங்கும் எவர் பெயராலும் -எதன் பெயராலும் அராஜகத்தையும்,அவலத்தையும் ஏற்படுத்தித் தமது வாழ்வாதாரங்களையும்,செல்வத்தையும் காத்துக் கொண்டு,மேலும் மக்களின் வரிப்பணத்தைச் சொந்தச் செல்வமாகக் குவித்து வருகிறது.இத்தகைய ஒரு தேவையானது மீளவும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது.இவர்களே மகிந்தாவால் தத்தெடுக்கப்பட்டு,அவர் குடும்பத்துத் தாதாக்களாகத் தமிழ் மக்களுக்குள் புலிப்பாணிப் பாசிசத்தைத் தகவமைக்க இப்போது, அராஜகத்தைக் கட்டவிழ்து விடுகிறார்கள்.இஃது, வருந்தத் தக்கது மட்டுமல்ல தடுத்து நிறுத்துவதும் அவசியமானது!
 
 
எனவே,அராஜகக் கொலைகளுக்கு-உளவியற்றாக்குதலுக்கு-அச்சமூட்டலுக்கு எந்தக் காரணமும் கற்பிக்க முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும-அராஜகத் தாக்குதல்களை-அச்ச மூட்டல்களை; ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்“திருத்திய“நேர்த்தியான-அவசியமான அரசியல் என்பாரானால்,அவர் கடைந்தெடுத்த „கொலைக் கிரிமனல்“என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
 
பாசிசத்துக்குரிய இறுமாப்பும்-அதிகார ஆதிக்கவாதமும்-ஆயுதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தக் கருணாவகை ஆதிக்க உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்பூர்சுவா எண்ணங்களாலும்-ஆயுத ஆதிக்கத்தாலும் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இஃது, தமது எஜமானர்களுக்காக ஆயுதத்தையும்.அராஜகத்தையும் முன்நிறுத்தி, வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இன்று புலம் பெயர் தளத்தில் இதற்கெதிராகக் குரல் கொடுக்கும் இணையத் தளங்களுக்கு,அவைகளுக்கு எழுதும் பத்திரிகையாளர்களுக்கு நேரும் வன்கொடுமை இத்தகைய தெரிவின் தொடர்ச்சியே!
 
 
அதிரடி.கொம்,இலங்கை நெற் செய்தியாளருக்கு ஏற்படும் அச்சமூட்டல்-அதிகாரத்தனமிக்க பாசிச மொழியூடாகக் கூறப்படும் உளவியற் தாக்குதலானது நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால், நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?
 
 
கடந்தகாலத்தில் அவர்கள் தமது உயிர்-உடமை அனைத்தையும் சிங்கள-புலிப்பாசிசக்கூத்துக்குத் தாரை வார்த்தவர்கள்.
 
 
அன்று,தமிழ் மொழிமீதான பற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கைய+டாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால், அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொளித்துவிட்டது.இத்தகைய அளப்பரிய தியாகஞ் செய்த மக்களது அழிவிலிருந்து அரசியல் செய்யும் கருணா-பிள்ளையான்களின் காடைத்தனம் முறியடிக்கப்பட்டாகவேண்டும்.இதை, இனிமேல் மௌனமாகவிருந்து அனுமதிக்க முடியாது.புலிகளுக்கு மண்டியிட்டு அழிவைக்கண்டவொரு இனம் நாம்.எனவே,கருணாவினது காலை ஒடிக்கும் எதிர்ப்பை வெகுஜனப்படுத்தி மக்களை விழிப்படைய வைப்பது அவசியம்.
 
 
யார்மீதும் சவாரிசெய்த புலிவகை அரசியலானது இன்று கருணா-பிள்ளையான் ஈறாக எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது-மிரட்டுகிறது,அடிமைப்படுத்த முனைகிறது!இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள்(கருணாவுக்கு-பிள்ளையானுக்கு,டக்ளஸ்சுக்கு வால் பிடிக்கும் புலம் பெயர் குழுக்கள-தனிமனிதர்கள்) தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட தமது எமானர்களுக்காக வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற அராஜகக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தம்மை“ஜனநாயகத்தின் பெயரால்“அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தமது அரசியலை-பரப்புரைகளை முன்னிலைப் படுத்திவிடுகிறது.இதற்காக „அம்மான்“ஆட்டுக்குட்டியென ஆயிரத்தெட்டு இணைய ஊடகங்கள் புற்றீசல்போல் முளைக்கின்றன.
 
 
இதுதான் இன்றைய அவலமான சமூக உளவியல்!
 
 
ஒவ்வொருவரும் தமது அராஜகத்தை நியாயப்படுத்த தமிழ் மக்கள்-பிரதேசம் எனப் பல்வேறு நாமத்துக்கூடாகப் பரப்புரைகளைச் செய்து தமிழ்பேசும் சமுதாயத்தின் இருப்பையே அசைக்கின்றார்கள்.இவர்கள்அனைவரும்,தத்தமது எஜமானர்கள் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் „ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமை“யென்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.இதுள், அதிரடியோ அல்லது இலங்கை நெற்றோ விதிவிலக்கல்ல!ஆனால்,ஊடகங்கள் மீது தொடக்கப்படும் அராஜகம் உண்மைகளைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் அராஜகம் என்பதால் அதை எதிர்கொள்ளும் அதிரடி-இலங்கைநெற்றுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம்.இஃது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்து அல்ல.மாறாக,கருத்துச் சுதந்திரத்தை நிலைப்படுத்துவதற்கானது.
 
 
புலிகளாலும்-மகிந்தா குடும்பத்தாலும் பாசிசம் தன்னை வலுவாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது.இதுவே,இலங்கையிலிருந்து தொலைபேசியூடாகச் சவிச்சர்லாந்தில் இருக்கும் ஊடகவியலாளரை மிரட்டுகிறது-தூஷணத்தால் கொலை மிரட்டல் செய்கிறது!தமது சொந்த இலாபங்களுக்காகத் தமது மக்களையே கொல்லும் ஒரு மனிதக்கூட்டம் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறதென்றால்,அது,இலங்கையில்தாம்.
 
 
இந்த இலங்கையைத்தான் மகிந்தாவும்,அவர் பின்னால் நாயாக வால் ஆட்டும் கருணா-பிள்ளையான்,டக்ளஸ் வகையறாக்கள் புதிய இலங்கை என்கிறார்கள்.இத்தகைய இலங்கை ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களது இலங்கை இல்லை என்பதைத் தமது அராஜகத்துக்கூடாக மகிந்தா குடும்பமும் அக்குடும்பத்தின் ஏவல் நாய்களும் சதா உறுதிப்படுத்தி வருகிறார்கள்.இவர்களை முறியடிக்க இலங்கைவாழ் மக்கள் வீதிக்கு இறங்கியே ஆகவேண்டும்.இதைத் தூண்டாத புரட்சிகர அரசியல் கட்சிகள் பாசிசத்துக்குத் துணைபோனவைகளே.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
25.07.09

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்…

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்…
 
 
மிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய புலிப்போராட்டமாக நீண்டு மக்களைக்ப் பிளந்து கொன்றபின்,புலிகளை அழித்துக் கருணா-டக்ளஸ்,பிள்ளையான் என மேலும் விரிகிறது.
 
 
அன்று, இத்தகைய தமிழர் தலைமைகள் சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மையானதாகும். இதைத் தொடர்ந்து இருத்தி வைப்பதற்காக இன்றுவரையும் இலங்கை அரசியலில் அமெரிக்காவும்,மேற்குலகமும் மிகக் கவனமாகச் செயற்படுகிறது.
 
 
இத்தகைய பார்வை அதன் வெளியுலக நீண்டகால நலன்களின் அடிப்படையிலானது.இங்கே,உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இலங்கையைத் தமது எஜமானர்களுக்குக் கீழ்படிய வைக்கும் கடன் நிதிகளால் தத்தெடுக்கின்ற சூழலில், இக்கடன் நிதிகளையும் அதைச் சுற்றிய கட்சி-அரசினது சாரங்களையும் புரிவது அவசியம்.இதன் வழி நம்மை மொட்டையடிக்க முனையும் முன்னாள் ஆயுதக்குழுக்களது இன்றைய ஓட்டுக்கட்சி அரசியலை எவர்கள் தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரியமுடியும்.இவர்களது பின்னே நிழலாக விரியும் அதிகார வர்க்கம் மேலும் நமது மக்களை முட்டாளாக்கித் தமிழ்பேசும் மக்களது உரிமைகளை அந்நியர்களுக்குத் தாரைவார்க்கிறது.இது குறித்துச் சற்று நோக்குவோம்.
 
 
உலக வங்கி-நாணயநிதியக் கடன் நிதிகளும்,அதன் நோக்கமும்:
 
 
புலிகளது இராணுவ இருப்பை அழித்தபின் இலங்கையில் மாறிவரும் அரசியற் சூழல் மிகவிரைவாகப் புரிந்துகொள்ளத்தக்க சிலகெடுதிகளை உணர்த்துகிறது.இந்தக் கெடுதிகள் யாவும் இனவாத அரசியலின் வெற்றிடத்தை மீள நிறுத்துவதற்கும்,இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீறுபூத்த நெருப்பாக இருப்பதற்கான அரசியலாகவும் இருத்தி வைக்கப்படுவதூடாக இலங்கையின் சுயவளர்ச்சி இல்லாதாகப்படுகிறது.இந்தச் சுழற்சிக்கு ஏற்றதான அந்நியக் கடன்கள் இலங்கையை மிகவிரைவாக முற்றுகை இடுகின்றன.உலக வங்கி-நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பெரும்பாலும் இலங்கையின் எதிர்கால அரசியல்-பொருளாதார முன்னெடுப்பின்மீதான செல்வாக்கை தனக்குள் கொண்டதன் வியூகமாகவே இருக்கின்றது.இதன்படி இலங்கை மக்களது உண்மையான முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான ஆதிக்க அரசியல் விருப்புகளைக் கட்சி அரசியலூடாக மக்களைக் கட்டிப்போடும் கபடம் நிலவுகிறது.
 
 
„ஈழப் போர்“முடிவுக்குக் கொணரப்பட்டதன்பின் மக்கள் தமது உண்மையான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் சூழல் இதன்படி இல்லாதாக்கப்பட்டு, மக்களை „அபிவிருத்தி-மக்கள் நலத் திட்டம்“எனும் மாயமான்களால் கட்டிப்போடுவதற்கும்,இதனூடாகப் பாராளுமன்றச் சாக்கடையில் நீச்சலடிக்கும் இன்னொரு சுற்றை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுக்குத்“தீர்வு“என வகுக்கப்படுகிறது.இதுவரை போரைச் சொல்லி இலங்கையின் பொருளாதார முரண்பாட்டையும்,அன்றாட விலைவாசி உயர்வையும் குறித்த மக்களது அதிருப்தியையும்,அதற்கெதிரான கவனத்தையும் திசைதிருப்பியது இலங்கை ஆளும்வர்க்கம். இப்போது அந்நியக்கடன்களால் தமது இருப்பை மேலும் நிலைப்படுத்த முனைகிறார்கள்.இதுவே, இலங்கை ஆளும் வர்க்கத்து அந்நிய எஜமானர்களதும் நோக்குமாகும்.
 
 
இதன் கெடுதிகள் இலங்கையில் அடுத்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலும் புரட்சிகர-வர்க்க உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட இலங்கையாகவும்-அந்நிய வலையில் வீழ்த்தப்பட்டு ஒட்டச் சரண்டப்படும் இலங்கை மக்களாகவும், அனைத்து இலங்கை மக்களும் தமது எதிர்காலத்தை எதிர்கொள்வதாகவே இருக்கும்.இதன்படி இன்று மையமுறும் சிலவற்றை இங்ஙனம் இனங்காண முடியும்:
 
 
உலகத்தில் வளர்ச்சியடைந்த கலாச்சாரங்கள் சமீபத்துப் பொருளாதார அதிர்வுகளால் நாசமாகப் போகும் இன்றைய நிலையில்,மேலிருந்து கீழ் பங்கீடு வற்புறத்தப்படுகிறது.உற்பத்திச் சக்திகளைத் தமது கட்டுப்பாட்டில்வைத்திருக்கும் வர்க்கத்திடமிருந்து உழைப்பவர்களுக்குச் சில சலுகைகளை தருவதற்கான முறையில் மேலிருந்து கீழ் நோக்கி செல்வப் பங்கீட்டைக் குறுக்கிறது மேற்குலக உற்பத்தி ஒழுங்கு.இலங்கையை இங்ஙனம் ஒரு திட்டத்துக்குள் அவர்கள் உள் வாங்குகிறார்கள்.இலங்கையின் நிலவும் அரச அமைப்பைக் காப்பதற்கான தெரிவினூடாக, இலங்கையைப் புரட்சிகரச் சூழல் அண்மிக்காது இருப்பதற்கான வியூகங்களே அந்நியக் கடன்களோடு வந்து சேர்கிறது.
 
 
 
(அ):இலங்கையின் பெரும் செல்வத்தை-மக்கள்மீது மறைமுக வரிச்சுமையாகக்கொண்டு பெறப்படும் பணத்தைத் தின்று ஏப்பமிடும் இலங்கை இராணுவம்,தொடர்ந்து நிலைத்திருக்க வைத்தல்.இது எப்பவும் அந்நியக் கட்டுபாட்டில் வைத்திருப்பதும்,தேவையானபோது சிதறடிப்பதற்குமான மூல உபாயம்.
 
 
(ஆ):சுய வளர்ச்சிக்கான பொருளாதார முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பட்ட வளர்ச்சி நிலையில், அத்தேசத்தின் சுயாண்மையைக் கொண்டியங்கும்.இந்த ஆபத்தைத் தடுத்தல்,அந்நிய ஒத்துழைப்போடு மக்களது பொருளாதார முன்னெடுப்பைத் தமது கட்டுப்பாட்டில் இயங்க அனுமதித்தல். இதனூடக, ஆசியாவினது மூலதனத்தை இலங்கையில் கண்காணிக்கும் பொறியைக் கொண்டியிக்குவதற்கான சரியான தெரிவை வகுப்பது.
 
 
(இ):இலங்கையின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார நிர்மாணிப்புகளைத் திட்டமிட்ட உலக வங்கி-நாணய நிதியக் கடன் நிதிகளின் ஒத்துடைப்போடு தமது கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்குதலுக்குக் கடனுக்கான வட்டியும்,வட்டிக்கு வட்டியுமான சுமையில் இலங்கை தொடர்ந்து சுரண்டி, அதனது அரசியல்-பொருளாதார சுயாதிபத்தியத்தை ஆசியாவிடமிருந்து பறித்து ஐரோப்பிய-அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்தல்.சீனா-இந்தியா போன்ற தேசங்களது பிராந்தியச் செல்வாக்கை கடன் நிதிகளால் மெல்லக் குறுக்குதல்.
 
 
(ஈ): இலங்கை தழுவிய அந்நிய உற்பத்திப் பொருள்களின் படையெடுப்பும்,அதைப் பரவலாக வாங்கும் திறனை இலங்கையில் அதிகரித்தல்.இது,மேற்குலகில் குவியும் உற்பத்தி பொருள்களும்,அந்த மக்களிடம் வாங்கும் திறன் இல்லாத சூழலை மேலும் கட்டுப்பாட்டில் வைத்து, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையைப் பேணதலுக்குமான ஊக்கத்தையும் இலங்கை சார்ந்து இயக்குகிறது(இந்திய-தமிழகத்து ரீ.வீ.களில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள்.அனைத்தும்-பல் துலக்கும் பேஷ்ட் கூட அந்நியத் தயாரிப்பே).
 
 
(உ):இலங்கையினது ஓட்டுக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் குறிப்பிட்ட சூழலுக்குள் நிதி மூலதனத்தோடு இணைத்து, அவர்களையும் தமது உற்பத்தியை மறு பங்கீடு செய்யும் தரகு முதலாளியத்துக்குள் கட்டிப்போடுவது.இதனூடாக எந்தக் கட்சியும் தேசிய மூலதனத்துக்குத் தலைமை தாங்காதிருக்கத்தக்க முறையில் தேசிய மூலதனம் உருப்பெறாதிருப்பதற்கு முட்டுக்கட்டையிடல்.அண்ணளவான தேசியப் பொருளாதாரக் கொள்கை பெயரளவிலும் நிலைபெறமுடியாதிருப்பது இதன் உள்ளடக்கமாகும்.இதனடிப்படையிற்றாம்,இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான அரசியற் கட்சிகளைப் பேரினத்தின் பொருளாதார இலக்கில் ஒன்றித்துச் செயற்படும் கட்சிகளது தந்திரமாக(பெருங்கட்சிகளுக்குள் சிறியவற்றை-இனஞ்சார்ந்த கட்சிகளைக் கரைத்தல்) இலங்கையில் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் அந்நிய நிறுவனங்களால் முன் தள்ளப்படுகிறது.இது பிராந்திய மற்றும் நகர்ப்புறக் குட்டி முதலாளிய வர்க்கத்தின் முற்போக்குப் பாத்திரத்தை இல்லாதாக்கும் செயலோடு தொடர்புடையது.அந்நிய மூலதனத்தால் பழிவாங்கப்படும் இவ் வர்க்கம் இறுதியாகச் சென்றடையும் புரட்சிகரப் பாத்திரத்தை,அவர்கள் இப்போது முன்னிறுத்தும் பிராந்தியக் கட்சிகளைச் செயலிழக்க வைப்பதால் வரலாற்றில் இல்லாதாக்குதல்.
 
 
இன்றைய மேற்குலகத்து உடமை வர்க்கத்துக் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை உலக நாணய நிதியமும்,உலக வங்கியும் மேற்சொன்ன முறைமைகளில் தணிப்பதற்கு முனைகின்றன.இதே அமைப்புகள் தமது எஜமானர்களுக்கு மேலிருந்து கீழ் நோக்கிய பங்கீட்டை வற்புறுத்திக் கென்றி போர்ட்டினது(Henry Ford) மிகப் பெரும் அறிவுறுத்தலை நினைப் பூட்டுகின்றனர்:

„நான் எனது தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியைக்
கொடுத்தாவேண்டும்.இல்லையேல் எனது கார்களை அவர்களுக்கு விற்க முடியாதுபோகும்.நான்
கண்டிப்பாக அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும்.இல்லையேல் அரசிடம் பணம் இல்லாது
போகும்,எனது கார்கள் ஒடுவதற்கான வீதிகளை அமைப்பதற்கு.“

இது,மிகச் சிதறந்த உதாரணம் மேற்குலகப் பூர்ச்சுவா வர்க்கத்துக்கு.இதற்குள் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் இன்றைய நெருக்கடிக்கான பல பதில்கள் அடங்கிக் கிடக்கிறது.
 
 
மார்க்ஸ் பொருளதார விவாதத்தில் ஒரு முறை இப்படி எழுதுகிறார்:
 
 
„முதலாளித்துவத்தின் முடிவின் இறுதிக்கட்டத்தில் கிட்டங்கிகளில் பொருட்கள் நிறைந்துபோய்க் கிடக்கும்.ஆனால், அதை நுகர்வதற்கு எவரிடமும் பணம் இருக்காது“.
 
 
இதன் அறிகுறியை இப்போது நாம் மேற்குலகில்-குறிப்பாக ஜேர்மனியில் இனங்காண்கிறோம்.இங்கே, கென்றி போர்ட்(Henty FORD) குறித்த அவரது இலக்கு மார்க்சினது சரியான ஆய்வில் இருந்து கட்டப்பட்டதாகும்.இலங்கையினது இன்றைய அந்நியக்கடன்களுக்கு இந்த இலக்கே முதன்மையானது.எனவே,மேற் காணும் பொறிக்குள் இலங்கையை வீழ்த்தும் அந்நியக் கடன் நிதிகள் இறுதியில் இலங்கையின் ஆளும் வர்க்கத்தை காத்துத் தமது இலக்கை எட்ட முனைகிறது.இது புரட்சியையும்,உழைக்கும் வர்க்கத்தையும் இலங்கையில் மிக நேர்த்தியாக ஒடுக்கும் வியூகத்தில் புலிக்குப் பதிலாகக் கடன் நிதியாக வருகிறது.
 
 
கட்சி ஆதிக்கமும்,அரசினது சாரம்சமும்:
 
 
ஓட்டுக் கட்சிகள் யாவும் இலங்கையில் முட்டிமோதும் ஆதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சி ஆதிக்கத்துள் இலங்கையின் அரசியல் நடாத்தைகளை முடக்க முனைகின்றன.இருபெரும் சிங்களக்கட்சிகளாக ஆளும் மகிந்த அரசினது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்,எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் நிலவுகின்ற சிங்களப் பேரினவாதத்துக்குத் தலைமை தாங்க முற்படுகின்றன.இதன் தொடராக மெல்ல அரசியலாகும் இனவாதக் கண்ணோட்டமானது இலங்கைப் பொருளாதார நகர்வுகளுக்குக் குறுக்கே கோடுகிழிப்பதைத் தவிர்த்தபடி எல்லோரையும் உள்வாங்கின்ற கட்சியாதிக்கத்துள் சிறு கட்சிகள்-சிறுபான்மை மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் பேச முற்படுபவையாக இருப்பவைகூடக் கட்சியாதிக்கத்தின் வெறித்தனமான அரசியல்பரப்புரையில் மெலினப்படுத்தப்பட்டுக் பெருங்கட்சிகளோடு கரையும் அபாயமானது இலங்கையின் அரசு குறித்த சாரம்சத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
 
இன்றைய இலங்கை அரசியலில் இலங்கையில் வாழும் பல்லின மக்களது அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் அமைப்புகளை மறுப்பதற்கான அரசியல் நடாத்தையாகப் பெருங் கட்சியாதிக்தின் பிடியுள் சிக்குண்டுபோகும் ஓட்டுக் கட்சி நலனாக இலங்கையின் ஜனநாயகப் பொதுச் சூழல்
மாற்றப்படுகிறது.இதன் தொடராக, ஐக்கிய தேசியக் கட்சியினது அடுத்தகட்டத் தேர்தல் நகர்வுக்குள் பூர்வீகக் குடிகளது பொருளாதார அபிவிரித்திக்கான திட்டமெனும் போர்வையில் „பூர்வீகக் குடிகள் யோசனைத் திட்டம்“எனும் அரசியல் வியூகம் பெருத்த தேர்தல் வெற்றிக்காகச் சிங்கள ஆளும் வர்க்கத்துள் மையங் கொள்கிறது.இது,-மேற்குலகச் சார்புடைய பகுதி-ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்து எதிர்காலத்தில் தமது நலன்களை எட்டுவதற்கானவொரு ஆட்சியைக் கொணரத் துடிக்கிறது.
 
 
மேற்குச் சார்புடைய இப்பிரிவு,இலங்கையினது உழைக்கும் மக்களை எந்தவுரிமையுமற்ற வெறும் கொத்தடிமைகளாக்கும் இனவாதக் கருத்தமைவுகளுடன், முழுதும் அவர்களது(உழைக்கும் வர்க்கம்) நலனுக்கான அரசியலாகக் காட்டப்பட்டு வருகிறது.பெரும்பான்மையின் ஓட்டுக்களைக் குறிபார்க்கும் கட்சிகளது தேர்தல் வியூகத்தில் சிறுபான்மை மக்களது எந்தவகைக் குரலும் பெருங்கட்சியாதிகத்துள் மூழ்கடிக்கப்படுகிறது.இதைத் தட்டிக் கேட்கத் துப்பற்ற டக்ளஸ் போன்ற மக்கள் விரோதத் தலைமையால் பரப்புரை செய்யபப்படும் பொய்மையானது „அரசோடு பகைக்கப்படாது-பெரும் கட்சிகளோடு முரண்படப்படாது“ எனும் சந்தர்ப்பவாதமாக இருக்கிறது.இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலில் அறுவடையாகும் கட்சியாதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சிகளது தெரிவில் ஆட்சி-ஜனநாயக நடாத்தை மிக மோசமாகப் பாதிப்படைவதில் அனைத்து அதிகாரமும் சில கட்சித் தலைவர்களது குடும்பத்தைச் சுற்றியும் அவர்களது பொருளாதார நலனை முதன்மைப்படுத்தியும் குறுகி,மக்களைக் கொத்தடிமைகளாக்கும் சதிவலைக்குள் வீழ்த்தப் போகிறது.இத்தகைய வலையானது மேலும் சிங்களப் பேரினவாதத்தை மீள் மலர்ச்சியடைய வைப்பதற்கான சாத்தியப்பாட்டை கட்சி அரசியலுக்குள் மெல்ல உள்வாங்குவதாகவே இருக்கிறது.
 
 
இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.புலிகளின் அழிவோடு தமிழ்பேசும் மக்களுக்குச் சோற்றுப் பார்சலை வழங்கிப் பெரும் புரட்சிகரமான விடுதலையை மக்கள் பெறுவதற்குத் துணை நிற்கிறது இந்தியா!ஆரம்பத்தில் பற்பல குழுக்களை உருவாக்கி இலட்சம் மக்களைக் கொல்லத் தூண்டிய இந்திய அயலுறுவுக் கொள்கை, இன்று தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத இனமாக்கி விடுகிற அதே தளத்தில், இலங்கையின் மற்றைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம் மற்றும் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உளவியல் அச்சத்தைச் செய்கிறது இன்றைய கட்சி ஆதிக்கம்.இத்தகைய ஆதிக்கத்தை நிலைப்படுத்திச் சிறுபான்மை இன மக்களது அரசியல் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சதியில் வல்லாதிக்கத் தேசங்களே இலங்கைக்கு வகுப்பெடுக்கின்றன.
 
 
இதை ஜனநாயக விரோதமான செயலாகவே நாம் பார்க்கிறோம்!
 
 
இந்தக் கட்சி ஆதிக்க இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக ஜனநாயகத் தற்கொலை இலங்கையில் நடந்தேறுகிறது. இதைத் தேச ஒருமைபாடு என்ற கோதாவில் பிரிவினைக்கு எதிரான அரசியல் நடாத்தையாகச் செய்யக்கூடிய நிலையில், இலங்கை அரசியல் உள்ளது.இலங்கையின் இராணுவமானது தவிர்க்க முடியாத அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தனது நேரடியான கண்காணிப்பின்கீழ் கொணர்ந்து, மக்கள் மத்தியில் தீர்க்கமானவொரு அடக்குமுறைய நிரந்திரமாக விதைத்து பாசிசமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இலங்கை அரசு.
 
 
இந்நிலையில்,பெரும் கட்சியோடு பகமையை வளர்க்காத அரசியலைச் செய்வதாகவும்,இதன்மூலம் „தம்மையும் காத்துத் தமது மக்களையும் காக்கும்“ வியூகத்தைக் கொண்டிருப்பதாக டக்ளஸ் ஒரு பேடித்தனமான சந்தர்ப்பவாத அரசியலைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார்.இவர்களுக்குத் தமது தலையைக் காப்பதில் பெரும் வேட்கைகொண்ட இலாப நோக்கு இருப்பதால், இங்ஙனம் பேச வைக்கிறது அவர்கள் பின்னாலுள்ள மூலதனம்.
 
 
கட்சி அரசியல் பகமையைக் காரணமாக வைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவுரிமையையும் பெரும் கட்சிகள் தந்துவிடாதுபோகும் சூழலைத் தடுப்பதற்குப் பெரும் கட்சிகளோடு இணைந்து அவர்களது தயவில் பாராளுமன்றஞ் சென்றுவிட்டால் தமிழுர்களுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு,அவர்களது அரசியல் வாழ்வும் சிறந்து-உரிமையும் எட்டப்பட்டு விடுவதுமாகத் தமிழ் தலைமைகளெனும் போர்வையில் உலாவரும் மாற்றுக் குழுக்கள்-கட்சிகள் சிங்கள அரசிற்குத் துணைபோகிறது.இந்த அரசியலில் தமது கட்சி-இயக்க நலன்களை எட்ட முனைதல் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரான வரலாற்றுத் துரோகத்தை மீளச் செய்வதைத் தமிழ் பேசும் மக்களுக்கு „ஜனநாயகம“; கொணர்வதாகச் சொல்வது முற்று முழுதான சுத்துமாத்து அரசியலாகும்.இதை டக்ளஸ்-கருணா போன்ற மிகக் கெடுதியான பதவி-பணவெறிபிடித்த முன்னாள் ஆயுததாரிகள் மக்களது பெயரால் தமது துரோகத்தனத்தை ஒப்பேற்றி வருகின்றார்கள்.இந்த நிலையில் ஓட்டுக்கட்சிக்கும் அரசுக்குமான உறவுகள்,இலங்கைச் சூழலில் மிக நேர்த்தியாக அறியப்பட்டாகவேண்டும்.
 
 
எனவே,இன்றைய இலங்கை அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது, அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.சிங்களப் பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அரசினது பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கான கருத்தியலைச் சதா திணித்து அதை அம்பலப்பட்டுப்போகாதபடி காத்துவருகின்றார்கள்.இதற்கு ஓட்டுக்கட்சி அரசியலானது மிகப்பெரும் ஒத்துழைப்பை நல்கி மக்களது ஓட்டுப்போடும் சுதந்திரமே இந்த அரசினது மக்கள் சார்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பொய்யுரைக்கின்றனர்.இவர்களது பின்னே அந்நிய மூலதனம் வழி காட்டுகிறது.
 
 
இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்-அரச சட்ட நிர்ணயத்தை நம்பியும்,நீதிமன்றங்கைளை நம்பியும்“சட்டத்தின் முன் அனைவரும் சமம்“என்று கனவுகாண்கிறோம்.இந்தக் கனவை இன்னும் ஒருபடி மேலே இலங்கையில் எடுத்துச் செல்லும் மகிந்தாவினது கட்சிக்கும் அதற்குப் பின்னாலுள்ள அதிகார வர்க்கத்துக்கும் ஒத்தூதுவதையே கருணா-டக்ளஸ் போன்றவர்கள்அரசோடு இணைந்து புதிய இலங்கையைப்படைப்பது என்று பூசிமெழுகிவிடப்பார்க்கின்றனர்.இந்தப் பிராடுகள் செய்யும் அரசியலானது இனிவருங்காலத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை அரசியல் ரீதியாகப் பலமற்ற மக்கள் கூட்டமாக்கும்.
 
 
இந்த அரச அமைப்புச் சொல்லும் „தேசிய ஒருமைப்பாடு,இன-மத ஒற்றுமை“ என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திச் சுரண்டி ஒடுக்கும் கருத்தியல்களே!நாமிதில் கவனமாக இருப்பது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையைத் துரிதப்படுத்தும்.
 
 
இலங்கையினது நீண்டகாலக் கனவானது தற்போது பொதுவரங்கத்தில் நிசமாகிறது!
 
 
 
அரசியல் ஆதாயங்கள் மக்களின் அழிவுகளில் எட்டப்படுவதாக மாறிப்போனது இன்று நேற்றல்ல, இலங்கையில்.எனினும், இத்தகைய சூழலில் இழப்புக்குள்ளாகும் அப்பாவி மக்கள்தம் வாழ்வும் சாவும்,நேர்மையற்ற முன்னாள் இயக்கங்களால்-இந்நாள் கட்சிகளால்,அந்நியத் தலையீடுகளால்- அரசியல் வாதிகளால் மீளரசியலாக(ஓட்டுக் கட்சி அரசியல்) மாற்றப்படும்போது நாம் பொறுமையிழக்கிறோம்.மாறிமாறிப் பதவிக்குவரும் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுப்பதற்குப் புதிய புதிய விளக்கங்களை பூர்ச்சுவாக்கள் தமது ஏவல் நாய்களான கட்சிகள் மூலம் தருகிறார்கள்.இலங்கையின் கட்சியாதிகத்துள் நேரடியாகவே பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்தி இலங்கையிலிருந்த பெயரளவிலான மனிதவிழுமியங்களையும் இல்லாதாக்கி, இந்தத் தேசத்தை மக்கள் விரோதத் தேசமாக்கியுள்ளார்கள்.
 
 
 
இங்கே, அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.
 
 
வர்க்க உணர்வு குறித்த புரிதல்:
 
 
 
இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் „தாம் சார்ந்த“ குட்டிமுதலாளிய இயக்கங்களை,மற்றும் தேசிய விடுதலை,தனிநாடு என நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.இல்லையென்றால் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் புலிகள் எடுக்கும் இப்போதைய புதிய வேடங்களையும் „தேசத்தினதும்-ஈழத்தினதும்“ பெயரால் நம்புவதற்கும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்குமா?இதை நோக்கித் தேசபக்தர்கள்(அன்றைய தமிழீழச் சஞ்சிகையினது இன்றைய பாத்திரம் இஃது) கட்டுரைகளை எழுதிப் புலிகளுக்கு மீளவும் ஒரு இருப்பு உணர்த்த வெளிக்கிடுகிறார்கள்.இதன் மூலம் அனைவரையும்-அனைத்துத் தரப்னையும் ஐக்கியப்படுத்தி „தேசிய விடுதலையை“ச் சாதிக்க முனைய வேடங்கள் தயாராகிறது.இங்கே,இவர்களுக்குப் பின்னால் பெரும் நிதியும் அதைக் குறித்த அரசியலும் இருக்கிறது.இவர்களது பின்னணி தமிழ் பேசும் மக்களது நலனைக் காயடிப்பதாகவே இருக்கும்.
 
 
இந்த நிலையில்,சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது உண்டா?
 
கிடையாது!
 
 
இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.
 
 
அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் பூர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே குட்டி முதலாளிய இயக்க-ஓட்டுக் கட்சி அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.இதனாற்றாம் இலங்கையில் கருணாவையும்-பிள்ளையானையும்கூட மக்கள் தமது மீட்பர்களாகக் கருதும் ஒரு இருண்ட அரசியல் விரிகிறது.இத்தகைய அரசியல் இப்போது முன்வைக்கும் தீர்வு-அரசியல் உரிமை என்பதெல்லாம் வெறும் ஏமாற்று முடிச்சுகளாக முன் தள்ளப்பட்டு மக்களை ஏமாற்றும் தந்திரங்களாக இவை இலங்கைச் சூழலில் நடந்தேறுகிறது.இதைச் சட்வாக்கத்துள் திணித்து வசதியாக மறைத்து நாட்களை நீடித்தபடி காலத்தை ஓட்ட முனைவதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவுகள்(இலங்கையில் சிறுபான்மை இனங்களை அடிமை கொள்ளல்-அரசியல் அநாதைகளாக்குதல்.) மெல்ல நிறைவேறுகின்றது.
 
 
என்றபோதும்,எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய இலங்கைத் தரகு முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.இங்கேதான் „சமஷ்டி,அரசியல் யாப்பு,குடியரசு,பாராளுமன்றம்,நீதிமன்றங்கள்-ஜனநாயகம்,மனிதவுரிமை“என்ற முகமூடிகளோடு தரகு முதலாளித்துவக் கட்சிகள் நம்மை ஏமாற்றி வருகின்றன.இன்றைய கட்சிகளே-இயக்கங்களே பெரும் உடமை வர்க்கமாக மாற்றப்பட்டு இலங்கை-இந்தியப் பூர்ச்சுவா நலன்களைப் பேணும் நம்பத்தகுந்த அடியாளக இருக்கிறது சிங்கள மற்றும் அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு.
 
 
பூர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப் பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகள்-இயக்கங்களின் வேலை.இன்றைக்குக்-டக்ளஸ் வகையறாக்கள் பேசும் கருத்துக்களும்,கட்டமுனையுங் கருத்தும்-கட்சி அரசியலும் இதன் பன்முகத்தன்மைகளைத் தொடர்ந்து கயமைத்தனத்துடன் விளக்கித் தமது எஜமானர்களுக்கு இசைவாகச் செயற்படுகிறது.இது நல்ல உதாரணம் நமக்கு.அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள், கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.
 
இலங்கையின் மகிந்த தலையிலான அரசு இலங்கை மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் பூர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.இங்கே, தொழிலாள வர்க்கத்தைப் பற்பல கூறுகளாகக் கூறுபோட்டுத் தமது வக்கிரமான அரசியலைக் காத்துவருகிறார்கள்.இனங்களுக்கிடையிலான பிரத்தியேகக் கூறுகளை(அதீத தேசியவாத முனைப்புகள், மொழிசார்ந்த,பண்பாடு சார்ந்த,மதம் சார்ந்த மதிப்பீடுகள்) முன் தள்ளி ஒருவரையொருவர் மோதவிட்டுத் தமது எஜமானர்களைக் காப்பதிலிருக்கும் கயமைத் தனத்தைப் புரிவது அவசியம்.
 
இலங்கை அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் அரச சட்ட நிர்ணயம்- வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்…)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை,மற்றும் புலம் பெயர் அரச சார்ப்பு எடுபிடிகளென இது நீண்டுகொண்டே போகிறது.இவைகளைக் கட்டுப்படுத்தித் தமது இலக்குக்குள் வீழ்த்துவதே அந்நியக் கடன் நிதிகளது உள்ளார்ந்த இலக்கு.இதை வெற்றிகொள்ளும் கருத்தியல் யுத்தம் இப்போதைக்கு இதன் பாதகங்களை அலசுவதில் மையமுறும்.இதை மறுத்துவிட்டு இலங்கையினது புரட்சிகர அரசியல் இலக்குக் குறித்து நகர முடியாதென்பது எனது தீர்மானகரமான நம்பிக்கை.
 
ஏனெனில், அந்நிய நிதிக்கடன்கள் யாவும் தமக்குச் சார்பான குழுக்களைப் „பிரேதச நலன்,சாதிய நலன்,பெண்ணடிமை விலத்தல்-விடுதலை,ஊடகவியலாளர்களைக் காக்கும் அமைப்பு,தலித்துவ முன்னேற்றம்-உரிமை வென்றெடுத்தல்“ என வகைப்படுத்தி இயங்க அனுமதித்தே இலங்கைப் புரட்சிக்கு ஆப்பு வைக்கிறது.மேற் சொன்ன முரண்பாடுகளை ஒரு புரட்சிகரக் கட்சி தனக்குள் உள்வாங்கித் தனது தலைமையில் இதை வழிநடாத்தும்போதுதாம் அந்நிய நலன்களைத் தடுத்துவிடமுடியும்.இல்லையேல் இத்தகைய அவசியமான போராட்டங்களுக்கூடாக அவை நம்மை மொட்டை அடிக்கும் சாத்தியமே நிலவும்-இப்போது அதுவே உண்மையாகவும் இருக்கிறது.இது வர்க்க உணர்வைச் சிதைத்தே மேலும் அரசியல் அமுக்கத்தைக் கொண்டியங்குகின்றன.இது புரட்சிகரச் சூழலை மிக நேர்த்தியாக மறுப்பதில் நியாயத்தை உரைக்கும்-நண்பர் சுகன் இலங்கையின் தேசிய கீதத்தை மெட்டுக்கட்டிப் படிப்பது போன்றென்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.
 
இறுதியாக…
 
இந்த இலங்கை அரச அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது என்பதை வன்னிக்குள் மூன்று இலட்சம் மக்களை நாயிலும் கேவலமாகக் கட்டிவைத்து அடிமைப்படுத்தும் சிங்களவெறித் தனமிக்க இலங்கை அரசு நிரூபித்தே வருகிறது.இதைத்தாம்“நாங்கள் புதிய இலங்கையைக் கட்டி அமைக்கிறோம் மகிந்தா தலைமையில்“எனக் கருணாவென்ற பொறுக்கி பல முறைகள் ஓலமிடுகிறான்.இதையே டக்ளஸ் இன்னும் சதி மிக்க அரசியல் மொழியில்“தமிழ்பேசும் மக்களது உரிமைகளை பெரிய கட்சிகளோடு பகைக்காமல் அரசியல் செய்து“நம்மையும் காத்து,நமது மக்களையும் காப்பது“என்று தமிழர்கள் சார்பாக தனது இருப்பை-வர்க்கச் சார்பை மிகத் திட்டமிட்டபடி மறைக்கின்றார்.இது,அரசை நேரடியாக ஆதரிக்கும் கருணாவைவிட மிகக் கெடுதியானவொரு சூழ்ச்சிமிக்க போக்கு.நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள்-அவர்களது கடன் நிதிகள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதற்கு, இத்தகைய அரசியலில் பல முரண்பாடான விளக்கங்களை இத்தகைய மக்கள்விரோதிகள் சதா எமக்குள் விதைக்கிறார்கள்.
 
 
தமிழர்களுக்குக் கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் இன்றைய அந்நியத் தேசங்களதும், இலங்கையில் மகிந்தா அரசினதும் பதிலாகும்!இந்த அந்நிய மயப்படுத்தப்பட்ட இலங்கை அரச அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் ஓடுகாலி அரசியல்வாதியன் வேலை? இவர்களை ஒட்ட வேரறுக்க வேண்டுமானால் முதலில் அந்நியக் கடன் நிதிகளையும் அவர்களது அரசியல் இலக்ககளையும் தோற்கடிக்கும் அரசியலைப் புரட்சிகரக் கட்சிகளென்பவை முன்னெடுத்தாக வேண்டும்.ஆனால்,புரட்சிகரக் கட்சிதாம் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.எனவே,தனிநபர்கள் தமது எல்லைக்குட்பட்ட கதையாடல்களாக இவ்வுண்மைகளைக் குறுக்கிச் செல்வதும்தாம் இன்றைய துர்ப்பாக்கியம்.இதனால் பிரபாகரனை நம்பிய தமிழர்கள் டக்ளஸ்-கருணா,பிள்ளையானையும் நம்புவது மட்டுமல்ல அவர்களால் முன் தள்ளப்படும் அரசியலையும் நம்பிக்கொள்வது வருங்காலத்தில் நடைபெறும்.இதுதாம் அந்நியக் கடன்களதும் இலக்கு.அவர்களுக்கு விரும்பிய இலங்கை இதனூடாகத் தகவமைக்கப்பட்டும் விடும்.இந்த அபாயம் அவசியமாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு புரட்சிகரமாகப் போராடுவது அவசியமானது.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.09