இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:

இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:


-சில குறிப்புகள்.

“சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறது!”

நேற்று 26.01.2010 நடந்தேறிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா இராஜபக்ஷ 58 வீத இலங்கைச் சிங்கள மக்களதும் சில சிறுபான்மை மக்களினங்களின் ஆதரவோடு மீளவும் ஜனாதிபதியாகின்றார்.பெரும்பாலும், மகிந்தா இன்றைய இலங்கைச் சூழலுள் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவ்வண்ணம், மகிந்தா இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட “மகிந்தா சிந்தனைக்கூட்டு” யுத்தக்கிரிமினல் சரத் பொன்சேகா 40 வீத இலங்கை மக்களினங்களின் ஆதரவு பெற்று, இத் தேர்தலில் தோற்றிருக்கிறார்.எனினும்,அவர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதியாகிறார்(இது,மேற்குலகத்துக்கு மிகச் சாத்தியமான அரசியலை இனி முன்னெடுக்கும்.அஃது,மகிந்தா தலைமையிற்கூட நிகழும்).


தோல்வி சரத் பொன்சேகாவுக்கு என்றபோதும்,அஃது,குறிப்பாக மேற்குலக மூலதனத்துக்கான தோல்வியாகவும்-வெற்றியாகவும் நீடித்திருக்கும்-இருக்கின்றது.

இந்த ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா பெரும்பான்மை மக்களது ஜனாதிபதியாகவும்,சரத் பொன்சேகா தோற்றாலும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் ஜனாதிபதியாகவே “இப்போது”பிளவுபட்ட சமூக உளவியலாக உருவாகியுள்ள அரசியல் போக்கில் புரிகிறது.இது,சிறுபான்மை மக்களது”ஜனாதிபதி”சரத் பொன்சேகாவென்றும்,பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாக மகிந்தாவும் உள்ளதாக ஒரு வகைச் சமூக உளவியல் தோன்ற வாய்ப்பளித்திருக்கிறது.

இந்த உளவியலின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் அரசியல் நெருக்கடியாக எழும் என்பதே எனது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி என்னை இது அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில், மேலும், வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.

இதைச் சற்றுக் கீழே(…)விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், பொன்சேகா சிறுபான்மை இனங்களது ஜனாதிபதியாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்குநிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்”தமீழம்”சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: இத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை ஆளும் மகிந்தா குடும்பத்துக்குப் “புதிய உத்வேகமாக” வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்துமுடிந்த தேர்தலில் சிறுபான்மை இனங்களது தெரிவுகொண்டு,இலங்கையினது “ஒரே” தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூகவாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மாவட்டங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,ராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்றுமண்ணில் சிவில்சமூக நிறுவனங்கள் மீளவும் தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசரகாலசட்டம் தொடரும் இக்கட்டு இதன் போக்கில் மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்”என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி”செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அதிகமான தருணத்தில் பாதகமான தெரிவுகளோடு அரசியல் செய்கின்றனர் என்றும்,இதுள் முக்கியமாகத் தமிழர்களே செயற்படுவதாகவும் அடக்குமுறையாளர்களது நேரடியான அத்துமீறிய வொடுக்குமுறையால், இராணுவவாதம் மயப்பட்ட தமிழ்மக்களது வாழ்வு கருகிப் போகும்.

இஃது(இனஞ்சார்) அனுமதிக்கும் “மகா”பாதகங்கள்:

# தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

# சிவில் சமூக உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

# தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

# தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.

# பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்க ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

#பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.
இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு, தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.இதைச் செய்யவே மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பொன்சேகாவுக்கு வெற்றியயைத் தமிழ் பிரதேசங்களில் குவிக்க வைத்தது.இதன்வழி இனவாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்பட்டு, இலங்கையின் சுயவளர்ச்சி முடக்கப்படும்.

மகிந்தா குடும்பம் இதையெல்லாம் தவிர்த்து நேர்மையான அரசியலைக் கைக்கொண்டு, இலங்கையில் இராணுவவாதம் ஒடுங்கிய ஜனநாயகச் சூழலை இனி ஏற்படுத்துமென எவரும் நம்பும் அரசியல் நடக்கமுடியாது.

இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,”தமிழ் தேசியம்”உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

இறுதியாக: மகிந்தாவின் வெற்றி யானது, தொடர்ந்தும் இலங்கையில் இனவாத அரசியலும்,ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனங்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்போது தமிழ் பேசும் மக்களது அரசியல் இருப்புப் பலமற்றது என்று நிரூபித்திருக்கிறது.தமிழ்பேசும் மக்களது ஆதரவின்றியே ஆட்சியில் அமர விரும்பும் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலும்-சிறுபான்மையின ஒதுக்குதலும் இருந்தாற்போதுமானதென மீளவும் நிரூபித்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் எந்தக் கருணாவும்-டக்ளசும் மகிந்தாவுக்கு அவசியமில்லை.சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் இனம்வாதம் ஒன்றே போதும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபாயமான அரசியலைப் புரிந்தபோது அச்சம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்வாக…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.01.2010

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்…

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்…

டந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும்,பொருளாதார அறிஞரும்,உலக ஏகாதிபத்தியத்துக் எதிரான விமர்சகருமான யூர்க் கூப்ஸ்சிமித்தை(Prof.Dr.Juerg Huffschmid) இழந்தாம்.பேராசியர் கூப்சிமித் மிக முக்கியமான கோட்பாட்டாளர். ஜேர்மனியப் பாசிசத்துக்கு எதிரான போரில் எழுபதுகளில் ஜேர்மனிய மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.இதற்காக ஜேர்மனிய பெருநகரான பிறீமன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்துறையுள் இணைத்துக் கற்பித்திருக்கிறார்.இவரது இழப்புக்குப் பின்பாக நாம் இப்போது, இழந்திருப்பது பிரான்சினது இடதுசாரியமுகாமின் செயல் வீரனும், அதிமுக்கியமான கோட்பாட்டாளரும் தத்துவவாதியுமான டானியல் பென்சாய்(franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd ). இரண்டாவது தடவையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டக்களம் தனது சிந்தனையாளர்களை,வழிகாட்டிகளை மெல்ல இழந்திருக்கிறது.


( Prof:Dr.Juerg Huffschmid)

கடந்த வருடம் டிசம்பர் 5.2009 அன்று ஜேர்மனிய மார்க்சியர், பேராசிரியர் யூர்க் கூப்சிமித் நோய்வாய்க்குட்பட்டுத் தனது 69வது வயதில் மரித்தார்.இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.80 களில் மார்க்சிய ஆய்வு வட்டத்துக்கு(In den 80er Jahren war er Mitarbeiter des Instituts für Marxistische Studien und Forschungen(IMSF))இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார்.பல விதமான போராட்டப்பாத்திரத்தை உலகமயப் பகாசூர நிதிநிறுவனங்களுக்கெதிராகத் தொடர்ந்து நடாத்தியவர்.இவரது ஆய்வுள்,சிந்தனைகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் புதிய போராட்ட வியூகங்களைக் கட்டியமைத்தது.இவரது இழப்புக்குப் பின் இப்போது பிரஞ்சிய மரபு மார்க்சியர் டானியல் பென்சாய் இவ்வலகில் தனது போராட்டத்துக்கு முற்றுப் புள்ளிவைத்து, அதை உலகு தழுவியமுறையில் கையளித்துச் சென்றுள்ளார்.

12.ஜனவரி 2010.அன்று, பிரான்ஸ் இடதுசாரியவட்டத்து தத்துவவாதியம்,கோட்பாட்டாளரும் போராளியுமான டானியல் பென்சாய் இவ்வுலகில் தனது போராட்டத்தையும்,வழிகாட்டலையும்விட்டுச் சென்றிருக்கிறார்.ஐரோப்பியச் சூழலுள் 70களில், முதலாளித்துவப் பாசிச ஒடுக்குமுறைக்கெதிரான போராளிகளில் மிக முக்கியமான பேராற்றல்மிக்கவர்கள் பிரான்சிலும்,இத்தாலியிலும் இருவர்.அவர்களுள் ஒருவர் இந்தப் பிரஞ்சிய மார்க்சியரடிக்கல் டானியல் பென்சாய்.மற்றவர்,இத்தாலிய நவ மார்க்சியர் அன்ரோனியோ நெக்றி(Antonio Negri).

(Antonio Negri)

அன்ரோனியோ நெக்கிறி இன்று தனது கடந்தகால மார்க்சியப் புரிதலிருந்து-புரட்சிகர கட்சியினது போராட்ட,யுத்த தந்திரோபாயத்திலிருந்து வேறொரு பாதையில் இன்றைய பல்தேசியப் பொருளாதார நகர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.இவரது புதிய நூல்களான Commonwealth, Goodbye Mr.Socialism போன்றவை மிகப் பெரிய சர்ச்யை இடதுசாரிய வட்டத்துக்குள் செய்தபடியிருக்கிறது.போராட்டப்பாதையில் அதன் செல்நெறிகுறித்து நிறைய மாற்றங்களைக் கோருபவராக இருக்கின்றார் நெக்றி(எழுபதுகளில் இவரது ஓப்பறாய் (Operaismus)அமைப்பு நடவடிக்கையானது மிகப் பெரிய இரத்தக்களிரியை இத்தாலியில் தோற்வித்தது.இந்தப் போராட்டமுறையானது அவருக்கு முப்பதாண்டுச் சிறையாக அமைந்து தோல்வியிலும் முடிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்).

தற்போதைய டானியல் பென்சாயினது இழப்பு, உண்மையான போராளியினது இடைவிடாத பல்முனைப் போராட்டத்துக்கு உதாரணமாக அமைந்துபோகிறது.சதா போரிட்டுக்கொண்டு பிரான்சினது வீதிகளில் மக்களது போராளியாக-மக்களைத்திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தைப் பாசிச அரசை எதிர்த்துப் போராடிய டானியல் பென்சாய், ஒரு அற்புதமான சிந்தனையாளன்.இவரது நூல்கள் ஜேர்மனிய மொழியில் முழுமையாக மொழியாக்கப்படவில்லை.குறிப்பட்ட தத்துவார்த்தத் தெரிவுகளின் ஜனநாயகம் என்றால் என்ன?மற்றும் சுயதீனம் என்றவை மிக முக்கியமான தத்துவார்த்தத் தேடலை உள்ளடக்கியது.சதா மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தைச் செய்த இந்த மரபு மார்க்சியப் போராளி, கோட்பாட்டுரீதியாவும் மிக முக்கியமானவர்.இடதுசாரிய வட்டத்துள் நாளாந்தம் விவாதிக்கப்படும் தத்துவார்த்தப் போக்குள் அன்ரோனியோ நெக்றி,டானியல் பென்சாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது.

90களில் டானியல் பென்சாய்க்கும் அநன்ரோனியோ நெக்கிறிக்குமான அரசியல் நெருக்கும், நெக்கிறியின் பிரஞ்சியப் புகலிட வாழ்வில் ஆரம்பித்துக்கொண்டது. லூசியோ அல் தூசரது கொள்கைகளுக்கும் இருப்பியல்சார் கோட்பாட்டுக்களுக்கும் நாளாந்தம் டானியல் பென்சாய் பெரும் சர்ச்சைக்குரியவராகவும் அவரது போராட்டச் செல்நெறி இடதுசாரியவட்டத்துக்கு நாளாந்தம் பாரிய அடிபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

( franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaid )

என்றுபோதும்,மிகப் பெரும் முதலாளித்து எதிர்பாளரான இந்தத் தத்துவவாதி, உலகத்தின் முன் நமக்குப் பல உதாரணங்களைவிட்டுச் சென்றிருக்கிறார்.அல்ஜீரிய யூதப் பெற்றோருக்கு 1946 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூலூசில் பிறந்த டானியல் பென்சாய், பிரஞ்சியக் கம்யூனிசக் கட்சியில் இருந்து வெளியேறிவர்.பிரஞ்சிக் கம்யூனிச வாதிகளது பாராளுமன்றச் சகதியையும்,எதிர்ப்புரட்சி அரசியலையும் நிராகரித்து வெளியேறிய உண்மையான புரட்சிகாரன். இறுதிவரையும் புரட்சியைக் காட்டிக்கொடாத ஒரு பெரும் பாட்டாளிய வர்க்கத் தோழன்.எதிர்ப்புரட்சியை நிராகரித்து, புரட்சிகர இளைஞர் அணியை(Jeunesse communiste revolutionnaire-Revolutionary Communist Youth) 1966 இல் தோற்றுவித்து, உலகு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்போராட்டத்தில் பங்களித்த இந்த மார்க்சியரது இழப்பு மிக அதிகமான இழப்பாக இருக்கிறது.

இந்தவுலகத்தை மாற்றுவதிலும், முதலாளித்துவப் பயங்கரவாதப் பாசிசத்தை இல்லாதாக்குவதிலும் நேரடியாகக் களத்தில் நின்ற போராளியாக இருக்கும் அற்புதமான செயற்பாட்டாளர்கள் இருவரை, இப்போது ஐரோப்பிய இடதுசாரியவட்டமும் உலகமும் இழந்துபோனது எதிர்ப்பு அரசியலுக்கான நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.

பரந்துமட்ட மக்களது அரசியல் பொருளாதார வாழ்வுக்கான போராட்டத்தில் சலியாது போராடிககோண்டு, மாற்றுக்காகச் செயற்பாட்டில் இருந்த சிந்தனையாளர்கள்-போராளிகளில் இருவரை இழந்த இவ்வாண்டு கடினமான பணியை ஏகாதிபத்திய-பாசிச எதிப்புப் போராட்டக் களத்துக்குத் தந்திருக்கிறது.இறுதிவரை சளையாது போராடுவதும்,ஆய்வதும்-அறிவதும்,அதுசார்ந்து புதிய வியூகங்களை அமைப்பதையும் நாளாந்த வாழ்வாக்கிய இவர்களது வழியில் பயணிக்கும் ஒவ்வொரு பாட்டாளியவர்க்கச் சிந்தனையாளருக்கும் நாம் தலைசாய்கிறோமோ இல்லையோ, இவர்களது வழிகளையாவது புரிந்துகொண்டு உரையாடல்களையும்,போராட்டத்தையும் முன்னெடுத்தாகவேண்டும்.ஈடு செய்யமுடியாத சிந்தனையாளர்கள் இருவரது இழப்பும் நமக்குள் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது.

ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்
ஜேர்மனி

18.01.2010

பெரியாரது பாதையில் பாட்டுக்கட்டிப்பாடுகிறான் மயூரன்.

“அம்மா பகவான்,சாயிபாபா,கல்கி-கடவுள்,சாமி”,அவதாரங்கள்(…) அனைத்தும் செத்துமடியும் நலிந்த சமுதாயத்தின் வடிகாலாகப்பட,பரந்தபட்ட மனிதர்கள் இவர்தம் கால்களில் செருப்புகளாகக் கிடக்கின்றனர்.மக்களது வலியைத் தமது இருப்பின் படிக்கற்களாக்கிக் கோபுரத்தில் கலசமாகத் தம்மைக் குவிக்கும் இவர்களது கலை?…

பேசப்பட வேண்டியது!கூடவே,தடுத்தும் நிறுத்தப்படவேண்டியது.சந்தியில்வைத்துச் செருப்பால் அடித்து வெருட்டப்படவேண்டிய கயவர்தாம் இவர்கள்!

“அவதாரங்கள்”

//எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?//

நாடிபிடித்து இவர்தம் நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்துவது மிக அவசியமானது.மயூரன், அற்புதமாக எழுந்து,இவர்களைக் குறிவைத்துக் காறி உமிழ்கிறான்.கவிதைகொண்டு இக் கயமைமிகு மனிதர்களைக் கேள்விக்குட்படுத்துகிறான்.இது,மானுடர்தம் விடுதலைக்கு அடிப்படையான எதிர்க் கலை முயற்சி.

“கலை”.

கலை என்பது என்ன?

இக் கேள்வியின் தொடர்ச்சியுள் பற்பல தத்துவங்கள் மனிதவுணர்வுக்குள் அநுபவப்பட்டுள்ளன.கலையினது உயிரே கலைக்காகவென்றும் அது,மனிதவாழ்வுக்குச் சேவிக்க முடியாதென்றும் பற்பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தேறிவிட்டன.டறாக்கோனியிச(Draconian constitution)தீர்ப்புகள்,மக்கள் மடியிலிருந்து கலையைத் தட்டிப்பறித்துக்கொண்டது.இந்தக் கலைவடிவமானது மனிதப் படைப்பாற்றல் அனைத்தையுமே உள்ளடக்கிய நிகழ்த்துகை என்பது எனது புரிதல்.

இசை,நடனம்,நாடகம்,இலக்கியம்,சிற்பம் என்பதையெல்லாம் உள்ளடக்கிய நுண்கலையானது, இன்று பன்முகத் தன்மையில்வைத்து மனித ஆற்றலுடன் பேசப்படவேண்டியிருக்கிறது.கலை, மக்களுக்கானது.மக்களிடமிருந்து உருவாகுவது.ஆன்மீகங்கூட ஒரு வகையில் மனிதப்படைப்புத்தாம்.அங்கே,படைப்பாற்றலே ஆத்மீகவுறவைத்தீர்மானித்தது.இறையென்பது மனித ஆற்றலின் அற்புதமான வெளிப்பாடு.படைப்பினது உச்சத்தில் மனிதர்கள் தம்மை இறை நிலைக்கு உயர்த்துவதே இறையுட் கோட்பாடாகி இருக்கவேண்டும்!என்றபோதும்,கடவுளைவைத்துக் காசுகாணும் இழிமைத்தனத்துள் மனித உறவுகள் கீழ்மைப்பட படைப்பாற்றலைத் திருடியது ஆதிக்கம்-அதிகாரம்.அன்றைய,கிரேகத்தில் டறாக்கோனியினது அமைப்பில் நீதீயாகவும் இவை நிலைபெற்றன.

இன்று,மக்களினங்கள் தமது படைப்பாற்றலால் பிளவுப்படவில்லை.அதைச் சந்தைப்படுத்துவதில்,நுகர்வுக்குட்படுத்துவதில் பிரிவுகள்-பிளவுகள் ஏற்படுகிறது.அங்கே,ஆதிக்கம்,அதிகாரம் கலையின்மீது பண்பாட்டு மேலாதிக்கத்தை வர்த்தகக்கண்ணோட்டத்துள்ளும்,இனஞ்சார் மேன்மையிலும் உருவாக்கிக்கொண்டதன் பின்பு, இறைநிலை கடவுளாக மாற்றப்பட்டு இன்றுவரையும் இந்த அமைப்பின் விளிம்பில் இருப்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.அதன் துணைகொண்டு, உளவியல்ரீதியாகவும்,பௌதிகரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.இது,முற்றுமுழுதாக மனித ஆற்றலை அக ரீதியாகவும்,புற ரீதியாகவும் சுரண்டியபடி மேட்டிமைக் குழுவிடம் ஒரு ஆயுதமாக அவர்களுக்குச் சேவை செய்கிறது!

சமூகத்தின் மீது கணிசமான தாக்கத்தைச் செய்யும் இறைசார் வாழ்வுநிலை,மக்களின் பெரும்பகுதியை மிக மோசமாக ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டத்தின் திமிர்த்தனமான ஒடுக்குமுறையாகவும்,அதிகார நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.இது,மனித நடாத்தையின் அனைத்துப் பரிணாமத்தையும்,கருத்தியல் தளத்தில் காவுகொண்டபடி மனித அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறது.

“இது மதம்!”

மதம் மக்களுக்குப் போதை.தூக்கத்திலாழ்த்திக் கட்டிய துணியையும் உருவிவிட்டு மனிதத்தை அம்மணமாக்குவது.

Ammaa Bhagavan Song Tamil from mauran on Vimeo.

அற்புதங்களையும்,அவதாரங்களையும் கட்டித்தகவமைக்கும் ஒரு நிலையாகப் படைப்பாற்றலிதனால் சீரழிந்துபோகிறது.மனிதர்கள் தம்மை ஒடுக்கும் அதிகார நிறுவனத்திடம் தமது படைப்பாற்றலைப் பறிகொடுத்து, அதனால் சுரண்டப்பட அனுமதித்துள்ளார்கள்.இது,மேலும் மனிதர்களைக் குறுக்கி அகரீதியாக ஒடுக்குவதில் இந்தக் கடவுள் நிலை மிகவீரியமான கருத்தியல் ஒடுக்குமுறை ஜந்திரமாக மதங்களைப் படைத்துக்கொண்டது.இங்கே,மகத்தான மனிதத் தேடல், அதே மனிதக் குழாத்தை வேட்டையாடுவதில் மிகப்பெரிய ஆதிக்கச் சக்தியாக-அதிகார பீடமாக நம்முன் நிலைபெற்றதன்தொடரில் அது,பொருளாதார அடிக்கட்டமானத்தின் மேல்மட்டப் பாதுகாப்புக் கவசமாக-அமைப்பாகிச் சீரழிந்து மக்களது ஆத்மீகத் தேவைக்குக் குறுக்கே நிற்கிறது.இது,பெரிதும் நோவுடைய வலி.

இந்தவலியைச் சொல்வதில்,அதே கலைத்துவப் படைப்பாற்றலுடன் மயூரன் சமூகத்தின் விளிம்பில் நிற்பவர்களோடு தன்னைப் பிணைத்து, கயமைமிகு ஆதிக்கச் சக்திகளிடம்-கடவுள் அவதாரக் கள்வரிடம் பலியாகும் தன்வர்க்க மனிதருக்காகக் குரல் கொடுப்பதில் கலகக்காரனாகிறான்.

* Is this what “God-Kalki-Samy” purposed for me and for the rest of mankind?,

* Where can I find help to cope with my problems?,

* Is there any hope that we will ever see pease on the earth?.

இத்தகைய கேள்விகள் இவ்புவிப்பரப்பெங்கும் வாழும் மனிதர்களுக்குப் பொதுவாகப் பொருந்தியுள்ளது.

இதற்குப் பதில் பைபிளில்,பகவத் கீதையில்,குரானில் இருப்பதாகவும் இத்தகைய”அவதாரங்கள்”சொல்லக் கேட்டோம்.இஃது, பல்லாயிரம் வருடங்களாகத் தொடரும் கதை.இதை எதிர்த்த புத்தனும் கடவுளானான் இவர்களால்!என்ன கொடுமை இது!

பெரியார் வந்தார்.பேரடி கொடுத்தார்.என்றபோதும்,மதம்மீதான மடமை மீளவும் தொடர்கதையாக…

ஏன்?

சீர்திருத்தம் சமூகத்தை அடியோடு மாற்றுவதில்லை.விடை எளிமையானது.இந்தச் சமுதாய அமைப்பு முழுமையாக மாறாதிருக்கும்வரை இது தொடர்கதை.மக்கள் இவர்களிடம் பலியாவதும் தொடர்கதையே!

என்ன செய்யலாம்?

யுத்தம்,பசி,பட்டுணி,வறுமையின் கொடூரம் மனிதவாழ்வை அர்த்தமில்லாதாக்கிவிட்டுள்ளது.அனைத்தினது பெயராலும் மனித அழிவுகள் பல வடிவங்களில் பரந்துபட்ட மக்களை அண்மிக்கும்போது, அவர்கள் சோர்ந்துபோய் ஆன்மா ஒடுங்கிய நிலையில் இறுதியாகச் செல்லும் இடம் கடவுள் என்ற கருத்தியல் எல்லையாக இருக்கும்.அந்த எல்லையில், பதுங்கிக் கிடக்கும் கொடிய மனிதர்கள்,கல்கியாகச் சாயிபாபாக்களாக,ஏசுவுக்கு-கர்த்தருக்கு,அல்லாவுக்கு தூதுர்களாக,அவதாரங்களாகத் தம்மைக் காட்டியடி மக்களது வாழ்வையும் அவர்தம் உடலையும்-உள்ளத்தையும் சுரண்டிக் கொழுக்கின்றனர்.இத்தகைய திருடர்களை இந்தச் சமூகத்தின் பொருளாதார அமைப்புகள்முதல் அதிகார-ஆளும் வர்க்கம்வரை நிதியளித்துக் கட்டிக் காக்கின்றது.

மீளவும், அதே கேள்வி:”என்ன” செய்யலாம்?

இக் கேள்விக்கு,அவர்களை அம்பலப்படுத்தியாகவேண்டும் என்பதே விடை!

ஏன்?,

இச் சமுதாய அமைப்பு புரட்சிகரமாக மாற்றப்பட வேண்டும்.
இதைவிட வேறு வழி இல்லை!
அப்படி புரட்சி நீங்கிய “மாற்றுவழி” இருக்கவும் முடியாதாகிறது.

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தக் கொடிய கடவுள் வியாபாரிகள்,மக்களது அடிமைத்தனத்தை முழுமையாக்கித் தமது எஜமானர்களுக்கு ஏற்ற கையாலாகாத மக்கள் குழாத்தை இப்புவியில் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.இதற்காகவே, அவர்களுக்குக் கோடிக்கணக்கான செல்வத்தையும்,”மேன்மைப்பட்ட” இனங்களது உறுப்பினர்களையும் வழங்கி,இத்தகைய கயமைவாதிகளை மக்களிடம் முன்தள்ளி,மக்களுக்கு நம்பிக்கைய இவர்கள்பால் வருவதற்கான ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தை தனியார்மயப்பட்ட ஊடகங்கள்-குறிப்பாகத் தொலைக்காட்சிகள்-செய்து முடிக்கும்போது,அவர்களது தொலைக்காட்சிக்கான வரும்படியும் இரடிப்பாகிறது.இந்தச் சூத்திரம் மக்கள் நலமென எமக்குச் சொல்லப்படுகிறது.பொதுத்தளத்தில் அதுவே,பதிலாகவும் உரையாடலாகிறது.

பிறகென்ன?

ஆகா!அற்புதமான சாமி!”அம்மா-அப்பா” சாமிகள் அகிலம் முதற்கொண்டு வணங்கப்படுவர்.

“அதோ,வெள்ளைக்காரன்-வெள்ளைக்காரி கூடச் சாமியை வணங்குகிறார்களே!,அப்போ சாமி உண்மையானவர்தான்.பொய்யர்களை வெள்ளைக்காரர் நம்ப மாட்டார்கள்.”

அம்மாடியோ,சரியாப் போச்சு.

இதுதானே இவர்கட்கு அவசியமானது?

அதைச் செய்யவே, “நிதி,வெள்ளையர்கள்,வேந்தர்கள்,நட்ஷத்திரங்கள்” என்பது-என்பவர்கள் இத்தகைய கயவர்களிடம்(அம்மா பகவான் வகையறா) வருவிக்கப்படுபவர்கள்-தருவிக்கப்படுபவை.

“அப்பாவிகளே,அரவணைப்பற்றவர்களே,சமூகத்தின் விளிம்பில் உயிர்துறப்பவர்களே,இதோ!உங்கள் விழிகள் முன் கயவர்களது அணிவகுப்பு.அவர்களைக்கொண்டு,உங்களது மிச்சசொச்ச கோவணத்தையும் உருவப்போகிறார்கள்,கவனம்!!!” இப்படிச் சொல்வது, நம்மால் முடியும்.ஆனால்,கலையுணர்வு,அதன் சூட்சுமம் புரிந்தவர்கள் தம்பி மயூரன்பாணியில் பாடியுய்வினை செய்வர்.

அழகான குரல்,அற்புதமான வரிகள்,செவியைக் குழையும் மெட்டு.மக்களை ஒடுக்கும் அதிகார மையத்தை இசையெனுஞ் சாட்டைகொண்டு சொடுக்குவது அற்புதமான போராட்டவடிவம்.அதுள்,காட்சியுகத்தின் உச்சம் மனிதத் தொடுநிலையைக் காவுகொடுக்கப்பட்ட உயிர்கொண்டு சொல்லுதல் இன்னுஞ் சிறப்பு!மயூரனின் சமூக உணர்வு இங்கே உச்சமான சமுதாய ஆவேசமாக இருக்கிறது.இது, ஒரு மனிதத்தொடு நிலை.தன்வர்க்கச் சுயவுணர்வு.கலைவடிவத்தின் யதார்த்தவாதம் இதுவே.குறிப்பட்ட சூழலை,குறிப்பட்ட வடிவத்தில்,குறிப்பட்ட தெரிவில் சொல்வது சோஷலிச யதார்த்த வாதம் என்பர்.இது,மயூரனிடம் சிறப்பாக வெளிப்படுகிறது.கண்டதையும்,கேட்டதையும் வாந்தியெடுக்கும் இயற்கைவாதம் அடியோடு மயூரனிடம் இல்லாது போகிறது.இதுவே,மயூரனின் பாடலின் சிறப்பு.

நாற்பது பக்கத்தில் கட்டுரை எழுதும் நமது செயற்பாட்டை, நாலே வரிகளில் அழிகாகச் சொல்லிக் கயவர்களைத் தோலுரிக்கும் மயூரன் விளிம்பு மக்களோடு நின்று, தனது கடமை எதுவெனவுரைக்கின்றான்.வாழ்வென்பது சதா போரிடுதலாக மாறியுள்ளபோது,நானோ இல்லை நீயோ தூங்கிக்கிடந்தால் எமது தலைகளைக் கொய்துவிடுவர்.நாம் காணும் ஒவ்வொரு திசையும் இந்தக் கொடிய அமைப்பு மனிதப்பாடைபாற்றலை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியபடி, அப்படைப்பாளியையே வேட்டையாடும்போது,பாத்திருப்போர் பாவிகளே-இவர்கள் வாளாதிருக்கும்போது,இவர்கட்குச் செவி எதிர்க்கு-விழி எதிர்க்கு?

கலை.

அற்புதமான மனித வெளிப்பாடு.உழைப்பின் மறு விளைவு.ஓய்வின் சுவை சொல்லும் சுக இராகம் இது!களைப்பின் வலிதொலைக்கும் ஒளடதம் இது!-இல்லை?

ஆற்றலுடைய மனிதமுயற்சி!பற்பல பரிணாமத்துள் பதிவாகிய இந்த மனித அநுபவம்,மகத்தான தேவையின்பால் மனிதர்கள் தமக்காகவே தமது உழைப்பால் உருவாக்கியது.இது,இப்புவிப்பரப்புள் அனைத்துமாகி அமரத்துவமாக மனிதர்களற்ற இப் புவிப்பரப்பில் நாளையும் இருக்கும்.ஆனால்,மனிதர்களால் கண்டடையப்பட்ட ஆன்மீக ஆயுதமான அதே மனித அகம் இப்போதும் நோவைத் தாங்கமுடியாது இன்னொரு சிறையைத் தனது படைப்பின்வழி உருவாக்கிக்கொண்டுள்ளது.அந்தச் சிறையைக் காவல் காப்பவர் பட்டுடனும்,பணத்துடனும் தமது கால்களில் இயற்கையின் அழகான கொடையாகி மலர்களையே போட்டுக் கசக்கி எடுக்கும்போது,இது திமிர்த்தனத்தின் அதீத வெளிப்பாடாகவே நான் காண்கிறேன். பனுவலில் சொல்லமுடியாத சோகத்தை காட்சிகொண்டு,இந்தப் பாடலுள் புகுத்திய மயூரனின் நோக்கு சிறப்பானதே.

நாம் அம்மா பகவான்களை-சாயி பாபாகளை,ஏசு தூதர்களை அநுமதிக்கலாமா?

இவர்களை அம்பலப்படுத்தவேண்டாமா?

மயூன் சொல்கிறார்-பாடுகிறார்,மெட்டமைத்துப் போரைத் தொடர்கிறார்!

கேட்பவர்கள் சிந்திக்கத்தக்க காட்சியை வழிமுன் நிறுத்தும் அவரது பாடற்றொகுப்பு உண்மையிலேயே மிகப்பெரும் போராட்டக்கலை ஆயுதமாகவும் நம் முன் இயங்குகிறது.

நம்பிக்கை!

வாழ்வின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தோண்டித் துருவி அறிதலே நம்பிக்கை.இந்த நம்பிக்கை, தொடரும்போது அதிகாரமும்,ஆதிக்கமும் என்னென்ன திசையில் நம்மை நெருங்குகின்றதென்று புரிந்துவிடும்.

எம்மைக் காப்பதற்கான ஆயுதம், நமது எதிர்ப்பு நடவடிக்கை-நம்மைப் பாதுகாக்கும் உணர்வுதாம்.இதுவே,சமூக மாற்றத்தின் உந்து சக்தி.

இதோ,இந்த வழியில் “அம்மா பகவான்”என்ற தடைக் கற்பாறை கிடக்கின்றது.மயூரன் சொல்கிறான்:

//குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?//

அற்புதமான வரிகள்கொண்டு,நம்மை ஏமாற்றுபவர்களை,நமது மக்களது குரல்வளையில் தமது வலுக்கரத்தின் நகம் பதிப்பவர்களை துளைத்தெறியும் மயூரன்வழி நாம் நடக்கின்ற ஒரு பொழுதில், நாமெல்லோருமே ஒரு பெரியார் இராமசாமிதாம்.

இங்கே,எந்த டாறாக்கோனிசத்துக்கும் இனி இடமில்லை.
இருப்பவர்களது காலடியில் இலையான்களாக வீழ்வதற்கு நாம் எவருக்கும் குடி அல்ல-அல்லவே!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2010

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்

தேர்தற் களம்:

இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் “தமிழீழத்தில்” புடம்போட்டு ஈழத்தைக் கனவுகாண வைத்தது அன்றும்-இன்றும்!

“KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE”-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

இறுதியான “ஈழயுத்தம்” இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் “ஈழம்”மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான”தீர்வு”த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு…

கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை “நமது அரசியல்” இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும்,கடந்தகாலத்தில் புலிகளின் போராட்டச் செல் நெறி நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு உத்தியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.

இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி, அதை வெறும் புலிப்பயங்கரவாதமாக்கி இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் கடல் வளத்தையும்,இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் இந்திய-சீனா மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே வளர்த்தெடுக்கப்படுகிறது.ஆனால், இந்த இலக்கைத் திட்டமிட்டு மறைத்து வரும் ஊடகங்கள்,நம் மக்களை நம்ப வைத்து நலம் அடிக்கும் அரசியலை “மகிந்தாவின் மனிதாபிமானித்தை” பேசியும்-எழுதியும் தமது எஜமான விசுவாசத்தைச் செய்கின்றன.

வரும் ஜனவரி 26.2010, ஜனாதிபதித் தேர்தலில், சரத்துக்கும்,மகிந்தாவுக்கும் நன்றி விசுவாசமாக இலங்கை மக்கள் அனைவருமே இருக்க வேண்டுமெனக் கட்டளையிடும் இனம்சார் கட்சிகள், தமது எஜமானர்களது தயவில் தமது கட்சி இருப்பைக் குறிவைத்து இயங்குகின்றார்கள்.அண்மையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளது போராட்டம் அந்நிய அடியாட் சேவையாக இருந்தது.அஃது, பிழையான வகையில் தமிழ் மக்களது எதிர்ப்பு அரசியலைக் கொண்டியங்கியது. சிங்களப் பேரினவாதத்தின்முன் ஒடுங்கி-அழிந்துபோகாதிருப்பதற்காகப் போரிட்ட தமிழ்பேசும் மக்களது நியாயமானபோர்- இனவொடுக்குமுறைக்கெதிரான போர் பரிதாபகரமாத் தோல்வியாகியது. இப்போது,அவ்வெதிர்ப்பு அரசியல் பாசிசப் புலிகளது அழிவுக்குப்பின் பயங்கரவாதமாகப் போயுள்ளது.இதைச் செவ்வனவே முள்ளிவாய்க்கால்வரைச் செய்து ஒப்பேற்றிவிட்டுப் புலிப்பினாமிகள் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானமென வம்பளக்கும்போது,துன்பமும் துயரமும் மேலும் தொடர்கதையாகப் போகிறது, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களுக்கு.

நமது மக்களோ இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சரத்தோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய முள்ளிவாய்க்கால் இனவழிப்புடனான புலி அழிப்பு நடந்தேறியது.

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்:

இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.அஃது, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும்.

இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தைச் சார்ந்தே இருக்கிறது.இங்கு,மகிந்தா தலைமைதாங்கப்போகும் ஐக்கிய இலங்கைக்கு ஒரு இராணுவ யுத்தப்பேய் சரத் பொன்சேகாவடிவில் அமெரிக்காவுக்கான தெரிவாக, பாசிச மகிந்தா குடும்பத்தின்முன் சவால் விடுகிறது.இது,தமிழ்பேசும் மக்களது குரல்வளைகளில் பதித்த தனது கொடியபற்களை தேர்தலுக்குப்பின் மெல்லக்காட்டி மக்களைப் பயமுறுத்தும் காலமொன்றும் உருவாகலாம்!

இன்றைய வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்”மார்க்” வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவுக்கு இக்கிழமை வருகை தந்த பங்காளதேஷ் அதிபரின்(Premierministerin Sheikh Hasina Wajed)முன் வாக்களிக்கப்பட்ட இந்தியக் கடன் நூறுகோடி டொலர்களாகும்.இந்தியா பங்காளதேஷ் இலங்கைபோன்ற நாடுகளைத் தனது அரைக் காலனியாகவே பயன்படுத்தி வரும்.இதற்காக அது,தனது பிராந்திய நலனுக்கிசைவான இராஜபக்ஷா குடும்பத்தை எப்பாடுபட்டும் காக்கும்.

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.என்றபோதும், இந்தியா-சீனா மற்றும் அமெரிக்கா,ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதுள், இத்தகைய நாடுகள் முரண்படும்போது கட்சிசார் அரசியல் நடாத்தையில் வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர்கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும்,இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும் பின்பு புலிகளது முதுகை உடைத்த ஆசிய மூலதனத்திடம் ஏமாந்ததும் இன்றைய வரலாறு!புலிகள் என்றவொரு அதி தீவிர வலதுசாரியப் பாசிச இயக்கமொன்று அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது.அஃது, இப்போது ஆசிய மூலதனத்தால் அழிக்கப்பட்ட இடத்துக்குச் சரத் பொன்சேகாவாக வரமுடியும்.எனவே, புலிகள் இல்லாத தமிழ் அரசியலை ஈடுகட்ட யுத்தக்கிரிமனல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதுதாம் புலிகளது வெற்றிடத்தை நிரப்பும் அரசியல் முன்னெடுப்பாகிறது.ஒருபோதும் அமெரிக்க நலன்-ஐரோப்பிய நலன் இலங்கையை முற்றுமுழுதாக ஆசியப் பிராந்திய வல்லரசுகளிடம் மண்டியிட அனுமதியாது.இதைப் பண்டார நாயக்காவின் கொலையில் உரைத்துப் பார்க்க முடியும்.பாகிஸ்தானில், இந்துநேசியாவில் தாய்லாந்தில் எப்படி இராணுவ ஆட்சிகள் நடக்கிறதோ அவ்வகைப் பாணியிலான அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது சரத் பொன்சேகாவினது அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.

ஆசிய-மேற்கு உலகங்களது மூலதனம்:

இங்கே,ஆசிய மூலதனமானது இந்தச் சூதாட்டத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களது முரண்பாடுகளை அரசியல்-பொருளாதார முறைமைகளோடு தீர்க்க முனையாதபோது இவ் முரண்பாடுகளைச் சாதகமாக்கிக்கொள்ள மேற்குலகத்துக்கு முடியும்.புலம் பெயர் தேசங்களிலுள்ள அனைத்துப் புலிக்கட்டமைப்பும் இத்திசைவழியில் மேற்குலகுக்குப் பயன்பாடானவர்கள்.புலம் பெயர்ந்த ஈரானியர்கள் இன்றைய ஈரானுக்கு எதிராக இருப்பதுபோல்.இந்நிலையில்,சங்காய் ஓர்க்கனேசேசன் கோப்பிரேசன் தனது தெரிவாகப் புலியை அழித்தபின் அவர்களோடு சேர்த்துத் தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளை அழித்ததாகக் கனவு காணுமா அல்லது அரசியல் தீர்வை முன்வைக்குமா என்பதற்கு மகிந்தாவினது வெற்றியின்பின் சில தீர்மானகரமான முடிவுகளை எட்டியே ஆகவேண்டும்.

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம் பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்.இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரிக.

இவையிரண்டும் நேராதிருப்பதற்கான தெரிவுகளாக எதிர் தரப்பை மேற்குலகம் பயன்படுத்தும்போது,அதைப் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்தே முன்னெடுப்பர்.இதைத் தடுப்பதற்கு முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்”நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது”என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதைப் புரிய ஐரோப்பியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையும்,ஐரோப்பிய மூலதனத்தின் போட்டிகளையும்,தனித்தனியாக ஐரோப்பிய நாடுகள் இருந்தபோது நேர்ந்த அரசியல்-போராட்டங்களையும் உற்று நோக்குவது அவசியம்.இதற்குப் “பழைய ஐரோப்பா”என்ற பதம் ஒரு குறியீடாக உலகத்துள் இன்றும் இருக்கிறது.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மேற்குலக நிதி மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இதற்காக இலங்கையை முற்று முழுதாக இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கத்திலிருந்து விடுபட வைத்தாகவேண்டும்.அதற்கானவொரு அருமையான தேர்வாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகவாயும்,தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் மேற்குலகம் பயன்படுத்துகிறது.அவ்கானிஸ்த்தானது மேற்குலக யுத்தத்தில் இலங்கையானது மேற்குலகச் சார்பு கட்சியால் அரசபரிபாலனஞ் செய்யப்பட்டால் தென்னாசியக் கடற் போக்குவரத்து மேலாண்மைக்கு மேலும் வலுக்கூடி இரட்டிப்பு வெற்றியை அவ்கான் யுத்தத்தில் எட்ட முடியும்.இது,பரவலான மேற்குலகப் புவிகோள வியூகமாகவே விளங்கத்தக்கது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குலகச்சார்பு ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்றுத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது அமெரிக்காவினது தெரிவு.இஃது,இலங்கை அரசின்மீதான இந்திய-சீனா ஆதிக்கத்துக்கு விழுந்த பாரிய அடியென்பதை இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாகவே புரிந்து கொண்டது.தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே சரத்,ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு.இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது சங்காய் ஓக்கனேசன் கோப்பிரேஷன்!இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது”இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,வாழ்வாதாரம்”என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் புலி மாபியாக்கள் இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கூடாகத்”தமிழீழ”வரைபடம் காட்ட முனைதலும் இதன் ஒரு அங்கமே.

இயற்கை:

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில குடும்பங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது மனிதத் தவறுகளை.கெயிட்டியில் இலட்சம் மக்களது உயிர் கடந்து மூன்று நாட்களுக்குமுன் பறிக்கப்பட்டது.புவி அதிர்வு!

சுனாமி வந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூலதனத்து முரண்பாடாக…

உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?

“இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!.”இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும், இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.

என்ன செய்வோம்?

எங்கும் இயற்கை அனர்த்தம்- யுத்தம்!

அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்…விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால், சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்…உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் “இந்த இயற்கை” இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?

இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் பூண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?

உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?

எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் “கரியமில வாயு”வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.

உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் “சக்தி” என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு “நேரக் குண்டாக”நேரம் குறித்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் “நம் கூட்டுழைப்பு” நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

“நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று “சேட்”பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்” நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய “எச்5 என்1″வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:”தாவரத்திலிருந்து சக்தி” எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:”இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே”அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய “கொன்சேர்ன்களின் பங்காளிகள்” மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) “இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!”இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் குறித்து:

இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி “ஏதோ எப்படியோ”சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு செற்பட வேண்டும்.

தேர்தல்கள்,வாக்குச் சீட்டுகளால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனினும்,அத்தகைய தேர்தல்களே ஜனநாயகத்தின் இருப்பை உரைத்துப் பார்க்கும் வழியாகவும் இருக்கிறது.நாம் மக்களது திறந்த விவாதத்தைக் கோருகின்றாம்.அவர்களது பிரச்சனையை அவர்களே பேசுவதற்கூடாக மக்களது ஆளுமையை வலுப்படுத்திடலாமென்பது எனது புரிதல்.இலங்கையில் மக்கள் யுத்தத்தாலும்,தேர்தல் நாடகங்களாலும் ஆளும் வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுப் பலியிடப்பட்டார்கள்.மக்களது உரிமைகளை அவசரகாலச்சட்டம்-பயங்கரவாதம் என்ற கொடும் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளால் இல்லாதாக்கினர்கள்.

இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு ஓட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே “ஈழம்-தமிழீழம்”எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.

இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் கோரிக்கை முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செம்மையுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.

மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில், இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை”அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்”போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.என்றபோதும், ஒவ்வொரு ஐந்தாண்டும ஜனநாயகம் போதித்துத் தேர்தல்கள் வந்துபோகின்றன.ஆனால்,இத்தகைய தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட மக்களது எந்தத் தேவையும் எந்தக் கட்சித் தலைவனாலும் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பித் தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.எனீனும் வாக்களிப்பது மக்களது உரிமை.ஆனால்,எவருக்கு வாக்களிப்பது?

இதைத் தீர்மானிப்பது மக்களது தெரிவு.அவர்களது பிரச்சனையை இந்த முதலாளிய அமைப்புக்குள் எவரும் தீர்க்கப் போவதில்லை.ஆனாலும் இவ்வமைப்பை உடனடியாக மாற்றவும் முடியாது.எனவே,அதிகாரத்திலுள்ளவர்கள் தாம் சார்ந்த முதலாளியக் கூட்டுக்கேற்றபடியேதாம் இயங்குவார்கள்.அவர்களில் இப்போது இலங்கையின் அபிவிருத்திக்கேற்றவர்கள் எவர்?

மேற்குலக மூலதனமா இல்லை ஆசிய மூலதனமா?

இரண்டினது இயல்பும் ஒன்றாகவேதாம் இருக்கும்.ஆனால்,ஆசிய மூலதனம் தன்னை நிலைப்படுத்தும் முன் தெரிவில் இலங்கையில் குடிசார் உரிமைகளைக்கொணர்ந்தே ஆகவேண்டும்.இது,மக்களது அழிவுகள் குறித்துக் கவனமெடுத்தே ஆகவேண்டும்.ஆனால்,மக்களைக் கொன்றுகுவித்த யுத்தக்கிரிமினல்களது பக்கம் இத்தகைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் ஒளிந்து இயங்குவதால் இலங்கை மக்கள் எவரை ஆதரித்தாலும் அது விடிவைத் தரப்போவதில்லை.

தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுகளைக் குறித்துச் செயற்படுவதாகவிருந்தால் இத் தேர்தலில் தமது ஓட்டுக்களை எதிர்ப்பு அரசியலாக்க முடியும்.அது ஜனநாயக உரிமையினது அடிப்படையில்.அப்போது,உண்மையான மக்கள் பிரதிநிதியாக-மக்களுக்காக உழைப்பது,குரல்கொடுப்பதென்று சிவாஜிலிங்கம் முனைந்தால் அவருக்கு ஓட்டுப்போடலாம்.அவரைப்போல் விக்கிரபாகு கருணரெத்தினாவுக்கும் போடலாம்.ஆனால்,அவர்கள் எவரும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகவிருந்தால் இந்தப் பாராளுமன்றப் பண்டித் தொழுவத்தைக் கேலி செய்து மக்களை வர்க்க உணர்வோடு அணிதிரடி இனவழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியாகத் தேர்தலைப் பகிஸ்கரித்து மக்களோடு மக்களாக முன் நின்றிருப்பர்.எனவே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் இத் தேர்தலில் நாட்டங்கொள்ளத் தேவை இல்லை.இதைப் பகிஸ்கரித்துத் தமது அழிவுக்கு நீதி கேட்கும் நாளாக தேர்தல் தினத்தில் ஆர்பாட்ட ஊர்வலுஞ் செய்யலாம்.அப்படிச் செய்யும்போது இலங்கையின் அரச பாசிசத்தை உரைத்தும் பார்க்கலாம்.இதைவிட இலங்கை ஜனநாயகத்தில் நம்புவதற்கு வேறென்ன உண்டு?

மகிந்தா மானுடன் நேயன் என்றால்,நான் இவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களது பிணத்தில் அரசியல் செய்து, அண்டிப் பிழைப்பவனே.இல்லை, “பொன்சேகா தமிழருக்குத் தீர்வு தருபவன்” என்றால், இலங்கைப் பாசிச இராணுவத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறையையும்-பாசிச் சேட்டையையும் நியாயப்படுத்திப் பிழைக்கும் மனிதவிரோதி என்பதே சரியானதாகும்!

“இந்தக் கணம்வரை எதுவும் என்னிடமில்லை,
எனது சிந்தனையைத்தவிர தங்குதடையற்ற
என் ஆன்மாவை உலகத்துள் ஊற்ற முனைகிறேன்!
ஒவ்வொரு நாளியும்,கண்ணிமைக்கும் கணமும்
மகிழ்ந்திருப்பதென்பது இடையுறாத போராக…”

Fuer alle:

“KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE”-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

“…..”

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.01.2010

P/S:
இக்கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட நூல்கள்,தளங்கள்:

http://www.uni-kassel.de/fb5/frieden/regionen/Bangladesch/indien2.html

http://www.imi-online.de/

Neues Deutschland, 14. Januar 2010

http://www.imi-online.de/download/EU-Studien-30-2007.pdf

# Vgl. Hantke, Martin (2008): »Alles wieder offen «. Georgienkrieg und imperiale Geopolitik. IMI-Studie 2008-10. Tübingen.

# Vgl. Wagner, Jürgen (2009): Gas-OPEC und afrikanische Nabucco.

http:// www.imi-online. de/download/JW-Gas-OPEC-Nabucco.pdf

# Kreimeier, Nils & Wetzel, Hubert (2007): EU und USA zittern vor neuer »Opec«, Financial Times Deutschland, 06.03.2007.

# U.S. Senate Committee on Foreign Relations, Senator Richard G. Lugar Opening Statement for Hearing on Oil, Oligarchs and Opportunity: Energy from Central Asia to Europe, 12.06.2008.

http://www.bmu.de/atomenergie_sicherheit/dossiers/doc/2708.php

Ausstieg aus dem Atomausstieg?:

http://www.greenpeace.at/406.html

http://www.bundestag.de/dokumente/textarchiv/2009/23866757_kw12_atomausstieg/index.html

http://mitglied.multimania.de/jenswahnfried/atomausstieg.pdf

அதிகாரமும், ஜனநாயகமும்

இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவும்,மீண்டெழும் தேர்தல் கோசங்களும்.
 
 
நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.
 
ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-”ஈழப் போராட்டம்” தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.
 
இப் புதிய ஆண்டில் மேலும் அவசரகால நிலையைத் தோற்றுவித்து,அதற்கான சட்டநியாயவாதத்தையும் பாராளுமன்றத்தில் இலங்கையை ஆளும் கட்சியாதிக்கம் பெற்றுள்ளது.தொடர்ந்து அவசரகால நிலையைத் தோற்றுவிக்கும் காரணங்களை மக்களது பொது ஒத்துழைப்பின்றியே இக்கட்சியாதிக்கம் செயற்படுத்தி அதைத் தமது நலன்களின் பாதுகாப்புக்கேற்றவடிவில் தகவமைத்து, ஜனநாயகம்-தேசப் பாதுகாப்பு எனப் பேசவும் முற்படுகின்றன.மிக அழகான போலி நியாயங்களை அவர்களது நிறுவனங்களும் செய்து முடிக்கும்போது, மக்களிடம் எந்தவுரிமையும் இல்லையென்றாகிறது.மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட மக்களாண்மை ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கொண்டிருப்பதிற்கில்லை.அது, நோய்வாய்ப்பட்ட ஆரோக்கியமற்ற சூழலைத் தோற்றுவித்து, எதேச்சதிகாரமிக்க குழுக்களைக் கட்சியாதிக்கஞ்சார்ந்து மக்கள்குழாத்துள் தோற்றுவிக்கிறது.இதன் பலாபலன் இலங்கைச் சமுதாயத்திடம் மேம்போக்கான உள்ளக ஒடுக்குமுறையைக் கேள்விக்கிடமின்றி அச்சத்தின்வழி ஏற்றுக்கொள்ளும் உளவியற்போக்கைத் தோற்றுவிக்கிறது.இதுவே,இலங்கையில் நிலவும் குடுப்பத் தார்ப்பாருக்கு வழி வகை செய்கிறது.சாரம்சத்தில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நிலக்கிளார் அமைப்பு முறைக்கு ஒப்பானவொரு “மாதிரி”ச் சமுதாயமாகப்பட்டுள்ளது.
 
அதிகாரமும், ஜனநாயகமும்:
 
 
எமக்குள் பொதுவான ஜனநாயகம் குறித்தும், மேற்குலகத்தில் நிலவும் ஓரளவு ஜனநாயகத் தன்மை குறித்தும் பரவலாகப் பேசப்படுவதுண்டு.இப்போது, மேற்குலக நிதி மூலதனத்தில் ஐரோப்பியக் கண்டம் தழுவிய கூட்டமைப்பு முறைமை உள்வாங்கப்பட்டிருப்பினும் இங்கே ஜனநாயகம் என்பது மூலதனத்துக்குப் பாதுகாப்பளிக்கும் எல்லையுள் வைத்து அணுகப்படுகிறது.இதைக் குறித்து அன்றைய கிழக்கு ஜேர்மனியின் பத்திரிகையாளரும் இன்றைய முன்னணிச் சிந்தனையாளருமான டானியேல்லா டான்(Daniela Dahn)பின்வருமாறு விசனப்படுகிறார்: “Doch die Parlamente haben Macht an die Regierung abgegeben, die Regierung hat Macht an die EU-Kommission abgegeben, diese hat Macht an die Weltbank und die Welthandelsorganisation abgegeben, alle haben also Macht an die Profitwirtschaft abgegeben. Und der Wähler soll seine Stimme abgeben und sich dabei fühlen wie Hans im Glück. Er guckt in die Luft und fragt sich, welche Wahl er eigent-lich hat, wenn niemand die verborgen herrschende Macht beschränkt, die des Kapitals? “-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:28 “முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகச் சட்டவாக்கம் பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை அரசிடம் கையளிக்கின்றது.ஐரோப்பிய அரசுகளோ தத்தமது அதிகாரத்தை “ஐரோப்பிய ஒன்றியக் கமிசனிடம்”கையளிக்கின்றன.அக்கமிசனானது உலக வங்கியிடமும்,உலக வர்த்தகக் கழகத்திடமும் இவ்வதிகாரத்தைத் தாரவார்த்துவிடும்போது,இத்தகைய கழகங்கள் யாவும் அதிகாரத்தை உபரிலாபப் நிதி மூலதனப்பொருளாதாரத்திடம் கையளிக்கின்றன.அத்தோடு, ஓட்டுரிமையாளர்களாகிய மக்கள் தேர்தலில் தமது ஓட்டுக்களை தாம்சார்ந்த கட்சிக்கு அளித்துவிட்டு அதன் வாயிலாகத் தமக்கு விடிவு வந்துவிடுவாதாக உணர்கின்றனர்.இதன் வாயிலாக ஆகயத்தைப் பார்த்து”இதைவிட வேறன்ன தெரிவு எமக்கு உண்டு?”என்ற கேள்விகளோடு ஓட்டளித்துவிடுகின்றனர்,மறைந்திருக்கும் மூலதன வர்க்கதின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு எவருமே முனையாதபோது. என்கின்றார்.
 

(Daniela Dahn_Demokratischer Abbruch Grunderin)
 
டானியேல்லாவின் பார்வைகள்,உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சனையாக இருக்கிறது.இது உலகு தழுவிய வர்த்தகக் கழகங்களது காலில் வீழ்ந்துவிட்ட அரசுகளதும்-கட்சிகளதும் முன் மக்கள் எங்ஙனம் ஏமாற்றி அடிமைகளாக்கப்படுகிறெதன்பதையும் அதைச் சட்டவாகத்துள் நீதியாகவும்-பரிபாலனமாகவும் இட்டுக்கட்டும் பாராளுமன்ற ஜனநாயகம் பொதுத் தளத்தில் பரந்துபட்ட மக்களது எதிரியாக இருக்கிறது.இதன்தன்மையிலான அரச பயங்கரவாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டவாக்கமாகி நியாயப்படுத்தப்படுகிறது.மக்களது உரிமைகளை மெல்ல அளிப்பதற்கு அவர்களது குடிசார் அமைப்பாண்மை முதலில் சிதைக்கப்பட வேண்டும்.இதைக் மிக இலகுவாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் வடிவில் அழித்துவிட்ட இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மக்களது குரல்வளையில் மெல்லத் தனத்து கோரக்கரத்தைப் பதிக்கிறது ஜனாதிபதித் தேர்தலாக.
 
 
மக்களாண்மை நிலைப்படுவதற்கான தெரிவில் டானியேல்லா நான்கு தெரிவுகளை ஜனநாயகத்தின் இருப்புக்கு அவசியமாக முன்மொழிகின்றார்:
 
1): Demokratie bedeutet Volkssouveränität.
 
2): Demokratie bedeutet Machtbeschränkung.
 
3): Demokratie bedeutet Wahrung der Menschenrechte.
 
4):Demokratie bedeutet Rechtsstaatlichkeit.
 
 
1):மக்களது சுயாதீனச் செயற்பாட்டின் அர்த்தம் ஜனநாயகமாகும்.
 
2):ஜனநாயகத்தின் அர்த்தம் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது.
 
3):ஜனநாயகமானது மனிதவுரிமைகளைப் பாதுகாப்பதென்று அர்த்தமாவது.
 
4):நீதியின்-சட்டத்தின் ஆட்சியாக இருப்பது ஜனநாயகத்தின் அர்த்திலானது.
 
இலங்கையில்,ஜனநாயகம்,மனிதவுரிமையென அமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி(கேர்னல் கருணா) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகள் தாம்சார்ந்த அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள் சார்பாக மொழிபெயர்கின்றனர்.இவர்களது பிரிதிநிதிகள் இவர்களைவிடப் பன்மடங்கு ஜனநாயகக் கோரிக்கைகளை மக்கள்முன் சொல்லுகின்றனர்
 
எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், இதுவரை மக்கள் விரோதமான ஆட்சியை நிலைப்படுத்தியவர்கள்-இயக்கியவர்கள் இவர்கள்தானே?பின்பு, இவர்கள் எதைக் குறித்துப் பேசுகின்றனர்?ஜனநாயகமென்பதை இவர்கள் தமக்கிசைவாக்கிச் சாகடித்போது, அதற்கு மீளவுயிர்கொடுப்பதாகச் சொல்லும்போது-இது- இவர்களால் முடியுமா?
 
இன்றைய ஐரோப்பியக் கண்டத்துத் தேசங்களது தலைவிதியே உலக வங்கி-வர்த்தகக் கழகங்களால் தீர்மானிக்கப்படும்போது,தென்னாசியப் பிராந்தியத்தில் அரைகுறைவிருத்தியுடைய தேசங்கள்,உலக வங்கியிடம்-உலக ஆதிக்கச் சக்திகளிடம்”பிச்சைப் பாத்திரம்”ஏந்திக்கொண்டும் ஜனநாயகம்-அபிவிருத்தி பேசுகின்றன.குறிப்பாக, ஊழலில் மலிந்த இலங்கைக்கு மக்கள்சார் ஜனநாயகத்தைப் பேணும் பொருளாதாரப்பலம் இருக்க முடியுமா?இலங்கையின் சிறுபான்மை இனங்களைக் கருவறுத்துக்கொண்டேதாம் தமது முரண்பாடுகளைத் திட்டமிட்டுத் திசைதிருப்பிப் பாராளுமன்ற அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஆளும் வர்க்கம், இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு அண்மையில் இருக்குமென்பது ஏமாற்றுவித்தையாகும்.
 
சமூகச் சிதைவும்,மனித சீவியத்தின் சீர் குலைவும், இலங்கைச் சமுதாயத்துள் நிலைபெற்றுவிட்ட அராஜகக் கட்சி ஆதிகத்துள் மேலும் நெருக்குதலுக்குள்ளாகும்போது ஜனநாயக விழுமியத்தைப் பேணும் எந்தத் தீர்மானகரமான அரசியல்போக்கும் அத்தேசத்துள் முகிழ்ப்பதற்கான சுயசார்புப் பொருளாதாரக் கட்டுமானமும் அதனிடமில்லை!கட்சிகளும்,அதன் தலைவர்களும்,மந்திரிகளும் தேசத்தைச் சொல்லிப் பெற்றகடன்களை உண்டு ஏப்பமிடும்போது தேசத்துள் வாழும் எந்தத் தரப்பு மக்களும் இயலுமானவரை சிறந்த தேச பரிபாலன முறைமையைக்குறித்தும் சிந்திக்க முடியாது.இத்தேசமானது பாராளுமன்ற ஜனநாயகப் பண்பை கட்சிகளது சொல்லாடற் களமாகப் பாவித்துத் தமது எஜமானர்களதும், தமதும் வளங்களைச் சட்ட பூர்வமாகக் கொள்ளையிடுவதில் ஆட்சியை-அதிகாரத்தைக் கொண்டியங்கமுனைகிறார்கள்.இவர்கள் பேசும் எந்த மக்கள்சார் கூச்சல்களும் உண்மையில் மக்களது நியாயமான கோரிக்கைகளையும்,அவர்களது அவலத்தையும்,இராணவச் சர்வதிகாரத்தையும் நிவர்த்தி செய்யப்போவதில்லை!மக்களினங்கள் மதத்தாலும்,மொழியாலும் இன்னபிற அடையாளங்களாலும் பிளவுப்படுத்தப்படும்போது அந்தக் குழு-இனவாதக் கூட்டுள் குறிப்பட்ட இயக்க-கட்சியாதிக்கம் வலுவாகத் தன்னை குழுசார் மதிப்பீடுகளுக்குள் நிலைப்படுத்திக்கொள்ளும்போது, அக் குழாத்துள் நிலவும் அனைத்துச் சமூக அசைவாடல்களையும் அதுவே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது.இதனால் இனம்-மதம்சார் மக்கள் குழாமுள் தேவையுறும் அனைத்துப் பொருளாதார வாழ்வும்-செயலும் ஆதிக்கம்பெற்ற கட்சியின்-இயக்கத்தின் தலைவர்கள்-உறுப்பினர்களது கைகளுக்கு மாற்றப்படுகிறது.அவர்களே குறிப்பிட்ட தேச-அரச சூழலில் அதிகார-ஆளும் வர்க்கமாக மாறுகிறார்கள்.இவர்கள் பரந்துபட்ட ஆளும் வர்க்கக் குணாம்சத்துக்குள் வராது போனாலும், ஒரு குழுவாக-அதிகாரத்துவமுடைய,சட்டபடியான ஆதிக்க சக்திகளாக உருவாகிறார்கள்.இதுவே,இன்றைய மூன்றாமுலக அரசியல் மற்றும்,ஜனநாயகச் சூழலின் எதார்த்தமாக இருக்கிறது.இதைக் கடந்து செல்லத்தக்க அமைப்பாண்மை-குடிசார் நிறுவனங்கள் எமது மக்களுக்கும் இலங்கையின் அனைத்துத் தரப்புக்கும் அவசியமாகிறது.இதைப் பரந்துபட்ட மக்களுக்குள் இருக்கும் தொழிற் சங்கங்கள்,சனசமூக நிலையங்கள்,உள்ளுர் ஆட்சி மன்றங்கள்,பாடசாலை-கல்லூரிகளே முன்னின்று போராடி மக்கள் ஆண்மையை முன்நிறுத்தும் குடிசார் அமைப்புகளை நிறுவிக்கொண்டு, ஜனநாயகத்தின் அதிகளவிலான மேன்மையைக் குறித்து இயங்க முடியும்.
 
இலங்கையினது இன்றைய அரசியல் சூழலின்பொருட்டு இத்தகைய குரல்களும் அதுசார்ந்த செயற்பாடும் கட்சி-இயக்க ஆதிக்கந்தாண்டி எழுந்தாகவேண்டும்.மக்களது எதிர்ப்புப் போராட்டத்தின் இருப்பு இத்தகைய முயற்சியுள் பெரிதும் தங்கியுள்ளது.எதிர்ப்போராட்டங்களைத் தமக்கு இசைவாக்க முனையும் அதிகார வர்க்கம் பலமான வழிகளில் அதைச் சிதைக்க முனைவதை நாம் காணுகிறோம்.அவற்றில் ஒன்றுதாம் பல்வேறுபட்ட பிளவுகளை வலியுறுத்தி அதனூடாகத் தமது வசதிகேற்ற அமைப்புகளை உருவாக்குதல்.இவை,தாம்சார்ந்த மக்களைச் சொல்லியே அவர்களை அடிமையாக்கும் அரசியலோடு தொடர்ப்பு கொள்கின்றன.இதுள் டக்ளசோ அன்றிக் கருணாவோ இல்லை தலித்துக் கட்சிகளோ விதிவிலக்கல்ல.
 
ஜனநாயகத்தின் பெயரால் தேர்தல்:
 
இன்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு எமக்கு ஆச்சரியமானதில்லை.
 
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆதிக்கத்தை இலங்கையில் நிலைப்படுத்துவதென்பது என்றே அர்த்தமாவது.இதைக் குறுக்கி அவர்களது முட்டாள்த்தனமென மீராபாராதி போன்றவர்கள் பின்னூட்டமாகப் பிதற்றலாம்.ஆனால்,தமிழ்த் தேசியவாதிகளது வர்க்க நலன் என்பது எப்பவும் மேற்குலகஞ்சார்ந்த நலன்களோடு பின்னிப் பிணைந்ததுமட்டுமல்ல,அவர்கள் மேற்குலக-அமெரிக்க உளவுப்படைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் என்பது உண்மையானது.இதற்கு நாம் கடந்த காலத்துத் தமிழ்த் தலைமைகளையும்,இவர்களது அரசியல் நடாத்தையையும் புரிந்துகொள்வது.அவசியம்.இதற்கான சிறு உதாரணத்தைச் சொல்லிவிடுவது உசிதம்.
 
தமிழர்களின் தேசியத்தைச் சொல்லித் தமது மேட்டுக்குடி நலனைப் பேணியவர்களுள் முக்கியமானவர்கள்,இராமநாதன்-அருணாச்சலம் சகோதரர்கள் என்பது நாம் அறிந்ததே.இவர்களுக்கு”சேர்”பட்டத்தை நன்றிக் கடனாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கியதும் அறிவோம்.இவர்களது வழியில் வந்தவர்கள் மிகக் கறாரான மேற்குலகத்தின் நலன்களையும், ஒடுக்குமுறை வர்க்கத்தோடான நட்புப்பாராட்டியும் எழுந்தவர்கள்தாம் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,செல்வநாயகம் போன்றோர்.இவர்கள் அன்று முன்வைத்த குறுந்தேசியக் கோரிக்கையானது”தமிழர்களுக்குப் பரம வைரிகள் சிங்களவர்களே”என்பதாகும்.இவர்களே,”எந்தச் சிங்களவர்களையும் நம்பக்கூடாது” என அன்று அரசியல் பேசினார்கள்.இதன் வழி மக்களையும் நம்பச் சொன்னார்கள்.பின்பு, இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலத்தி-அல்லது நழுவிக்கொண்ட இவர்கள், 1949 ஆம் ஆண்டளவில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினது அரசில் இணைந்து மந்திரி சபைகளையும் பெற்றுக்கொண்டனர்.
 
ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரியாக இருந்தபோதுதாம் மலையகத் தமிழ்மக்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.அன்று பத்து இலட்சம் மக்கள் நாடற்வர்களாக்கப்பட்டபோது இதே தமிழ்த் தலைமைகள்தாம் மேற்குலகச் சார்புச் சிங்கள அரசைக் காத்து வந்தனர்(இதுள் செல்வநாயகம் முரண்பட்டுக்கொண்டதும் உண்டு).இவ்வண்ணமேதாம் இத் தமிழ்த் தலைமைகளைப் புரிந்தாகவேண்டும்.பின்பு,இதுவோ தொடர்கதையாகியபோது 1965 ஆம் ஆண்டும் இதே வலதுசாரியத் தமிழ்த் தலைமைகள்தாம் ஐயக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டராசாங்கத்தை அமைத்தனர்.அதுள்,மு.திருச்செல்வம் மந்தரிரயாகவும்,தமிழ்க் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் சபாநாயகராகவும் பதவி வகித்தனர்.
 
இங்கு,ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, தமிழ்த் தலைமைகளது மிகக் கெடுதியான பக்கங்கள்தாம் நமது விழிகள்முன் வருகிறது.இவர்கள் செய்தது அனைத்தும் துரோகம்-காட்டிக்கொடுப்பு.இலங்கைக்கும்,இலங்கை மக்களுக்கும்-ஏன்,முழுமொத்த மக்களுக்கும்- எதிரிகள் தமிழ்த் தலைமையும்,ஐக்கிய தேசியக் கட்சியுமே.இதைப் புரிவதற்கு நாம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை விளங்க முற்பட வேண்டும்.
 
அதாவது, 1958 ஆம் ஆண்டு அரசியலைச் சொல்லியாகவேண்டும்.
 
இலங்கையினது தேசிய முதலாளியத்தின்(வளர்கின்ற நிலையுள்)அரசியல் தலைவரும்,ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முன்றாவது உலக அணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி: பண்டாரநாயக்காவோடு மேற்குலக விசுவாசியும்,அமெரிக்க உளவுப்படையின் கூலிக்காரனுமான செல்வநாயகம் ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்தார்.அதை,பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பது சொல்லக்கடவது.
 
இது,தமிழ்பேசும் மக்களது சுயாட்சி சம்பந்தமாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம்.இவ்வொப்பந்தம் இன்றைய சர்ச்சைகளைவிட மிக முன்னேறியது.இதை ஏற்றுச் செயற்படுத்தியிருந்தால் இன்றைய அழிவுகள் எமக்கு ஏற்பட்டிருக்காது.ஆனால், இப்வொப்பந்தத்தால் நஷ்டம் அடையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே செல்நாயகம்,மற்றும் தமது அடிவருடிகளான ஐ.க்கிய தேசியக் கட்சி மூலம் இவ்வொப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்த அரசியலுக்கு முழுவுடந்தையாக இருந்தது அமிர்தலிங்கம்-செல்வநாயகம்,மற்றும் ஜே.ஆர்.கூட்டே.இவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அமெரிக்க உளவுக்காரர்கள்.களனியில் இருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்,புத்தபிக்குகளும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்று பண்டாவுக்கு நெருக்கடி கொடுத்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றியதும் இன்றும் அழியாது வரலாறு.பண்டாவுக்குப் பொட்டுவைத்ததும் இவர்களது அமெரிக்க உளவுச் சேவையே.
 
அன்று,பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியையும்,ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையையும் தூண்டியபடி, தமது முகவர்களான தமிழ்த் தலைமையின் மூலமும் சிங்களவர்களுக்கும்-தமிழர்களுக்கும் எதிரான இனவெறியைத் தூண்டிவிட்ட அதே அமெரிக்கா இப்போது பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மகிந்தாவைக் கடாசுவதற்கு முனைகிறது.
 
இங்கே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன் சேகாவை ஆதிரிப்பது அமெரிக்க நலனின்பாற்பட்டது.அதே கடந்தகாலத்து அரசியல் மீளவும் அழிவுகளின் நடுவேயும் பலாமாக நம்மை நெருங்குகிறது.அன்று பண்டா தமிழ் மக்களுக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் இன்று மகிந்தா இல்லை.சுயாட்சி ரீதியாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம் அன்று.இன்றோ புலிகளை அழித்து முழுமொத்த மக்களையும் இலங்கையர்களெனும் வாதம் மகிந்தாவிடம்.இது,சமக கால ஆசிய மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதுகுறித்து ஏலவே ஒரு கட்டுரையில் பேசியுள்ளன்.அன்று(1958),யாழ்ப்பாணத்தில் சிங்களச் சிறீ எழுத்துக்களைத் தார்பூசி அழித்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றிய அமிர்தலிங்கத்தின் வாரீசுகள் இன்று பொன்சேகாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி தமிழ் பேசும் மக்களது தலையில் மண்ணை அள்ளிப் போடுகின்றனர்.
 
இன்றைய இந்தச் சீரழிவு தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை அவசியமானது.அவர்கள், தமது வர்க்க நிலையை நன்றாகவுணர்ந்தவர்கள்.அனைத்தையும் மக்களதும்,தேசியத்தினதும் பெயரால் இவர்கள் ஆற்றும்போது,அங்கே மக்களது நலன்கள் கிஞ்சித்தும் கிடையாது.கடந்தகாலத்துத் தலைமையுஞ்சரி அவர்களது வாரீசுகளது தலைமையுஞ்சரி இல்லைப் புதிய தமிழ் அமைப்புகள்-கட்சிகளும்சரி எப்பவும் பரந்துபட்ட முழு இலங்கை மக்களுக்கு எதிரிகளாகவே இருக்கின்றனர்.
 
இந்த நிலையுள் வன்னியில் செய்யப்பட்ட இனவழிப்புக்கு எதிரான கோசங்களோடு தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக அரசியல் போராட்டஞ் செய்தே ஆகவேண்டும்.இது,பரந்துபட்ட ஜனநாயகப் பண்புக்குமையவே நடாத்தப்படவும் உரிமைகள் இருக்கிறது.தம்மிடம் ஓட்டுக் கேட்பவர்களிடம் தமது வாழ்வாதாரத்தைக்கட்டியமைப்பதற்கும்,தமது அடிமை வாழ்வை அகற்றித் தாமும் சிங்களும்பேசும் மக்களுக்கிருக்கும் அனைத்து உரிமையையும் இலங்கையில் பெறுவதற்கான முன் நிபந்தனைக் கோரிக்கைகளையும் முன்மொழிய வேண்டும்.இதை ஏற்காதவர்களுக்கு ஓட்டுப் போடுவதைவிட இல்லாதாக்குவதே மேல்.ஆனால்,வர்க்க அரசியலின் போக்கில் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் ஆளும் வர்க்கமானது இத்தகைய கட்சிகளதும்,குழுக்களதும் அரசியல் கோரிக்கைகளை மெல்லக் கண்டுகொள்ளாதிருக்கின்றன.இதன் வாயிலாகவே இவர்கள் மக்களை அண்மிக்கும்போது மக்களுக்காவே குரல் கொடுப்பதாக நாட்டிலுள்ள உண்மையான பிரச்சனைகளைப் பேசி மக்களை அண்மிக்கின்றனர்.இதன் உச்சபட்சமாக இன்று மகிந்தாவின் அரசில்-தேர்தல் கூத்துக்கள் எம்.ஜீ.ஆர் பாணி அரசியலை விஞ்சிவிட்டது.அவ்வண்ணமே,பொன்சேகா தமிழ் மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்பதும்.இதற்காக எழுத்து மூலம் அறிக்கை வழங்குவதும் சாத்தியமாகிறது.
 
இத்தகைய அரசியல்-ஜனநாயக நடாத்தையில் மகிந்தா இங்ஙனம் உரைக்கின்றார்:
 
எதாத் மகிந்தா
அதத் மகிந்தா,
கெற்றத் மகிந்தா
!”
 
இது,”நேற்று,இன்று,நாளை”,எனப் படங்காட்டிய எம்.ஜீ.ஆரை. ஞாபகப்படுத்துகிறதா?”
 
நேற்றும் மகிந்தா,இன்றும் மகிந்தா,நாளையும் மகிந்தா”வரட்டும்.ஆனால்,இலங்கை அரசினது பயங்கரவாதத்துக்குப் பலியாகும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான அரசியலும்,அவர்களது குரலும் பெருந்தேசவுருவாக்கத்துள் பலியாக்க முனைவதுதாம் பிரச்சனை.இதை அனுமதிப்பது ஜனநாயகமா?
 
நாம்,மீளவும் டானியேல்லா டானிடம் செல்வோம்.
 
 
“Wer souverän sein will, muss sachkundig sein. Wis-sen ist Macht. Wer dem angeblich alternativlosen, neoliberalen mainstream etwas entgegen-halten will, braucht Argumente. Doch während der verschuldete Staat, der seine finanzielle Souveränität längst verspielt hat, die Mittel von Schulen und Universitäten kürzt, sind die Massenmedien demokratievergessen der Quote erlegen. In der nach unten offenen Schlicht-heitsskala dominieren Verflachung und Entpolitisierung. In Kriegszeiten auch Tabuisierung und Lüge. Ein hohes Niveau des öffentlichen Diskurses ist aber Grundlage der Demokratie. Sie braucht Bürger. “-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:29 “எவரொருவருக்கு முற்றுமுழுதான சதந்திரத்தைக் கொண்டியங்கும் உணர்வு அவசியமோ அவர் அனைத்தையும் அறிந்தவராக-அளந்தவராக இருக்கவேண்டும்.புத்திமான் பலவான்.மாற்றில்லையெனப் பொய்மைக்கொண்டியங்கும் சூழலில் நவலிபரால்களது ஆதிக்கத்தை கொஞ்சம் எதிர்த்து-தூரவிலத்திவைக்க விரும்புகிறாரோ அவர்கட்குத் திறந்த உரையாடல் அவசியமாகிறது.கடன்பட்ட தேசம் தனது தேசத்தின் சுயாண்மையோடு விளையாடுகிறது.இது,தனக்குக் கடனளித்த தனது எஜமானர்களுக்கேற்றபடி அனைத்துச் சமூக மானியத்தையும் வெட்டுகிறது.பாடசாலை பல்கலைக்களகமென அனைத்துக்கும் மானியக் குறைப்பு.ஊடகங்கள் இதுகுறித்தான அளவுகோலைப் புதைத்துவிட்டுக்கொள்கின்றன.இத்தகைய அளவுகோலின்கீழ் தட்டையான அரசியல் நீக்கம்பெறுகிறது.யுத்தகாலத்துள் தடைகளும் பொய்மையும் மக்கள் அரங்குக்கு மேலெழுகிறது.எனினும்,அதீதமட்டத்துக்கான உரையாடல்-விவாதமானது ஜனநாயகத்தின் அடிப்படையான மூலம்.”
 
பொதுத்தளத்திலான இன்றைய அரச பயங்கரவாதத்தையும், அதுசார்ந்த நவலிபரல்களது பொருளாதார முன்னெடுப்புகளையும் நாம் பொதுத்தளத்தில் விவாதித்து உரையாடவேண்டியுள்ளது.இதிலிருந்து விலத்துபவர்கள் நடைமுறை அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதற்கு உதவுபவராக மாறுகின்றார்.இன்றைக்கு ஜேர்மனியப் பொறுத்தவரை யுர்க்கன் ஹாபர் மாஸைக்(Jürgen Habermas) கடந்து செயற்பாட்டுத்தளத்தில் மிகவேகச் செயற்படுபவர்கள் சுதந்திர பொருளாதார(Freier Wirschaft-Humane Wirschaft) வாதிகளும்,இடதுசாரிய(Die Linke)வட்டாரமும்தாம்.இதுள், சுதந்திர-நியாயவாதப் பொருளாதாரம் சில்வியோ கேசலின்(Sivio Gesell-Die Natürliche Wirschaft Ordnung) பொருளாதாரக்கொள்கையினால் அற்றாக்கிடம்(Attac_ http://www.attac.de/) தஞ்சம் புகுகிறது.இடதுசாரியவட்டமே திறந்த உரையாடல்களை ஊடகங்களிலும் பொதுத் தளத்திலும் நிகழ்த்துகின்றன.இலங்கைபோன்ற தேசத்துள் குறைந்தபட்சமாகவாவது இத்தகைய இடதுசாரிகள் பொதுத் தளத்தரில் மக்களோடு உரையாடல்களை ஆரம்பித்தாகவேண்டும்.
 
தமிழ்நாட்டில், இதைப் புதிய ஜனநாயகம்-மக்கள் கலை இலக்கிய கழகங்கள் மிக நேர்த்தியாகச் செய்கின்றன.நமது தேசத்துள் இது பெயர்ப்பலகைக் கட்சி மட்டத்தோடு நாலு நபர்களது சிண்டைப்பிடித்து அடிக்கும் விவாதமாக மாறியுள்ளது.நாம்,தமிழ்ச் சூழலுக்குள் நமது சிந்தனைகளை விரிவாக்க வேண்டும்.உலகத்துள் நடக்குள் உரையாடலின் பண்புகளை உள்வாங்கி, அனைத்தையும் அறிதல் அவசியமாகிறது.நாளைய சூழலில் பரந்துபட்ட மக்களது வெற்றி நேரடியான வெகுஜனத் திரளின் பங்குபற்றலிலேயே தங்கியுள்ளது.இதைத்தாம் டானியேலா டான் மிகக் கறாராகச் சொல்லிச் செயலில் இறங்கி நாற்பது ஆண்டுகள் போராட்டத்தோடு இயங்குகிறார்.
இவருக்கும் ஹபர் மாசுக்கு(Jürgen Habers) இடையிலான வித்தியாசம் நோய்வாய்ப்பட்ட முதலாளியக் குழந்தைக்கு மருந்துகொடுத்துக் காப்பாற்ற முனைபவருக்கும், அதை கொன்று மாற்று அமைப்பை உருவாக்குவதற்குமான வித்தியாசம்.இதுள் டானியேல்லா(Daniela Dahn) இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.எனினும்,எமது தடீர் புரட்சி-திடீர் கட்சி அவரிடம் எப்போதும் நீக்கம்பெற்றே இருக்கிறது.
 
 
மக்கள் குடிசார் அமைப்புகளை உருவாக்கிககொள்வது:
 
 
இந்த நிலையுள், ஹன்ஸ் ஹேர்பேர்ட் ஆர்மின்(Hans Herbert von Armin)கூறுகிறார்:It ultimately is only one antidote to the restoration of democracy as government by and for the people: the activation of the citizens themselves have become mature and the creation of the necessary institutions. This recognition is made by growing, and it is the deeper reason for the fast-growing popularity, the elements of direct democracy in the Federal Republic (and elsewhere) to find for some time. “-From the beautiful illusion of democracy ஆர்மின் கூற்றை உள்வாங்கும்போது,ஜனநாயகச் சூழலை மக்கள் சுயமாக அரசிலிருந்து விலத்தி உருவாக்க வேண்டியுள்ளது.இதற்காக மக்களே தம்மால் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகளை முறியடித்து முன்னேற வேண்டும்.இங்கே,சட்டம்,ஒழுங்கு-நீதி என்பது ஒடுக்குமுறை ஜந்திரமாக இருக்கும்போது மக்களைச் சுயமாக இயங்க அனுமதிக்காதிருப்பதற்கான தயாரிப்புக்களை கட்சி ஆதிக்கம் தமது தொங்குசதைக் குண்டர்களால் ஆக்கிவிடுகிறது.இதை நியாயப்படுத்த அவசரகாலச் சட்டங்கள் அதற்கு அவசியமாகிறது.இலங்கை மக்களுக்குச் சுய ஆளுமை இல்லாதவொரு சூழலில், அதே மக்கள் சுயமாகக் குடிசார் அமைப்புகளை உருவாக்குவதென்பது ஒருகட்டத்தில் அவசியமாகிறது!இஃது,அரசினது போலி ஜனநாயக் குரலை அம்பலப்படுத்தி, நேரடியான ஜனநாயகத்தைக் கொணர்வதில் அத் தேசத்தின் பரந்துபட்ட மக்களது சுய எழிச்சியை,போராட்டங்களை-அமைப்பாண்மையைத் தூண்டுவதற்கு அவசியமாகிறது. இங்கே,இதற்கு மாறாக,தமிழ்த் தலைமைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போடும் கூச்சல், நிலவும் பாசிசப்போக்கை முலாம் பூசி ஜனநாயகமாகக்காட்டுவதற்கானதென்ற உண்மையைப் பேசியாகவேண்டும்.
 
ஆனால் யுத்தத்தைக்காட்டி,அர்த்தம் அறியாது அமிழ்ந்து போகும் மக்களது நியாயமான கோரிக்கைகள்.மக்களது அவலத்தை ஏற்படுத்திய இலங்கை ஆளும்வர்க்கத்து திமிர்தனமான யுத்தம் மற்றும் இனவாத ஒதுக்குதல்-ஒடுக்குமுறைகள்.இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் மீளவும் இவற்றையே தாம் சார்ந்த மக்கள் இனத்துக்கும்,தமக்குள் இருந்த சிறுபான்மைக் குழுமங்கங்களுக்கும் ஆயுத அடக்குமுறையூடாகச் செய்து முடித்தன.
 
ஒன்று, சட்ட பூர்வ அரசாகவும்,
 
மற்றது,சட்டபூர்வமற்ற இயக்க ஆதிக்கமாகவும் இருந்துகொண்டது,
 
இவ் விரண்டுக்குப் பின்னாலும் மேட்டிமைக் குழுவே தமது நலனுக்கான தெரிவில் யுத்தத்தைத் தொடர்ந்தன.இவைகள்,இலங்கையின் பரவலான மக்கடொகுதிக்கு எதிரான சக்திகளாக இருந்தும் மக்களைத் தமது வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்குவதற்கான தெரிவுகளாக ஜனநாயகப் பண்புகளை முதலில் இல்லாதாக்கிக்கொண்டன.அரசு,சட்டபூர்வ அரசு என்னும் அங்கீகாரத்தைப் பாராளுமன்றத்துக்கூடாகப் பெற்றுவிட எப்போதும் அதையொரு கருவியாக வைத்திருக்க விரும்பியது.
 
இயக்கங்களோ தமது அதிகாரத்தை-அடக்குமுறையை அப்பாவி மக்கள்மீது ஏவுவதற்கு”தாயகம்-தமிழீழம்”எனும் கோட்பாட்டைக் கருத்தியற்றளத்தில் ஊன்றி அதையும் ஒரு ஆயுதமாக முன்னெடுத்தபோது,இலங்கையின் சிங்கள மக்களுக்கு ஒடுக்குமுறை ஜந்திரமான அரசு-பரவாலான மக்களது எதிரி என்பதையும் தாண்டி-சிங்கள மக்களது இருப்புக்கும்-அவர்களது இனஞ்சார்ந்த பாதுகாவலானகச் சிங்களத் தேசியத்தின் அடையாளமாக மாறுகிறது.இயக்க வாத முன்னெடுப்பு,இலங்கைச் சிங்களவாத அரச பயங்கரத்தினூடாக வளர்ந்தபோதும் அவ்வளர்ச்சியில் மீளவும் சிங்களப் பேரினவாதம் தழைத்தோங்கும் சிறப்பான அறுவடையைச் சிங்கள மேட்டிமைக் குடிகள் அறைவடை செய்ததுபோன்றே, தமிழ் மேட்டிமைக் குடிகளும் இயக்க வாதத்தால் செழுமையான பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிருந்தன.இவை, இலங்கைக்கு வெளியில் தமிழ் மேட்டுக்குடிகளது பரந்தபட்ட இலாப நோக்கான வர்த்தகமாகவும் இருந்து கொண்டிருக்கிறது இன்றும்.
 
இறுதியாக,ஒரு விளைவைத் தரத்தக எதிர்வழி இருக்கிறது. ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்காக,அரசானது மக்களுக்கானதென்றவகையில் வாக்களிக்கத் தகுந்த மக்கள் சுயமாகத் தமக்கு அவசியமான குடிசார் நிறுவனங்களை அமைப்பதற்கு முனைவது.இப் படிப்பனவு மிகுதியாகக் கடைப்பிடிக்கத்தக்கது,கூடவே,அதன் ஆழமான அர்த்தம் மிக வேகமாக மாற்றுக்கருத்துச் செயற்பாடு வளர்வது என்றும் எடுக்கலாம்.இந்த மூலமானது நேரடியான ஜனநாயகத்தை நாம் முழுமையாக அநுபவிப்பதாற்கு மக்கள் ஆண்மைபெறுவது அவசியமாகிறது.இதனுடாக, ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்கும், சரி செய்வதற்குமான அரசு, மக்களுக்கு அண்மையில் இருப்பதும் அவசியமாகிறது.இத்தகைய கருத்து நிலையுள் மக்கள் முழுமையாகத் தமது ஆளுமையைக் காணவேண்டுமாயின் அவர்களது வாழ்வாதாரங்களும் மீளக்கட்டியமைப்பட்டு மக்கள் சமூகமாக வாழும் நிலை உருவாக வேண்டும்.திறந்தவெளிச் சிறையுள் கொத்தடிமைகளாக இராணுவக் கண்காணிப்பின்கீழ் வாழும் மனிதர்களிடம் மகிந்தாவையும்,பொன்சேகாவையையும் நியாப்படுத்திவிடும் தமிழ்க் குழுக்கள் கட்சிகள் உண்மையில் ஜனநாயகத்தின் எதிரிகள்.இவர்களுக்கு அதன் அர்த்தம் அவசியமற்றது.ஏனெனில்,இவர்களே இன்றைய கட்சிகளது மிகப் பெரிய அடியாட் குழுவாக மக்களுக்குள் கோலாச்சுகின்றனர்.எனவே,மக்களது சுய ஆளுமை மழுங்கடிக்கப்படுவது இவர்களைப் பொறுத்தவரை இவர்களது இருப்புக்கு அவசியமாகிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி.
07.01.2010

எல்லோர் கோசமும் விடுதலை புரட்சி

பொல்லா வினை என

புதுப் புது ஆண்டுகள் தோன்றியே என்னே
புகழுடலெனப் போனோர் என்னே
என்னோர் என்றும் இயம்பும் குரலெனப்
பின்னே செல்லும் வாழிளம் உயிரோ

மெல்லப் போவதும் மேடுகள் விரிவதும்
எல்லாந் தொலையாத ஏதோ ஒன்றாய்
இரந்தது மண்ணும் அதுகொண்ட உயிரும்
ஞாயிறு ஏறிய நடுப் பகற் கனவு

நமக்கென் றொரு நாடுகாண் நோக்கு
வானமும் பொழியா வயலும் விளையா
வன்னியாய்க் கொண்ட மக்களும் முட்பதர்
மேவிய திசை மெல்லச் சாயும்

சொல்லுவார் சொல் கேட்பது குடி எனக்
கொண்டோர் கூவிய இந்தக் கடுப்பாண்டு
கோர முகந் தொலைக்க இனி வரும் பொழுது
யுத்தம் என முனியாது புயல் என மடியாது

குடிகளே கோல் கொண்டொரு முறை செய்யக்
கடன் பழி காணாத காட்சி என் மாட்சி
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கும்
இனியவள் முலை சுரக்கும் வெண் மனம்

இறையுக்கும் பொருந்த உழைப்பவர் எவர்?
எல்லோர் கோசமும் விடுதலை புரட்சி
பொல்லா வினை எனப் பொங்கும் சிறந்தோர்
வதைகாண் குடிகள் வன்னிகொள் சிறை

வந்து தோன்றி அவர் விலங்கு களைந்து
உயிர்கொண்டு ஊர ஒப்புவார் எனவும்
ஊன் வருத்த என்று இனி ஒரு தவமும்
உப்பு இல்லா இவர்க்கு வேண்டவே வேண்டாம்!

காணார் கேளார் கால் கை முறிபட்டோர்
கணவன் துணைவி குழவியெனப் பட்டோர்
இழந்தவை அனைத்தும் வலிகொள்
வன்னி மக்கள் அவர் வழி உயிர்கொண்டு துய்க்க

எல்லாம் நிறைக என்று இசைத்து
உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு
உறங்க எனக்கு எனக் காலம் வரும்
எவருரைப்பை இனி கேட்க ஏது காலம்?

வன்னி மாள்வோர் யாவரும் இன்மையின்
“மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் செயலும்
எனக்கு எட்டாக் கரு வினையாக வரண்ட தவத்துள்
வழி வழி உழந்தேன் சுமந்த என் கோலால்!” என்றென வருந்தி

இனிவந்த ஆண்டில் ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகா
ஒரு வினை செய்ய உய்த மானுடர் தவமொடு சாலப்
பயன் கொள் அகமும் பார்கொள் ஞானமும்
நாடிய யானும் யாவும் ஆக வருக புது-ஆண்டு,வருக!

ப.வி.ஸ்ரீரங்கன்

01.01.2010

ஊடக தர்மம்

சேதுவுக்கு ஒரு முகம்-”செய்தியாளன்”.
 
-சேது ரூபன்: சில கருத்துகள்
 
சேது ரூபன் கேட்கின்றார்“ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?” என.
 
இதை யாரிடம் கேட்கின்றார்?
 
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
 
நன்று.
 
இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே”செய்தியாளன்”என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை”தமிழீழத்தின்”பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே”செய்தியாளன்”என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
 
சேது ரூபன் என்ற “செய்தியாளன்”புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்”நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
 
இன்று,இலங்கை அரசுக்காகச்”செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும்”சேதுவுக்கு எங்கிருந்து”புலிகள் வேறு-செய்தியாளன் வேறு”என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது,அமைப்பினது-அரசினதும் பிரச்சனை.எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
 
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
 
 

என்றபோதும்,சேது,”செய்தியாளன்”.
 
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்”செய்தியாளன்”-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட “செய்தியாளன்”. இத்தகைய “செய்தியாளன்” புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
 
நன்று, அன்பா-நன்று!
 
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
 
நீங்கள் கைகுலுக்கும்”விரிந்த”தளங்களின் மூலம் உங்களைப்போன்றவொரு செய்தியாளனான திச நாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
 
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
 
சேது ருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென.அதாவது,தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம்.அஃதாவது, புலிகள் “துரோகி”சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார்.ஆகப் புலிகள்”துரோகி”என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே.ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து,தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
 
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு!சொல்லக்கூடும்.சேது,இதைச் சொல்வார்.ஏனெனில்,அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம்.இது,அவரது ஜனநாயக உரிமை!
 
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல்.காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள்.இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
 
மக்களைச் சார்ந்து,அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்புக்கு-பத்திரிகையாளனுக்கு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
 
அரசுக்கும்,புலிக்கும் உறவுவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும்,உறவும் நிலைக்கமுடியும்.இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது.இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள்.உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற”செய்தியாளர்களை”கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள்.இப்போது,”செய்தியாளன்”உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது”செய்தியாளன்”தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
 
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய”கொள்ளை”யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
 
வாசகர்களே,ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்!அதாவது,இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை.அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய “செய்தியாளர்கள்”தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
 
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்”ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்”என்று.
 
அது,பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
 
இப்போது,சேது ரூபன் இலங்கை அரசோடும்,அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேது ரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
 
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும்,பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
 
புலிகளின் பினாமிகளுஞ்சரி,புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது,அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர்.இது,எதனால் ஆனது?
 
இதுதாம் வர்க்க நலன் என்பது!
 
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
 
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்”சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை”என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்”செய்தியாளர்”புரிவது புலனதகிறது.
 
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
 
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு”எட்டப்பன்-காக்கை வன்னியன்”என்று வாந்தியெடுக்கும்போது,முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது.புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
 
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
 
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது.அது,இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
 
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது!அது,ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது.நான் அதை ஏற்கிறேன்!
 
நீங்கள்,உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்துகொள்ளதக்கதே.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்.

இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன்.

தேசம் நெட்தான் வசதியானால்,அங்கே மேலும் தொடர்வோம்.

ஸ்ரீரங்கன்
29.12.09

http://thesamnet.co.uk/?p=18429

சேதுரூபன் on December 29, 2009 12:23 pm

ப.வி.சிறீரங்கன்
ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு?

சேதுவிடம் ஒரு இரட்டை முகமும் இல்லை. ஒரு செய்தியாளன் சட்டபடி அனைத்து தரப்புடனும் தொடர்பில் இருக்கவேண்டும் அவனே பூரணமான செய்தியாளன். தங்கள் வாதம் மாட்டுக்கும் ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆதங்கம் நண்பரே. உங்கள் பாதிப்புக்கு சட்டத்தை நாடலாம் அல்லது உளவியல் மருத்துவரை நாடலாம் அதுக்கு சேதுவிடம் பரிகாரம் இல்லை. சேது தங்கள் தாக்கத்தை செயதியாக மட்டும் வெளிவிட கூடியவன் அதுவே அவன் தொழில். சேது பாசிசக்கோட்டையில் உறுப்பினர் இல்லை என்றுதானே உரத்துக் கூறுகிறேன். சேது புலி என்றால் அவருடைய தகட்டு இலக்கம் என்ன? கண்டு அறிந்து சட்டத்தை நாடவேண்டிதுதானே? நீங்கள் புலியால் பாதிக்கபட்டால் சேதுவிடம் ஏன் சீறிப்பாய வேண்டும்? புலிகளை வக்காளத்து வாங்கியது சேது மட்டுமா? 500 இணையத்தளங்கள் 50 ஆயிரம் உலக ஊடகங்கள் 50 இலங்கை ஊடகங்கள் ஆகவே இவை அனைத்தும் பாசிசத்திற்கு பொறுப்பானவர்களா? அப்ப புலி தலைவரின் பேட்டியை ஒலிபரப்பிய உலகின் 1 இலட்சம் ஊடகமும் பொறுப்பாளிகளா? எட்டபர்.கொம் நானா நடாத்தினேன்? நிதர்சனம்.கொம் எனது இணையமா? நான் எவரிடம் இருந்தும் பாதிக்கவில்லை. நான் எழுதிய கட்டுரையில் சேந்து குடித்து என்றோ சேந்து படுத்து என்றோ எதுவும் எழுதப்படவில்லையே? அது நடந்திருந்தாலும் அதில் என்ன தவறு? அது எனது தனி மனித உரிமை இல்லையா? குடிப்பது தவறா? புலிகளை காட்டி கொடுப்பது எனது தொழில் இல்லையே? உமக்கு சட்ட உரிமை இல்லை என்று ஆர் சொன்னது? உமது சட்ட உரிமையை நான்தான் தட்டி பறிச்சனா? புலிகளால் நீங்கள் வெருட்டபட்டால் அதற்கு நானா பொறுப்பு? நண்பரே எனது தொடர்புகள் பரந்து விரிந்தவை. அவை இங்கு தேவை அற்றவை.

P.V.Sri Rangan on December 29, 2009 1:25 pm Your comment is awaiting moderation.

சேது,நீங்கள் பத்திரிகையாளன் என்பதைப் பயன்படுத்திவிடுவீர்களென நான் எண்ணியது சரி.அப்போது,நாங்கள் எல்லாம் உங்களது பாசையில் ஆடு மாடு வித்தியாசத்தில் கற்றுக் குட்டிகளா?

நீங்கள் ஊடகத்துறைக்கு வருவதற்குமுன் நானும் எழுத்தாளனாக-கட்டுரையாளனாக-பத்திரிகையாளனாகத்தாம் இருக்கிறேன்.இதுள் உங்களைமட்டும் இனம் காட்ட நீங்கள் குறித்த பத்திரிகையாளன் எனும் பதம் இப்போதைய”அரச-புலி”உறவுகள் குறித்துச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.ஆனால்,வரலாற்றைத் திரும்பிப்பார்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புலிகள் பக்கங்கள் தெரியும்.அதாவது, உங்களைப் போன்று பலருடன்-அரசு-அமைச்சகர்கள்,வெளியுலகமெனத் தொடர்பு வைத்த எத்தனை ஊடகவியலாளர்களைப் புலிகள் துரோகியாகக் கண்டு பொட்டுவைத்தார்கள் என்பது.ஒன்றா இரண்டா?

இப்போது,உங்கள் தரப்பு நியாயத்துக்கு இது பொருத்தமாகக் கையாளுகின்ற லொஜிக் ஏன் மற்றவர்கள் தரப்பில் பொருத்தப்பாடில்லை?

புலிகள் உங்களையும் பொட்டு வைக்கவில்லையெனக் கருதுவதாக இதைக் குறுக்காது,நமது சமுதாயத்தில் புலிகளது பாசிசப் பக்கங்களையும்,அவர்களுக்காக வக்காலத்துவேண்டிய ஊடகவியலாளர்களையும் நாம் இனங்கண்டு,அவர்களது இரட்டை வேடத்தைப் பொதுத் தளத்தில் அம்பலப்படுத்துவது ஜனநாயகப் பண்பு.உங்களது பாணியில் பத்திரிகையாளன் என்பது செய்திகள் தொகுக்கும் வேலைமட்டுமல்ல.அது,விரிந்த தளத்தில் எல்லாவகை எழுத்துக்களோடு சமுதாயத்தின் மீதான பிரச்சனைகளை முன் வைப்பவர்களுக்கும் பொருந்தும்.உங்களது பத்திரிகா தர்மத்தின்படி சமூக விரோதப் போராட்டத்தை எங்கே-எப்படி மக்கள் முன் வைத்தீர்கள்?புலிகள் குறித்து உங்கள் மதிபீடென்ன?பத்திரிகையாளன் அனைவருடனும் தொடர்பு வைப்பதுக்கும் தனிமனிதர் வைப்பதற்குமான வித்தியாசத்தைக்”காட்டிக்கொடுப்பு-செய்தி சேகரித்தல்”என்றோ அர்த்தப்படுத்தப்படும்?

P.V.Sri Rangan on December 29, 2009 2:00 pm Your comment is awaiting moderation.

சேதுவுக்கு இன்னுமொன்றையும் கூறிவிடலாம்.இப்போது நீங்கள் பத்திரிகையாளன் என்பவன் பலமட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதும்,அவர்கள் அப்பொழுதுதாம் முழுமையான பத்திரிகையாளர் என்பதும் சரியானால்,இது இந்துப் பத்திரிகை இராமுக்கும் பொருந்திவிடுந்தானே?

நீங்கள் ஆம் என்பீர்கள் இப்போது.

ஏனென்றால், உங்களுக்கான ஒரே துரும்பு இது.ஆனால்,இத்தகைய சந்தர்ப்ப அரசியலை விட்டு,ஒரு பத்திரிகையாளன் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும்,அதிகாரத்தை கேள்வி கேட்பதும் அவசியமானது.

“புலிகள்தானே இந்து இராமைத் துரோகி என்றனர்.நான் இல்லையே” என்றும் உங்களால் சொல்ல முடியும்.இப்போது, நீங்கள் ஒரு பத்திரிகையாளன்.சுந்தரின் வானொலியில் குமாரதுரை குறித்து நீங்கள் கட்டமைத்த கருத்துக்களம், பத்திரிகைக் காரருக்கு உள்ள தார்மீகக் கடமையில்தாம் நிகழ்ந்ததா?

எனக்கு, மக்களுக்குத் துரோகமிழைத்த புலியுஞ்சரி;குமாரதுரையுஞ்சரி;இராமும்சரி;நீங்களும்சரி மக்களை ஏமாற்ற முனையும்போது அனைவருமே சமூக விரோதிகள்தாம்.மக்களைப் போலித்தனமாக எவர் ஏமாற்றிப் பாசிசத்துக்கு-அதிகாரத்துக்கு முண்டுகொடுக்கின்றாரோ(அதுள் நான் உட்பட)அவர்கள் பரந்துபட்ட மக்களதும்-ஜனநாயகத்தினதும் எதிரிகளே.

அவ்வளவுதாம்.

நீங்கள் உங்களை நியாயவாதியாகக்காட்டும் உரிமையை நான் மறுக்கவில்லை.அது அனைவருக்கும் பொதுவானதென்பதே எனது வாதம்.

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?

ஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்”துரோகியாக”பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!
 
புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது “வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக”த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!
 
எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.
 
நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.
 
 

 
>>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந்து வெட்டியெடுத்துச் சாத்திரி என்ற புலிவிசுவாசி,எனக்கெதிராக-நான் மகிந்தாவை அடிபணிந்து மகிந்தாவிடம் ஆயுதம் வேண்டுவதாகப் பொருத்திப் புலிக்காகக் குரல் கொடுத்தார்.இப்படத்தை இங்கே போடுவதற்கான காரணம்:புலிகளது விசுவாசிகளும் புலிகளும் ஒரே பாதையில் நடந்தார்கள் என்பதற்கே!எட்டப்பர் டொட்.கொம்இப்போது,என்னைப்பற்றி எழுதிய பழைய லிங்கில் சண்டே லீடர் பற்றி எழுதிவிட்டுப் புதிய லிங்கில் எனது படத்தை எடுத்துவிட்டு,அவதூறைமட்டும் விட்டுள்ளார்கள்.படம் கழற்றியதற்கான காரணம்:அப்படம் ரீ.ரீ.என் தொலைக்காட்சியால் பிடிக்கப்பட்டதென்பதும்,அத்தொலைக்காட்சி புலியுடையதென்பதும்,எனவே,எட்டப்பர்.கொம் புலிகுரியதென்றதையும் இல்லாதாக்குவதற்கே.புலிகள் இப்படி எத்தனை சுத்துமாத்துச் செய்வினம் என்பது உலகறிந்தது.<<
எட்டபர்.கொம் பழையசுட்டி:
எட்டப்பர்.கொம் புதிய சுட்டி:
————
 
 
P.V.Sri Rangan on December 29, 2009 8:46 am Your comment is awaiting moderation.
 
சேது இரூபன் தன் வாக்குமூலத்துடன் ,தனக்கு இலங்கை அரசு-தூதுவராலயம் உட்பட ;அமைச்சகர்களுடன் தொடர்பிருந்ததாகச் சொல்கிறார்.இது பல வருடங்களாக.அத்துடன் ,புலிக்கு விசுவாசமாகவும் கருத்துக்கள் உரைத்துத்”தமிழீழ”போராட்டம்பற்றி- நியாயப்படுத்திப் புலிக்கு-புலியாகச் செயற்பட்டவர்.இது வரலாறு-புலம் பெயர் ஊடகங்களைக் கேட்டவர்கள்-பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
 
 
இங்கு என்ன கேள்வியென்றால்,புலிகள் தம்மை எதிர்ப்பவர்கள் மாற்றுக் கருத்து வைப்பவர்கள்மீது “கருத்து”க்கட்டித் துரோகிகளாகப் பொதுத்தளத்தில் ஒருவரை”இனங்”காட்டும்போது-அவர்களுக்கு இலங்கை அரசோடும்-தூதுவராலயத்துடன் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது.இப்போது, சேது இரூபன் சொல்கிறார் ,தனக்கு, புலிகள் மற்றவர்கள் மீது போர்த்திய “அனைவருடனும்” தொடர்பிருந்ததாக.
இங்கே, புலிகளது தர்மப்படி சேது ரூபன் ஏன் துரோகியாக முடியவில்லை?
 
மற்றவர்கள் ,புலிகளது பாசிசத்தை அம்பலப்படுத்தியபோது: டுசில்டோர்ப் மே தினத்தில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியின் கமராவில் பிடிக்கப்பட்ட எனது படத்துடன் -என்னை எட்டப்பனாகக் காட்டிப் புலிகள் “கருத்து”க்கட்டிப் போட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்-இங்கே, புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இந்தவிசயம் சொல்லப்படுகிறது.
 
சேது ரூபனது வாக்குமூலம் மிக முக்கியமானது.புலிகளதும்-அவர்கள் விசுவாசிகளதும் இரட்டை முகத்தைப் புரிந்துகொள்ள.
 
 


 
 
புலிகளால் மிரட்டப்பட்டுத் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நான், இப்போது எங்கே நியாயம் கேட்கலாம்?;என்னைப் போல் எத்தனை தனிமனிதர்கள் இவர்களது பாசிசச் சேட்டையால் பாதிக்கப்பட்டோம்?
 
இப்போது ,சேது ரூபன் தனது உறவுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.இதுவே-புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.புலிகளுக்கு வக்கலாத்து வேண்டியவர்கள் முதல், அவர்களது உறுப்பினர்கள்வரை அனைவரும் புலிகளது பாசிசத்துக்குப் பொறுப்பானவர்கள்.எனவே,இவர்களுக்கும் அதே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எட்டப்பர்.கொம்-நிதர்சனம் என எத்தனை நூறு புலி ஊடகங்கள் மக்களை வெருட்டிப் பணிய வைத்தனர்?
இன்று இவர்கள் சுயமாகப் பாதிக்கப்படும்போது நியாயம்-சட்டம் எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
 
எனக்கு, இலங்கைத் தூதுவர் காரியாலய அதிகாரிகளோடு உறவென்றும்;சேர்ந்து குடித்ததென்றும்,புலிகளைக்காட்டிக் கொடுப்பதாகவும் உரைத்தவர்களே இப்போது தமக்கும் நியாயம் கேட்கின்றனர்.இதுள், சேது ரூபன் எங்கே நிற்கிறார்?
 
எம்மைப்போன்ற நிலையுள்ளா;
அன்றிப் புலிப் பினாமிகளது நிலையிலா?
 
 
சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?
 
 
புலிகளால் தொடர்ந்து வெருட்டப்பட்ட-உளவியற் தாக்குதலுக்குள்ளான-படங்கள்போட்டு எட்டப்பனாக இனம் காட்டபட்டவர்களுள் ஒருவனாக… இப்போது, நியாயம் எவரிடம் கேட்பதென்று யோசித்தபடி ,உமது(சேது ரூபன்)நிலையையும்-வாக்கு மூலத்தையும்கண்டு இதை எழுத முனைந்தேன்-அவ்வளவுதாம்!
 
“முற்பல் செய்தால் பிற்கல் விடியம்”என்று தமிழிலும் பல அநுபவ மொழி உண்டு.
 
 
அது, இப்போது நிஷமாகி வருகிறது.
 
…ம்… புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கோட்டில் நியாயம் கேட்கிறது?
 
புலிகள் நிசத்தில் தற்போது அடையாளம் காட்டுவார்களா?
 
சேது ரூபனுக்கு இது தெரியாதா என்ன?
 
கேளுங்கள் சேது நியாயத்தை-அது உங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.மற்றவர்களுக்கும் எனப் புரிந்து அவர்களுக்கும் உள்ளதை அங்கீகரித்து.
 
இப்படி அங்கீகரிக்கும்போது, நீங்கள் “ஈ.ரி.பி.சி.”வானொலியில் வைத்த அனைத்துப் பழி சுமத்தலுக்கும் பொறுப்பேற்று.உங்கள் குரலில் நீங்கள் புலிக்காக மற்றவர்கள்மீது பழி சுமத்தியதன் ஒலியிழை பலரிடம் ஆதாரமாக இருக்கு.
 
அதை வைத்து, அவர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
காலைப்பொழுது மணி:9.45
 
 
 

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்
 
 
எஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும் (http://thesamnet.co.uk/?p=18428) . : எஸ் சிவரூபன் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.
 
கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.
 
1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.
 
அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.
 


 
நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.
 
சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.
 
எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.
 
மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
 
இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.
 
Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
 
2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.
 

   
Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.
 
வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.
 
Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?
 
Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.
 
அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.
 
ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
 
5. “Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.
 
Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.
 
7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.
 
அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.
 
 
கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.
 
http://thesamnet.co.uk/?p=18429#comment-160078

செங்கதிர் சேகரா!

போர்-”ஆசிரியர்” பெரி-துவக்க…

புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து “உம்பால்” ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
“எங்கணாஅ!”பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
“வருவதோர் துன்பம் உண்டு”
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09