15 வயதுப் பாலகனது தற்கொலை!

தற்கொலை!

துகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது.

15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது.

எனது தலை குனிகிறது!

இன்றைய குழந்தைகளது தேவையைப் புரியமுடியவில்லை!

அவர்களது உலகத்தைத் தரிசிக்கத் தெரியவில்லை.அவர்கள் முற்றிலுமே வேறானவர்களென்பதை அங்கீகரிக்கவும் முடியவில்லை!

குழந்தைகளை நமது சொத்தாக,எமது பிற்காலத்து முதுமைக்கு ஒரு ஊன்றுகோலாகவே நாம் கண்டு வந்திருக்கின்றோம்.இதை எமது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுவந்தேன்.எனது குழந்தைகள் என்னிடமிருந்து இதைக் கற்கக் கூடிய சூழலை நான் ஏற்படுத்தவேயில்லை!அவர்களை-அவர்களாகவே இருக்க விடுவதென்பது எனது கற்கையின் வழி நான் கண்டடைந்தவுண்மை!

இந்திய-இலங்கை மற்றும்தமிழ் சூழலில் மனிதருக்குள் என்னென்ன பிரிவினைகள் இருப்பதென்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. விக்கிப் பீடியாவில் சாதியக் கட்டமைவுகளையும்,இந்து மதத்தைக் குறித்த கற்கையில் கண்டடைந்த எனது மூத்தமகன், சில கேள்விகளைக் கேட்டான்.அவனுக்கு: “ இந்துமதம் என்பதும்,உலக மதங்கள் யாவும் மக்களை அடிமைப்படுத்தும் அபினி “ என்பதை உரைத்தபோது ,அவன் மறுப்பெதுவும் கூறாது ஏற்றான்!மரபுரீதியான எந்தத் தமிழ்ச்சம்பிரதாயமும் அவர்களுக்குத் தெரியாது!எனினும்,பயமாக இருக்கிறது.குழந்தைகளது உலகத்தையும்,அவர்களது சிந்தனைத் திசைவழிகளையும் நாம் சரிவரப் புரியவில்லை!


அவர்கள்:

1: அதீதமான சுதந்திரவுணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள்,

2:தன்முனைப்பு அதிகமான தன்நிலைகளைத் தகவமைப்பவர்களாக இருக்கின்றனர்,

3:பெற்றோர்களைக் குறித்து எந்தக் கவலையுமற்ற அந்நியர்களாக இருக்கின்றனர்.அல்லது, பெற்றோர்கள் கட்டுப்பெட்டிகளெனப் புரிந்துபோயினர்,

4:தமது நலன்சார்ந்தும்-விருப்புச் சார்ந்தும் அதிகமாகச் சிந்திக்கின்றனர்,

5: கல்வி குறித்து எந்தப் பொறுப்புமற்ற உலகத்தில் தமது போக்குக்குக்கேற்ப எதையோ தேடிச் செல்வதாக அவர்களது காலம் கழிந்துபோகிறது.படைப்பாற்றலின்றிப் பாடசாலையில் அதிகம் அவமானப்படுபவர்களுமாக இவர்களே இருக்கின்றனர்.

இவற்றை, இந்த வர்த்தகச் சமூகமே படைத்து இவர்களைத் தமக்கேற்பவும் தயாரித்துவிட்டபின்,நம் குழந்தைகள் நம்மவர்கள் இல்லை!அவர்கள்,இந்த நுகர்வடிமைச் சமுதாயத்தின் வாரீசுகளாகிப்போயிருக்கிறார்கள்.மீள, வேருக்கு அழைப்பதும் முடியாது போகிறது.அப்படி அழைக்காதவரை இந்தச் சமுதாயத்தின் அற்பத்தனங்கள் அவர்களைச் சிறுபருவத்திலேயே கொலைக்குத்தூண்டுகிறது-தற்கொலை சாதாரணமாக நிகழ்கிறது.வாழ்வு பரிகாசத்துக்குரியதாகப் படைக்கப்பட்டவெளியில் [Das Leben ist es wert gelebt zu
werden, da ein Gott oder eine Weltvernunft den grundsätzlich positiven Charakter menschlichen Daseins im Normalfall garantiert. ]அவர்கள் தம்மைத் தாதாவாக்கி வைத்து ஊர்கோலம் போகின்றனர்.குறிப்பிட்ட காலத்தில் தாதாவுக்குரிய மகுடஞ் சரியும்போது தமது வாழ்வை முடிப்பதில் ஒரு எதிர்நிலையான கற்பனை வீரத்தைக்காண்பதோடு,மரணத்துள் தமது தோல்வியைப் புதைக்கின்றனர்!

இந்த நிலையில்,இந்த மாதம் ஜனவரி 2012 க்குள் இரண்டு இளைஞர்கள் நானறியத் தற்கொலை செய்துவிட்டனர்.

ஒருவனுக்குப் பதினெட்டு வயதாகிறது.அவன் வீட்டைப் பெருக்கச் சொன்ன தாய்கு வாய்காட்ட,அவனது தந்தை அவனை மெல்லத் தட்டிவிட்டுத் தாயும் தந்தையும் கடைத்தெருவுக்குச் சாமான்கள் வேண்டச் சென்றபோது, அந்தப் பையன் சொன்ன வார்த்தைகள்:“நீங்கள் வீட்டுக்கு வரும்போது வீடு எப்படி இருக்குமென்று பாருங்களேன்“என்பதே!

கடைத்தெருவிலிருந்து வீடுமீண்ட அப்பாவிப்பெற்றோர்கள் அந்தப் பதினெட்டு வயது இளந்தாரியின் உடலைத் தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் பார்க்கும்போது வாழ்வில்-குழந்தைகளோடான அணுகுமுறையில் நமது தவறென்ன-குழந்தைகள்கொண்டிருக்கும் சுதந்திரவுணர்வென்ன-புரிதலென்னவெனக் கேட்டு வைப்பது சாத்தியமாகிறதா?
Kierkegaard: „Entweder-Oder“ sagen:„Ein Selbstmord ist der negative Ausdruck für die unendliche Freiheit“கீர்கேகோட் வாதத்தின்படி வாழ்வு தேர்வாகிறது.“அதுவா-அல்லது இதுவா“தற்கொலையென்பதாவது எதிர்மறையான பொருட் குறித்துரைப்பினும் அது முடிவற்ற சுதந்திரத்தை வழங்கிவிடுவதென்பதில் எனக்குச் சிக்கல்கள் அதிகமாகிறது.

நேற்றுப் பச்சப்பாலகன்,15 வயது ஆரம்பிக்கும் சிறுவன் தாயிடம்கூறிப் படம்பார்க்கச் செல்கிறான்.இரவு படம் முடிந்து நண்பர்களோடு வரும் அந்தப் பாலகன்,இம்பிஸ்[Imbiss] கடையில் டொனர்(Döner) வேண்டிச் சாப்பிட்டபடி அம்மாவுக்கு போன் செய்கிறான்:“அம்மோய் நான் டோனர் [ Döner ]சாப்பிடுகிறேன்.அடுத்த பஸ்சுக்கு வீட்டை வந்துவிடுவேன்.“ என்னவொரு ஊழ்வினை?இரவு பத்து மணிக்கு மகனின் தொலைபேசி மணியைக்கேட்ட பெற்றோருக்கு இப்போது, இரவு 11 மணிக்கு வீட்டு மணி ஒலிக்கிறது.

மகன் வந்துவிட்டானென ஓடோடிச்சென்று கதவைத் திறக்கும் தாய்க்கு, ஜேர்மனியப் பொலிசாரே கண்களில்படுகிறார்கள்.

பதை பதைத்துப் போனவர்களிடம்,“இது உங்கள் பையனின் ஜெக்கற்றா,இது அவனது மணிபேர்சா,இது அவனது பாடசாலை அடையாள அட்டையா“எனப் பொலிசார் விசாரித்துவிட்டு,மகன் ஓடும் இரயிலின்முன் பாய்ந்து இறந்துவிட்டான் எனும் செய்தி சொல்லப்படுகிறது.

அட,அநியாமே!இதுவொரு வாழ்வா?

ஏன்-ஏன்?

உனக்குக் குறை வைப்பவன் எனது நண்பனில்லை!அவனது குமாரனான நீ-ஏன் இப்படி?

கொஞ்சம்,இந்தத் தருணத்தை உள்வாங்கிச் சிந்திக்கின்றேன்.

அவனது பெற்றோர்,மிக நடுநிலையானவர்கள்.பொதுவாக எவரோடும் சோலி சுரட்டுக்குப்போகாத மென்மையான இதயமுடையவர்கள். எனினும்,அவர்களது பையனும் தற்கொலைக்குப் போகும் சந்தர்ப்பம் எதனால் உருவாகியது?

கல்விக்கூடத்தின் அதிகாரத்துவ நிலைக்கு,அல்லது குடியேற்றவாசிகளைக் குட்டும் ஆசிரிய மனோ நிலைக்கு[ fatalistischer Selbstmord ] இந்த மாணவன் பலியானான்?புரியவில்லை!

அல்பேர்ட் காம்யு குறித்த “ Das Gefühl des Absurden[உலகத்தின் _அபத்தமாகும் உணர்வு ] „இந்த மாணவ மனநிலையில் உலகத்தின் பொருள் [Es gibt nur ein wirklich ernstes philosophisches Problem: den Selbstmord ]எதுவுமில்லையென உணர்ந்திருப்பதால் இந்த அதிவேகப் பயணம்? பெற்றவர்கள் நாம்.மனம் வேதனையாலும்,தோல்வியாலும் அவஸ்த்தைப்படுகிறது.

எப்படி இவற்றை விளங்க முற்படுவது?.

ஒவ்வொன்றாக எழும் முரண்பாடுகள்,இறுதியில் பாலகர்களது உலகத்தில் அர்த்தமற்ற உலகமென [ die Welt sei absurd ]விரிவதா?

எமில் துர்க்கைமை மீளவும் வாசித்துப் பார்க்கிறேன்.என்ற போதும் மனம் ஒருமைப்பட மறுக்கிறது.

சாவை [Freitod ]அரவணைக்கும் பாலகனின் தோல்வி என்னவாக இருக்கமுடியும்?

தற்கொலைபற்றிய கூட்டு மனப்பாங்கை இந்தவயதில் இவன் உள்ளத்தில் உருவகப்படுத்திய சந்தர்ப்பம் எப்படியுருவாகிறது?

அவனது மனிதிலே உணரப்பட்டது எது?

Das Gefühl des Absurden:

Egoismus_தன்முனைப்பு(-), Anomie_ஒழுங்கு பிறழ்வு நிலை(-)

Fatalismus_விதிமுனைவாதம் (+), Altruismus_பொதுமைச்சார்பு (+ ),

அவனது உலகம்,அவனுக்கு வசப்படவில்லையா?

அந்தவுலகத்தை அவன் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடாக இந்த மரணம் இருக்கமுடியுமா?

அல்லது,அவனது உலகத்தை மறுக்கும் இந்த வாழ்நிலையை எதிர்த்து அவனது கலகமாக விரியும் பரிகாசமா [Egoistischer Selbstmord -altruistischer Selbstmord ? ]இந்த மரணம்?

இரு குழந்தைகளுக்கு அப்பனான நான் அச்ச முறுகிறேன்.

குழந்தைகளது உலகத்தைப் புரியாத நிலையில், அந்த மரணம் பெற்றோராகிய எமது தோல்வியெனக் கருதுகிறேன்.

பிள்ளைகளது உலகத்தைத் தரிசிக்க முனையாதவொரு சூழலில் பெற்றோர்கள் இழப்பது,அந்தப் பிள்ளையை என்றால் [anomischer Selbstmord ]அதையொட்டி மிக ஆரோக்கியமாகச் சிந்திக்கவேண்டும்-அததீவிரமாக நம்மை நாம் கேள்விக்குட்படுத்திச் சிறார்களது உலகத்தைத் தரிசித்துக் குழந்தைகளைப் புரிந்தாகவேண்டும்.

எனக்கு,இந்த அச்சம் எப்பவுமே இருக்கிறது.

குழந்தைகளை எமது சொத்தாக எண்ணுவதை நான் எப்பவோ தவிர்த்துவிட்டேன்.ஆனால்,அவர்களது உலகத்தைப் புரியவே முடியவில்லை!

இதைப் புரிந்துகொள்ள முனைந்தால் இத்தகைய சிறார்களது தற்கொலையைத் தடுத்துவிடலாம்? புரியவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.01.2012

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :
71 நபர்கள்-கையெழுத்தும்,அறைகூவலும்!

ந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?

இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு „வேறுபாடுகளை“ மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.

இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.

ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.

அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?

அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.

நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.

இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.

இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர். இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!

நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.

இது,திட்டமிடப்பட்ட சதி.

இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.

இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.

இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது“புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு“என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?

இந்த“தமிழீழப் போராட்டம்“என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?

இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.

அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.

இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.

இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.01.2012

கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கையுள்: கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

வளர்மதியின் முகநூல் நிலைத்தகவற்பகுதியில் நிர்மலா தலைமையின் கீழ், 71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கை குறித்த விவாதம் நடக்கிறது.அதுள், பெரும் பாலும் நமக்குத் தெரிந்தவொரு அன்பர் கையெழுத்திட்ட சமாச்சாரம் குறித்துப் பெரும்பாலும் கேள் விகள் எழுகிறது.அறிக்கையின் பின்னாலிருக்கும் அரசியலையும்மீறி , தனிநபர்சார்ந்தியங்கும் சூழலும்,தனிநபர் நடாத்தையும்சார்ந்து இந்தக் கேள்வி முக்கியமடைவதால் அது குறித்த சிறு குறிப்பாக இதை எழுதுவது அவசியமாகிறது.

இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.

இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.

இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.

யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.

வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?

தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், „இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்“ என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.

இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!

அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.

ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.

வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.

தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!

அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.

அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?

பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:

பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: „பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.

மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:“நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.01.2012

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

நாசார் என்ற „பெருமனிதனின்“ பொங்கலுக்கான அறைகூவல்!


இந்தக் குரல் பரவலாகவேண்டும்.

நாசாரது குரல், பரவலான தென்மாநில மக்களது சமுதாய ஆவேசமாகும்.

குறிப்பாக,இந்திய மத்திய அரசின் தாரளவாதப் பொருளாதார இலக்கால்-அந்நியப் பெரு பகாசூரக்கம்பனிகளால் பழிவாங்கப்பட்ட விவசாயிகளின் குரல் இது.

இஃது, முழுமொத்த மக்களதும் உரிமைக்குரலாகிறது.

உணவு உயிர்வாழ்வுக்கு அடிப்படை.அந்தவுணவுக்கு உழவு-விவசாயம் அடிப்படை.அந்த விவசாயி-உழவன் தன் விளைச்சலுக்குக் காரணமான சூரியனுக்கும்,வானுக்கும் நன்றி செலுத்தும் இன்றைய நாளை, நான் பெரிதும் மதிப்பவன்.

அந்த நன்றி செலுத்தும் விழாவுக்கு நானும் சொந்தக்காரனுங்கூட.எனது தந்தை சிறு விவசாயி.அந்த விவசாயமே நமக்கு அடிப்படை.

தமிழகச் சினிமா இயக்குநர்-நடிகர் நாசாரது குரல் இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் பெரிதான விடையம்.

பாராமுகமாக இருக்கும் தமிழக நடுத்தரவர்க்கச் சூழலில், நாசார் மக்களோடும்,மண்ணோடும் ஒன்றித்திருந்து, தன்னை மண்ணிலிருந்து பிரிக்காதவொரு மகத்தான கலைஞனாகக் காட்டிக்கொண்டிருகிறார்.

தான்- மக்கள் கலைஞன்தான் எனச் சொல்லிக்கொள்ளும் தகமையை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார்.உலக மகாக் கலைஞன் சார்லிச் சாப்பிளினின் சமுதாய ஆவேசமானது, இரண்டாம் உலக யுத்தத்துக்கெதிராகவும் பாசிசக் கிட்லருக்கு எதிராகவும் மகத்தான எதிர்ப்புக்குரலாகச் „சர்வதிகாரி“ எனும் படம் மக்களிடம் அழிவைப் பேசிப் பாசிசத்தை நகைப்புடைத்தது.இதைக் கவனப்படுத்தும்போது,நாசார் அவர்களது இந்தக் குரல் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் பார்ப்பனியக் காவி நிறப் பாசிசத்தையும்,அதன் விபரீதங்களையும் நாம் கவனத்துள் கொள்ளவேண்டியவொரு புள்ளியை மறுமுனையூடாகக் காவி வருகிறது.

அவரது இந்த உரையாடலானது தொடும் புள்ளி, மக்களை அக்கறை கொள்ள வைக்கும் அரசியலது முன்நிபந்தனை“பார்ப்பனியப் பாசிச ஆபத்தை உணருங்கள்“என்பதே!

இதுவேதாம்(நவலிபரல்ப் பார்ப்பனியம்) உழவையும்,உழைப்பையும் வேட்டையாடிப் பாசிசத்தைக் கட்டமைக்க அந்நியப் பெரு நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் காட்டிக்கொடுத்தும் போதாதெனப் பொங்கலுக்கு நரித்தனமாக ஆதரவாகவும்,வாழ்த்துவதெனும் போர்வையில் மக்களை வேட்டையாடுகிறது.

இந்த நவலிபிரல் பார்ப்பனியப் பாசிசமானது மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்துக்குச் சார்ப்பான இந்திப் பார்ப்பனியச் சாதிகளையெல்லாம் அணிதிரட்டிக்கொண்ட பார்ப்பனியப் பெரு நிறுவனத்தின் மையத்தைப் புதிய பாணியில் தகவமைத்து, அதை நோக்கிய அரசியலை விதைக்கிறது.எனவே,இதற்கு எதிரான குரல்கள் இந்தவகை கேள்விகளுடாகவே விசும்பு நிலையடையமுடியும்.எனவே,நாசாரது குரல் முக்கியமானது.

இதைப் பரவலாக்குங்கள் நண்பர்களே(நண்பர்களுக்கு ஆண்பால்-பெண்பால் கிடையாது)!

இது,மண்ணின் குரல்-மகத்தான விவசாயத்தின் இருப்புக்கான உரிமைக்குரல்.அந்நிய தேசப் பெரும் கொம்பனிகளது ஈனத்தனமான செயலுக்கு-விவசாயத்தின்மீதான அவர்களது அப்பட்டமான இலாபவேட்கையின் கயமைக்கு எதிரானது.எனவே,எமது விடுதலை என்பது,இங்கிருந்துதாம் ஆரம்பமாகிறது.

இதைவிட்டுத் தமிழகத்தை ஆளும் பார்ப்பனிய ஜெயலலிதா தலைமையானது பார்ப்பனியத்தை மீளத் தகவமைக்க விரும்புகிறது.அதன் நிகழ்வுத் தன்மைக்கொப்ப அனைத்து உரிமைகளையும் மெல்ல வேட்டையாடும் பார்ப்பனியமானது இன்று துக்ளக் „சோ“ இராமசாமி தலைமையில் துக்ளக்கின் 42 ஆண்டு விழாவைக்கொண்டாடுவதாகச் சொல்லி, அகில இந்தியா தழுவிய பார்ப்பனியச் சாதியின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பரந்துபட்ட மக்களை அடக்கக் கைகோர்கிறது!

அது,மீளத் தன்னைத் தகவமைக்கிறது.மிக இருண்டவொரு காலத்தைத் தமிழகத்தில் செயற்படுத்தத் துக்ளக் சோவென்ற பார்ப்பான் விரும்புகிறான்.

இது ஒரு தனிப்பட்ட பார்ப்பானின் விருப்பு அல்ல.

இந்தவிருப்பினது துரும்பே சோ.

இந்த விருப்பமானது வளர்ந்து, பெரு நச்சு விருட்சமாக நிற்கும் பார்ப்பனிய நிறுவனத்தின் இருப்புக்கான வியூகத்திலிருந்து எழுவது.இந்தப் பார்ப்பனியமே இந்திய ஆளும் வர்க்கத்தின் விசுவாசமான கருத்தியல் கட்டுமானமாகும்!.இது, வன்முறை சார்ந்தும்,சாரமலும் கருத்தியற் பயங்கரவாதத்தைப் பார்ப்பனிய மதமான இந்து மதத்துக்கூடாக மக்கள்மீது அதிகாரமாகக் கட்டித் தகமைத்துள்ளது.இரண்டாயிரம் ஆண்டாக நம்மீது நிகழ்தப்படும் அடிமைத்தனம்இது.

இதை முறியடிக்கவேண்டிய அவசியத்தை சோவினது சொற்பொழிவே எமக்கு உணர்த்துகிறது:

„தமிழகத்தை,குஜராத்தைப்போலவும் அதை ஆளும் ஜெயலலிதாவை மோடியைப்போன்று அல்லது அவரைவிடவும் மேலாக உயர்த்தவேண்டும்“ என்கிறார், துக்ளக் 42 வது ஆண்டு நிறைவு விழாவில்!

அதாவது,குஜராத்தில் இந்துமத வெறியைக் கிளறி 3000 இஸ்லாமிய மக்களை வேட்டையாடியதுபோன்று, தமிழக்கத்தில் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்ப்பனியத்தை நிலைப்படுத்த விரும்புகிறது பார்ப்பனியக் கும்பல்.இந்த பெரு அபாயத்தை நாம் எல்லோரும் உணர்ந்தேக ஆகவேண்டும்.

கோடம்பாக்கச் சினிமாத்துறையுள் ரஜனிகாந் போன்ற தமிழகத்தின் எதிரிகள்,நேரடியாகவே பார்ப்பனியத்தோடு சமரசமாகித் தமது சொத்துக்களையும்,சுகத்தையும் காக்கும்போது,நாசார் என்ற தமிழன் இந்த மண்ணின் மகத்துவத்துக்காகக் கரிசனைப்படச்சொல்லிக் குரல் கொடுக்கின்றான்.அவனது குரலை நாம் அனைவரும் நியாயத்தின் குரலாக எடுத்துக்கொண்டு,அதையொட்டிச் சிந்தித்தே ஆகவேண்டும்.

தமிழகத்தை ஒட்ட மொட்டையடிக்கும் பார்ப்பனியக்கூட்டானது அந்நியப் பகாசூரக்கம்பனிகளோடு கூட்டுவைத்தத் தமிழக வளங்களைக் கொள்ளையிட்டதும் அல்லாமல் முழுமொத்தத் தமிழகத்தின் குடிகளையே கொடிய வன்முறை-சாதியவொடுக்குமுறைகளால் வேட்டையாட முனைகிறது.இதன் கட்டியமே துக்ளக்கின் 42 ஆண்டு நிறைவு விழாவும்,அதன் நிகழ்வுக்குத் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கும் பாசிச இந்து அத்வானி-மோடிக் கும்பலும் அதன் பண்டாரப் பாசிசக் கூட்டுக்களும்.

ஆர்.எஸ்.எஸ்.போன்ற நாசியக் கட்டமைவு-கருத்தமைவுக் கட்சிகளையே பார்ப்பனியம் உருவாக்கிவைத்துத் தமிழகத்தை வேட்டையாடும் தலைமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கும்போது, அதையே முழுமொத்த இந்தியாவுக்குமாக உருவாக்குவதில் தமிழ்நாட்டுப் பர்ப்பான் சோவுக்கு அவசியமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் தலைமையில் இந்தயா பூராவுக்கும் உள்துறை மந்திரியாகத் தான் இருந்து, மீள வர்ணாச்சிரம அடிமைத்தனத்தை நிலைப்படுத்துவதில் கவனம் உருவாகியுள்ளது.மக்களே!,இது ஆபத்தானவொரு காலத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. பிளவுபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்பாட்டைப் பார்ப்பனியமானது தீர்த்து வைக்கும்பொருட்டு எடுக்கும் நிலைகள் யாவும் பாசிசத்தை நோக்கி நகர்வதாகும்.இந்தியாபோன்ற சாதிய அடிமைச்சமுதாயங்களில் இந்தப் பாசிசத்தின் உச்சக்கட்டமானது சாதியப் போராட்டங்களாகவும்,மதவாதப் போராட்டங்களாகவும் எழுந்து மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இது மீளவும் தலையெடுக்கிறது. இதையொட்டித் தமிழகம் என்ன செய்யப் போகிறது?

இதிலிருந்து மீள்வதாயின் குறைந்தபட்சமாவது பார்ப்பனிய சூட்சியைப் புரிந்தாகவேண்டும்.அதை,பெரியாரது வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை உரைத்துப் பார்க்கவாவது நாசாரது அடிப்படையான கோரிக்கை வழி செய்யட்டும்.


நாம்,நாசாரது அறிவிப்பை,பிரேரணையை,குறைந்தபட்ச அறைகூவலைப் புரிந்துகொள்வோம்,அத்தகைய புரிந்துகொள்வதனூடாகப் பலகோடி நாசார்கள் தமிழகமெங்கும் உதிக்கட்டும்!

அவர்களால்,தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படட்டும்!இல்லைத் தமிழகத்தைப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள் குருதியாற்றில் மிதக்க விடட்டும்!எல்லாம் தமிழக்கத்து இளைஞர்களது கைகளிலேயே உண்டு!

வாழ்க,உரிமைக்கான குரல்கள்,வளர்க உரிமைப்போராட்டம்!-இதுவே,பொங்கலுக்கான எனது அறைகூவலும்-வாழ்த்து நோக்கிய ஒலிப்பும்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
15.01.2012

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள்

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள் தமிழுரிமைச் செடிகளை மேய்ந்துகொண்டபோது…

71 புத்திசீவிகளது கையெழுத்து,அறிக்கை-கோரிக்கை குறித்து இந்த எதிர்ப்பறிக்கையையும்[ http://inioru.com/?p=25534 ] ,தீபந்தொலைக்காட்சி உரையாடலையும் பார்த்தபின் இதைக் குறித்துச் சொல்வதும்,மக்களுக்கான தோழமை சேர்தலும் நமக்கு அவசியமான பணிகளாகிறது.எமது மக்கள்மீது பழிசுமத்திச் சிங்கள ஆளும் வர்க்கத்தையும்,இந்தியப் பிராந்திய நலத்தையும் காக்கமுனையும் இந்தச் சதிகாரர்களது அணித்திரட்சியும்,அவர்களது கோரிக்கைக்குள்- மொழிகளுக்குள் திணித்துத் தரப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களுக்குத் தரப்படும் உயிர்கொல்லி நச்சு விசம் ஆகும்.

இதை,இன்னொரு இனத்தின்மீதான கரிசனையாக இந்த மேட்டுக்குடிகள் உரைப்பது,அந்தத் துரத்தியடிக்கப்பட்ட மக்களது வாழ்வை நாசமாக்கிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின்கயமைமிகு வரலாற்றை மறைப்பதில் மையமுறும்!

இந்தப் பிரச்சனைகுறித்து வெறுமனவே“பொய்-உண்மை“எனக் கருத்தாட முடியாது.அல்லது, நிர்மலாவின் அகங்காரமென்றும்,ஆணவமென்றும் குறித்துக்கொண்டு,மேலே செல்லமுடியாது!நிர்மலா முன்வைப்பதும்,சேனன் முன்வைப்பதும் இரண்டும் வெவ்வேறு அடிப்படையைக்கொண்டது.நிர்மலா ஆளும்வர்க்க நலனுக்கொப்ப-அவர்களது வியூகத்தைத் தனது தலைமையில் நடாத்திக் கொண்டிருக்கும்போது, இவைகளுக்குள் மிரண்டுபிடிக்கும் ஆளும் வர்க்கத்தினது நலன்களுக்கேற்ப, இலங்கை-இந்திய அரச இராஜதந்திரம் புகுந்து நிர்மலா மொழிவுகளாக மேலெழுகிறது. சேனன் மக்களது குரலைப் பதியமிடும்போது இன்னும் விபரமாகச் செய்திருக்கவேண்டியவொரு சூழலைத் தவறவிட்டுள்ளார்.

ஏலவே,புலிப் பாசிசத்தின் மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறியால் பழிவாங்கப்பட்ட மக்களினங்களை இணைத்து இத்தகையவொரு அரசியல் சூதாட்டத்தைச் செய்யக்கூடிய தகவமைப்பைச் செய்வதில் இந்தியச் சணாக்கியத்தின் வெற்றியை அன்றே பல கட்டுரைகளில் இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள்.

புலிவழிப் போராட்டச் செல் நெறியை அந்நிய அடியாட்படைக்குரியதாகவே பேசியும் இருக்கிறோம்.அதன் விளைவுகள் முள்ளிவாய்க்காலில் அறுவடையாகியதும் வரலாறுதாம்.

இதிலிருந்துதாம் இன்றைய இந்த நிர்மலாவின் ஆடுகளது முடிச்சை அவிழ்ப்துப்பார்க்க வேண்டும்.நிர்மலா மேய்ப்பது இந்திய-இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கான ஆடுகள் என்பதைக் கறாராகச் சொல்லிக்கொண்டு…

இலங்கையில் நடந்தேறிய இனமுரண்பாடுகளானது முற்றிலும் வர்க்க நலன்களது அடிப்படையிலேயான முரண்பாடுகளாகவே மேலெழுந்தன.அந்த முரண்பாடுகளை இங்ஙனம் குறித்துங்கொள்வது சுலபம்:

இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் உருவாகிய மூலதனத்தின் நலம் நோக்கிய முரண்பாடுகள்,சந்தை-வளம் போன்றவற்றைப் பங்கீடு செய்வதில் சிக்கல்களைக்கொணர்ந்தபோது,ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கின்ற ஆளும் வர்க்கப் போக்குகள்,ஒன்றையொன்று மொட்டையடிக்க முனையும்போது,அங்கே இனஞ்சார்ந்த முரண்பாடுகளாக அவை மக்களிடத்தில் உயிர்ப்பலிகளைக் கேட்டன.இந்த முரண்பாடுகளாக உயர்ந்த வர்க்க நலன் சார்ந்த இனஞ்சார் மூலதனக் குவிப்புறுதிக்கேற்ற அரசியற் கோசங்கள் மதஞ்சர்hந்த,மொழிசார்ந்தும்,பண்பாட்டுத்தளத்தில் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியற் தகவமைப்புகளை மெல்ல முன்னெடுத்துக்கொண்டன.

தமிழ்த் தேசியவாதிகளது-அரசியற் கட்சிகளது கோரிக்கைகளுக்குள் அவர்களது எஜமானர்களது முரண்பாடுகள் மெல்லத்தலை காட்டின.அவ்வண்ணமே,சிங்களப் பாசிச அரசினது கோரிக்கைக்குள் சிங்கள ஆளும் வர்கத்தின் நலன்களும்,அதுசார்ந்த முரண்பாடுகளும் அதிவேகமாகக் கலவரமாகக்கூட மேலெழுந்துகொண்டது.இப்படி ஒவ்வொரு வர்க்கமும் முட்டி மோதும்போது,இனஞ்சார் அரசியலும்,அதுசார்ந்த அரசியல் நடவடிக்கைகளும் மொழுமொத்த இன நலனுக்கானதென்ற போர்வையில் மக்களை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பாரிய யுத்தமாகவும்-கலவரமாகவும் வெடிக்கிறது.

அன்று,“முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களைக்கொல்“ என்று இந்திய ரோ ஆலோசனை செய்த போது, புலிகள் கொன்றார்கள்-துரத்தியடித்தார்கள்.

மக்களும் அதைத் தமிழர் நலனால் ஆதரிக்காதிருந்தாலும் ஆயுதத்தின் முன் மௌனமாகிக்கிடந்தார்கள்.அப்போது, சொன்னோம்,இது வரலாற்றுத் தவறென.

வன்னியில் யுத்தம் நடந்தபோது,சிங்கள அரச விமானங்கள் 2008 வாக்கில் வன்னிக்குள் குண்டுபோட்டபோது பல தமிழ்த் தாய்மார்கள் தலைதெறித்து மரணித்துக்கிடந்தார்கள்-பாலகர்கள் தாயின் அணைப்பில் துவண்டு கிடக்க நாம் அனைவருமே வருந்திக்கொண்டோம்!இந்த வலியினால் பொருமிய புலி விசுவாசிகள், குறுந்தேசிய வாதச் சிக்கலுக்குள் விடிவைத் தேடிய அப்பாவி மக்கள்கூட அரச வன்கொடுமைக்கு எதிராகக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும்ச பதிலடியாக மக்கள் மத்தியிலும் பல குண்டுகள் வெடிக்க வேண்டுமெனச் சொன்னார்கள்.அப்போதும் இது தவறென்றோம்.

அதன் இன்னொரு முனையிலிருந்த அவர்களது மடத்தலைவன் அநுராதபுரத்தில் விமானப்படைத் தளத்தைப் பேரங்கொடுத்துத் தாக்கி அழித்போது கூறிக்கொண்டார் : „சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினோம்“ என்று.அதையும் தவறு,இது வரலாற்று வினையை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பில் உணர்த்திக் கொண்டதுண்டு.இது ஒரு தர்க்கமானது.

ஒரு இனத்தைப்(தமிழ்பேசும் மக்களைப் பலவடிவில் கருவறுக்க) பழிவாங்கச் செய்த சதிகள் இவை.

இந்திய ரோ அன்றே மதிப்பிட்டு விதைத்ததை, இன்று மிக இலாபத்தோடு அறுவடைசெய்கிறது.நிர்மலாவின் குரலூடாக விரியும் இந்தக் கோரிக்கையானது முற்றிலும் இந்திய-இலங்கை ஆளும்வர்க்கத்தின் நலன்சார்ந்த தகவமைப்பாகும்.தமிழ் நிலப்பரப்பெங்கும் சிங்கள இனவாத இராணுவத்தின் சர்வதிகார ஆட்சியின்கீழ் தமிழ் பேசும் மக்கள்மட்டுமல்ல மற்றைய சிறுபான்மை இனங்களும் கட்டுண்டுவாழும்போதும்,பேரினவாதக்கொடுமையினூடாக இதுவரை பல இலட்சம் மக்களைக்கொன்று குவித்த சிங்கள ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இன்னும் சுதந்திரமாக வாழ அனுமதிக்காதபோது இந்தக் கோரிக்கை வருகிறது-கவனத்தில் இதை எடுக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தமது வாழ்வையே செப்பனிட முடியாதவொரு சூழலில் இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களைக் குடியிருத்துவதென்பதும்,அவர்களுக்குத் தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிரஜைகள் வசதி வாய்ப்பை நல்குவதும்,தோழமையைக்கொடுக்க வேண்டுமென்பதும்,மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்பதும் அரசியல் சதியாகும்.

இந்திய ரோவினது ஆலோசனையுள் திட்டமிட்ட சதி அரசியலைத் தமிழருக்குச் சொந்தமாக்க முனைவதும்,வரலாற்றில் அந்தப்பழியை(முஸ்லீம்களைத் துரத்தியது) யாழ்ப்பாண மக்கள்மீது போடுவதும் இந்தியச் சாணாக்கியத்துக்கு அவசியமானது.இந்த அவசியத்தின் பொருட்டே நிர்மலா வாந்தியெடுக்கிறார்.

பிராந்திய நலன்களுக்கிணைவாகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைப்போரை நசுக்க என்னென்ன வழி பார்த்தார்களோ, அதையே திட்டமிட்டு ஒரு இனத்தின் மைய முனைக்குச் சொந்தமாக்கிக் காலம் பூராகவும் பழியைச் சுமத்தித் தமிழர்கள் தேசிய விடுதலையைக் கேட்க-போராட உரித்தற்றவர்களென்றும், தமக்குள் இனவொடுக்குமுறையைச் செய்தவர்களென்றும் பட்டங்கட்டித் தொடர்ந்து சிங்க இனவாத ஒடுக்குமுறையை அதனுடன் சமப்படுத்திக்கொள்வதும்,தமிழர்களது சுயநிர்ணயத்தைக் காயடிக்கும் வியூகம்தாம்.

இதற்கு நிர்மலாவோடிணைந்த அந்த 71 ஆடுகளும் கண்டடைந்த மேய்ப்பர்கள், இந்தியச் சாணாக்கியமாகும்.


முஸ்லீம்மகளைத் துரத்திவிட்ட நிகழ்வு இன்றுவரையும் அரசியல் அமுக்கக் குழுவுக்கான தகவமைப்பைச் செய்கிறது.சிங்கள இனத்தைப் பகைப்படுத்திய சந்தர்ப்பத்தில் மகிந்தா பாசிசத்துக்கு அது இசைந்துபோக எத்தனித்தது.சிங்களது உச்சி பிளப்பு,வன்னிக்குள் பிரபாகரன் மண்டையை உயிரோடு பிளந்தது.

இன்றுவரையும் மக்களைப் பிளந்து அரசியல் நடாத்துவதற்கு- யாழ்ப்பாண மக்களுக்குச் சாபமிட ,அன்று இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கிப்புலிகளால்துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களது வாழ்வு ஏதுவாகிறது, இந்திய நலனுக்குப் பேரின வாத அரசுகளுக்கு.

இன்று தமிழ் மக்களை மன்னிப்புக்கோரச் சொல்லும் நிர்மலாவுக்குத் தெரியும், அதே போன்று சிங்கள இனமும்,அதன் அரசும், தமிழ்பேசும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பும்,நஷ்ட ஈடும் கட்டித் தமிழர்களது பாரம்பரிய பூமியைச் இராணுவச் சர்வதிகாரத்தின்கீழிருந்து விடுதலையாக்கி விடவேண்டும் என்றும்.

ஆனால்,அந்த முக்கியமான கோரிக்கையை „அதிகாரம் என்பது பல தளங்களில் இயங்குவதாகச் சொல்லி “ அரச வன்கொடுமை இராணுவஜந்திரத்தையும்,அரச அதிகாரத்தையும்,மக்களது உரிமைக்கானதும்,பேரினவாதவொடுக்குமுறைக்கு முகங்கொடுப்பதுமான மக்களது போராட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்குள்பொருத்திச் சமனிட முனைவதும் பாரியக் குற்றம்.இது திட்டமிடப்பட்ட சதி.

யாழ்ப்பாணத்திலிருந்து புலியை வெரட்டியடித்த இராணுவம்தாம் இன்று பதினைந்து ஆண்டுகளுக்குமேல் யாழ் வடபுலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.

இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?

அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா?

அல்லது,இன்று செய்யும் நிர்மலா அரசியலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்வதற்காகப் „புலிகள் சொன்னாற்றாம் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியிருப்போம்“ என்ற புத்தள முஸ்லீம் மக்களது குரலையும் சந்தேகிக்கவே வேண்டும்.

அந்த வகையில் இந்த 71″புத்திசீவிகளது“கோரிக்கை-கையெழுத்து“அரசியலது ஆணிவேர் , பிரித்தாளும் பிராந்திய மேலாதிக்க இந்திய அரசினது மடியில் ஊன்றுவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவாவதும் நிர்மலாவின்பின் தமிழர்களை மேயத் துடிக்கும் அந்த ஆடுகளைக் கவனமாகத் துரத்தியடித்தே தீரவேண்டும்.

இல்லையேல், இலங்கை முழுமொத்த மக்களது எதிர்காலப் பயிரையே இந்த ஆடுகள் மேய்து கொழுத்துத்தமது எஜமானர் களுக்கு இறைச்சியாகிவிடும்.

எனவே,இவர்களது சதிக்கு எதிரான இந்த „யாரிந்தப் புத்திசீவிகள்“ எனும் எதிர்ப்பறிக்கையை [ http://inioru.com/?p=25534 ]நான் ஆதரிக்கிறேன்-அவசியமெனவும் கருதுகிறேன்!

ப.வி.ஸ்ரீரங்கன்,
12.01.2011
ஜேர்மனி.

பி.பி.சி.யில் நிர்மலா அக்காவினது குரலும்,அந்த 71 ஆட்டுக்குட்டிகளும்!

உரைத்துப் பார்த்தலுக்கான சில கருத்துக்கள்.

ண்டுதொட்டு தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.சிங்கள இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.

நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?

அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?

அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?

இவை கேள்விகள்.

பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று…


„…இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன…“ -செழியன்.

முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!

80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.

முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.

புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.

இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.

யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் „எந்தச் சுயாண்மையும்“ நிலவ முடியாது.

இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.

இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்“யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்“ என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.

இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.

இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.

இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு“உலகின் பாரிய ஜனநாயக நாடு“என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.

இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.

அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.

உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு“விடிவு“குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.

இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.

இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.

இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.

இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?

இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2012

The report signed by 71 Tamil elite intellectuals:


An appeal to the Tamil Community and its civil and political representatives.

Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.

While the war has drawn to a decisive close, the ethnic conflict is far from over and demands solutions short- and long-term. The quest for a viable political solution from a majoritarian state is a primary concern for the Tamil community today. Continued insecurity in the face of militarisation is an urgent matter. Armed militancy and a political culture of violence have further eroded into the democratic fabric of society. Resettlement and rehabilitation remain unresolved problems. Distribution of land, access to state and social networks, language parity, devolution of power, inter-ethnic reconciliation and the continued presence of gender, class and caste stratifications are a part of the political landscape today.

It is in this regard we raise the question of the eviction of the Northern Muslims 21 years ago. In October 1990, the LTTE evicted roughly 80,000 Muslims from the north in the wake of increasing hostilities and armed conflict in the north and east. The LTTE, which was militarily dominant in the north at that time and controlled large swathes of territory, ordered an entire community to leave the province in two days. In the Jaffna peninsula they were given just two hours’ notice. Subsequent to the eviction, several attempts were made by institutional mechanisms to facilitate the return of the communities to their original lands. During the Ceasefire Agreement (CFA), there were renewed attempts, particularly through the Secretariat for Immediate Humanitarian and Rehabilitation Needs (SIHRN), to negotiate the return of the Muslims with the Sri Lankan state and the LTTE.

In the current political landscape, the eviction of Muslims from the north and their return and resettlement pose a distinct political challenge to civil and political societies of the Tamil community. While from the time of the CFA, Muslims had been trickling back to their homelands in the north, the conditions for their return had not been congenial. Those who have returned have received hardly any state support for resettlement, and have been met with a certain level of bureaucratic hostility. The erasure of Muslim culture and institutions in the north in the last twenty years has made return less acceptable to the host community, and especially fraught for the returnees.

While recognising that the Tamil community has been under intense stress during and after the war, it is important to remember the plight of the forcibly evicted Muslim community in the north who were subjected to similar privations. The Tamil community’s sufferings and hardship cannot become reasons to sideline the issue of Muslim eviction. As much as we struggle for our survival in the face of external and internal pressures, it is paramount that we re-examine the politics of our own actions, assertions and silences.

The eviction represents one of the worst instances of the narrow, exclusivist thrust of the Tamil nationalist political campaign of the past thirty years. The failure of our civil and political leadership to understand and acknowledge this has prevented us from dealing with our own past, and with our own moral and political responsibility towards minority communities that live amidst us. An examination of how we have contributed to the polarisation of relations between our two communities has not been forthcoming even after the end of the thirty-year war. We must realise at least now that there is no exclusive political solution for the Tamil community, and that the question of political power sharing and equal rights confronts all minority communities. Inter-ethnic reconciliation and dialogue between communities, in particular the Muslim and Tamil communities, are essential processes to arrive at a sustainable political solution. The document The Quest for Redemption: the Story of the Northern Muslims, prepared by the Citizens’ Commission on the expulsion of Muslims by the LTTE recently made a most damning pronouncement about the silence of the Tamil community on the eviction. We need to break through this silence if we are to move toward a genuine process of reconciliation.

Today, as we are compelled to forge new paths of activism for our own survival, we need to formulate responses that are borne out of dialogue with different communities. This is essential if we are seeking a just and democratic political solution. As a step toward this, there has to be a public disavowal of the eviction. We shall wholeheartedly say that never again will such a heinous act as the eviction take place amidst us. Never again shall we condone such acts of ethnic cleansing. Importantly, it is necessary for us as a community, while revisiting this event and its continuing legacy, to set up an inter-ethnic mechanism to bring about dialogue and facilitate an easy return and resettlement process of the Muslims in the north.

Tamil society can no longer be isolationist and act on its own without paying heed to the concerns of other communities. We shall engage in questions of marginalisation, discrimination and injustice touching upon any community. And we shall unreservedly pledge our support to promote the pluralist character of society at all levels in our midst, and embrace a politics of inclusivity in the interests of democracy, justice and equality.

Signatories:

1. Mr. P. Ahilan
2. Dr. Darshan Ambalavanar
3. Ms. Jovita Arulanantham
4. Ms. Kundhavi Balachandran
5. Mr. Sivakolunthu Buvanakumar
6. Dr.GodwinConstantine
7. Dr.KumarDavid
8. Mr. R. Devarajan
9. Ms. Cayathri Divakalala
10. Dr. S. Ganesan
11. Mr. Shaseevan Ganeshananthan
12. Mr. P.B. Gowthaman
13. Dr. Rajan Hoole
14. Ms. Sithiravel Ithaiyarani
15. Mr. T. Antony Jeganathan
16. Ms. Vasuki Jayasankar
17. Dr. T. Jayasingam
18. Mr. D.B.S.Jeyaraj
19. Mr. Theliwattai Joseph
20. Mr. Ahilan Kadirgamar
21. Mr. Silan Kadirgamar
22. Ms. Niyanthini Kadirgamar
23. Ms. Sarvam Kailasapathy
24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai
25. Dr. S.V. Kasynathan
26. Mr. Thirukovil Kaviyuvan
27. Mr. Sathy Kulasingam
28. Mr. Prithiviraj Kulasingham
29. Prof. Vijaya Kumar
30. Ms. Maha Luxmy Kurushanthan
31. Mr. K.C. Logeswaran
32. Mr. S. Manisegaran
33. Mr. Chandrasekaran Manimaran
34. Mr. P. Muthulingam
35. Mr. V. Nandakumar
36. Ms. Malini Paramaguru
37. Ms. Nirmala Rajasingam
38. Ms. Vasuki Rajasingam
39. Mr. Sanjayan Rajasingham
40. Mr. C. Rajeshkumar
41. Ms. A. Renu
42. Ms. Kumudini Samuel
43. Ms. Rani Samuel
44. Dr. Paikiasothy Saravanamuttu
45. Dr. Muthukrishna Sarvananthan
46. Ms. Ambika Satkunanathan
47. Mr. Shyam Selvadurai
48. Rev. Jothini Seenithamby
49. Dr. T. Shanaathanan
50. Ms. M. Mangaleswary Shanker
51. Ms. C. Shanthini
52. Mr. Shobashakthi
53. Mr. P.N. Singham
54. Ms. Vasuki Sivakumar
55. Mr. K.S. Sivakumaran
56. Dr. Sumathy Sivamohan
57. Mr. Subramaniam Sivathasan
58. Mr. Balasingam Skanthakumar
59. Mr. M. Sooriyasekaram
60. Dr. K. Sritharan
61. Rev. M. Jude Sutharshan
62. Mr.H.D. Thampoe
63. Ms. Priya Thangarajah
64. Mr. Kandiah Thanikasalam
65. Mr.R. Thevamaran
66. Prof. S.Thillainathan
67. Dr.Sharika Thiranagama
68. Mr.M.Thiruvarangan
69. Mr.UmaVaratharajan
70. Mr.GodfreyYogarajah
71. Mr.RonnieYogarajah

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.

ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்

இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.

புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.

புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.

என்ன கொடுமையடா!,

நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்“துரோகி-எட்டப்பன்“என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!


அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?

புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.

கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?

எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.

கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.

இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.

வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?

விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.

நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.

50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது…

// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

08.01.2012

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

சமீபத்தில் இந்த >> Why this Kolaveri Di << ஆங்கில வார்த்தையூடாகப் பலதரப்பட்ட தொடுப்புகளை எங்கும் காணக் கூடியதாக இருந்தது.முக நூல்வழியாக இந்தத் தொடுப்புகளைக் கண்ணுற்றாலும்,அதைத் தேடிச் செல்ல மனம்வரவில்லை.

இளையவர்கள் ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ பேசிக்கொள்வதாக இருந்துவிட்டேன்.ஆனால்,தமிழ்ச் சினிமாவில்இப்படியொரு பாட்டை தனூஸ் பாடுவதுபோல அமைத்திருப்பதென்றும்,மிகவும் மோசமாகத் தமிழைக் கொலை செய்து பாடல் கட்டப்பட்டிருப்பதென்பதும்,அப்பாடலானது ஒரு மில்லயன் தடவைகளுக்குமேல் கேட்கப் பட்டிருப்பதையும் இன்றுதாம் கண்ணுற்றேன்.

ஏலவே,ரகுமானின் வரவோடு,தமிழ்ப் பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பும்,அதுசார்ந்து கிளர்ச்சி வெறியூட்டும் இரைச்சல் வகைப்பட்ட ஒலியும் சினிமாவில் புதியதொரு செவிவழி நுகர்வு இசையை உருவாக்கியது.

மெல்லிசைச் சாரலில், நாட்டுப்புறத் தேமாங்கு பாடிய இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து „கொலைப்படாத“ தமிழ் வார்த்தைகள் அதிகமாக ரகுமானால் கொல்லப்பட்டு வெறும் இரைச்சலாக செவிகளில் பட்டுத்தெறித்தன- 1990 களில் தமிழின் நிலை இதுவாக உருவாகியபோது,இன்று அதன் பரிணாமம் கொலைவெறிப் பாடலாக நம்மைத் தொடர்ந்து தாக்கி நமது மொழியைக் கொன்றுவிடும் அளவுக்கு வளர்ந்து விருட்ச மாகியுள்ளது!.இது கவனத்துக்குரியது.

கொலைவெறியோடு, புகுந்து விளையாடிய ரகுமான் காலத்தில் இசைப் புயலாவும் போய், நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றியபோது,அதை முன்னிலைப்படுத்திய சொனி நிறுவனம், அவரை ஓஸ்க்கார் விருதுபெற வைத்துச் சந்தையில் நிரந்தரமானவொரு நுகர்வுப் பொருளாக ரகுமானை மாற்றி வைத்திருக்கும் இன்றைய பொழுதில்தாம், இந்தக் கொலை வெறிப் பாடல்களெல்லாம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கவேண்டும்.

இந்தத் திசையில், மக்களது கலையில் அதிகமான பல்வகை உணர்வுகளைத் தகவமைக்கும் நுண்கலை வடிவமானது நிரந்தரமாகவே,மொழியின் வார்த்தைகளைக் கொய்தெறியும் இரைச்சல் ஒலியாக எழுந்து,அதுவே பிரபலமான இசைப் பாணியானது.

இதன் உச்சம் இப்போது தனுஸ்கூட்டணியின் தலைமையில் கொலைவெறிப்பாடல்களாக வந்திருக்கிறது?.

இதை வார்த்தைகொண்டு,கவிஞர்கள் எதிர்த்திருப்பதை நேற்று வாசித்தேன்.தமிழில் மிக அழுத்தமாகத் எழுதத் தெரிந்தவர் கவிஞன் காசி ஆனந்தன்.

அவர்,இத்தகைய பாணியையும்,கவிதை-பாடல் எழுதும் போக்கையும் கண்டித்திருக்கிறார்.அதையும் மீறி ,மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாடல் வழியாகவே-அவர்களது இசைப்பாணியிலேயே இந்தப் பாடல் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.

இது,எடுத்துப்போடும் வார்த்தைகள்-கேள்விகள் தார்மீக அடிப்படையில் ஒரு இனத்தின் மொழிமீதான எதிர்கால இருப்புக் குறித்த பார்வையில், அதிகமாக வரவேற்கத் தக்க நிலைப்பாடுகளை அது முன் வைக்கிறது.இரண்டையும் செய்திருப்பவர்கள் இளைஞர்கள் என்பதே இதன் கவனத்துக்கான முக்கிய புள்ளி.

ஒரு அணி : நிதிவலுவுள்ள தமிழ்நாட்டுத் தமிங்கிலீஸ் நடுத்தரவர்கத்துக் கோடம்பாகத்து இளைஞர்கூட்டம்,

மற்றய அணி : நிதிவலுவற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் குழாம்,

இதுள்,உலக நடப்பிலுள்ள நுகர்வுச் சந்தையில் பல கோடிகளைக் குவித்துள்ள பாரிய கெடுதி விளைவிக்கக்கூடிய தமிழ் நாட்டுச் சினிமாக் கூட்டத்தின் அதீத வலுவை,எந்தச் சந்தையோ அல்லது நிதிவலுவோ அற்ற யாழ் இளைஞர்களின் பாடல் எதிர்கொள்கிறது!

இந்த யாழ்ப்பாண இளைஞர்களின்பாடலுக்கு, நியாயமான கேள்வியும்,எதிர்காலம் குறித்த ஏக்கமுமே பக்கப்பலமாக இருக்கிறது.இந்த எதிர்ப்புக் குரல், தான் பேசிய மகிழும் மொழியின் நிலைக்காக பலமான வேண்டுதலொடு நம்மை அண்மிக்கிறது.நம்மை அழுதுவிடுமளவுக்குத் தாக்குகிறது-நியாயமாகக் கேள்வி கேட்டு உருகுகிறது.நாமும் உருகிப் போகிறோம்.அந்த மிருக வலுவுள்ள கோடம் பாகத்தை அவ்வளவு இலகுவில் வீழ்த்திவிட முடியுமா?அல்லது, மாற்றிவிட முடியுமா?சிறுதுளி பெரு வெள்ளமாகணும்-யாழ்ப்பாண இளைஞர்கள் முளை போட்டிருக்கிறார்கள்.அதுபோல் பல முளைகள் போடப்பட்டு அவை விருட்சமாகினால்மட்டுமேதாம் இந்தச் சினிமாத்தனமான அழிவுச் சந்தையைத் தோற்கடிக்க முடியும்.

தாய்மொழியென, நமது நினைவிலி மனதில் பதிந்த தமிழ் நமது இருப்பையும்,வாழ்வையும்,அதுசார்ந்த பண்பாட்டையும் நமக்கு உணர்த்தும் ஊடகமும்தாம்.அதுள் பல்வேறு பிற்போக்கு-முற்போக்குத்தனங்கள் எல்லா மொழிகழுக்குமுரியதைப்போல் உண்டுதாம்.என்றபோதும்,தத்தமது தாய்மொழி குறித்த எதிர்கால அவா,அதன் இருப்பு-நிலைப்பு,வளர்ச்சி குறித்த எண்ணத்துக்கொப்ப எதிர்காலக் கனவைக்கொண்டிருக்கும்.

அந்தக் கனவுமீது, தொடர்ந்து சினிமாத்தனத்தாலும்,வர்த்தக நோக்காலும் தமிழ் இனத்தின் இருப்பையே அசைக்கும் இந்த விபரீத இசையையும்-சினிமாவையும் விமரிசனத்துக்குட்படுத்துவதும்,அத்தகைய சினிமாவை நிராகரித்தும், மாற்றுச் சினிமாவின் அவசியமும் உணரப்பட இந்த யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி ஏதுவாக இருக்கின்றது.

தமிழினத்தைப் பல முனைகளில் தாக்கும் வார்த்தகவுலகமானது தொடர்ந்து,தமிழினத்தின் அரசியலையும்,அதன் பாண்பாட்டு வடிவங்களையும் பல்வேறு ஆயுதங்களைக்கொண்டு தாக்கி அழித்துவருகிறது. அதுள்,இந்த ரகுமான் பாணி சினிமா இசைப்பாணியும், அதுசார்ந்தெழுதும் பாடல்களும் ஒருவித நச்சு ஆயுதமாகும்.

இந்த நச்சு ஆயுதத்தை எதிர்க்கும் யாழ்ப்பாண இளைஞர்களது கனவு பலிக்க வாழ்த்திக்கொள்வதென்பது,நமது ரசனையை நாம் திறம்பட அகலிக்க வேண்டுமென்பதும்,அந்த அகலிப்புள் இந்த நச்சு ரசனைக்கு மாற்றான நமது மண்சார்ந்தும்-நவீனப் புதுமை சார்ந்தும் மொழியைக் கொலை செய்யாத பாடல்களை உருவாக்கி இரசிப்பதற்கு மாற்றுச் சினிமாவை வளர்த்தாகவேண்டும்.

இதைவிட வேறு வழி இருக்க்க முடியுமா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

எழுத்து, இசை : எஸ்.ஜே.ஸ்ரலின்.

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசுஇ புத்தன்இ
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு — தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல — அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா. “

தமிழீழத் தேசியச் சின்னங்களை…

தமிழீழத் தேசியச் சின்னங்களை வேண்டி விடியலை விரைவுப்படுத்துங்கள்!

ன்பார்ந்த தமிழீழக் குடிகளே,நீங்கள் புலம் பெயர்ந்தபோதும் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்துக்கு இறுதிவரை உழைப்பவர்கள்.அந்தவகையில் மீளவும்,உங்கள் ஒத்துழைப்பை நல்கி, நமது தேச நிர்மாணிப்பைத் தொடர்ந்து விரைவாக்கும் பணிக்கு, உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது தமிழீழ நாடு கடந்த அரசு.பிரதமர் உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க தபாற்றலைகளைப் பிரான்ஸ் அரசின் அனுமதிபெற்று வெளியிட்டுள்ளோம்.

கடந்த வாரம், தமிழீழத்தின் தேசியச் சின்னங்களை,பிராஞ்சு அரசின் அனுமதியோடு தபாற்றலைகளாக நாம் வெளியிட்டிருக்கின்றோம்.அவைகளை நீங்கள் வேண்டிப் பயன்படுத்துவதனூடாக ,தேசத்தின் விடிவை விரைவாக்க எமக்கு உதவுங்கள்.இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழினின் கடமையுங்கூட-எல்லாஞ் சரிதாம்!


புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.

அதை மேலும், நிலைப்படுத்தும் நிர்வாக-அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,பிரஞ்சு அரசின் அனுமதியுடன் தபாற் தலைகள் வெளியிடுவதாகவும்,அவை தமிழ்த் தேசியத்தின் குறியீடெனவும்,கூறி எஞ்சியிருந்த அனைத்தையும் காசாக்கிக் கொள்கின்றனர்.

மக்களது பிள்ளைகளைக்கொன்று,அவர்களது பிணத்தைக் காட்டிக் காசாக்கிய கயவர் கூட்டம்,இப்போது,இவற்றைத் தமிழ்த் தேசியச் சொத்தெனச் சொல்லி ,மக்கள் மனதில் விதைத்த கருத்துருவாகக் குறியீட்டுப் பொருட்களையும்,அதன் குறிப்பான்களையுஞ் சொல்லிக் கூவி விற்றுப் பணம் பண்ணும் வியாபாரத்தை எப்படி அனுமதிப்பது?

தமிழ் மக்கள் மீது சிங்கள அரசை ஏவி,அவர்களைத் தொடர்ந்து அழிக்கக்கொடுத்த அரசியலில் எவர் செல்வந்தர்களானார்கள் என்பதை இப்போதாவது புரியமுடிகிறதா?


இந்த வியாபரப்புத்தியானது தொடர்ந்து செய்யும் அரசியல் துஷ்ப் பிரயோகமானது தமிழ் மக்களது உரிமைகளையே ஏலம்போட்டு விற்கும் ஒரு செயலின் உச்சம்தாம் இந்த முத்திரைகள் வியாபாரம்.

அது கூவி ஏலம் விடும் குறியீடுகள், ஒரு இனத்தின் உரிமையினது வெளிப்பாட்டு அலகாகக் காட்டப்பட்டு,வியாபாரமாவதில் அதன் பின்னே கொல்லப்பட்ட பாலகர்களதும், தமிழ் மக்களதும் உயிர்களே இந்தக் கூறியீட்டுக்கு உயிர்ப்புக்கொடுத்தவை என்பதால்,இக் குறியீடுகளின்வழி ஏமாற்றி வியாபாரமாகப்படும் முத்திரைகள், தமிழ் மக்களது உயிர்களை ஏலம் விடுவதன் உச்சமாகவே பார்க்கப்படவேண்டும்.

இது,இனத் துரோகம்.ஒரு மக்களினத்தின் உயிர்த் தியாகத்தைக் கொச்சைப்படுத்திக் காசு சேர்க்கும் கடைக்கோடித்தனமாகும்.

தமிழ்ர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதிக்கொள்வதுவரை காசுக்காக அனைத்துத் தமிழ் பேசும் மக்களதும் ஆன்மாவையே ஏலம்போட்டுவிற்பதற்குத் தயாரான புலிப்பினாமிக்கூட்டம்,தமது தலைவனது மரணத்தையே மறைத்து அவனது படத்தைக்கூட முத்திரையாக வெளியிட்டு,அதைத் தமிழ் தேசிய அலகென்று பிரச்சாரப்படுத்திக்கொண்டு காசுக்காக வியாபாரமாக்கும் அனைத்துக் காரியங்களும்,தமிழ் மக்களை விற்பதாகவே நான் இனம் காண்கிறேன்.

ஒருபுறம், அரசியல் தலைவர்களெனப் புலிப்பினாமிகள் இலங்கை அரசோடிணைந்து மக்களை ஒட்ட மொட்டையடிப்பதும்,அந்தப் போக்கிரிகளது வால்கள்,தமது பங்குக்கு இந்த வடிவங்களில் அனைத்தையும் காசாக்க,“ முத்திரை,கொடி“ பண்பாட்டு வடிவங்களது நுகர்வென அனைத்தையும் நுகர்வுச் சந்தைக்குள் கொட்டிவைத்துக் காசாக்கிச் செல்வத்தைக் குவிப்பதில் ஒரு இனத்தையே சிங்களப்பாசிச அரசுக்கு இரைக்யாக்கி விடுகின்றனர்!


அவர்களது இச் சமூகவிரோத்தச் செயற்பாட்டின்வழி, ஆபாசமான வக்கிரத்தோடு கொலை அரசியலைக் காசுக்காச் செய்து கொள்கின்றனர். இதை,தமிழ்த் தேசியத்தின்மீதான பாசமுடைய குழந்தைகள் மெல்ல,மிக இலகுவான மொழிகளால் கடிந்துகொள்கின்றனர்.அல்லது, தேசியத்தின் பெயரால் இவற்றை நுகர்வது தமிழ்பேசும் மக்களது கடமையெனச் சொல்லித் துரோகத்தனத்தைத் தியாகமாக்கிப் புனிதமாக்குகின்றனர்.இதுவே,புலிவழித் தேசியமாக மக்களும் நம்ப வைக்கப்பட்டுச் சரியானதைக் கண்டடைவதைத் தடுத்துப் பணத்தைக் குவிப்பதற்கான மனத்தைத் தேசிய உரையாடல்வழி தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.இது மிகப் பெரும் துரோகமாகும்.

பிளவுபட்ட இயக்கவாதப்புலிக்குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது.

தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் „வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட“ அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்…

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்,அவருடன் எனது உரையாடல்.

ந்த உரையாடலானது,சமூக ஆவேசத்தின் மத்தியில் பாசிசப் புலிகளது ஒரு உறுப்பினரான கனடா வாழ் முரளிதரன் நடராஜாவோடு[ http://www.facebook.com/nadarajah.muralitharan ] அரண்மொழி வர்மன் முகநூல் நிலைத்தகவலில் [http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply ]நடாத்தப்பட்டது.

புரட்சியாளர்கள் குறித்துக் குறுந்தேசியவாதிகள் கடந்தகாலத்தில் „கொலை செய்யக் குரைக்கும்“ அதே பண்போடு,உரையாடுவதென்பது பாசிசத்துக்குப் புதிதில்லை!

பாசிசம் எப்போதும்,மக்களை இனத்தின்பெயரால்-தேசத்தின் பெயரால்,மொழியின் பெயரால் காயடித்தே தமது இலக்கை அடைவதற்கு முனைவர்.வளர்ச்சியடைந்த முதலாளியத்தின் உச்சக்கட்டமானது, தனது நெருக்கடியைத் தீர்ப்பதில் இரண்டு உலக மகா யுத்தங்களையும்,உலக மகாயுத்தமெனத் தெரியாதபடி இப்போது தொடர்ந்து நேட்டோத் தலைமையில் சுயாதீனமிக்க மக்களையும்-தேசங்களையும் வேட்டையாடுவது வரலாறாகும்.

இந்நிலையில்,வளர்ச்சியடையாதவொரு இனத்துள்,தோன்றிய முரண்பாடானது,ஒரு தேசத்தில் பல்லினங்கள் வாழும் சந்தர்ப்பத்தில் தோன்றும் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கில், இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்கமானது தனது முரண்பாட்டை“இனவிடுதலை-தேச விடுதலை“எனச் சொல்லி முதலாளியத்துக்கொப்பிய பண்போடு பாசிசமாக உச்சம்பெற்று மக்களைக் கொன்றுபோடுகிறது.

இதற்குச் சிங்கள இனவாத அரசைத் தாங்கும் சிங்கள ஆளும் வர்க்கமும்,தமிழ் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ் ஆளும் வர்க்கமும் சமீப காலத்தில்“புலி-சிங்கள அரசு“என்ற இரண்டு யுத்த ஜந்திரத்தின்வழி மக்களை வேட்டையாடியது வரலாறு.இதுவும் பாசிசத்தின் இன்னொரு முனையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து,சிங்கள ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தமதாக்கிப் புலிகளது இன்றைய தலைமை(கே.பி.,கருணா-பிள்ளையான்,நெடியவன்-விநாயகம்,உருத்திரகுமார்) தமிழ்பேசும் மக்களைச் சுயவெழிச்சி கொள்ளாமலும்,தொடர்ந்தேவப்படும் சிங்கள மேலாதிக்கத்தைப் புரியாதிருக்கவும் போடும் நடாகம்“அபிவிருத்தி-புனர்வாழ்வு“என்று விரியும்போது,அங்கே,மக்களைத் தொடர்ந்து சிங்களப் பாசிச அரசின் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவதே.

இதன் வாயிலாக சிங்கள இனத்தைத் தொடர்ந்து பகமைக்குட்படுத்தித் தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பதில், இவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு ஒத்தாசையாக இருப்பதென்பது, புரியப்பட இந்தவுரையாடல் சாட்சியமாக இருக்கலாம்.

எனவே,புரட்சியை இலங்கையிலிருந்து ஓரங்கட்ட,புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கும் புலி அரசியலானது மக்களை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுப்பதாகும்.

இதையுரைப்பதன் தொடரில், இந்தவுரையாடலின் உளவியலை ஆய்ந்து பார்க்கலாம்.அதிகாரம் என்பது பன்முகத் தகவமைப்பின்வழி, ஒரு குவியத்திலிருந்து இன்னொரு தளத்துக்குத் தாவிச் சென்று மீளவும், அந்தக் குவியத்துக்குச் சென்று வீங்குவது.அதை, வரலாற்றில் உரைப்பதன்வழி,இந்தவுரையாடலுக்குள் உடைத்துப் பார்க்கும் உளவியல் சில உண்மைகளைப் பேசுமென்றே கருதுகிறேன்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.11

உரையாடல்:

Arunmozhi Varman

http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply

Nadarajah Muralitharan : “அதிகாரங்களை விசுவாசிப்பதன் மூலம் மனிதன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றான்” என்று சயந்தன் சொல்லுகிறார். அப்போது மாற்றுக் கருத்தாளர்களை் குறித்து என் நினைவைத் தாக்கியது என்னவெனில் ஏகாதிபத்தியங்களையும் , முதலாளித்துவத்தையும் சாடியவர்களில் பலரும் இந்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலே தங்கள் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதை எவ்வகையிலும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதில்லை. இவ்வாறு தாங்கள் சமரசத்துக்குள்ளாகுவதை , தங்கள் மனச்சாட்சிக்கு நியாயப்படுத்துவதை வசதியாக இவர்கள் பொதுவெளிக்கு மறைத்து விடுவார்கள்.
vor 13 Stunden · Gefällt mir · 4

Sri Rangan Vijayaratnam : அதிகாரங்களை மனிதர்கள் விசுவாசிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைக்க முடியுமெனில் பிரபாகரன் ஏன் முள்ளி வாய்க்கலுக்குள் மண்டை பிளவுண்டு சாகவேண்டும்?

உலகில், கோடிக்கணக்கானவர்கள் ஏன் அகதியாகவும்,ஒரு வயிற்றுச் சோற்றுக்காவும் அலையவேண்டும்?

உயிர்த்திருப்பதற்கான ஆசையில், ஏன் அகதியாகி அலையவேண்டும்?

தமிழ் மக்களுக்குத் „தமிழீழம்“எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு மாற்றுக் கருத்தாளர்களா இப்போது உயிர்விடவேண்டும்?

ஏன்டா இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறீங்கள்?

போய் உம்பை வளைத்து வேலை செய்து உங்களைக் காப்பாத்துங்கோடா!அப்போது , தெரியும் அதிகாரத்தைத் தனிமனிர் விசுவாசிக்கிறாரா அல்லது அதிகாரம் தனிமனிதரை சுற்றி தனது வலுக்கரத்தை எப்படிப் பின்னியுள்ளதென்று.அந்நிய அதிகாரங்களை நக்கி-விசுவாசித்துத் தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத்தர முனைந்த புலிகள் எப்படி,விடுதலையானர்களென்பதைப் பாடமாக எடுங்கோடா…
vor 9 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan : சிறிரங்கன் அவர்களே நீங்கள் வசிக்கும் நாடு முதலாளித்துவ நாடா அல்லது என்ன வகையறாவுக்குள் அடங்கும் நாடு என்பதை மாத்திரம் சொல்ல முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan : உலகிலே நிறைய நாடுகள் இருந்தும் அந்த நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: இன்று நான் நினைக்கின்றேன். உலக மாந்தர்களோடு சராசரியாக ஒப்பிடும்போது உங்கள் மாத வருமானமும் , சொத்திருப்பும் பல நுாறு மடங்குகள் அதிகம் அல்லவா? வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு மாத விடுமுறையை எடுத்துக்கொண்டு எந்த மூன்றாம் உலக நாடுகளுக்குச் சென்று , இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அரசியல் பணி செய்து வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: பொதுவெளியல் நீர் அரசியல் கதைப்பதற்கு உமது மொழியின்படி உமது மாத , சொத்து வருமானங்களை மக்கள் முன்வைக்காமல் மற்றவர்களது வருமானங்கள் தொடர்பாகப் பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam: இதை நீர் கேட்பதுதாம் இன்றைய நூற்றாண்டின் சுவரிசியம்.அதுவும் நீர் புலிகளைச் சுத்துவதாக மக்களைச் சுத்தியதெல்லாம் போகட்டும்.முதலில் நெடியவனிடம் கேட்டு முழுச் சொத்து விபரத்தையும் வெளியிடும்.பிறகு எனது“சொத்து“விபரத்தை வெளியிடுகிறேன்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: ஜேர்மன் முதலாளித்துவ அரசின் சலுகைகளில் எவற்றை நீா் புறந்தள்ளி வாழுகிறீர்கள் என்ற பட்டியலைத் தர முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: அவர்களைக் கயவர்கள் , கொடியவர்கள் என்று கூறும் நீர்தானே முன்னுதாரணத்துக்காக இவற்றையெல்லாம் வெளியிட்டு உமது நேர்மையை, தார்மீக அறத்தை உலகத்துக்குப் பறை சாற்ற வேண்டும்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam: முட்டாள் ,உலகமெல்லாம் மக்களுக்கானது.அதைக் கொள்ளையடித்தவனே முதலாளி,புலியும் மக்களைக்கொன்று முதலாளிகளாகியது.கிட்டரை முன்தள்ளிய ஜேர்மனியப் பெரு நிறுவனங்கள்போல்.அந்த முலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொழிலாளிகளில் நானும் ஒருவன்.அதனால்,இந்தவுலகத்தில் முதலாளிக்கு மட்டுமல்ல அவனை உருவாக்கும் உழைப்புக்கும்-உழைப்பாளிக்குமே இந்தவுலகம் சொந்தம்.இதைக்கூடப் புரியமுடியாதவொரு சாம்பிராணி“தேசியம்“பேசி மக்களை மொட்டையடிக்குது-தூ…
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan : நான் சுத்தியவன் என்றால் நீர் தானே இந்த நுாற்றாண்டின் மாபெரும் புரட்சிவாதி! புரட்சிவாதி புரட்டல்காரர்களைச் சாட்டித் தப்பித்துக் கொள்வது மாபெரும் அவலமல்லவா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam: பரட்சிக்காரன் ஒவ்வொரு உழைப்பாளியும்தான் அவன் எந்தப் புரட்டல்காரனைச் சுத்தியவனென இந்த ப் பாசிஸ்டுக்கள்தாம் வகுப்பெடுக்கவேண்டும்?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: தாங்கள் ஜேர்மனிய முதலாளிகளிடம் சலுகை பெற்று மூன்றாம் உலக நாடுகளில் இன்னலுறுகின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வசதியான வாழ்வை வாழ்பவர்தானே!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan : ஏன் தங்களால் மூன்றாம் உலக நாடு ஒன்றில் தொழிலாளியாக வாழும் வாய்ப்பினைக் கொள்ள முடியாமல் உள்ளது?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam : சுவிசில் சுத்திக் கனடாவுக்குத் தப்பிய பீடைகளெல்லாம் மீண்டும் தேசியம்-விடுதலையென எவனது பிள்ளைகளையும்-எவளது தாலியையும் அறுக்க நியாயம் அளக்கிறீர்கள்.உங்களையெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் காறி உமிழவேண்டும்.அதற்கானவொரு காலம் கட்டாயம் வரும்.நீங்கள் மக்களாகி ஒவ்வொரு உழைப்பாளத் தமிழ் பேசுவனிடமிருந்தும் தப்ப முடியாது!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: நேரடியாகப் பதில் சொல்லும்! நாங்களெல்லாம் மக்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உமது சொத்து வருமான விபரத்தை மக்கள் முன் வைக்காது தொழிலாள வர்க்கம் , புரட்சி என்று மக்களது காதில் புா சுற்ற வேண்டாம்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan : இந்த உரையாடல்களில் இருந்து நீர் உம்மைப் போலிப் புரட்சியாளனாக அகில உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளீர்கள்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
ஜேர்மனிய முதலாளியிடம் சலுகை?அது சலுகையல்ல மந்தாரம்.அவன் எமது உழைப்பைச் சுரண்டீ உயிர்வாழ்வதற்காக எமக்கிடும் பட்டுணிச் சம்பளம்.அதைக்கூட வன்னியில் பாலங்கட்டியவனுக்குப் புலிகள் கொடுக்காமல் போட்ட நாமத்துக்கு இங்கிருந்து உழைத்தனுப்பிய கதையெல்லாம் உண்டு.பாலங்கட்டச் சொன்னவர்களே,யுத்தம் கழுத்துக்குள் நெருங்கியபோது எல்லோருக்கும் நாமம் போட்டு,மக்கள் சொத்தை மூட்டை கட்டிக் கப்பலுகுக் காத்திருந்து, மண்டைபிளந்த கதையெல்லாம் சலுகைதாம் காவடியாரே?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: மற்றவனைச் சாட்டி தனது வருமான , சொத்து விபரங்களை மறைக்கின்ற இந்தத் தந்திரசாலியை மக்களே இனம் காணுங்கள்!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan: இந்த மனிதன் கூறுகின்றார் “நாங்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று”. ஒரு பேச்சுக்காக உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அனால் நான் கேட்கின்றேன். இந்த மனிதன் தனது மாதாந்த , சொத்து விபரங்ளை வெளியிட மறுக்கின்ற புரட்சி பற்றிக் குசாலாக முதலாளித்துவத்தின் முதுகில் குந்தியிருந்து ஏப்பம் விட்டவாறே பொழுதுபோக்கிற்குக் கதைக்கின்ற உண்மையான தொழிலாளி வர்க்கத்தை ஏய்க்கின்ற நபர் என்று.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
சொத்து விபரம்?என்னிடம் இருப்பது சிற்றி பேங்க கடனும்,ஸ்பார்காஸ ஓவற்றாப்புந்தாம்.வீடுவாசல்,காணி பூமி வைத்திருக்கும் புலிப்பினாமிகள்தாம் சொத்து விபரம் தரவேண்டும்.அப்படிச் சொத்தையெல்லாம் நான் வைத்திருக்கவில்லை!கோவண்ங்கூட உழைத்து வேண்டியதடா …இதுவெல்லாம் புலிகளது அகாராதியில் முடியுமா?மக்களை பேமானியாக்கி ,உயிரை-உழைப்பைத் தட்டிப் பறித்த கபோதிகள் நீங்கள்.ஒரு இனத்தையே வரலாற்றில் ஒட்ட மொட்டையடித்து,அடிமைப்படுத்திச் சென்றதுமில்லமால்,இன்னும் ஒட்டக் கழுத்தறுக்கும் குணத்தின் தொடர்ச்சியாக எஞ்சியிருப்பவரையும்,சுரண்ட முனையும் உங்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்க வேண்டும்.கடந்த காலத்தில்,லையிட் போஸ்ட்டில் பாண்-கோழி கழுவெடுத்தவனுக்குத் தண்டனை கொடுத்த பாசிச அராஜக வாதிகள்,இன்று மக்கள் பணத்தைத் தமதாக்கிப் பெரும் தொழில் நிறுவனர்கள்.தூ…
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan :உந்த விடுகையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இலங்கைக்குச் சென்று தற்போழுது ஏன் உம்மால் தொழிலாளியாக வாழ முடியாதுள்ளது. அது பற்றிய பதிலைக் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan :ஏன் வன்னியையும், புலியையும் சாட்டி விவாதத்தை திசை திருப்ப முயலுகிறீர். நீர் யார் என்பதை மக்கள் முன் வையும். உம்மைப் பற்றித்தான் நீர் பேச வேண்டும். ஏனென்றால் நீர்தான் உலகப்புரட்சியை முன்னெடுப்பவர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
அதை நீர் முதலில் செய்யும்.அதன்பின் நான் இலங்கைக்குச் செல்கிறேனா இல்லை ஜேர்மனியில் புடுங்கிறேனவெனப் பார்ப்போம்.உங்கட பாசிசத்தின் தொடர்ச்சியலேதாம்,ஜேர்மனியைத் தேடி அலைந்தவர்கள் மக்கள்.ரயர் போட்டெரித்த பாசிஸ்டுக்கள் எல்லாம்,இலங்கைக்குப் போவென்று சொல்லும் உரிமை உண்டா?பாசிசஸ்டுக்கு எந்தக் கருத்துரிமையுமுண்டா?பாசிசட்டுக்களே இப்போது,மக்களுக்காகக் கண்ணீர் விடுவதாகச் சொல்லிக்கொண்டு,மக்களது பணத்தின்மீதும்,அவர்களது பொருளும் மீதும் தேசியத்தின் பேரில் கைவைக்கும்போது, முல்லைத் தீவுக்குள் உள்ள ஏதோவொரு சிறு வாய்க்காலுக்காக தெருவெல்லாம் இறங்கியவன் புலம் பெயர்ந்த ஓட்டாண்டித் தமிழன்தான்.அவனுக்கு ஆப்பு வைத்துச் சிரத்தையோடு செல்வஞ் சேர்த்த நீங்களெல்லாம் இப்போதும்,வெள்ளை வேட்டி கட்டி வேட்டைக்குத் தயாராவதுதாம் இந்த நூற்றாண்டின் மிக மோசடி!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: சார் நான் இப்போது உங்களைக் கேட்பது, தங்களால் இப்போது இலங்கைக்குச் சென்று தொழிலாளியாக வாழ்ந்து அந்தத் தொழிலாளிகளுக்காகப் ஏன் போராட முடியாதுள்ளது என்பதை சற்று இந்த உலகத்துக்கு விளக்குவீர்களா ?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: ஏன் என்னைச் செய்யச் சொல்லி வசதியாக நீர் ஓடி ஒழிகிறீர் ? நீர்தானே சர்வதேசப் புரட்சியாளர்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: நீர் ஒரு படு போலியென்பதை அப்பட்டமாக நிருபித்துவிட்டீர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: நான் இலங்கைக்குச் சென்றால் மரணமும், உமக்கு செங்கம்பள வரவேற்பும் கிடைக்குமென்பதை இத்தால் யாவரும் அறிவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: நீர் ஜேர்மன் முதலாளித்துவத்தை நக்குவதன் மூலம் இலங்கைத் தொழிலாளி அடைய முடியாத சுகங்களையெல்லாம் அனுபவித்து இன்பம் கண்ட போலிப்புரட்டு வார்த்தையாளர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam: ஏன்,உமது தலைவர்களில் பலர் இலங்கை அரசின் செங்கம்பள வரவேற்பில் இருக்கும்போது,உமக்கென்ன தண்டனை அங்குகிடைக்கும்?நீர் அவர்களது நிகழ்ச்சி நிரலை இங்கு தேசியவிடுதலையெனச் சொல்லி இங்கிருக்கும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில்,இப்படியுரைப்பது அவசியம்தாம்.உமக்கு இலங்கை அரசு தண்டனை தருகிறதோ இல்லையோ நமது புலம்பெயர் மக்கள் விரைவில் தருவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: ஏன் கடன் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர். நீர்தான் மார்க்ஸியவாதி! பாட்டாளிவர்க்கப் புரட்சியாளன்! தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உமது குடும்பத்தின் மாத வருமானம், வீடு, சொத்து விபரங்களை நீர் அகில உலகப் பாட்டாளி வர்க்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan : எனக்குத் தண்டனையைத் தருமுன் நீர் இலங்கை சென்று தொழிலாளியாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியாளனாகவும் ஏன் வாழமுடியாதுள்ளது என்பதை சிறிது அகில உலகத் தொழிலாள வர்க்கத்திடம் எடுத்தியம்புவீர்களா?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
அதை அவர்கள் இன்னும் கேட்கவில்லை.அப்படிக் கேட்கும்போது நான் முன் வைப்பதில் சிரமமில்லை.முதலில்,இப்போது ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்கிறான்-கேட்கிறாள் „புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்களது சொத்தைப் புலிகள் தமதாக்கித் தலைமறைவாகியவர்களில் எவரெவர் இன்னும் எத்தனை மில்லியனோடு இருக்கின்றனர்?;அச் சொத்துகள் யாவும் மக்களது என்பதால் அதைப் பொது நிதியமாக்கி வன்னியில் வதைபடும் மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதும் ,இங்கிருக்கும் நெடியவனிடம் எத்தானைகோடி மக்கள் பணம் இருப்பதென்பதை முதலில் கேட்டுச் சொல்லும்.அத்தோடு நீர் கொள்ளையடித்ததையும் கூறிவிடும்.சுவிசில் உம்மைத் தேடியவர்கள்.இப்போது கனடாவுக்குள் கால் வைத்துள்ளனர்…
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan : இந்த நுாற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையை நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். தொழிலாள வர்க்கம் இந்த மாபெரும் செஞ்செனையின் தளபதி, பாட்டாளி வர்க்கக் கோட்பாளனின் காலடியில் மண்டியிட்டு வருமான , சொத்துவிபரங்களைக் கேட்காத வரைக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்து வர்க்க ரகசியம் பேணுவார் என்பதை இத்தால் அகில உலகுக்கும் அதற்குமப்பாற்றபட்ட பிரபஞ்சத்திற்கும் பிரகடனப்படுத்துகிறோம். அதுவரை அவர்பின் அணி திரள்வோம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan : தனக்குப் பின்னால் நாலு சனத்தைத் திரட்டத் தெரியாதவன் குந்தியிருந்து மயிர் புடுங்கி மண்ணாங்கட்டியால் மந்திரவித்தை புரிகிறானாம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
கே.பி.இடம் தூது அனுப்பி இருக்கிறேன்.அவரெனக்கு ஒரு வேலை தருவதாகவும் சொல்லி உள்ளார்.மிக விரைவில் ,“அண்ணன் பிரபாகரனால் சர்வதேசப் புலித் தலைவரெனச் சொல்லப்பட்ட கே.பி.“இடம் வேலை செய்ய நான் போவதில் காரியம் நடக்கிறது.நீரும் வாரும்.உமக்கும் பொது மன்னிப்புத் தரும்படி நான் மகிந்தாவிடம் நேரடியாகவே சொல்லி உயிர்ப் பிச்சை தரவழிவகை செய்கிறேன்.அதற்கு, முதலில் இலட்சம் மக்களைக் கொல்வதற்கு நீர் உடந்தையாக இருந்ததும்,ஐரோப்பாவில் திட்டமிட்டு மாற்றுக் கருத்தாளர்களைப் படுகொலை செய்வதற்கும் நீரும் காரணமானதை ஒத்துக்கொண்டு,பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பைக் கோரி விடவேண்டும்.அத்தோடு, உமது சொத்துக்களை „என்னிடம்விட்ட கோரிக்கைப்படி“ முன்வைத்து,அது மக்கள் சொத்தானால்,வன்னியில் வதைபடும் மக்களக்கு உதவி செய்ய முயற்சி செய்து ,அச் செல்வத்தை வன்னிக்கு அனுப்பி விடவேண்டும்.அப்போது ,உமையும் உயிர்வாழ மக்கள் அநுமதிப்பார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: இவங்களுக்கு புலியையும், புலியின்ரை வாலையும் விட்டால் சொந்தமாய் ஒண்டுமே பண்ணத் தெரியாது.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: பத்துச் சனத்தைக் கூட்டிக் கூட்டம் போட்டால் 10,000 கட்சி உருவாக்குவாங்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: இவர்களை உலகின் மூலையில் உள்ள எந்தத் தொழிலாளர்களும் நம்பவில்லை.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
அதூதம் சொல்கிறேன்:எமது பிரச்சனை மக்களைத் திரட்டிப் பலிகொடுப்பதில்லை.நாம் தமிழீழஞ் சொல்லிüயும்,விடுதலை சொல்லியும் மக்களை ஆயுதம்காட்டிக் களத்துக்கு அனுப்பிக் கொல்பவர்களில்லை.புலிகள் செய்த இந்த மக்கள் விரோதத்தை எதன் பெயராலும் செய்யமாட்டேன்.ஆனால் ,இப்படிச் செய்ய முனையும் உம்மைப் போன்ற கயவர்களை-பாசிஸ்டுக்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதாம் முதல் வேலை!அதற்குப் பின் மக்களே தீர்மானிப்பார்கள் தமது தலைவிதியை.நீர்,இதைக்கூடப் புரிய முடியாத மண்டாக இருந்துகொண்டு ,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்துவதில் புலிகளது குப்பைகளைக் காவித் திரிகிறீரே?இன்னும் ,திருந்தி மக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாதிருப்பதில் எந்த அதிகாரம் உம்மைத் தடுக்கிறது?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan : சனங்களுக்குக் கதை விடாதேயும். நான் கேட்பது உமது மார்க்சிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான தத்துவார்த்தம் வருமான , சொத்துவிபரங்கள் தொடர்பில் ஒரு மார்க்ஸியவாதி ஆற்ற வேண்டிய கடப்பாடு என்னவென்பது தொடர்பானதே?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan: நீர் கூறும் விளக்கம் மார்க்சீயத்தின் அடிப்படைகளோடு பெரும் முரண்பாடு கொள்கிறதே ?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
அது மார்க்சிச வாதிக்குத் தெரியும்.அதைப் புலிப்பாசிஸ்டுக்கள் வகுப்பெடுப்பதுதாம் சுத்தக் கொடூரம்.அதை நாங்கள் செய்துகொள்வது இருக்கட்டும்.புலிகளாகிய பாசிஸ்டுக்கள் நீங்கள்,இறுதிவரை மக்களை வன்னிக்குள் வைத்து வேட்டையாடிய காட்டுமிராண்டிகள், இறுதியாகச் சரணடைந்தபோது- என்ன நடந்ததென்றாவது சொல்வீர்களா?அல்லது பிரபாகரனுக்கு என்ன நடந்ததேன்று மக்களுக்குச சொல்வீர்களா?ஏனெனில் ,மக்கள்தாம் தமது உயிரையும்,உடமைகளையும் உங்களிடம் பறிகொடுத்து,உங்களை நம்பி நடாற்றில் வீழ்ந்தவர்கள்.அதைச் செய்ய வக்கில்லாத நீங்கள்,மகத்தான புரட்சி குறித்து வகுப்பெடுப்பதற்கு உங்களுக்குக் கொலைகாரப் பாசிசப் புலிகளுக்கு என்னடா அருகதையுண்டு?
vor etwa einer Stunde · Gefällt mir
Nadarajah Muralitharan:இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறுகிறது. நீர் அம்பலப்படுத்தப் போகிறன் எண்டு சொல்லிறியள். மற்றும் இங்கு மக்கள் என்பதில் தொழிலாளர்களையும் இணைக்கின்றீர்களா ? மக்கள் , தொழிலாளர்கள் எண்டு பேசும்போது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் மக்களை, தொழிலாளிகளை எப்படி முதலாம் உலகநாட்டிலே மாத்திரம் தொழிலாளியாக வாழுவேன் என்று அடம்பிடிக்கும் உம்போன்ற அதியுயர் சலுகை பெற்ற தொழிலாளர்களோடு இணைத்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பான சந்தேகங்கள் எழும். அதை எப்படித் தங்களது கோட்பாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவீர்கள் என்பதையும் அறிய அகில உலகப்பாட்டாளி வர்க்கம் காத்து நிற்கின்றது.
vor 59 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
நான் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாரும்.அதன்பின் பாட்டாளிய வர்க்கம்,முதலாம்-இரண்டாம்-மூன்றாம் உலகம் பற்றிப் புலிகளுக்கு வகுப்பெடுக்க அவசியமொன்றுருவானால் அதைச் செய்ய எப்பவும் தாயராக இருக்கிறோம்.முதலில் உங்கள் மறைப்பு அரசியலில் பக்ககங்களைத் திறந்து ,மக்களுக்கு உண்மையையும்,அவர்களிடம் மன்னிப்பும்,புலம்பெயர் தேசத்தில் மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தைத் தமாதாக்கி வைத்திருக்கும் உம்மைப் போன்ற புலிப்பினாமிகளிடமிருந்து மீள மக்களிடம் சென்றறைடைய வழியைச் சொல்லும்.
vor 53 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : அண்ணா ! ஆத்திரப்படாதீர்கள்! உங்கள் நிதானமின்மை கண்டு மார்க்சின் கல்லறை திறந்து கொண்டுவிடும். நீங்கள் தானே தொடர்ந்து சொல்லுகிறீர்கள். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டு விட்டார்களென்று. எனவே உங்கள் திட்டம் பற்றிப் பேசுங்கள். எத்தனை இலட்சம் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் தங்கள் பின்னால் அணிவகுத்துள்ளார்கள் என்பது பற்றி மொழியுங்கள்.!
vor 52 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan: என்னண்ணா ! குழந்தை மாதிரிப் பேசுறியள். அவையளையெல்லாம்(மக்களை) மீட்டாயிற்று என்று உங்களை மாதிரி இடதுசாரி ஆட்கள் சொல்ல நீங்கள் மக்கள் கண்களில் விழிப்பு உண்டாயிற்று, அவர்கள் புதிய வழியில் அணிதிரள்வார்கள் என்றும் ஆருடம் சொல்லி நிறைய நாளாயிற்று! பேந்தும் புலி, கிலியெண்டு ஏன் அண்ணை வெருளிறியள்?
vor 45 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan :அவர்கள் அம்பலப்பட்டாயிற்று! தோற்கடிக்கப்பட்டாயிற்று! கதை முடிந்தது! என்று கூப்பாடு போடும் நீங்கள் இப்பவும் அவை அதைச் செய்ய வேணும், இதைச் செய்ய வேணும் எண்டு குதியாய் குதிக்கிறியள் ?
vor 43 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:
இதனூடாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்.தொடர்ந்து பாசிஸ்டுக்களாகிய நீங்கள் மக்களிடம் உண்மை பேச மறுத்துவிட்டு,மற்றவர்களிடம் புரட்சி குறித்துக் கேட்கிறீர்கள்.நாமோ புரட்சிக்குரிய சூழலே இன்னும் உருவாகவில்லையெனச் சொல்லி கருத்தாடும்போது,புரட்சி-விடுதலையென அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடியாட் படையாகவிருந்து முழு இலங்கை மக்களையும் வேட்டையாடிய நீங்கள்,சிறார்களை உயிராயுதம் எனப் பிடித்துக் குண்டைக்கட்டிக் கொன்று குவித்த நீங்கள்,இப்படி உயிர்த் துஷ்பிரயோகஞ் செய்த நீங்கள்தாம்,உண்மையில் என்ன நடந்தது.எது நடந்தது-எப்படி இவ்வளவு கொலைகளையும் தியாகம்-தேசமெனச் சொல்ல முடிந்ததென்பதை உரைத்தாகவேண்டும்.தொடர்ந்த மக்களுக்குள் இனவாதத்தை விதைத்து,மக்களினங்களைப் பிளவுபடுத்தி ,மீள ,உயிர்ப்பலியூடாகப் பதவி-பணம் அடைய முனையும் புலிப் பினாமிகளைக் குறித்து மக்கள் மிக விரைவாகவே வன்னிக்குள் படித்துவிட்டனர்.ஆக,நீங்களாகத் திருந்த முடியாதவொரு அதிகாரத்துக்குள் ஒளித்து வைத்திருக்கும் மக்கள் விரோத அரசியலை இதுள் வெளிப்படுத்த முடியாது திண்டாடும் உம்மை நான் மன்னித்தாலும்,மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ஓய்!
vor 41 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan: ஏன் அண்ணை ? உண்மையாய்த்தான் கேக்கிறன்! குறை நினையாதையுங்கோ! அவையள் இப்பவும் இருக்கினமா? இருந்தாலும் பலமாய் இருக்கினமா ?
vor 40 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : அண்ணை! நீங்கள் ஜேர்மனியிலை குந்தியிருந்து ஈரோவிலையெல்லை சம்பளம் எடுக்கிறியள். அதாலைதானோ புரட்சிக்குரிய சூழல் உருவாகவில்லையெண்டு கதை விடுறியள் அல்லது ……
vor 38 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:  புரட்சிக்குரிய சூழலையே இந்தியாவுக்கு-ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்துப் புரட்சியாளர்களை வேட்டையாடி புலிகள்,எந்த நயவஞ்சகத்தோடு இப்படி மீளவும் கொலைக்காரப் பாசையில் உரையாட முடிகிறது?எந்த ஏகாதிபத்தியத்தின் தயவில் நீர் ரூபாயில் சம்பளம் எடுக்கிறீர்?
vor 35 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan: நீங்களண்ணை ஒரு மக்கள் தலைவன்தான்! உங்கள் பின்னால் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் அணிவகுத்துத் திரண்டெழுந்து நிக்கினம் எண்டும் சொல்லுங்கோ! சாதாரணமாக நீங்கள் போடுற கூட்டத்துக்கு எத்தனை ஆயிரம் பேர் வாறவையெண்டும் சொல்லுங்கோ!
vor 32 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : நீங்கதானை அண்ணை ஈரோவிலை கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கிறனியள்!
vor 30 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : இதைவிட்டிட்டு நீங்கள் ஒரு இடமும் புரட்சிக்காகப் புலம்பெயர மாட்டீங்கள் எண்டும் உங்களுடைய செந்தோழர்களுக்கு நன்றாகவே புரியும்!
vor 29 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan:  நான் இலங்கைக்குப் போய் தொழிலாளர்களுக்காய் வேலை செய்யுங்கோ எண்டு சொல்லேக்கை உங்களின்ரை அடிவயிறு பத்தியெரிஞ்சதை என்னால் உணரக் கூடியதாக இருந்துது!
vor 26 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan:எந்நத் தியாகத்தையும் பாட்டாளிகளுக்காகச் செய்ய முடியாத வக்கற்ற கூட்டத்தில் நீர் தலையானவர் என்பதை யாம் அறிவோம்!
vor 25 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : ஜேர்மனிய முதலாளிய அடிவருடியான நீவிர் மலையகம் சென்று வருடத்தில ஒரு மாதம் வேலை செய்ய முடியாதா ?
vor 23 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam : நான் உடல்வருத்திக் கொத்துக்கொத்தாக யூரோவில் சம்பளம் எடுப்பதில் பெருமைகொள்கிறேன்.ஆனால்,நீங்கள் அனைவரும் கொலைக்களத்துக்குப் பாலகர்களை அனுப்பியபடி,மக்களை“அதோ தமிழீழம் மலர்கிறது“என்ற பொய்யுரைத்து ஏமாற்றியபடி, உண்டியல் குலக்கியும்,உள்வீட்டுக்குள் மிரட்டியும் தட்டிப்பறித்தல்லவா யூரோக்களை-டொலர்களைப் பெற்றீர்கள்!;அதைத் தொடருவதற்காக எத்தனை உயிர்களைத் துடைத்துக் குப்பையில் போட்டீர்கள்!இது பெருமையானதா முரளிதரன்-சொல்லுங்கள்!
vor 21 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : அதற்கான பணபலமும், படை (இடதுசாரி) பலமும் இருந்தும் குசியாய் இருந்து கதைவிட்டுக் கொண்டு புரட்சியாளனாய் இணையத்திலும், முகப்புத்தகத்திலும் வலம் வருவது விலாச விளையாட்டுத்தானே!
vor 20 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : உமது மொழியில் பாசிஸ்ட்டுகள் எதையும் செய்யட்டுமே! ஆனால் உண்மையான மார்சீயப் பொதுவுடமைவாதியான நீவிர் அவ்வாறு செய்ய முடியாது!
vor 18 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan :ஒரு பாசிஸ்ட்டை பொதுவுடைமைவாதியோடு ஒப்பிட்டு நியாயம் பேசுதல் தகுமா ?
vor 16 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam : ஒன்றுக்கொன்று மாற்றிப் பின்னூட்டுப் போடாதீர்கள் முரளிதரன்,புரட்சியை நாசமறுத்ததுமல்லாது,சொந்தச் சகோதரர்களையே வேட்டையாடிய நீங்கள்,இப்போது இலங்கைக்குப் போய் மலையகத்தில் வேலை செய் என்று எம்மைப் பார்த்துக் கட்டளையிடுவதை எந்த அதிகாரத்திலிருந்து சொல்கிறீர்?
vor 14 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan: நீர் கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கும் ஈரோவிலும் மூன்றாம் உலகங்களின் ரத்தம் ஊறிக்கிடக்கிறது.
vor 13 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan : இது கட்டளையல்ல தோழரே! ஒரு பொதுவுடமைவாதி பணியாற்ற வேண்டிய களங்கள் அகிலமெங்கணும் விரிந்து கிடப்பினும் அதனை மறுத்து சலுகைகளையும், சுகங்களையும் ஒப்பீட்டு ரீதியில் வேண்டி ஐரோப்பிய மண்ணில் முகத்தைப் புதைத்து வாழும் உம் போன்றோரிடம் தார்மீக அடிப்படையில் விடு்க்கப்படகின்ற அறக் கேள்வி இது!
vor 9 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam :  நான் உழைக்கும் யூரோவில்,இரத்தம் மட்டும்தாம் ஊறிக்கிடக்கு முரளி,ஆனால்,நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் சொத்தில் ,எத்தனை உயிரினது ஆன்மா ஒட்டிக்கிடக்கிறது தெரியுமா-எத்தனை பெண்ணின் விதவைக்கோலம்-எத்தனை தாயின் கண்ணீர் ஒட்டியிருக்கிறது தெரியுமா?“நியாயம்-தர்மம்,அறம் „பற்றிப் பேசும் தகுதி புலிப் பினாமிகளுக்கு இருக்கிறதா?எந்த மனசாட்சியோடு இப்படி உரையாடுகிறீர்கள்?அது உங்களிடம் இல்லையென்பதாற்றாம், இதுவரை மக்களது வாழ்வோடு தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட முடிகிறது.வன்னியில் சாவின் எல்லைவரை சென்றவர்களை அம்போவெனவிட்டுவிட்டு,அவர்களால்-அவர்களது உயிரால் போராட்டமெனச் சொல்லிக் கொள்ளையிட்ட பணத்தோடு,மீளவும் கணனிமுன் உட்கார்ந்து உம்மால் தமிழ் தட்ட முடிகிறதென எண்ணும்போது,நீங்கள் மனிதர்களே இல்லை!மிக மோசமான மக்கள் விரோதிகள் என்பதைத் தொடருரைத்து விடுகிறீர்கள்.இந்தவுரையாடலை நாளைய தலை முறைக்குச் சாட்சியாக்குகிறேன்-வணக்கம் மக்கள் விரோதிப் பாசிசப் புலியே!
vor 4 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan: தோழரே தங்களிடம் எத்தனை தடவைகள் கூறிவிட்டேன்! ஆத்திரப்படாதீர்கள்! எம்மை சுயவிமர்சனம் செய்யாமல் வரலாற்றில் நாம் நிறைவான நகர்வை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் ஒரு பொதுவுடமைவாதி தான் சுயவிமர்சனத்தை நிகழ்த்த மறுத்து தேசியவாதிகளிடம் விளக்கம் கேட்டு உரையாடுவது வரலாற்று அபத்தமல்லவா ?
vor 11 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam : அதைத்தாம் நானுஞ் சொல்கிறேன்.புலிகள் மக்களிடம் ,தம்மைச் சுய விமர்சனஞ் செய்து உண்மைகளையுரைத்துப் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும்,மக்கள் சொத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்குக் கையளிப்பதும்,மீளப் போராட்டத்தைச் சொல்லிக் கொள்ளையிடாது,மக்களைத் தம்மைத்தாமே தீர்மானித்து இயங்கும் நிலைக்கு விட்டுவிடச்சொல்லி…நானும் ,இதையேதாம் சொல்கிறேன்.தலைவர்கள் மக்கள்தாமேயொழிய நாம் அல்ல!உங்கள் பாசையின்[புலியிசத் தலைமைவழிபாடு ]„தேசியத் தலைவர்“இலட்சம் உயிருக்குத்தாம் வேட்டு வைக்க முடிந்திருக்கிறது.நாமோ ,மக்களையே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்வதில் மக்கள் முதற்கட்டமாக வெற்றிகொள்வது,இயக்காவாத மாயையிலிருந்து விடுதலையடைவதென்று அர்த்தம்.
vor 2 Sekunden · Gefällt mir

Nadarajah Muralitharan:
இந்த உரையாடலை நானும் திறந்த மனதோடு சாட்சியமாக்குகிறேன்! வரலாற்றில் எந்தவித ஆதாரமும் அற்று தனிமனிதர்கள் மீது எவ்வாறான அவதுாறுகள் பொதுவுடமைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சாட்சியம்! மற்றும் பொதுவுடமைவாதியென்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் தேசியவாதிகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த அரசியற் பிரக்ஞையற்று பக்குவமற்ற முறையில் விவாதத்தைக் கையாளும் அணுகுமுறையை அவதானிப்பதற்கும் இது ஓர் சாட்சியம்! பொதுவுடமைக் கோட்பாளராகத் தன்னை வரித்துக்கொள்வதில் பிரியமுடைய ஒருவர் எவ்வாறு வார்த்தைகளை நாகரீகமற்றமுறையில் பயன்படுத்துகிறார் என்பதற்கும் இன்றைய வார்த்தையாடல்கள் ஓர் சாட்சியம்!
vor 20 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan:  நன்றி நண்பரே! மீண்டும் பேசிக்கொள்வோமு்!
vor 17 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam:  நாங்கள் வார்த்தைகளை மட்டுமேதாம் „நாகரீகம்“அற்றுச் செய்தோமெனப் பகிரங்கமாகச் சொல்வோம்.புலிகளாகிய நீங்களோ,மனிதர்களின் உயிர்களையல்லவா, நாகரீகமற்ற முறையில் கொன்று தொலைத்தீர்கள்.தேசியத்தைச் சொல்லி,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்திய நீங்கள்,வார்த்தைகளுக்கும் நாகரீகம் கற்பிக்கும் இன்றைய நிலையில்,ஒரு யுகம் பிறந்திருக்கே-அது,நிச்சியம் உங்களைக் கேள்வி கேட்கும்!;நாளைய தலைமுறை, கொலையரசியலையும்,மாற்றுக் கருத்துக்குக் கொலையையே பரிசளித்து, ஒரு இனத்தை தேசியவாதத்தூடாகக் காயடித்துக் குறந்தேசிய வெறியின்வழி எங்ஙளம் இன்னொரு இனதுக்கு அடிமையாக்கியதென்பதை இந்தவுரையாடலது பண்பிலும்,கொலைவெறியாளர்கள் எங்ஙனம் மக்கள் நலவிரும்பிகளெனும் போர்வையில் மீளவும், தமது கோரப் பற்களை பதியம்போடும் தந்திரத்தையும்,புரட்சியாளர்களைச் சொல்லி மறைப்பதில் கிட்லரது பிரச்சாரகன் கொய்ப்பிள்சை [ nationalsozialistischer Propaganda war das von Propagandaminister Joseph Goebbels geleitete Reichsministerium für Volksaufklärung und Propaganda.]மிஞ்சியவர்ளென்பதை, இந்த உரையாடல்வழி புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.அந்தவகையில் முரளிதரன் ,தமிழ்பேசும் மக்கள் தமது அழிவிலும்,ஒரு உண்மையை இனங்காண வாய்புண்டு-அது,பாசிஸ்டுக்கள் இந்தச் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாய்ப்பிழந்தபின் தம்மை மறைத்துக்கொள்வர்.சந்தர்ப்பஞ் சரியாக வரும்போது மீளத் தமது கைவரிசையை, அந்நியச் சக்திகளோடு சேர்ந்து காட்டுவார்கள் என்று.அதற்கு ஒரு முரளிதரனும் சாட்சியாகட்டுமே!-நன்றி!.
vor einigen Sekunden · Gefällt mir

Follow

Get every new post delivered to your Inbox.